எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போடி - தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றிய கழகம் சார்பில் கழக 47வது துவக்க விழா பொதுக்கூட்டம் கோடாங்கிபட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் பேசும்போது, தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி வரலாற்று சிறப்புமிக்க தொகுதியாகும். காரணம் புரட்சித்தலைவர் மறைவுக்கு பின் அதிமுக பிளவுபட்டபோது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் போடி தொகுதியிலே போட்டியிட்டார். அவரை இத்தொகுதி மக்கள் வெற்றி பெற வைத்ததன் காரணமாக ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினரை முதல் எதிர்கட்சி தலைவராக உருவாக்கி மாபெரும் நமது இயக்கத்தை வலுபெற செய்தனர். தற்போது நமது கழகத்தின் ஒன்றரை கோடி உறுப்பினர்களின் பாதுகாவலனாக இருக்கின்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற செய்துள்ளீர்கள். என்றார்.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் பேசும்போது, நமது கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களில் இப்பகுதியை சேர்ந்தவர்கள் உட்பட பலர் மீண்டும் தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் தாய் கழகத்தில் இணைய வேண்டுமென்று கழக ஒருங்கிணைப்பாளர்கள் கூறியிருக்கின்றனர். இன்னும் பலர் வர தயாராக உள்ளனர் என்றார்.
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன் பேசும்போது, நமது கழகம் மட்டுமே மக்கள் கட்சியாக உள்ளது. ஊழல் கட்சி என மக்களால் முத்திரை குத்தப்பட்ட கட்சி திமுக. காங்கிரஸ் செல்லாத கட்சியாகிவிட்டது. மற்ற தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் நம் கழகத்தோடு கூட்டணி வைத்ததால் தான் அக்கட்சிகளுக்கு அங்கீகாரமே கிடைத்தது. இக்கட்சியினர் தனியாக நின்று வெற்றி பெற முடியாது. தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களை ஏமாற்றியதுபோல் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்றார்.
தலைமை கழக பேச்சாளர் வடுகை சுந்தரபாண்டியன் பேசும்போது புரட்சித்தலைவர் கழகத்தை துவக்கியபோது நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலின் போது கருணாநிதி வேட்பாளரை அறிவித்து விட்டு எம்.ஜி.ஆருக்கு வேட்பாளரை அறிவிக்க தெம்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்ப எம்.ஜி.ஆர் மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்தார். மாயத்தேவரின் வெற்றிக்காக கழக தொண்டர்கள் பட்ட கஷ்டம் அதிகம். அதே நேரத்தில் அந்த சோதனைகளை எல்லாம் தாங்கி வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டனர். மாயத்தேவர் 1,80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர் அடுத்தடுத்த சட்டமன்ற தேர்தல்களில் 126, 129, 131 என தொகுதிகளில் வெற்றி பெற்றார். அவருடைய மறைவுக்கு பின் கழகம் இரண்டாக உடைந்தது. பின் கட்சியை வழிநடத்தும் திறமை, தகுதி புரட்சித்தலைவியிடமே உள்ளது என்று பிரிந்து இருந்த கழகத்தை ஒன்று சேர்த்து தன்னை விலக்கி கொண்ட ஜானகிராமச்சந்திரனே உண்மையான தியாக தலைவி என்றார். பின்னர் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா அவர்களின் தலைமையின் கீழ் 1991ல் 162, 2001ல் 141, 2011ல் 200, 2016ல் 136 என கழகத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றார்.
தலைமை கழக பேச்சாளர் அன்பழகன் பேசும்போது என்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு புரட்சித்தலைவி அம்மாவே முக்கிய காரணம். நமது கழகத்தை காத்திட புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகயோரின் ஆன்மாக்கள் உறுதுணையாக இருக்கும். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் கழகத்தையும், ஆட்சியையும் பல்வேறு சத்திய சோதனைகளை தாண்டி சிறப்பாக வழிநடத்துகின்றனர். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மயிலைபரமசிவம், பொதுக்குழு உறுப்பினர் டி.டி.சிவக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, உத்தமபாளையம் அழகுராஜ், சின்னமனூர் விமலேஸ்வரன், நகர் கழக செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, போடிநாயக்கனூர் பழனிராஜ், சின்னமனூர் கண்ணம்மா கார்டன் ராஜேந்திரன், கம்பம் ஜெகதீஸ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், தலைவர் குருமணி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்திரன், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் ராஜகோபால், இணை செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பாசறை துணை செயலாளர் முருகேசன், கழக பிரமுகர் குருசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.