Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சிலைகளின் நகரம் எது தெரியுமா?

கேரள மாநிலத்தில் அதிகமான சிலைகளை கொண்டுள்ள நகரம் எது என்று தெரியுமா.. அந்த மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் தான் அதிகமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை செயலகம் முன்பு வைக்கப்பட்ட மாதவராவ் என்பவரின் சிலையில் தொடங்கி தற்போது வரை 40க்கும் மேற்பட்ட இடங்களில் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு சிலைகளின் நகரம் என்ற செல்லப் பெயரும் உண்டு

100-வது பிறந்த நாள்

பிரேசில் நாட்டில் கரியா சியா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மரியா பிக்னேடன் பான்டின், பவுலினா பிக்னேடன் பான்டின். இவர்களுக்கு நாளையுடன் 100 வயது ஆகிறது. தங்களது பிறந்த நாளை பெரிய விருந்துடன் அமர்க்களமாக கொண்டாட நினைத்த இச்சகோதரிகள் விழாவுக்கு 100 பேரை அழைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

நன்றி உணர்வு

பிரேசில் நாட்டை சேர்ந்த பிகுயிரோடோ, செரினோ என்ற குதிரையை வளர்த்து வந்தார். திடீரென விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கின்போது அங்கு வந்த குதிரை செரினோ உரிமையாளர் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓராண்டில் மிக வேகமாக வளரும் தீவு எது தெரியுமா?

உலகில் உள்ள கண்டத்திட்டுகள், தீவுகள் பூமியின் மாற்றத்தால் நகர்வதும், ஈர்க்கப்படுவதுமான செயல்கள் நடைபெறுகின்றன. அதே போல ஒரு சில தீவுகள் மிகவும் மேகமாக வளர்வதும், கடலில் மூழ்குவதுமாகவும் காணப்படுகின்றன. உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் தீவுகளில் ஐஸ்லாண்டு முன்னிலையில் உள்ளது. இது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 5 செமீ வரையிலும் வளர்ந்து வருகிறதாம். அது மட்டுமின்றி இந்த தீவில் வசிக்கும் மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதம் பேர் அதன் தலைநகரிலேயே வசிக்கின்றனர். மேலும் இந்த தீவில் கொசுக்களே கிடையாது என்பது ஆச்சரியம் தானே.

பீர் சிறந்ததாம்

வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட ‘பீர்’ சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பீர்’ குடித்தால் போதும் உரிய நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக ஆல்கஹால்கள் உடல் வலியை போக்கும் தன்மை கொண்டவை. எனவே, வலி நிவாரணிகளுக்கு பதிலாக ‘2 பின்ட்’ அதாவது 16 அல்லது 20 அவுன்ஸ் அளவு பீர் குடித்தால் போதும் அதில் உள்ள ஆல்கஹால் வலி நிவாரணியாக செயல்படும். இதன் மூலம் உடல்வலி போக்கும். ஆனால் உடல் வலியை காரணம் காட்டி தொடர்ந்து ‘பீர்’ குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆல்கஹால் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.

பருக்கள் மறைய...

முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, பின் 2 ஸ்பூன் கிளிசரின் சேர்த்து கலந்து, அதில் 2 ஸ்பூன் கற்பூர எண்ணெய், ரோஸ் வாட்டர் சேர்த்து, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு ஃபேஸ் மாஸ்க் தயார்  செய்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago