முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தலையால் கூட்டின் கதவை அடைக்கும் வித்தியாச எறும்புகள்

எறும்புகள் ஒருவகையில் தேனீக்களைப் போன்றவை. தேனீக்களை போலவே ராணி, ஆண், வேலைக்கார எறும்புகள் போன்ற வகைகளில் இவற்றிலும் உண்டு. அதில் ஒரு சில இனங்களில் வித்தியாசமான எறும்புகள் உள்ளன. அவை தங்களது தலையால் கூட்டின் வாயிலை கதவு போல அடைத்துக் கொள்கின்றன. இதனால் இவற்றுக்கு கதவு தலை எறும்புகள் (door head ants) என்றே பெயர் கொண்டவை. இவற்றை தாண்டிதான் அன்னியர்கள் உள்ளே வர முடியும். பெரும்பாலும் அன்னியர்களுக்கு அனுமதி கிடையாது. தங்களது இனத்திலேயே கதவு தலை எறும்புகளின் அனுமதி கிடைத்தால் மட்டுமே கூட்டுக்குள் என்ட்ரியாக முடியும்.. எப்படி ஒரு அதிசயம் பாருங்கள்.

ரிக்சாகாரருக்கு ரூ.1 கோடி சொத்து

ஒடிசா மாநிலம் கட்டாக் என்ற இடத்தில் வசித்து வருபவர் Minati Patnaik. 63 வயதான இவர் கணவரை இழந்து விட்டார். கணவரை இழந்த 1 வருடத்துக்குள் தனது மகளையும் இழந்துள்ளார். இதனால் இவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ரிக்ஷா தொழிலாளி புத்தா சமல் என்பவரும் அவரது குடும்பத்தினரும் தான் எந்த பிரதிபலனும் எதிர்பார்ப்பும் இன்றி Minati Patnaik க்கு உதவி வந்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் தனது ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகள், தங்கம் ஆகியவற்றை புத்தா சமல் குடும்பத்தினருக்கு அளிப்பதாக உயில் தயார் செய்து வைத்துள்ளார். இது குறித்து Minati Patnaik கூறுகையில், சிறு வயது முதலே எனது குழந்தையை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அழைத்து சென்று வருபவர் புத்தா சமல். எனது கணவர் இறந்த பிறகு என்னை மிகவும் கவனத்துடன் எந்த பிரதிபலனும் பாராமல் அவரும், அவரது குடும்பத்தினரும் பராமரித்து வருகின்றனர். எனக்கு பிறகு எதிர்காலத்தில் சட்டரீதியாக அவர்களுக்கு எந்த பிரச்னையும் வரக் கூடாது என்பதற்காக எனது ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்து, நகைகள் ஆகியவற்றை புத்தா சமல் குடும்பத்தினருக்கு உயிலாக எழுதி வைத்துள்ளேன். காசு பணம் என்பதையும் தாண்டி மனித உறவுகள் தான் மதிப்புமிக்கவை என்பதற்கு உதாரணமாக புத்தா சமல் குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளாக எனது குடும்பத்திற்காக உழைத்துள்ளனர் என்றார் நெகிழ்ச்சியாக. அவரது இந்த கருணையுள்ளதை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் சில சிறப்பு அம்சங்கள்

தஞ்சை மாவட்டத்திலுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கி.பி 1167இல் கட்டப்பட்டது. கோயிலில் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் நடனக்காட்சிகள், போர்க்காட்சிகள், மதநிகழ்வுகள், ரிஷிகள், விலங்குகள், கற்பனை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.இக்கோயிலின் சிறப்பானது சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் சிறப்பிக்கப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களைச் சிற்பங்களாகச் செதுக்கி வைத்துள்ளதே ஆகும். அநபாயச்சோழன் என்று அழைக்கப்படும் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் சேக்கிழாரைக் கொண்டு அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பெரியபுராணத்தை இயற்றினார். அவரது மைந்தனான இரண்டாம் இராஜராஜ சோழன் அவர்களைச் சிற்பங்களாக இக்கோயிலில் செதுக்கிவைத்துள்ளார். தமிழகச் சைவக் கோயில்களில் தாராசுரத்தில் மட்டுமே அறுபத்துமூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் முழுத்தொகுப்பாக காணப்படுகின்றன. தாராசுரம் தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாட்டினைப் பறைசாற்றும் எத்தனயோ சின்னங்களில் இதுவும் ஒன்று. 

கடல் மட்டத்துக்கும் கீழே...

தமிழகத்திற்கு தஞ்சை இருப்பது போல, கேரளத்தின் நெற்களஞ்சியமாக உள்ள குட்டநாட்டில், அலைகள் எழாத 'backwaters' எனப்படும் உப்பங்கழி நீரோடைகள் இருக்கின்றன. ஆழப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த குட்டநாடு, கடல் மட்டத்தில் இருந்து 4-10 அடிகள் வரை கீழ் உள்ளது. உலகிலேயே அதிகளவு கடல்மட்டத்திற்கு கீழ் விவசாயம் செய்யப்படும் பகுதி இதுவே. ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கும் இங்கு, நெல், வாழை ஆகியன முதன்மையாக பயிரிடப்படுகின்றன. பம்பை ஆறு, மீனச்சிலாறு, அச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு ஆகிய நான்கு பெரிய ஆறுகள் குட்டநாட்டில் பாய்கின்றன. குட்டநாட்டில் படகுகளே பிரதான போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.

மருத்துவம் ஆயிரம்

உங்கள் அக்குள் பகுதியில் கருப்பாக மடிப்புகள் இருந்தால் அவை சர்க்கரை வியாதியின்அறிகுறியாகும். இது ஒரு சரும கோளாறு. அக்குள் பகுதியில் உருவாகும். அக்குள் பகுதியில் உள்ள அந்த கருப்பு மடிப்பு வெல்வெட் போல் மிருதுவாகவும், கெட்டியாகவும் இருக்கும். சிலருக்கு கோதுமையிலுள்ள குளுடன் அலர்ஜியை உண்டாக்கும். அவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

இஸ்ரேலுக்கு விசா தராத நாடு

உலகில் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால் அந்தந்த நாட்டின் பாஸ்போர்ட் மற்றும் இரு நாடுகளின் விசா ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும். பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அந்நாட்டு குடிமக்களுக்கு இஸ்ரேல் செல்ல அனுமதி கிடையாது. எனவே பாகிஸ்தானியர்களுக்கு இஸ்ரேல் செல்வதற்கான விசா கிடைக்காது. அதே போல மேலும் ஒரு வித்தியாசமான சட்டம் அந்நாட்டில் உள்ளது. அங்கு கல்விக்காக ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக செலவிட்டால் அவர்கள் அரசுக்கு 5 சதவீத வரி செலுத்த வேண்டும் என்பதுதான் அது. எனவே பெரும்பாலான மக்கள் உயர்கல்வி படிக்க ஆர்வம் காட்டுவது இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago