முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் - கனமழைக்கு 64 பேர் பலி - 11 பேர் மாயம்: ஆய்வு செய்த பின் அமித்ஷா பேட்டி

வியாழக்கிழமை, 21 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 64 பேர் பலியாகியுள்ளதாக நேற்று சேதப்பகுதிகளை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்டில் கடந்த திங்கட்கிழமை முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  இதனால், ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டது.  உத்தரகாண்ட் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மையம், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தியது. இந்த நிலையில், தொடர் கனமழையால் உத்தரகாண்ட் வெள்ளக்காடானது.  நடப்பு சூழல் பற்றி பாவ்ரி மற்றும் ருத்ரபிரயாக் மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளிடம் முதல்வர் புஷ்கார் சிங் தமி ஆலோசனை நடத்தினார்.

உத்தரகாண்டில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு, வீடுகளை இழந்தோருக்கு ரூ.1,09,000 வழங்கப்படும் என முதல்வர் தமி அறிவித்து உள்ளார்.

 

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரகாண்டில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியே சென்று நிலைமையை நேற்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது., உத்தரகாண்ட் பேரிடர் பற்றி மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினேன்.  கனமழை பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்து உள்ளது.  மேலும் 11 பேரை காணவில்லை என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து