முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மாறும் துருவங்கள்

பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவதால் 2030-இல் பூமிக்கு ஆபத்து ஏற்படுமாம். காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படுவதால் தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படுமாம். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர்.

புதிய தீர்வு

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் உள்ள யுனிவர்சிடட் கரோல்ஸ் 3டி மாட்ரிட் என்ற நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் பிரைலி மூலம் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆப் உருவாக்கி அதன் மூலம் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் டி.வி. நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதன் சோதனை ஓட்டம் மாட்ரிட் நகரில் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்தது.

ஆப்பிள்கள் ஓராண்டு கழித்தே விற்பனைக்கு வருகின்றன தெரியுமா?

சென்னை போன்ற பெருநகரங்களில் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் எந்த பழத்தையும் விலைக்கு வாங்கலாம். அதிலும் குறிப்பாக ஆப்பிள்கள் விற்காத சூப்பர் மார்க்கெட்களோ, ஸ்டோர்களோ இருக்க முடியாது. ஆனால் அவை பறித்து ஓராண்டு கழித்தே விற்பனைக்கு வருகின்றனவாம். ஆப்பிள்கள் பொதுவாக ஆகஸ்ட் தொடங்கி நவம்பர் மாதங்களில்தான் அறுவடை சீசன். அவை  பறிக்கப்பட்டு, வேக்ஸ் தடவி,் சூடான காற்றில் காய வைத்து குளீருட்டப்பட்ட பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின்னர் அவை பேக் செய்யப்பட்டு நம்மூர் சூப்பர் மார்க்கெட்களை அடைய 6 மாதம் முதல் 1 வருடம் வரை கூட ஆகுமாம். 

.-6 கால்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டி

புதுச்சேரியில் உள்ள வாதானூர் கிராமத்தில் பசு ஒன்று அதிசய கன்றை ஈன்றுள்ளது. இதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். வாதானூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெயப்பிரகாஷ். அவர் தனது வீட்டில் 5 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார்.   அதில் பசு மாடு ஒன்று அண்மையில் காளை கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இந்த கன்று வழக்கத்துக்கு மாறாக 6 கால்களுடன் பிறந்துள்ளது. இதையடுத்து சுற்று வட்டார கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த அதிசய கன்றை வந்து பார்த்து ஆச்சரியமடைந்து வருகின்றனர்.  -

மிகவும் பழமையானது

பூமியில் உயிர்கள் எப்போது தோன்றியது என்பதைக் கண்டறிய உதவும் 160 கோடி ஆண்டு பழமையான தாவரப் படிமம் ஒன்று கிடைத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் என்ற படிமங்கள் நிறைந்த பகுதியில் உள்ள பாறையில் உலகின் மிகப் பழைமையான இந்த தாவர படிமத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிக வெப்பநிலை கொண்ட பாலைவனம் எது தெரியுமா?

இந்தியாவில் தார் பாலைவனம் காணப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய பாலைவனமாக பரந்து விரிந்து இருப்பது சகாரா பாலைவனமாகும். இதன் பரப்பளவு 3.6 லட்சம் மைல்கள் சதுர பரப்பளவு கொண்டவையாகும். இங்கு வெப்பநிலை சில சமயங்களில் 136 டிகிரி வரை கூட எகிறுமாம். சராசரியாகவே இங்கு வெப்பநிலை 100 டிகிரிக்கு மேலேதான் உயர்ந்து காணப்படுமாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago