முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பாம்பு கடித்தும் சாகாத மனிதன்

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் 1910 இல் பிறந்தவர் பில் ஹாஸ்ட். இவருக்கு சிறுவயது முதலே பாம்புகள் மீது ஆர்வம் ஏற்பட்டு வந்துள்ளது. 1947 முதல் 1984 வரை புளோரிடாவின்மியாமி செர்பென்டேரியத்தின் உரிமையாளராக இருந்தார். அங்கு வாடிக்கையாளர்களுக்கு பாம்புகளிடமிருந்து விஷத்தை பிரித்தெடுக்கும் வேலையை செய்து வந்தார். பாம்புகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மித்ரிடாடிசம்(mithridatism) என்ற அணுகுமுறையைப் பயன்படுத்தவும் பில் முடிவு செய்தார். அது அவரை பாம்புக்கடியிலிருந்து பாதுகாத்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி அல்லது விஷ எதிர்ப்பை வளர்ப்பதற்காக அதிக அளவில் நச்சுத்தன்மையை உட்கொள்வதற்கான ஒரு நுட்பமாகும். 60 ஆண்டுகளுக்கும் மேலாக 32 வகையான பாம்புகளின் விஷத்தின் கலவையை தினமும் ஊசி மூலம் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டதே அவரது பாம்பு விஷத்தை எதிர்க்கும் வெற்றியின் ரகசியம் என சொல்லப்படுகிறது.யானையைக் கொல்லும் அளவுக்கு விஷத்தை கக்கும் திறன் கொண்ட ஒரு பாம்பின் கடியில் இருந்து கூட அவர் உயிர் பிழைத்தார். ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த அபாயகரமான அனுபவங்கள் தவிர்க்க முடியாத மரணத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் வாழ்வில் 173 முறை கொடிய விஷமுள்ள பாம்பு கடியிலிருந்து தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே வெள்ளி காசை விட மிகச்சிறிய உருவம் கொண்ட வவ்வால்

உலகிலேயே மிக சிறிய வவ்வால் இனங்கள் காணப்படுகின்றன. இவை சாதாரண வெள்ளி காசுகளை காட்டிலும் உருவத்தில் சிறியவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கிட்டிஸ் ஹாக் நோஸ் வவ்வால் அல்லது பம்பிள்பீ வவ்வால் என இவை அழைக்கப்படுகின்றன. இவற்றின் எடை 2 கிராமுக்கும் சற்று குறைவுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அழிந்து வரும் அரிய வகை இனமான இந்த வவ்வால்கள் பொதுவாக தாய்லாந்து, மியான்மர் நாடுகளில் காணப்படுகின்றன. ஆற்றங்கரையோாரம் உள்ள பாறைகளின் குகைகளே இவைகளின் வசிப்பிடங்களாகும். இவை கூட்டம் கூட்டமாக வசிக்கக் கூடியவை. ஒரு கூட்டத்தில் சுமார் 100 வவ்வால்கள் வரை காணப்படும்.

ஸ்மார்ட்போன்களில் கிருமிகள்

நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் 3 விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் 3 விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவியல் இலக்கியத்தில் இதுவரை இல்லாத 2 வித பாக்டீரியா, பூஞ்சை (ஃபங்கஸ்) இருப்பது பயோடெக்னாலஜி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுத்தம் செய்யும் போது அவற்றை ஆஃப் செய்து வைக்க வேண்டுமாம்.

காதலர்களின் அழகிய சுரங்கப் பாதை

காதலர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது கண்டு ரசிக்க வேண்டிய அழகிய, அதிசய சுரங்கப் பாதை எங்குள்ளது தெரியுமா...உக்ரைன் நாடு. ரஷ்யாவுக்கு அருகில் உள்ள ஒரு குட்டி நாடு. நாடுதான் குட்டி, ஆனால் ஐரோப்பாவிலேயே அதிகமான அழகிய கட்டிடங்கள், சுற்றுலா தளங்கள், சாகச விளையாட்டு தளங்கள், பாரம்பரிய சந்தைகள் என பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான 2 ஆவது மிகப் பெரிய நாடாகும். இங்குதான் இயற்கை எழில் கொஞ்சும் காதலர் பசுமை சுரங்கப்பாதை அமைந்துள்ளது. சுமார் 3 கிமீ நீளம் கொண்ட இந்த பாதை ஒரு கைவிடப்பட்ட ரயில் தடமாகும். ஒரு காலத்தில் அருகில் உள்ள மர ஆலையிலிருந்து தினமும் மரங்களை சுமந்து கொண்டு ரயில் இந்த தடத்தில் சென்று வந்துள்ளது. தற்போது இந்த தண்டவாளத்தை பசுமை போர்த்திய சுரங்கம் போல இயற்கை அற்புதமானதாக மாற்றியுள்ளது. உலகில் உள்ள காதலர்கள் எல்லாம் இதை நோக்கி தினம் தினம் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.அத்தனை அற்புதமான இடமாகும். இதில் நடந்து செல்வதே மிகவும் பரவசமளிக்கும் அனுபவமாக அமையும். அந்நாட்டில் உள்ள Kleven நகரில் கார்பெந்தியன் மலைத் தொடர் காடுகளுக்கு மத்தியில் இந்த வழித்தடம் அமைந்துள்ளது.

பாதாமின் அற்புதம்

பாதாம் உடல் வலிமையையும், எலும்பின் வலிமையையும் ஊக்கவிக்கிறது.பாதாம் உட்கொள்வதால், இதய கோளாறுகள், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் பருமன், பற்கள் வலி, பித்தக்கற்கள், இரத்த சோகை, மூளை சோர்வு, மலச்சிக்கல் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு சீரான தீர்வுக் காண முடியும்.  பாதாமை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது எலும்பு நன்கு உறுதியாகும்.

உயரம் - குட்டை

குட்டையானவர்களை விட உயரமானவர்களுக்கு 25 சதவீதம் தான் இதய பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதாகவும், உயரமானவர்களது இதய ஆரோக்கியம், குட்டையானவர்களை விட சற்று சிறந்தும் இருக்குமாம். ஆனால், புற்றுநோய் ஆபத்து குட்டையானவர்களுக்கு மிகவும் குறைவு. ஆனால் உயரமானவர்களுக்கு குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் உள்ளதாம். குட்டையாக இருப்பதன் மற்றொரு நன்மை, இத்தகையவர்களுக்கு இரத்தம் உறையும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் பக்கவாதம் வரும் அபாயம் இல்லை. ஆனால் உயரமானவர்களுக்கு இரத்த உறைவு காரணமாக பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்