முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய தகவல்

மேற்குவங்கத்தை சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர், தேசிய கீதத்தை எழுதியுள்ளார்.அவரது மற்றொரு பாடல் நமக்கு அருகாமையில் உள்ள வங்க தேசத்தின் தேசியப்பாடலாக உள்ளது. இரு நாடுகளுக்கு தேசிய கீதம் இயற்றிய பெருமைப்பெற்ற ஒரே உலக கவிஞர் நமது ரவீந்திர நாத் தாகூர்தான்.

ராபர்ட் கிளைவ் திருமணம் எங்கு நடந்தது தெரியுமா?

மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு இங்கிலாந்து அதிகாரி ஆவர். இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்சும் படைத்தலைவர் இராபர்ட் கிளைவும் இணைந்துதான் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த ராபர்ட் கிளைவ், சென்னையில்தான் திருமணம் செய்து கொண்டார். செயின் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சர்ச்சில் இருக்கும் திருமண ரிஜிஸ்டரில் ராபர்ட் கிளைவ் கையொப்பமிட்டிருக்கிறார்.  அதை ஒரு நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தானே.

உண்ண வேண்டாம்

மார்பக புற்றுநோய் பாதிக்கபட்டவர்கள் கிரில்டு சிக்கன் போன்ற வாட்டிய இறைச்சியை உட்கொள்வது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறதாம்.மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் வாட்டிய இறைச்சி உட்கொள்ளாதவர்களை விட அந்த இறைச்சியை உட் கொள்பவர்களின் இறப்பு விகிதம் அதிகம் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

தப்ப முடியாது

கூகுள் இணையதளத்தில் இன்காக்னிடோ எனப்படும் தனிப்பட்ட தேடுதளத்தைப் நாம் பயன்படுத்தினாலும், அதில் உங்களை பார்த்து கண் சிமிட்டுவதைப் போல, புருவம் நெரிப்பதைப் சில பாவனைகள் தோன்றும். இதற்கு கூகுள் உங்களை தொடர்ந்து வேவு பார்த்து கொண்டிருக்கிறது என்று அர்த்தமாம். இது தெரியாமல், ஆபாசப் படங்களை பார்த்து ரசித்துக்கொண்டிருக்க வேண்டாம் நண்பர்களே.

நாள்தோறும் 200 உயிரினங்கள் அழிகின்றன

சூழல் மாசு உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 150-200 வகையான தாவரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சூழல் சமநிலை இழப்பால் டைனோசர்கள் அழிந்ததிலிருந்து தற்போது உலகம் எதிர் கொண்டு வரும் சூழல் அச்சுறுத்தல் முன்பை விட அதிகமாகும் என எச்சரிக்கின்றனர்.

உலகில் அதிகமான சிகரங்களை கொண்ட மலை எது தெரியுமா?

உலகில் அதிகமான சிகரங்களை கொண்ட மலை எது தெரியுமா... அது நமது நாட்டில் உள்ள இமயமலைதான். உலகில் உள்ள உயரமான சிகரங்களில் 30 சதவீதம் இமயமலையிலேயே அமைந்துள்ளன. உலகிலேயே மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரமும் இமயமலையில்தான் உள்ளது. இதில் ஆண்டு தோறும் சுமார் 1200 பேர் மலையேற்ற பயிற்சி  பெறுகின்றனர். அவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை அடைகின்றனர் என்றால் ஆச்சரியம் தானே.. மேலும்  கடந்த நூற்றாண்டில் எவரெஸ்ட் ஏற முயன்று சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 பேர் இது போன்ற வழிகளில் உயிரிழக்கின்றனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட முடியாமல் இன்னும் பனியிலேயே புதைந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago