முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முதல் ஏ.டி.எம்

50 ஆண்டுகள் ஆன, ஏடிஎம்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் ஜூன் 27 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பார்க்லேஸ் வங்கி இந்த முதல் ஏடிஎம்மை அறிமுகம் செய்தது.  ஆறு இலக்க குறியீட்டை இட்டால் பணம் கிடைத்தது. இன்று உலகம் முழுதும் 3 மில்லியன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது எங்கு முதன்முதலாக அமைக்கப்பட்டதோ அந்த லண்டனில் சுமார் 70,000 ஏடிஎம்கள் உள்ளனவாம்.

வாழ்நாளை கூட்ட...

நாம், பயம் என்ற சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டால் நம் மூளை போர்கால அடிப்படையில் வேலை செய்யும். தொடர்ந்து பயந்து கொண்டே இருந்தால்,  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கும், இருதய பாதிப்பு, குடல் பாதிப்பு, முதுமை கூடும். மேலும், சிறிய வயதிலேயே இறப்பு ஏற்படும். எனவே பயத்தை தவிர்த்து, தைரியமாய் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

நிலத்தின் அடியில் உள்ள நீரை இப்படியும் கண்டுபிடிக்கலாம்

இன்றைய நவீன கால கட்டங்களில் நிலத்தடி நீரை எடுப்பதற்காக போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுகின்றன. அதற்காக நிலத்தடி நீரை கண்டுபிடிக்க நவீன உத்திகளும், பழைய முறைகளும் கையாளப்படுகின்றன. ஆனாலும் தோண்டினால் தண்ணீர் வருவதில்லை... வெறும் காற்றும் மண்ணும் தான் வருகிறது. ஆனால் பண்டைய விவசாய காலங்களில் நிலத்தடி நீரை மிக சுலபமாக நமது முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது எப்படி...ஒரு விவசாயி கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு புறமும் அடைத்துவிட்டு, பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்தில் மேய விட வேண்டும். பின்னர் அவற்றை கவனித்தால், அவை மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் அமர்ந்துதான் அசை போடுமாம். இவ்வாறு தொடர்ந்து 4, 5 நாட்கள் கூர்மையாக கவனித்தால், அவை ஒரே இடத்தில் தான் படுக்குமாம்.  அந்த இடத்தை தோண்டினால் அற்புதமான குளிர்ந்த நீர் கிடைக்கும்..இயற்கையையே அறிவியலாக புரிந்து கொண்ட நமது முன்னோர்களின் அறிவுத் திறன் வியக்கச் செய்கிறது அல்லவா?š

இதய பிரச்சனை தீர

‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர். உயிர் காக்க உதவும் இந்த முத்திரை. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கினால், வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும்.

உலகில் வியர்க்காத விலங்கு எது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

உலகின் வியர்க்காத விலங்கு எது.. அல்லது சேற்றில் திளைக்கும் விலங்கு எது எப்படி கேட்டாலும் பதில் ஒன்றுதான்.. சொல்லாமலேயே தெரிந்திருக்கும் அவை பன்றிகள் தான் என்று. ஏன் பன்றி போல் வியர்க்கிறீர்கள் என ஆங்கிப பழமொழி உள்ளது. ஆனால் உண்மையில் பன்றிகளுக்கு வியர்ப்பதில்லை. அவற்றின் உடலில் வியர்வை சுரப்பிகள் கிடையாது. எனவேதான் அவை தனது உடல் வெப்பத்தை தணித்துக் கொள்வதற்காக நீர்பாங்கான சேற்றில் அவ்வப்போது புரண்டு வெப்பத்தை தணித்துக் கொள்கின்றன. நீர் பாங்கான இடம் கிடைக்காத போதுதான், எந்த வகையான நீர் நிலையாக (சாக்கடையானாலும்) இருந்து இறங்கி அதில் புரள்கின்றன. எத்தனை ஆச்சரியம் பாருங்கள்.

புதிய திட்டம்

விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள் தங்களுடைய சிறுநீரைக் கொண்டே பிளாஸ்டிக் தயாரித்துக் கொள்ளும் புதிய வகை தொழில்நுட்பத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. ஈஸ்ட் மற்றும் கார்பண்டை ஒக்சைட் மூலம் இந்த பிளாஸ்டிக் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் இதை மூலப் பொருளாக பயன்படுத்தி, 3டி பிரிண்டரில் புதிய பிளாஸ்டிக் பொருட்களை விண்வெளியில் தயாரிக்கலாம். இதனால் உருவாக்கப்படும் பொருட்களை கொண்டு நீண்ட தூரம் விண்வெளி பயணம் மேற்கொள்ளலாமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago