எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ம் தேதி தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க, அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பா.ஜ.க - அ.தி.மு.க கட்சிகளுக்கு இடையே இடப்பங்கீடு குறித்து விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பளர்கள் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக மாவட்டம் வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம், ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பெரியகுளம், தேனி அல்லி, கூடலூர், போடி நாயக்கனூர், கம்பம், சின்னமனூர் நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதே போல் சேலம் புறநகர் எடப்பாடி, மேட்டூர், ஆத்தூர், நரசிங்கபுரம், தாரமங்கலம், இடங்கணசாலை ஆகிய நகராட்சிகளுக்கும், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், செங்கல்பட்டு, மறைமலைநகர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சிகளுக்கும், திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூவிருந்தவல்லி, திருவள்ளூர் தெற்கு மாவட்டம் திருவேற்காடு, திருநின்றவூர், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவள்ளூர், திருத்தணி, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யார்(திருவந்திபுரம்), வந்தவாசி, ஆரணி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கிருஷ்ணகிரி, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் துறையூர், முசிறி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் துவாக்குடி, மணப்பாறை, லால்குடி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூர், நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம், வேதாரண்யம், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மயிலாடுதுறை, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மேலூர், விருதுநகர் கிழக்கு மாவட்டம் சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மேற்கு மாவட்டம் விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் குளச்சல் ஆகிய நகராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், உடன்பிறப்புகள் இணைந்து அதிகாரபூர்வ வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில் சிறந்த முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று அதில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னதாக நேற்று முன்தினம், அ.தி.மு.க. தரப்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடலூர் மாநகராட்சி, தர்மபுரி, விழுப்புரம் நகராட்சிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் மாநகராட்சியில் 43 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அதில் இடம் பெற்றிருந்தது. அதே போல நகராட்சிகளில் சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, விழுப்புரம், திண்டிவனம், தர்மபுரி நகராட்சியில் 31 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
25 Feb 2026சென்னை, முதுபெரும் அரசியல் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) சென்னையில் நேற்று காலமானார்.
-
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
25 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்துகிறார்.
-
குமரியில் ரூ. 30 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
25 Feb 2026கன்னியாகுமரியில் மினி டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
-
என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன்: தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்: நாகர்கோவில் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
25 Feb 2026நாகர்கோவில், என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இ
-
தனக்கென வாழாமல் பிறர்காகவே வாழ்ந்தவர்: நல்லகண்ணுவுக்கு இ.பி.எஸ். இரங்கல்
25 Feb 2026சென்னை, சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு மறைவுக்கு அ.தி.மு.க.
-
யாருடன் கூட்டணி என்பது குறித்து ராமதாஸ் இன்று முக்கிய முடிவு
25 Feb 2026திண்டிவனம், பா.ம.க. கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று முடிவு செய்கிறார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
25 Feb 2026கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர்: நல்லகண்ணுவுக்கு விஜய் புகழஞ்சலி
25 Feb 2026சென்னை, மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர் நல்லகண்ணு என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ராமதாஸ் தொடர்ந்த வழக்கு: அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
25 Feb 2026சென்னை, ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு சார்பில் விழா: ரூ. 858.92 கோடியில் நலத்திட்ட உதவிகள்: 3,12,082 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
25 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ச
-
தமிழக காவல் துறைக்கு ரூ.124 கோடியில் புதிய மென்பொருள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
25 Feb 2026சென்னை, தமிழக போலீஸ் துறைக்கு ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
-
அதானி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கும் தமிழக அரசு
25 Feb 2026சென்னை, அதானி நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு மின்சாரம் வாங்கியது.
-
இலவச வாக்குறுதிகளை தடைசெய்ய கோரி வழக்கு: தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி அறிவிப்பு
25 Feb 2026புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அவச
-
போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாக்., பிரதமர் ஷெரீப் இறந்திருப்பார்: அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு
25 Feb 2026நியூயார்க், போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இறந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டு
-
8-ம் வகுப்பு புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆா்.டி.
26 Feb 2026புதுடெல்லி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆா்.டி.) 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'நீதித் துறையில் ஊழல்' என்
-
சபாகர் துறைமுக திட்டத்துக்கு இந்தியா நிதியை ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றம்: ஈரான் அமைச்சர் அப்பாஸ்
26 Feb 2026தெஹ்ரான், சபாகர் துறைமுக திட்டத்துக்கு இந்தியா, இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
-
இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்: முதல் உலகத்தலைவராக பிரதமர் மோடி சாதனை..!
26 Feb 2026புதுடெல்லி, இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.
-
நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு: சென்னையில் 3 நாட்கள் முகாமிடும் இ.டி. தலைமை இயக்குநர் ராகுல்..!
26 Feb 2026சென்னை, சென்னைக்கு அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் ராகுல் நவீன் வருகை தந்துள்ளார்.
-
பிரதமர் நரேந்திர மோடியை இந்திய உடையில் வரவேற்ற நெதன்யாகு
26 Feb 2026டெல் அவிவ், இந்திய பாரம்பரிய உடையணிந்து மோடியை வரவேற்று அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
-
கற்பனை உலகில் வாழும் பாகிஸ்தான்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு
26 Feb 2026ஜெனீவா, ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
-
அ.தி.மு.க.வில் கிடைக்கும் மரியாதை வேறு எந்தக் கட்சியிலும் கிடைக்காது முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு
26 Feb 2026கோவை, அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்குச் சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வருவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
-
சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்
26 Feb 2026காங்டாக், சிக்கிம் மாநிலத்தில், அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
-
தங்கத்தின் விலை சற்று சரிவு
26 Feb 2026சென்னை, கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2,000 உயா்ந்த நிலையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 360-க்கு விற்பனையானது.
-
இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி
26 Feb 2026டெல் அவீவ், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாட்டின் உயரிய விருதைப் பெற்ற ஒரே தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.


