முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பொது தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் துவங்கியது

புதன்கிழமை, 8 செப்டம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதியில் பொது தரிசனத்துக்கான டோக்கன் விநியோகம் துவங்கியுள்ளது. 

கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இலவச பொது தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. எனினும், ரூ.300 கட்டண தரிசனம், முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஏழை, எளிய மக்களுக்கும், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து நேற்று  முதல் உள்ளூர் மக்களுக்கு இலவச பொது தரிசனத்துக்கான டோக்கனை விநியோகிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமே, நாள் ஒன்றுக்கு 2,000 டோக்கன்கள் தர கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருமலை திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம் வளாகத்தில் காலை 6 மணி முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன் வாங்கும் போது, பக்தர்கள் அனைவரும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து