முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கயி்ற்றின் மீது நடப்பவர்கள்: ரஷ்யாவில் வினோத கிராமம்

நம்மூர்களில் திருவிழாக் காலங்களில் வித்தை காட்டும் கலைஞர்கள் தெருவில் இரு புறமும் கயிறை கட்டி கூத்தாடுவதை பார்த்திருக்கிறோம். அதையை சற்று உயரமாகவும், நீளமாகவும் மாற்றி வெளிநாடுகளில் சாதிப்பவர்களும் இருக்கிறார்கள். அண்மையில் இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபில் டவர் மீது கயிற்றை கட்டி அசால்ட்டாக நடந்து சென்று சாதனை செய்த வீடியோ நெட்டில் வைரலாக பரவியதை அனைவரும் பார்த்திருக்கலாம்.ஆனால் ஒரு கிராமமே கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா.. என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த கிராமத்தில் முதியவர் தொடங்கி இளையவர் வரை, பெண்கள் தொடங்கி சிறுவர்கள் வரை அனைவரும் கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களாக அசத்து கின்றனர். இந்த வினோத கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா.. ரஷ்யாவில்.. பொதுவாகவே சர்க்கஸ் துறையில் ரஷ்யர்கள் தான் எப்போதும் முன்னிலையில் இருப்பவர்கள். கடந்த நூற்றாண்டில் சர்க்கஸ் தொழில் செழித்து கிடந்த கால கட்டத்தில் ரஷ்யர்கள் உலகம் முழுவதையும் வியாபித்திருந்தனர். தற்போது சர்ககஸ் தொழில் படிப்படியாக குறைந்து விட்டது.மக்களுக்கும் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவது இல்லை. அது கிடக்கட்டும்.. கயிற்றின் நடக்கும் அந்த கிராமம் Russia’s Dagestan autonomous republic என்று சொல்லப்படும் பிராந்தியத்தில் உள்ள Tsovkra-1 என்ற சிறிய கிராமம் தான் அது. அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுமே கயிற்றில் நடக்கும் திறன் பெற்றவர்கள் என்பதாலேயே அது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த காலத்தில் 3 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டிருந்த அந்த கிராமம் தற்போது 300 பேராக குறைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கயிற்றின் மேல் நடக்கும் மரபை அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் வீசியெறியும் ஆடைகள் மட்க எத்தனை ஆண்டுகள் தேவை?

உலகம் முழுவதும் நாகரிகமடைந்த மனிதர்கள் ஆடைகளை அணிய தொடங்கினர். அதுவும் தற்போது டிசைன் டிசைனாக ஆடைகளை அணிந்து தள்ளுகிறோம். உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான டெக்ஸ்டைல் கழிவுகளை வெளியேற்றுகிறோம். நாம் அணியும் ஆடைகள் மட்கி போக எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள் எவ்வளவு தெரியுமா...40 ஆண்டு காலம் ஆகுமாம். பெரும்பாலான உடைகள் சாயங்களாலும், ரசாயனங்களாலுமே நிறமேற்றப்படுவதால் அவை நிலத்தை விஷமாக்குகின்றன.

பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்

பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. இத்தாலியில் நடைப்பெற்ற கண்காட்சி ஒன்றில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது. இதில் செராமிக் எல்.இ.டி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சமும், தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. டிஸ்பிளேவில் வேகம், போகும் பாதை, ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும் வகையில் உள்ளது.

எளிய பயிற்சிஎளிய பயிற்சி

இதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

அதிசய குழந்தை

துருக்கியின் அங்காரா நகரைச் சேர்ந்த முராட் எஞ்சின் மற்றும் சீயாடா தம்பதிக்கு அண்மையில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையின் முகத்தில் சிவப்பு நிறத்தில் இருந்த இதய வடிவிலான மச்சம் ஒன்று இருப்பதை கண்டு அவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இந்த இதய வடிவ மச்சம் தங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என அவர்கல் நம்புகின்றனர்.

உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்த கிரிக்கெட் மைதானம் எது தெரியுமா

 உலகிலேயே மிக ன இடத்தில் அமந்துள்ள கிரிக்கெட் மைதானம் எங்கு அமைந்துள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், நீங்கள் யூகித்ததைப் போலவே அது இந்தியாவில்தான் அமைந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள சையில் என்ற இடத்தில் உள்ள ராணுவ பள்ளியில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம்தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள மைதானமாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2444 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. Chail Cricket Ground என்று அழைக்கப்படும் இந்த மைதானம் கடந்த 1893 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் என்ன ஒரு சந்தேகம் என்றால் சிக்ஸர் அடித்தால் பந்தை திரும்ப எடுக்க முடியுமா..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago