முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எறும்புகளின் மொத்த எடை மனிதனை விட அதிகம் என்றால் நம்ப முடிகிறதா?

ஒரு சின்ன எறும்புதானே என எதையும் அலட்சியமாக கருதக் கூடாது. உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என்பது நமது முன்னோர் வாக்கு. அப்படி பார்த்தால் மிக சிறிய உயிரினங்களான எறும்புகள், மிகப் பெரிய மனிதர்களை காட்டிலும் பூமி பந்தில் அதிகம் வாழ்கின்றன. பூமியில் சுமார் 7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார் என்றால், எறும்புகளின் எண்ணிக்கையோ 100 டிரில்லியனுக்கும் அதிகம். உலகில் உள்ள அனைத்து எறும்புகளின் மொத்த எடையையும் கணக்கிட்டால் மனிதர்களின் மொத்த எடையை காட்டிலும் அதிகமாக இருக்கும். 

சிறிய சாதனம்

‘ராஸ்பெர்ரி பை’ என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணினி ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டு, நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியக்கூடிய ‘ராஸ்பெர்ரி ஷேக் 4டி’  என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். நிலநடுக்கத்தின்போது உருவாகும் கண்ணுக்குத் தெரியாத அசைவுகளைப் பார்ப்பதற்கும் இது உதவுகிறது. இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதை முன்பே நாம் கணிக்க முடியுமாம்.

ஆப்பிள் மேல் ஸ்டிக்கர் ஏன்

நாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆப்பிள் பழங்கள் வாங்கும் போது அவற்றில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அது எதற்காக என யாருக்கும் தெரியாது. அது என்ன? இதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் ஒளிந்துள்ளன.PLU code (price lookup number)  எனப்படும் இதை வைத்து தான் அந்த ஆப்பிள் ரசாயன உரங்களில் விளைவிக்கப்பட்டதா, மரபணு மாற்றம் செய்யப்பட்டதா, இயற்கை உரத்தில் விளைந்ததா என்பதை அறிய இயலும். இதை எப்படி தெரிந்து கொள்வது.. அதில் 4 இலக்க எண் இருந்தால் ரசாயன உரத்தால் ஆனது, ஐந்து இலக்க எண் 8 இல் தொடங்கினால் அது மரபணு மாற்றப்பட்டது. ஐந்திலக்க எண் 9 இல் தொடங்கினால் முழுக்க இயற்கையானது. இனி ஆப்பிளை பார்த்து வாங்குவீர்கள் தானே...

குட்டித் தூக்கம்

பரபரப்பான வேலைக்கு நடுவே மூளைக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்தால் அதாவது குட்டித்தூக்கம் போட்டால் புத்துணர்ச்சியை பெறலாம். தொடர்ந்து வேலை செய்யாமல் நடுவில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நினைவுத் திறன் அதிகரிக்கும். குட்டித்தூக்கம் மூலமாக மன அழுத்தம் குறையும். மேலும், ஸ்ட்ரெஸை எளிதாக நம்மால் கையாள முடியும்.

ஸ்மார்ட் ஷூ

அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள புதிய வகை ஸ்மார்ட் ஷூ-வான ரிதம் ஷூ, காலில் அணிந்து கொள்பவருக்கு நடனம் பயிற்றுவிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ஷூவில் பல்வேறு சென்சார் மற்றும் வைப்ரேட்டார்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை எந்த காலை எந்த சமயத்தில் அசைக்க வேண்டும் என்பதை உணர்த்தும்.

மர்மமான எலும்புக்கூடு ஏரி எங்குள்ளது தெரியுமா

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூப் குந்த் என்ற இடத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான மலைகளில் ஒன்றான திரிசூலில் ஒரு செங்குத்தான சரிவில், கடல் மட்டத்திலிருந்து 16,500 அடி உயரத்தில் ஒரு ஏரி அமைந்துள்ளது. 1942 ஆம் ஆண்டு இங்கிலாந்து வன பாதுகாவலர் ரோந்து பணியின் போது அங்கே ஏராளமான எலும்புக் கூடுகள் பனியில் புதைந்திருப்பதை கண்டு தெரிவித்தார். அவை அங்கு எப்படி வந்தன என்பது புரியாத மர்மமாகவே இன்று வரை நீடித்து வருகிறது.  அவர்கள் 9 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புயல் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அப்போது முதல் அந்த ஏரி எலும்புக்கூடுகளின் ஏரி என அழைக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago