முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எளிய முறை

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டைப் செய்யாமலேயே டைப் செய்து, மற்றவர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதற்கு, ஆண்ட்ராய்டில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வசதியை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் பேசினாலே டெக்ஸ்ட் டைப் செய்யப்படும். இதற்கு கீபோர்டு செயலியை ஓபன் செய்து, அதன் ஓரத்தில் காணப்படும் மைக்ரோபோன் பட்டனை அளித்தினால் போதும்.

விந்தணு குறைவு

1973 - 2011-ம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின்படி, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தொடர்ந்து ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளதாம். இது நீடித்தால் மனித இனத்தின் அடையாளமே அழிந்து போகுமாம். ஆனால், ஆசியா, ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லையாம்.

பீட்சா எப்படி வந்தது

இன்று உலகையே ஆக்கிரமித்திருக்கும் பீட்சாவின் கதை தெரியுமா.. 1889ம் ஆண்டில், அப்போதைய இத்தாலி ராணியான மார்கரிட்டா மற்றும் ராஜாவான முதலாம் ராக் உம்பர்டோ ஆகியோர் நேப்பிள் பகுதியில் நகர்வலம் சென்றனர். அப்போது, அந்நகர ஏழைகள் விரும்பி சாப்பிட்டு வந்த தட்டை ரொட்டியை, ராணி சுவைத்து பார்த்தார். உடனே, தட்டை ரொட்டியின் ருசிக்கு மயங்கிய ராணி அதன் ரசிகையாகவே மாறிவிட்டார். உடனே தனது அரண்மனை சமையல்காரரை அழைத்து‘எனக்கு தட்டை ரொட்டியை தயார் செய்து தா’ என்று உத்தரவிட்டார். இதுதான் சந்தர்ப்பம் என்று காத்திருந்த அரண்மனை சமையல்காரர் ரஃபேல் எஸ்போசிடா, தட்டை ரொட்டிக்கு புதிய பரிமாணம் அளித்தார். அதில், இத்தாலிய சிகப்பு தக்காளி, சீஸ், துளசி இலைகள் போன்றவற்றை ஒரு அளவான விகிதத்தில் சேர்த்து ராணியிடம் கொடுத்தார். அவர் தயாரித்த தட்டை ரொட்டியில், இத்தாலிய தேசிய கொடியின் வண்ணங்களான சிவப்பு (தக்காளி), வெள்ளை, பச்சை இருக்கும்படி பார்த்து கொண்டார். இன்று, நம்மிடையே பிரபலமாக உள்ள மார்கரிட்டா பீட்சா என்ற ரகம் தோன்றியது இப்படித்தான். பின்னர் 2 ஆம் உலகப் போரின் போது ராணுவ வீரர்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி பீட்சா பல்வேறு வடிவங்களை எடுத்தது என்பது நீண்ட வரலாறு.

முகத்தை பராமரிக்க

ஒரு நாளைக்கு 2 முறை மட்டும் முகத்திற்கு சோப்பு போட்டு குளித்தால் நல்லது. இல்லையெனில், தோலில் வறட்சி ஏற்படும். மேலும், சூடாகவோஅல்லது அதிக குளிரான நீரைக்கொண்டு முகத்தை கழுவுவதால் முகப்பொலிவு ஏற்படாது. முகம் கழுவுவதற்கு முன்னால் நம் கைகளும், முகத்தை துடைக்க பயன்படுத்தும் துண்டையும் சுத்தமானதாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நௌலி ஆசனம்

நௌலியின் ஆசனத்தை செய்து வருவதால் வயிற்றை சார்ந்த முதுகெலும்பின் பாகங்கள், அதைச்சார்ந்த நரம்புக்கூட்டங்கள் அனைத்தும் புத்துயிர் பெறும். நரம்புகள் பலம் பெறுவதால் உடல் வலுவடையும். குடல் வாயு, வயிற்று கோளாறுகள், வாயில் துர்நாற்றம் உள்பட பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ தட்சிண நௌலி உறுதுணையாக இருக்கும்.

மிகவும் அரிய வகை இளம் சிவப்பு நிற வெட்டுக்கிளி

மிகவும் அரிய வகை இளம் சிவப்பு நிற வெட்டுக்கிளி அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸ் மாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் ஆய்வாளரான டிர்க் பார்க்கர் என்ற 33 வயது இளைஞர் இதை கண்டுள்ளார். அவருக்கு தொடக்கத்தில் இது எத்தனை அரியது என்பது தெரிந்திருக்கவில்லை. பின்னர் பூச்சி இனங்கள் தொடர்பாக கூகுளில் தேடிய போதுதான் இது அரிய வகை என்பது தெரியவந்தது என்கிறார். மரபணுவில் ஏற்படும் எரித்ரிசைம் என்பதன் காரணமாக இந்த நிற மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது அதை தனது வீட்டில் செல்லப்பிராணியாக வைத்திருக்கிறார் பார்க்கர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago