முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விஞ்ஞானியாக இருந்த போதும் ரசவாதத்தை நம்பியவர் யார் தெரியுமா?

மனித அறிவியல் வரலாற்றில் ரசவாதம் என்பது ஒரு மிகப் பெரிய காலகட்டத்தை ஆக்கிரமித்திருந்தது. இன்றைக்கு நவீன அறிவியல் வளர்ந்து விட்ட நிலையில் தனிமங்கள் குறித்த அறிவு பொதுவாகவே பரவலாக்கப்பட்டு விட்டது. ஆனால் கடந்த காலத்தில் சில விஞ்ஞானிகள் கூட ரசவாதத்தை நம்பினர் என்றால் ஆச்சரியம் தானே...ரச வாதம் என்பது எந்த தனிமத்தையும் தங்கமாக மாற்றுவது என்பதுதான் அது. அப்படி நம்பிய விஞ்ஞானிகளில் முதன்மையானவர் சர் ஐசக் நியூட்டன் என்றால் நம்ப முடிகிறதா..சர் ஐசக் நியூட்டன் ஒரு சிறந்த விஞ்ஞானி மற்றும் இயற்பியலில் பெரும் பங்களிப்பைச் செய்தார். ஆனால் இது ரசவாதத்தை நம்புவதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை, இது இப்போது புராணங்களின் அடிப்படையில் ஒரு போலி அறிவியலாக கருதப்படுகிறது. தனது நாட்களின் இறுதி வரை, நியூட்டன் ஒரு நாள் சாதாரண உலோகத்தை தங்கமாக மாற்ற முடியும் என்று நம்பினார்.

கதிர்வீச்சு தன்மை கொண்டவை வாழைப்பழங்கள்

அறிவியல் எப்போதும் ஆச்சரியம் மிக்கவையே. அதிலும் நாம் உண்ணும் உணவுப் பொருள்களின் பல்வேறு அறிவியல் அதிசயங்களை தெரியாமலேயே நாம் அவற்றை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் ஒன்றுதான் நீங்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் வாழைப்பழங்கள். அதில் என்ன அதிசயம் என்கிறீர்களா.. வாழைப்பழங்களுக்கு கதிர்வீசும் தன்மை கொண்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அதன் அளவு மிகமிகமிக குறைவுதான். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரே சமயத்தில் உங்களால் 10 மில்லியன் வாழைப்பழங்களை சாப்பிட முடிந்தால் மட்டுமே அதன் கதிர்வீச்சு உங்களை பாதிக்கும் என்கிறார் மெக்ஹில் பல்கலை கழக ஆய்வாளர் ஜோ ஸ்வார்க்ஸ்.

கோவிட் மரணத்தை காட்டிலும் சுற்றுசூழல் மாசால் இறந்தவர்கள் அதிகம்

கோவிட் பெருந்தொற்று உலகம் முழுவதும் 59 லட்சம் பேர் கடந்தாண்டில் இறந்தனர். ஆனால் அதை காட்டிலும் அதிகமானோர் சுற்றுச்சூழல் மாசால் உயிரிழப்பதாக ஐநா எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 90 லட்சம் சிசுக்கள் குறைபிரசவத்தில் இறந்து போவதாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமெடுத்து வருவதாக ஐநா அலறுகிறது. நீரில் பாதிப்பு, காற்று பாதிப்பு, ரசாயன உரங்கள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அது தொடர்பான ரசாயனங்கள் என சுற்றுச்சூழலுக்கான அச்சுறுத்தல் நீண்ட சங்கிலி தொடர் போல நீண்டு செல்வதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இது குறித்து உலக நாடுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க தவறினால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் எச்சரித்துள்ளது.

வியக்க வைக்கும் இளஞ்சிவப்பு ஏரி

ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ்பெற்ற ஹில்லியர் ஏரி (Lake Hillier) இளஞ்சிவப்பு ஏரி எனப்படுகிறது. 1802 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் ரெச்செர்ச் தீவுக் கூட்டத்தின் 105 தீவுகளில் ராயல் நேவி எக்ஸ்ப்ளோரரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள கோல்ட் ஃபீல்ட்ஸ் எஸ்பெரன்ஸ் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்த ஏரியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆண்டு முழுவதும் காணப்படும் அதன் இளஞ்சிவப்பு நிறம். அதற்கு என்ன காரணம்...இந்த ஏரியில் டுனாலியெல்லா சலினா என்று அழைக்கப்படும் உப்பு பாசி இனங்கள் மற்றும் ஹாலோபாக்டீரியா எனப்படும் இளஞ்சிவப்பு பாக்டீரியாக்கள், சிவப்பு ஆல்கா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உள்ளன. அதுதான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் நீரை பாட்டிலில் பிடித்தாலும் சிகப்பு நிறத்திலேயே காணப்படுமாம். ஆண்டு முழுவதும் ஏன் இந்த நிறம் தொடர்ந்து மாறாமல் இருக்கிறது என்பதற்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் விளக்கம் இதுவரை எதுவும் இல்லை. பிங்க் ஹில்லியர் இன்னும் அறிவியலுக்கு ஒரு மர்மமாகவே உள்ளது. ஆச்சரியமாக உள்ளது அல்லவா..

குளோனிங் மூலம் புதிய உயிரை உருவாக்கியவர்

இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஜான் குர்டான். இவர் தான் முதன் முதலில் குளோனிங் மூலம் புதிதாக ஒரு உயிரை உருவாக்கியவர். விலங்கியல் துறை ஆராய்ச்சியாளரான இவர் 1962ம் ஆண்டில் Xenopus என்ற தவளையின் ஸ்டெம் செல்லில் இருந்து புதிதாக ஒரு தவளையை உருவாக்கினார். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே பின்னர் டாலி என்ற ஆட்டுக் குட்டி ஸ்டெம் செல் மூலம் உருவாக்கப்பட்டது. குளோனிங் மூலம் உயிர்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய இவர் தான், உடலில் உள்ள எல்லா செல்களிலும் உள்ள ஜீன்களும் ஒரே மாதிரியானவை என்று நிரூபித்தார். எந்தவொரு செல்லை கொண்டு அந்த உயிரினத்தை குளோனிங் முறையில் திரும்ப உருவாக்கி விடலாம் என்ற அவரது ஆராய்ச்சியை கண்டு உலகமே திகைத்து நின்றது.  இதற்காக இவருக்கும் ஷின்யா யமனகாவுக்கும் சேர்த்து நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவை செரிக்க 4 வாரம் எடுத்துக் கொள்ளும் விலங்கு எது தெரியுமா?

உலகிலேயே சோம்பேறியான விலங்கு என்று அழைக்கப்படுவது ஸ்லாத் எனப்படும் ஒரு வகை சிறிய கரடி இனமாகும். அசையாக்கரடி (sloth) தென் அமெரிக்காவிலே வாழும் இரவிலே இரைதேடும் ஒரு விலங்கு. இது ஒரு தாவர உண்ணி என்றும், பூச்சி, பல்லி முத்லியவற்றையும் உண்ணும் என்பதால் அனைத்துண்ணி விலங்கு என்றும் கூறப்படுகின்றது. இது நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிக மிக மெதுவாகவே நகரும் என்பதாலும் இதனை "அசையா"க் கரடி என்கிறோம். இந்த கரடிதான் தான் சாப்பிட்ட உணவை செரிப்பதற்கும் சோம்பேறித்தனமாக இருக்கும். இது உண்ட உணவு உடலில் செரிமானம் ஆக 2 முதல் 4 வார காலம் வரை ஆகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago