எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : 2021 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினால் தி.மு.க. அழிந்தது என்ற வரலாறு நிச்சயம் உருவாகும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதிபட கூறினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அம்மா கோவிலில் நடைபெற்றது. இதில் அவைத்தலைவர் ஐயப்பன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, கழக பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் ,அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கி பேசியதாவது :
எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தோற்றுவித்த போதே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம். ஆகவே பிறக்கும்போதே வெற்றி என்ற தாரக மந்திரத்தை உருவாக்கிய ஒரு இயக்கம் நமது இயக்கம். இன்றைக்கு இந்த நான்கு ஆண்டுகள் அல்ல இனிவரும் நூறு ஆண்டு காலமும் அ.தி.மு.க. தான் ஆட்சி பீடத்தில் அமர்ந்து மக்கள் சேவையாற்றும் என்று வரலாறு படைக்கும் வகையில் சாதனை படைத்துள்ளார் நமது முதலமைச்சர். அதற்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.
இந்த நான்காண்டுகளில் ஒவ்வொரு நாளும் திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை முதலமைச்சர் உயர்த்தியுள்ளார் என்பதை இந்த நாடு நன்கு அறியும். இந்தியாவில் அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்கும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியும், மக்களின் எண்ணங்களை அறிந்து நலத்திட்டங்களை வழங்குவதில் இந்தியாவிற்கு முன்னோடியாக நமது முதலமைச்சர் திகழ்கிறார்.
முன்பெல்லாம் ஏழைக் குடும்பங்களில் திருமணம் என்றால் மஞ்சள் கிழங்கை மஞ்சள் கயிற்றில் வைத்து திருமணம் செய்வார்கள். அந்த நிலையை மாற்றி தாலிக்கு 4 கிராம் தங்கத்தை வழங்கிய அம்மா, அதனை தொடர்ந்து 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். இன்றைக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
தங்கத்தை வெட்டி எடுக்கும் நாடுகளில்கூட இத்திட்டம் கிடையாது. விவசாய மக்களுக்கு இந்த ஐந்து ஆண்டுகளில் 17,428 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இதன் மூலம் 33.43 லட்சம் விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்து அரசு அம்மா அரசாங்கும்.
உழைக்கும் பெண்களுக்கு இது வரை மானிய விலையில் 2,85,000 இரண்டு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த 10 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 80 ஆயிரம் கோடி வரை கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 67 லட்சம் கர்ப்பிணி பெண்கள் பயனடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாது கடந்த தி.மு.க. ஆட்சியில் முதியோர் ஓய்வூதிய தொகை 500 ரூபாய்தான் வழங்கப்பட்டது.
இதற்காக 1,200 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் 1,000 ரூபாயாக உயர்த்தி கூடுதலாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் தற்போது கூடுதலாக 5 லட்சம் பேர் பயன்படும்வகையில் அறிவித்து அதன்படி வழங்கப் பட்டு வருகிறது. தற்போது இதற்காக ஒதுக்கப்படும் தொகை 4,800 கோடி ரூபாயாகும்.
தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட பட்ஜெட்டை எடுத்துக்கொண்டால் மக்களுக்கு எந்த பலனும் இருக்காது. ஆனால் இன்றைக்கு அம்மா அரசின் பட்ஜெட்டை எடுத்துக்கொண்டால் மக்களை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லும் பட்ஜெட்டாக உள்ளது. இன்றைக்கு ஸ்டாலின் மக்களை ஏமாற்றும் விதமாக மனுக்களை வாங்கி பெட்டியில் வைத்து பூட்டு போட்டுக்கொண்டு அறிவாலயத்துக்கு கொண்டு செல்கிறார். பொதுவாக மனு வாங்கினால் அதை படித்து பார்க்க வேண்டும். இல்லை என்றால் அந்த மனுக்களை கணினியில் ஏற்றி வைக்க வேண்டும். இதுதான் வழக்கமான நடைமுறை ஆகும்.
ஸ்டாலின் ஒருபோதும் பதவிக்கு வரப் போவதுமில்லை. அந்த பெட்டியை திறக்க போவதுமில்லை. ஏனென்றால் தி.மு.க.விற்கு மக்கள் ஓட்டு போடுவதில்லை. அதுமட்டுமில்லாது இன்றைக்கு மக்களின் குறைகளை தீர்ப்பதில் முதலமைச்சர் இந்தியாவிலேயே முதன்மையாக திகழ்கிறார். 234 தொகுதியிலும் மக்களின் குறைகளை முதலமைச்சர் போக்கி வருகிறார். மக்களைத் தேடி அரசு என்பது ஒருபுறம் இருந்தாலும் இன்றைக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அரசாக அம்மா அரசு உள்ளது.
நமது வெற்றியை தடுக்க தி.மு.க.வினர் பல தில்லு முல்லுகளை செய்வார்கள். அதையெல்லாம் நீங்கள் விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும். இன்றைக்கு மக்கள் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகின்றனர். ஏனென்றால் இந்த ஆட்சியில் தான் மின்வெட்டு கிடையாது. ரவுடியிசம் கிடையாது. நில அபகரிப்பு கிடையாது. மக்கள் திட்டங்கள் அனைத்தும் தடையின்றி மக்கள் இடத்தில் சேர்கிறது. மேலும் மாணவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், தொழிலாளர்கள் எப்படி அனைத்து தர மக்களுக்கும் காவல் அரணாக அம்மா அரசு திகழ்கிறது என்று மக்கள் உறுதியுடன் உள்ளனர்.
வில்வ இலை நோயைத் தீர்க்கும், வேப்பிலை பில்லி சூனியத்தை போக்கும், ஆனால் இரட்டை இலை மக்களின் அனைத்து குறைகளையும் போக்கும். ஆகவே வரும் தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெறுவோம். தி.மு.க. டெபாசிட் இழந்து இந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அழிந்த வரலாறு ஸ்டாலினால் நிச்சயம் உருவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,000 சரிவு
28 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி பயணம்
28 Oct 2025சென்னை : அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல்கிறார். பின்னர் நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக்கொள்கிறார்.
-
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் விஜய்யை நேரில் சந்தித்த பின் தகவல்
28 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர்.
-
நீடாமங்கலத்தில் மத்தியக் குழு ஆய்வு: நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை
28 Oct 2025நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் நேற்று (அக்.
-
6 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி
28 Oct 2025தருமபுரி : காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்துள்ளதால், 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பய
-
ஓரணியில் நின்று வாக்குரிமை பறிப்பை நாம் தடுப்போம் : துணை முதல்வர் உதயநிதி பதிவு
28 Oct 2025சென்னை : வரும் 2026 தேர்தலில் 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம் என தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஓரணியில் நின்று அநியாய வாக்
-
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு
28 Oct 2025சென்னை : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
28 Oct 2025சென்னை : தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ என்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
-
களப்பணியில் வெல்ல வேண்டிய தருணம் இது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Oct 2025சென்னை : களப்பணியில் தி.மு.க. தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
6.1 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்
28 Oct 2025அங்காரா : துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
28 Oct 2025சென்னை : திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: தமிழக அரசுக்கு விஜய் கேள்வி
28 Oct 2025சென்னை : உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள த.வெ.க.
-
தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
28 Oct 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
28 Oct 2025புதுடெல்லி : தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
முன்னாள் நீதிபதி தலைமையில் 8-வது ஊதியக்குழு அமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
28 Oct 2025புதுதில்லி : சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவது மற்றும் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி த
-
உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானங்களை தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
28 Oct 2025மாஸ்கோ : இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
இரு மாநிலங்களில் வாக்காளர் அட்டை: பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ்
28 Oct 2025பாட்னா : இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் விவகாரத்தில் பிரசாந்த் கிஷோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு: தமிழ்நாடு அரசு தகவல்
28 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை எதிரொலி காரணமாக 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
விவசாயம் மற்றும் தொழில்துறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் : துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
28 Oct 2025கோவை : விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும் வரை பா.ஜ.க.வின் பகல் கனவு நிறைவேறாது : மாமல்லபுரம் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
28 Oct 2025சென்னை : தமிழ்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பா.ஜ.க.வின் பகல்கனவு, தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
சென்னையில் இன்று முதல் மழை குறையும்
28 Oct 2025சென்னை : சென்னையில் இன்று முதல் மழை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியால் தேர்தல் நடைமுறை மீதான மக்களின் நம்பிக்கையை இழக்க வழிவகுக்கும் : கேரள முதல்வர் குற்றச்சாட்டு
28 Oct 2025திருவனந்தபுரம் : வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று குற்றஞ்சாட்டியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், இது தேர்தல் நடைமுறை மீதான மக்களின் ந


