முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டக்ளஸ் தேவானந்தாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சனிக்கிழமை, 5 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.- 5 - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. மேலும் அவர் தன் மீதான கைது வாரண்டை திரும்பப் பெற விசாரணை நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் ஐகோர்ட் கூறியுள்ளது. சென்னை சூளைமேடு, திருவள்ளுவர்புரத்தில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 1987 ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு சென்னை 4 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் என கடந்த 1994 ல் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தன்னை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என கூறுவதை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக நீதிபதி நாகமுத்து,  தனது உத்தரவில் இந்த விவகாரம் கடுமையானதாக இருக்கிறது. அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் அவர் விசாரணை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago