Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பருக்களை அகற்ற...

ஒரு துணியில் ஜஸ்கட்டியை வைத்து பருக்கள் சிறிது நேரம் வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்தால் பருக்கள் மறையும். பட்டை பொடியை தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து இரவில் படுக்கும் போது பருக்கள் மீது தடவி மறுநாள் காலையில் முகத்தை கழுவினால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போயிடும்.

செவாலியர் விருது

பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத் துறை சார்பில் வழங்கப்படும் மதிப்பு மிக்க விருதான செவாலியர் விருதை இந்தியர்கள் பலர் பெற்றுள்ளனர். தமிழகத்‌தின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ‌‌திரைத் துறையில் அவர் படைத்த சாதனைகளைப் பாராட்டி சிவாஜிக்கு இந்த விருது 1997-ல் வழங்கப்பட்டது. இந்திய அளவில் தொழிலதி‌ர் ஜே.ஆர்.டி. டாட்டா, திரையுலக ஜாம்பவான் சத்யஜித்ரே, ‌பிரபல சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர், அறிவியல் விஞ்ஞானி‌ சி.என்.ஆர். ராவ், பாலமுரளிக் கிருஷ்ணா, 2007-ம் ஆண்டில் நடிகர் அமிதாபச்சனும், 2014-ம் ஆண்டில் நடிகர் ஷாரூக்கானும் இந்த விருதைப் பெற்றனர். ‌2015-ம் ஆண்டில் யஷ்வந்த் சின்ஹாவும், ம‌னிஷ் அரோராவுக்கும் வழங்கப்பட்டது. இந்த வரிசையில் நடிகர் கமலஹாசனும் இணைந்துள்ளார்.

3டி பிரிண்டிங் முறையில் கட்டப்பட்ட பள்ளிக் கூடம்

3டி பிரிண்டிங் தொழில் நுட்பம் இன்றைக்கு கற்பனைக்கு எட்டாத வகையில் வேகமாக வளர்ந்து வருகிறது. செயற்கை உறுப்புகள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்து வரும் இந்த தொழில் நுட்பம் தற்போது கட்டுமானத்துறைக்குள்ளும் தனது காலடியை பதித்துள்ளது. முதன் முறையாக 3டி முறையில் ஒரு பள்ளி கட்டிடத்தை கட்டி சாதனை படைத்துள்ளனர். இனி மேல் எந்த இடத்திலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரு பள்ளியை கட்டி விடலாம் என்றால் ஆச்சரியம் தானே.. உலகிலேயே முதன்முறையாக 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்ட பள்ளி கடந்த ஜூலையில் திறக்கப்பட்டது. ஆப்ரிக்காவில் உள்ள மாலாவியில் இந்த பள்ளி 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை கட்டிடப் பொருள்களை தயாரிப்பதில் பிரபலமான பிரிட்டனில் உள்ள நிறுவனமும், சுவிஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. இதன் மூலம் உடனடியாகவும், தேவையான இடங்களிலும் இது போன்ற கட்டிடங்களை எதிர்காலத்தில் தயாரிக்க முடியும் என அவை தெரிவித்துள்ளன.

உணவில் கவனம்

காரமான உணவுகள், இரைப்பையில் அமில சுரப்பை அதிகரித்து உடலை பரபரப்புடன் இருக்க செய்வதால் கோபத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது, காபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுதல், பிஸ்கட், சிப்ஸ், சூயிங் கம் மற்றும் செயற்கை சுவையூட்டிகள், ஆல்கஹால் ஆகியவை கோபத்தை ஏற்படுத்தும்.

ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்து விட்டால்..

உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுக்க வேண்டும். தண்ணீரிலிருந்து எடுத்த ஸ்மார்ட்போனை ஆன் செய்யாமல், முதலில் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்கு மேல் உங்கள் ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப்-ஆகவில்லை என்றால் பவர் பட்டனை அழுத்திப் பிடித்தால் போதும் உடனே சுவிட்ச் ஆப்-ஆகிவிடும்.குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது. ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப் நிலையில் இருக்கும் போது சார்ஜ் செய்தல் கூடாது, ஒருவேலை நீங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.சிலர் ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க மைக்ரோவேவ் ஓவன் சாதனம், அல்லது நெருப்பு போன்றவற்றை பயன்படுத்துவார்கள், அவ்வாறு செய்யக்கூடாது இதுவும் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும். அடுத்து போனில் இருக்கும் எஸ்டி கார்டு, பேட்டரி, சிம் போன்றவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க முதலில் சூரியஒளியைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது, சூரியஒளி வெப்பத்தால் உடனே ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை உலர்த்த முடியும். எப்படியிருந்தாலும் உங்கள் செல்போனை ஆன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் உடனடியாக அதற்கான சர்வீஸ் செண்டரில் கொடுத்துவிடுவது சிறந்தது.

மேற்கத்திய திருமணங்களில் வெள்ளை ஆடை மரபு எப்போது தோன்றியது

நம்மூர் திருமணங்களில் பட்டு சேலையும், பட்டு சரிகை வேட்டியும் உடுத்துவதை மரபாக கொண்டுள்ளோம். ஆனால் மேற்கத்திய திருமணங்களின் போது வெள்ளை நிற உடையில் மணமக்கள் தேவதை போல் காட்சியளிப்பர். இந்த மரபு முதன் முதலில் பிரான்ஸில் தான் தோன்றியது. 1499 இல் 12 ஆம் லூயிக்கும், அன்னாவுக்கும் நடைபெற்ற திருமணத்தின் போதுதான் முதன் முதலில் வெள்ளை ஆடை அணியும் பழக்கம் ஏற்பட்டது. இருந்த போதிலும், 1840 இல் விக்டோரியா மகாராணிக்கும் இளவரசர் ஆல்பர்ட்டுக்கும் நடைபெற்ற திருமணத்துக்கு பிறகுதான் வெள்ளை ஆடை மரபு தொடர்ந்து பொது மக்களிடமும் நீடித்து நிலைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago