முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

காட்டன் சட்டை தயாரிக்க எவ்வளவு நீர் வேண்டும் தெரியுமா?

இன்றைய நவீன யுகத்தில் காட்டன் சர்ட்தான் இளைஞர்களின் மோஸ்தராக உள்ளது. ஆனால் இதை தயாரிப்பது அத்தனை சுலபம் கிடையாது. காட்டன் துணிகளை உருவாக்க ஏராளமான நீர் தேவைப்படும். உதாரணமாக சொன்னால் ஒரு காட்டன் டீ சர்ட் தயாரிக்க பயன்படும் நீரை ஒரு மனிதன் 900 நாட்களுக்கு பருகலாம். அதாவது ஒரு காட்டன் சர்ட் தயாரிக்க 2800 லிட்டர் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்க புல்வெளியில் 9 மணி நேரம் தேங்க விடுவதற்கு இணையான அளவுக்கு நீர் தேவைப்படும்.

பனிக்கட்டி ஹோட்டல்

சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள், என அனைத்தும் பனிக்கட்டிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள ’ஐஸ் ஹோட்டல் 365’ என்ற விடுதி சுவிடனில் உள்ள ஜக்கஸ்ஜார்வி கிராமத்தில் உள்ளது. இந்த பனிக்கட்டி ஹோட்டல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.

மேற்கத்திய திருமணங்களில் வெள்ளை ஆடை மரபு எப்போது தோன்றியது

நம்மூர் திருமணங்களில் பட்டு சேலையும், பட்டு சரிகை வேட்டியும் உடுத்துவதை மரபாக கொண்டுள்ளோம். ஆனால் மேற்கத்திய திருமணங்களின் போது வெள்ளை நிற உடையில் மணமக்கள் தேவதை போல் காட்சியளிப்பர். இந்த மரபு முதன் முதலில் பிரான்ஸில் தான் தோன்றியது. 1499 இல் 12 ஆம் லூயிக்கும், அன்னாவுக்கும் நடைபெற்ற திருமணத்தின் போதுதான் முதன் முதலில் வெள்ளை ஆடை அணியும் பழக்கம் ஏற்பட்டது. இருந்த போதிலும், 1840 இல் விக்டோரியா மகாராணிக்கும் இளவரசர் ஆல்பர்ட்டுக்கும் நடைபெற்ற திருமணத்துக்கு பிறகுதான் வெள்ளை ஆடை மரபு தொடர்ந்து பொது மக்களிடமும் நீடித்து நிலைத்தது.

மாறிய கோவில்

12-ம் நூற்றாண்டில் , 2-ம் சூரியவர்மனால் கட்டப்பட்ட அங்கோர் வாட்டை ஆரம்பத்தில் ஓர் விஷ்ணு தள வழிப்பாட்டு கோவிலாக இருந்தது. பின் 14 - 15-ம் நூற்றாண்டுகளில், புத்த மத துறவிகளால் கையகப்படுத்தப்பட்டு கூடுதலான புத்த சிலைகளும், கலைநய வேலைப்பாடுகளும் சேர்க்கப்பட்டு புத்த கோவிலாக மாற்றப்பட்டது.

தெரிந்தும் தெரியாதது

ஏப்ரம் மாதத்தின் முதல் நாளான முட்டாள்கள் நாளின் உண்மைக்காரணமாக வரலாற்றால் அறியப்படுவது நாட்காட்டி மாற்றம் தான். அதாவது கி.பி1582-ம் ஆண்டு வரையில் ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் மாதம் தான் முதல் மாதமாகவும் புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டது. கிர்கோரி என்ற போப் தான் தற்போதைய ஆங்கில நாட்காட்டியை உருவாக்கியவர். இந்த நாட்காட்டியைப் பலர் ஏற்றுகொண்டனர். சிலர் ஏற்கவில்லை. புதிய நாட்காட்டி முறைப்படி மாறியவர்கள் பழைய நாட்காட்டி முறையைப் பின்பற்றி ஏப்ரல் 1-ஐ புத்தாண்டாகக் கொண்டாடுவதை முட்டாள்கள் நாள் என நய்யாண்டி செய்ய ஆரம்பித்தனர். இதுவே நாளடைவில் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் நாள் என்று கூறப்படக் காரணமாக அமைந்தது.

மிகப்பெரிய நகரம்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. 334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த பொழுதுபோக்கு நகரம், கலாசாரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கும் செயல்பாடுகளுக்கான இடமாக அமையவுள்ளது.  சிக்ஸ் ஃப்ளாக் பூங்கா , சஃபாரி பூங்காவும் அமைய உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago