முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தகவல் பரிமாற்றத்துக்கு தந்தி என்ற கருவி இருந்தது தெரியுமா?

இன்றைக்கு தகவல் பரிமாற்ற தொழில் நுட்பம் தொலைபேசி, அலைபேசி, இமெயில், எஸ்எம்எஸ், என்று படிப்படியாக வானளாவிய அளவில் வளர்ந்து விட்டது. ஆம் உண்மையிலேயே வானத்துக்கு சென்று விட்டது. செயற்கை கோள்கள் மூலம் தகவல் பரிமாற்ற காலத்தை அடைந்துள்ளோம். ஆனால் தொடக்கத்தில் டெலிகிராஃப் எனப்படும் தந்தி என்ற முறையில் செய்திகளை அனுப்பினோம். இதை அமெரிக்காவில் உள்ள ஓவியர் சாமுவேல் மோர்ஸ் என்பவர் 1837 இல் கண்டுபிடித்தார். எனவே தந்திக்கு மோர்ஸ் தந்தி என்ற பெயர் வந்தது.  அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு முதல் தந்தி 1838 ஜனவரி 11-ஆம் தேதி அனுப்பப்பட்டது.  பொதுமக்களுக்கான முதல் தந்தி சேவையை பிரிட்டன் 1846 இல் நிறுவியது. இந்தியாவில் 1850 இல் சோதனை முறையில் கொல்கத்தாவுக்கும் டயமண்ட் துறைமுகத்துக்கும் இடையே நிறுவப்பட்டது. இதன் பின்னர் 1851 இல் கிழக்கிந்திய கம்பெனி இதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. 1902 இல் முதன்முறையாக கம்பியில்லா தந்தி முறை அறிமுகமானது. செல்பேசிகள், இ-மெயில் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தியாவில் தந்தி சேவை பயன்பாடு முற்றிலுமாக நின்றுவிட்டது. 2009-10-ஆம் ஆண்டுகளில் தந்தி சேவை பயன்பாடு 100 சதவீதம் குறைந்துவிட்டது. இதையடுத்து 2013 ஜூலை 15 முதல் இந்தியாவில் தந்தி சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

சூப்பர் சோனிக்

‘பேபி பூம்‘ என பெயரிடப்பட்டுள்ள, மணிக்கு 2,335 கி.மீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்து செல்லும், அதிவேக சூப்பர் சோனிக் பயணிகள் விமானத்தை  அமெரிக்காவின் விர்ஜின் தொழில் அதிபர் தயாரிக்கிறார். இந்த விமானம் 60 ஆயிரம் அடி உயரம் பறக்க கூடியது. இதில் லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு 3 மணி 15 நிமிடத்தில் பயணம் செய்ய முடியும்.

செவ்வாயில் ஆக்சிஸன் தயாரித்த நாசா

செவ்வாயில் முதன்முறையாக நாசா தனது பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் மூலம் ஆக்சிஸனை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள மோக்ஸி என்ற இயந்திரம் மூலம் இந்த சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் செவ்வாயில் உள்ள சூழலை பயன்படுத்தி, அதில் உள்ள பெரும்பான்மையான கார்பன் டை ஆக்ஸைடை  ஆக்ஸிசனாக மாற்றியுள்ளது. இந்த முயற்சியானது மனிதர்கள் எதிர்காலத்தில் செவ்வாயில் குடியேறுவதற்கான ஒரு அச்சாரமாக எதிர்பார்க்கப்படுகிறது.

கணிணியில் பயன்படுத்தப்படும் மவுஸ் தொடக்கத்தில் மரத்தில் செய்யப்பட்டது

சில நேரங்களில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் வரலாறு குறித்து தெரியவந்தால் அதில் நாம் அறிந்திராத பல்வேறு சுவாரசியமான செய்திகள் அடங்கியிருக்கும். அதில் ஒன்று, தற்போது நாம் கணிணியில் பயன்படுத்தி வரும் மவுஸ். 1964 இல் ஸ்டான்போர்ட் பொறியாளர் டக்ளஸ் ஏங்கல்பார்ட் என்பவர்தான் மர மவுஸை உருவாக்கியவர். அதில் இரண்டு சக்கரங்கள் மற்றும் ஒரு பொத்தான் கொண்ட மரப்பெட்டி வடிவத்தில் இருந்தது என்றால் ஆச்சரியம் தானே.. 

அதிக நேரம் அல்ல, 3 ஆண்டுகள் தூங்கும் உயிரினம் எது தெரியுமா?

அதிக நேரம் தூங்கும் உயிரினம் எது என்று கேட்டவுடன் நமக்கு கும்பகர்ணன் நினைவுக்கு வரும். அதெல்லாம் கதைக்குத்தான், மனிதனால் 6 மாதம் எல்லாம் தூங்க இயலாது. அது கிடக்கட்டும். கரடியின் குளிர்காலத் தூக்கம் ரொம்ப பிரபலமானது. உணவின்றி சுமார் 8 மாதங்கள் வரை கரடி கும்பகர்ணத் தூக்கம் போடுவதுண்டு. பாறைகளுக்கு இடையே, மரப்பொந்துகளில் எனப் பாதுகாப்பாகக் கரடிகள் தூங்கும். இதில் சாம்பியன் கரடி என்று நீங்கள் நினைத்தால் தவறு.. அது குட்டியூண்டு நத்தை தான். இவை 3 ஆண்டுகள் வரை தூங்குமாம். சில பாலைவன நத்தைகள் தரைக்கடியில் குழி தோண்டி அதில் மூன்று வருடங்கள் வரை கூட தூங்குகின்றன.

வெள்ளை சர்க்கரை என்ற சீனியை கண்டுபிடித்த நாடு எது தெரியுமா?

நாம் அனைவரும் தினமும் பயன்படுத்தும் சுவையான பொருள் வெள்ளை சர்க்கரை எனப்படும் சீனி. கரும்பு, பீட்ரூட், பனை போன்றவற்றிலிருந்து தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை வெள்ளை நிறத்தில் கிடையாது. பழுப்பு நிறத்திலேயே வந்தது. அதை வெள்ளையாக மாற்றியது யார் தெரியுமா... இந்தியர்கள்தான். வெள்ளை சர்க்கரையாக பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு நுட்பங்களை நமது இந்தியா தான் முதல் முதலில் உருவாக்கியுள்ளது. சர்க்கரை தயாரிக்கும் முறை இந்தியாவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து வந்த இந்த தொழில் நுட்பம் சீனா, பெர்சியா மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு பரவி இறுதியில் 13 ஆம் நூற்றாண்டில் மத்திய தரைக்கடலை அடைந்துள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சர்க்கரை ஒரு அரிய பொருளாகவும் மிகவும் விலையுயர்ந்த பொருளாகவும் கருதப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago