முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமராவதி அணையில் இருந்து நாளை முதல் நீர் திறக்க உத்தரவு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : அமராவதி அணையில் இருந்து நாளை முதல் நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப் பகுதிகளிலுள்ள  நிலங்களுக்கு  அமராவதி ஆற்று மதகு வழியாக 5443.00 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள  புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக   2661.00 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம்  8104 மில்லியன் கன அடிக்கு மிகாமல் 25.09.2022 முதல் 07.02.2023 வரை 135 நாட்களுக்கு (70 நாட்கள் தண்ணீர் திறப்பு 65 நாட்கள் அடைப்பு)  என்ற அடிப்படையில்  சம்பா சாகுபடிக்காக  அமராவதி  அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட  அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து