முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்பு: தினகரன் பேட்டி

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      தமிழகம்
TTV 2022-08-10

Source: provided

சென்னை : எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்பு உள்ளது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 

நான் தனிக்கட்சி தொடங்கி 4 ஆண்டுகள் ஆகி விட்டது. அ.ம.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வருகிற 15-ம் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வை திரும்பப் பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அ.தி.மு.க.வையும், அ.ம.மு.க.வையும் இணைப்பதற்கு டெல்லியில் சில நலம் விரும்பிகள் முயற்சி மேற்கொண்டது உண்மை தான். 

கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமி சீனியராக இருந்ததால் அவரை முதல்வர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்தார். எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் நாங்கள் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்த்தது மிகப்பெரிய தவறாகும்.

அதை அவர் இப்போதுதான் உணருகிறார். தற்போது ஓ.பன்னீர்செல்வம் என்னுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் உண்மை இல்லை. அவர் என்னிடம் எப்போதும் தொடர்பு கொண்டதே கிடையாது. அவர் எனது நண்பர். 10 ஆண்டுகள் நாங்கள் இணைந்து அரசியல் பணிகள் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து