கீரையில் வைட்டமின் ஏ,பீட்டா கரோட்டின்,ஃபோலேட்,வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து என்று அனைத்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது.இவை ஸ்கல்ப்பைப் பராமரிக்கவும்,முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனால் முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
திபெத்தில் வரலாற்றிலேயே முதன்முறையாக சுமார் ரூ.4181 கோடி மதிப்பில் புல்லட் ரயில் சேவை கடந்த ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. தலைநகர் லாசாவில் தொடங்கி Nyingchi நகர் வரையிலான 250 மைல் நீளமுள்ள இந்த எலெக்ட்ரிக்கல் ரயில்தடம் 47 சுரங்க வழித்தடங்கள், 121 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்கிறது. மேலும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 9840 அடி உயரத்திலேயே பெரும்பாலும் இந்த தடம் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரயிலில் தானியியங்கி முறையில் கோச்களுக்குள் இருக்கும் ஆக்ஸிசன் அளவை கண்டறியும் தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இருதய பிரச்னைகளை கண்டறிய சோனோகிராம் உள்ளிட்ட கருவிகள் தற்போது மருத்துமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. வயர்களும், டிஜிட்டல் திரைகளும், அதன் ஒலியையும் பார்த்தாலே, கேட்டாலே நன்றாக இருப்பவர்களுக்கும் இதயம் சரியில்லையோ என்று அச்சப்பட வைக்கும் மிகப் பெரியதாக இருக்கும். போதாதென்று அவற்றை கையாள தனி குளிரூட்டப்பட்ட அறைகள் அல்லது தனி லேப்கள் என அதை விவரித்துக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் விடிவு காலம் இல்லையா என்று ஏங்குபவர்களுக்காகவே வந்து விட்டது கையடக்க சோனோகிராம் கருவி. அதன் பெயர் கேப்ஷன் ஏஐ. ஆண்டுதோறும் இதய நோயால் 14 லட்சம் பேர் இறப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இனி இதை எங்கும் எடுத்து செல்லலாம் என்பதால் மாரடைப்புக்கு குட்பை.
கடல் நீர் என்றாலே உப்பு கரிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். விஞ்ஞானிகள் முதல் சாதாரண மக்கள் வரை இதை நன்றாக அறிவர். கடலின் உப்பு அளவை பிபிடி என குறிப்பிடுகின்றனர். அதாவது ஆயிரம் கிராம் நீரில் கரைந்திருக்கும் உப்பின் அளவு இது. தோராயமாக கடலில் சுமார் 1 லிட்டர் நீரில் 7 ஸ்பூன் அளவுக்கு அதாவது 34 பிபிடி முதல் 37 பிபிடி வரை உப்பு இருக்கும். உப்பின் காரணமாகவே கடல் நீர் நன்னீரை காட்டிலும் அடர்த்தியாக உள்ளது. அதே நேரத்தில் உப்புசுவை குறைவாக உள்ள கடலும் உலகில் உள்ளன. அதில் அண்டார்டிகா பகுதியில் உள்ள கடலின் மேல்மட்டத்தில் 34 பிபிடி அளவுக்கு காணப்படும். அதே நேரத்தில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள கடலில் 30 பிபிடி அளவுக்கே உப்பு கரிக்கும். இதற்கு இப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கரைந்து கடலில் கலப்பதும், ஏராளமான நன்னீர் நதிகள் மற்றும் மழை நீர் கடலில் கலந்து அதன் உப்பு சுவையை குறையச் செய்கின்றன. ஆனால் முதல் இடம் ஐரோப்பா மற்றும் ஸ்காண்டிநேவியன் பகுதியில் உள்ள பால்டிக் கடலுக்குத்தான். அதன் உப்பின் அளவு வெறும் 10 பிபிடி அளவுதான். இதற்கு காரணம் இப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட நன்னீர் நதிகள் இங்கு வந்து கலக்கின்றன. அதிக உப்புகரிப்பு சுவை உள்ள கடல் சொல்லவே வேண்டாம் மத்திய தரைக்கடல்தான். அதன் உப்பின் அளவு 38 பிபிடி. இங்கு கடலில் கலக்கும் நன்னீர் மற்றும் மழை நீரின் அளவை காட்டிலும் ஆவியாகும் நீரின் அளவு மிகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஷெய்ஜங் மாகாணத்தில் சுமார் 65 முதல் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமங்கள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய எட்டு விலங்கு இனங்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளதன் மூலம் அங்கு உண்மையான ஜூராசிக் பார்க் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஷெய்ஜங் பகுதியை சேர்ந்த 11,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மொத்தம் 82 டைனோசர் படிம தளங்கள், ஆறு டைனோசர் இனம் மற்றும் 25 வகையான படிம டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஷெய்ஜங் ஹைட்ராலஜி மற்றும் ஜியோலஜி நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர் குழுவினர் இத்தகவலை உறுதி செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகை : போக்குவரத்து மாற்றம்
07 Oct 2025கோவை : கோவைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
மருத்துவமனையில் நேரில் சந்தித்து ராமதாசை நலம் விசாரித்த துணை முதல்வர் உதயநிதி
07 Oct 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை மருத்துவமனையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
விஜய் மீது எந்த வன்மமும் இல்லை - திருமாவளவன்
07 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்தார்.
-
இந்தியா - பாக். மோதல் நிறுத்தம்: மீண்டும் கருத்து தெரிவித்த ட்ரம்ப்
07 Oct 2025நியூயார்க், கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்
-
எனக்கு ஓய்வே கிடையாது: பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் பேட்டி
07 Oct 2025சென்னை, எனக்கு ஓய்வே கிடையாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் ஈரான் கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்கள் நீக்கம்
07 Oct 2025தெஹ்ரான், கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்களை ஈரான் அரசு நீக்க முடிவு செய்துள்ளது.
-
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
07 Oct 2025சென்னை : பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவையொட்டி எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.
-
இமயமலையில் இருந்து ராமதாஸை நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்
07 Oct 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் நலன் குறித்து இமயமலையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்தார்.
-
ஏ.ஐ. தொழில்நுட்பம் சமநிலை தொழில்நுட்பமாக இருக்க வேண்டும்: ஜெய்சங்கர் வலியுறுத்தல்
07 Oct 2025புதுடெல்லி, நம்பிக்கையும், பாதுகாப்பும் நிறைந்த சமநிலையான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு விளங்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்
-
சோனம் வாங்சுக் கைது விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
07 Oct 2025புதுடெல்லி, சோனம் வாங்சுக் கைது விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: 791 புள்ளிகளுடன் தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா முதலிடம்
07 Oct 2025துபாய் : ஐ.சி.சி.யின் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
-
முன் இந்திய வீரர்களுக்கு இன்று விருந்தளிக்கிறார் கவுதம் காம்பீர்
07 Oct 2025புதுடெல்லி : இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 10-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன் இந்திய வீரர்களுக்கு இன்று
-
மன்னிப்பு கேட்கப் போவதில்லை: தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பேட்டி
07 Oct 2025புதுடெல்லி : தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி.யின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் அபிஷேக்
07 Oct 2025துபாய் : ஐ.சி.சி.யின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இடம்பெற்றுள்ளார்.
குல்தீப் யாதவ்...
-
தமிழ்நாடு உற்பத்தி துறையின் தலைமையாக மாறி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
07 Oct 2025சென்னை : புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான தளமாக உள்ள தமிழ்நாடு உற்பத்தி துறையின் தலைமையாக மாறி வருகிறது என்று விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சி தொடங
-
கரூர் சம்பவம் தொடர்பாக மேல்முறையீடு: சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
07 Oct 2025சென்னை : சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ஜ.க. நிர்வாகி உமா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது.
-
நோயாளிகள் மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர் - அரசாணை வெளியீடு
07 Oct 2025சென்னை : தமிழகத்தில் நோயாளிகள் இனி மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர்கள் என்று அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
-
சபரிமலை கவச முறைகேட்டை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது கேரள ஐகோர்ட்
07 Oct 2025திருவனந்தபுரம், சபரிமலை கவச முறைகேடு விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
பீகார் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் இன்று ஆலோசனை
07 Oct 2025பாட்னா, பீகார் மாநில சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
-
பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் எங்கே? - தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
07 Oct 2025புதுடெல்லி : பீகார் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
-
பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
07 Oct 2025சென்னை : பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு : கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம்
07 Oct 2025சிவகங்கை : அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி, 17-ந் தேதியில் இருந்து விசாரணையை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்ம் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
07 Oct 2025புதுடெல்லி, அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்ம் மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.90 ஆயிரத்தை நெருங்கியது
07 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று (07-10-2025) மேலும் அதிகரித்து விற்பனையானது.
-
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு: 12 பேர் படுகாயம் - முதியவர் கைது
07 Oct 2025கான்பெரா, ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் படுகாயம் அடைந்த சம்பவத்தில் முதியவரை போலீசார் கைது செய்தனர்.