முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் வெற்றி: சிங்கப்பூர் பிரதமருக்கு டுவிட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து

சனிக்கிழமை, 11 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சிங்கப்பூர் பிரதமர் லீக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  இதற்கிடையே, பிரதமர் லீ செய்ன் லுாங் ஆட்சிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் லீ முன்னதாகவே பொதுத் தேர்தலை அறிவித்தார்.

அதன்படி பொதுத்தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், ஆளும் 'மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்  கொண்டது. 

இந்நிலையில், பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லுாங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சிங்கப்பூர் பிரதமர் லீ செய்ன் லுாங்கிற்கு வாழ்த்துக்கள். அமைதியான மற்றும் வளமான எதிர்காலத்திற்காக சிங்கப்பூர் மக்களுக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து