முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பாஸ்போர்ட்டில் முதன்முறையாக புகைப்படம் ஒட்டும் முறை எப்போது வந்தது தெரியுமா?

பாஸ்போர்ட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. பைபிள் காலத்திலேயே ‘பாஸ்போர்ட்’ போன்ற ஆவணம் பயன்பாட்டில் இருந்தது உங்களுக்குத் தெரியுமா? பாரசீக அரசரான ஒன்றாம் அர்டாக்செர்செக்ஸ், நெஹேமியா என்பவர் யூதேயா வழியாக பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு கடிதம் ஒன்றை வழங்கினார். அதுதான் முதல் பாஸ்போர்ட் எனக் கருதப்படுகிறது. ஸ்காண்டிநேவிய பாஸ்போர்ட் மீது புற ஊதாக் கதிர் வெளிச்சத்தைப் பாய்ச்சினால், வானவில் போல வானில் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டும் ‘நாதர்ன் லைட்ஸ்’ போன்ற ஒளி ஜாலத்தைப் பார்க்க முடியும். பாஸ்போர்ட்டில், அதற்கு உரியவரின் படம் அவசியம். முதல் உலகப்போர் துவங்கிய பிறகுதான் பாஸ்போர்ட்டில் புகைப்படம் இருக்க வேண்டியது கட்டாயமானது. ஜெர்மனிக்காக உளவு வேலை பார்த்த ஒருவர் ஒரு போலி அமெரிக்க பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இங்கிலாந்துக்குள் நுழைந்தார். இதையடுத்து பாஸ்போர்ட்டில் புகைப்படம் நிச்சயம் தேவை என்ற நிலை கொண்டுவரப்பட்டது. இது 1915 இல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பாஸ்போர்ட் அறி முகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஒருவர் தமக்குப் பிடித்த எந்த ஒரு புகைப் படத்தையும் பாஸ் போர்ட்டுக்குக் கொடுக்கலாம். குடும்பத்தோடு இருக்கும் குழு புகைப்படம் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இ்ந்திய பெருஞ்சுவர் எங்கிருக்கிறது தெரியுமா?

சீன பெருஞ்சுவர் தெரியும்... அதென்ன இந்திய பெருஞ்சுவர்... உலகின் மிக நீளமான சுவராக விளங்கும் சீனப்பெருஞ்சுவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியாவிலும் நீளமான சுவர் கொண்ட கோட்டை ஒன்று இருக்கிறது. அதனை பலரும் அறிந்திராத நிலை உள்ளது. ‘இந்தியாவின் பெருஞ்சுவர்’ என்று அழைக்கப்படும் அந்த சுவர் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கிறது. ராஜ்சமந்த் மாவட்டத்தில் மலை பிரதேசத்தினுள் சூழ்ந்திருக்கும் அதன் பெயர், ‘கும்பல்கர்க் கோட்டை’. இந்தக் கோட்டை ராஜ ராணா கும்பா என்ற மன்னனால் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டைக்கு செல்லும் வழியில் அரணாக எழுந்து நிற்கும் இந்த சுவர் சுமார் 36 கிலோ மீட்டர் தூரம் கோட்டை வரை நீள்கிறது. மலை பகுதியில் அமைந்திருப்பதால் சுற்றிலும் அழகான இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே செல்லலாம். யுனஸ்கோவின் பட்டியலிலும் இந்த சுவர் இடம் பெற்றிருக்கிறது.

இந்த பல்லி புதுசு

பெருவில் புதிய பல்லி இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக அதன் தேசிய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய பல்லி இனம் லியோலேமஸ் வார்ஜண்டே(Liolaemus warjantay) என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இது அந்நாட்டு மலையான பெருவியன் ஆண்டிஸில் 4,500 மீட்டர் அதாவது 14,700 அடி உயரத்தில் வாழ்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பெருவின் அரேக்விபாவில் உள்ள கோட்டாஹுவாசி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை பல்லியான லியோலெமஸ் வர்ஜண்டே, லியோலெமஸ் இனத்தைச் சேர்ந்தவை. இதில் 280 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனப் பிரிவுகள் உள்ளன. இப்பல்லி கண்டுபிடிக்கப்பட்ட பகுதி 4, 90,550 ஹெக்டேர் பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை கொண்டதாகும்.. பல்லிக்கு பின்னால் இத்தனை பெரிய விஷயமா... அடேங்கப்பா..

ஜிபிஎஸ் இல்லாமலே

இன்றைய நவீன மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வரைபடங்கள், சாலை குறியீடுகள், திசைகாட்டிகள், ஜிபிஎஸ் கருவிகள் என ஏரானமானவற்றை நம்பி இருக்க வேண்டியுள்ளது. அப்படியும் சிலர் வழி தவறி விடுகின்றனர். ஆனால் எந்த வரைபடத்தையும் வைத்திருக்க முடியாத நீருக்கு அடியில், பல்லாயிரம் மைல்கள் ஆழமுள்ள கடலுக்குள்.. அதுவும் சூரிய ஒளி புகாத கும்மிருட்டில்.. ஆனால் சில சுறாக்கள் தங்கள் உடலிலேயே இயற்கை ஜிபிஎஸ் அல்லது காந்தமானியை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பல நூறு மைல்கள் சென்றாலும் மீண்டும் தனது இருப்பிடத்துக்கு மிகச் சரியாக அவை திரும்பி விடுகின்றனவாம்.  ஆய்வில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடலுக்கு அடியில் நீந்தி சுறாக்கள் மிகச் சரியாக ஆஸ்திரேலியா வந்து விட்டு 9 மாதங்களுக்கு பிறகு திரும்பிச் செல்வது தெரியவந்துள்ளது. இது இயற்கையின் ஆச்சரியம் தானே..

டாப் 5

2016-ல் ஸ்மார்ட்போன் சந்தையில், ஒன்பிளஸ் 3T, சியோமி ரெட்மி 3s பிரைம், சாம்சங் கேலக்ஸி S7, கூகுள் பிக்சல் XL, ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் போன்றவை டாப் 5 இடத்தில் இடம் பிடித்துள்ளன. இந்த ஆண்டு வெளியிட்ட ஐபோன் 7 பிளஸ் இரட்டை கேமராக்களுடன் வெளியானது கேமரா ப்ரியர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது.

மொபைல் வேலட்

இந்தியாவில் இருக்கும் எந்தவொரு மொபைல் வேலட்டும் பாதுகாப்பானது இல்லை என்று குவால்கோம் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டே இதுபோன்ற பெரும்பாலான மொபைல் வேலட்டுகள் இயங்குகின்றன. இதனால் வாடிக்கையாளர்களின் கடவுச் சொல் உள்ளிட்ட பாதுகாப்பு குறித்த தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மொபைல் பேங்கிங் எனப்படும் செல்போன்கள் மூலம் செய்யப்படும் பணபரிவர்த்தனைகளைப் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் வகையிலான புதிய பாதுகாப்பு அம்சத்தினை குவால்கோம் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago