முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கொம்பு வைத்த கிரீடங்கள் எப்போது தோன்றின தெரியுமா?

ராஜாக்கள், மந்திரிகள், தளபதிகள் போன்றோர் அணியும் கிரீடம் அல்லது தலை கவசங்களை நாம் திரைப்படங்களிலும், அருங்காட்சியகங்களிலும் நாம் பார்த்திருப்போம். வடமேற்கு ஐரோப்பாவில் 8 முதல் 11 நூற்றாண்டு வரையிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி குடியேறிய வைக்கிங் எனப்படும் ஒருவகை கூட்டத்தினரின் கால கட்டத்தில் உருவானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மைய ஆய்வுகள் இதில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளன. ஐரோப்பாவில் காணப்பட்ட ெகாம்பு வைத்த கிரீடங்கள் அல்லது தலை கவசங்கள் அதற்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையவையாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். பித்தளை கால கட்டம் என வர்ணிக்கப்படும் கிமு 3300 கால கட்டமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. 1942 இல் கோபன்ஹேகனில் இது தொடர்பான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நிலத்தின் அடியில் உள்ள நீரை இப்படியும் கண்டுபிடிக்கலாம்

இன்றைய நவீன கால கட்டங்களில் நிலத்தடி நீரை எடுப்பதற்காக போர்வெல் எனப்படும் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுகின்றன. அதற்காக நிலத்தடி நீரை கண்டுபிடிக்க நவீன உத்திகளும், பழைய முறைகளும் கையாளப்படுகின்றன. ஆனாலும் தோண்டினால் தண்ணீர் வருவதில்லை... வெறும் காற்றும் மண்ணும் தான் வருகிறது. ஆனால் பண்டைய விவசாய காலங்களில் நிலத்தடி நீரை மிக சுலபமாக நமது முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது எப்படி...ஒரு விவசாயி கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு புறமும் அடைத்துவிட்டு, பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்தில் மேய விட வேண்டும். பின்னர் அவற்றை கவனித்தால், அவை மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் அமர்ந்துதான் அசை போடுமாம். இவ்வாறு தொடர்ந்து 4, 5 நாட்கள் கூர்மையாக கவனித்தால், அவை ஒரே இடத்தில் தான் படுக்குமாம்.  அந்த இடத்தை தோண்டினால் அற்புதமான குளிர்ந்த நீர் கிடைக்கும்..இயற்கையையே அறிவியலாக புரிந்து கொண்ட நமது முன்னோர்களின் அறிவுத் திறன் வியக்கச் செய்கிறது அல்லவா?š

சீனாவில் மம்மி கண்டுபிடிப்பு

மம்மி என்றாலே நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது எகிப்தும், அதன் பிரமிடுகளும்தான். அங்குதான் பண்டைய காலங்களில் உடலை பதப்படுத்தி மம்மிக்களாக பாதுகாத்து வந்துள்ளனர். ஆனால் அதிசயிக்கதக்க வகையில் சீனாவிலும் மம்மிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2011 ஆம் ஆண்டில் சீனாவின் தைஜோவில் சாலை தொழிலாளர்கள் ஒரு சாலையை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபொழுது வித்தியாசமான ஒன்றை கண்டார்கள். உடனே தொல்பொருள் ஆய்வாளர்களிடம் சொல்ல அவர்கள் வந்து அகழ்வாராய்ச்சி செய்து பாக்க அவர்களுக்கு கிடைத்தது சவப்பெட்டியுடன் கூடிய ஒரு சிறிய கல்லறை. உள்ளே கிட்டத்தட்ட சரியாக பாதுகாக்கப்பட்ட சீன மம்மி ஒன்று இருந்தது. அப்படி அரிதான கலைப்பொக்கிஷமான சீன மம்மியை சாலை தொழிலாளர்கள்தான் கண்டுபிடிச்சிருக்காங்க என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பிளாஸ்டிக்கை போலவே அச்சுறுத்தும் பொருள்கள்

பொதுவாக பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணில் மட்கி போக பல நூறு ஆண்டுகள் ஆகும் என்பது நமக்கு தெரியும். ஆனால் கண்ணாடி பாட்டில் மட்கி போக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா.. ஆயிரம் ஆண்டுகள் ஆகும். பிளாஸ்டிக்கை குறை சொல்லும் நாம்... இன்னும் என்னென்ன செய்கிறோம் தெரியுமா... பில்டர் சிகரெட்டின் மொட்டு 10 ஆண்டுகள், மீன் பிடிக்கும் தூண்டில் நைலான் 600 ஆண்டுகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் ஆயிரம் ஆண்டுகள், குளிர்பானம் அருந்தும் ஸ்ட்ரா 200 ஆண்டுகள், தகர டின் 50 ஆண்டுகள், வாகன டயர்கள் 2 ஆயிரம் ஆண்டுகள், மீன் வலை 40 ஆண்டுகள், சிந்தெடிக் துணிகள் 100 ஆண்டுகள் காலம் பிடிக்கும் என்றால் யோசித்து பாருங்கள்...

வந்திருச்சு இ-டாட்டூ

ஆய்வாளர்கள் புதிய வகை எலெக்ட்ரானிக் டாட்டூக்களை, உருவாக்கியுள்ளனர். ஸ்கின் மார்க்ஸ் என்று பெயரிட்டுள்ள இந்த இ-டாட்டூவினை தோலில் ஒட்டிக் கொள்ளலாம். தலைமுடியை விட மெல்லியதாக வடிவமைக்கப்பட்ட இந்த இ-டாட்டூவினை ஸ்மார்ட்போனில் இணைத்து இயக்கங்களை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

உலகின் முதன் எஸ்எம்எஸ்

உலகிலேயே முதன் முதலில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் எதுவென்று பலருக்கும் தெரியாது. வோடோபோன் நிறுவனம்தான் முதன் முதலில் தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ் வசதியை அறிமுகம் செய்தது. அதாவது நெயில் பப்புவோர்த் என்பவர் தனது கணினி வழியாக ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவருக்கு ‘மேர்ரி கிறிஸ்துமஸ்’ (‘Merry Christmas’) என்கிற எஸ்.எம்.எஸ்-யை முதன்முதலில் அனுப்பினார். வோடோபோன் நிறுவனத்தின் அப்போதைய தலைமை அதிகாரிதான் இந்த ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவர் ஆவார். ஆர்பிட்டல் 901 மொபைலுக்கு இந்த எஸ்.எம்.எஸ்-யை அனுப்பி உள்ளார். இது சுமார் 14 கேரக்டர்களை கொண்டது. இந்த எஸ்.எம்.எஸ் 1992 ஆம் வருடம் முதன் முதலில் அனுப்பப்பட்டது. இதில் இன்னொரு சுவாரசியம் என்ன தெரியும் தற்போது இந்த எஸ்எம்எஸ் சுமார் 1.70 லட்சம் யூரோவுக்கு ஏலத்துக்கு வருகிறது என்பதுதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago