எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![OPS 2022 12 29](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/05/27/OPS_2022_12_29.jpg?itok=pxcihAnU)
சென்னை, 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்நாட்டில் அதிக மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 24 மருத்துவக் கல்லூரிகள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்டன. இதற்கு முற்றிலும் எதிரான நிலை கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிலவுகிறது.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண். 164-ல், மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தி.மு.க. அரசு உருவாக்கும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஒரு அரசு மருத்துவக் கல்லூரியைக் கூட உருவாக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், 99 விழுக்காடு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதல்வர் அவர்கள் கூறுகிறார்.
ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை துவங்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளாகியும் இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
இப்பொழுதுதான், மேற்படி ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க 25 ஏக்கர் நிலத்தை தேடும் பணியில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்தவுடனேயே இதற்கான பணியை மேற்கொண்டிருந்தால், தற்போது ஆறு மருத்துவக் கல்லூரிகள் உருவாகி, அதன்மூலம் கிட்டத்தட்ட 900 மருத்துவ இருக்கைகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்து இருக்கும். இதைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது.
இதன்மூலம், 900 ஏழை எளிய மாணவ, மாணவியர் மருத்துவராவது தடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் என்றிருக்கின்ற நிலையில், இனி மேல் நிலத்தை கண்டுபிடித்து. கையகப்படுத்தி, விண்ணப்பிப்பது என்பது இயலாத காரியம்.
தி.மு.க.வின் மெத்தனப் போக்கினைப் பார்க்கும்போது, அடுத்த ஆண்டாவது ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகம்தான். இந்த நிலை நீடித்தால், இந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியும் தமிழ்நாட்டிற்கு கிடைக்காது. தி.மு.க.வின் திறமையின்மைக்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு. ஒரு வேளை திறமற்ற மாடல் என்பதுதான் திராவிட மாடலின் பொருள் போலும்.
ஏழை எளிய மாணவ, மாணவியர் அதிகளவில் மருத்துவராக வேண்டுமானால், அதற்கு ஒரே வழி அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும். இதனை முதல்வர் அவர்கள் மனதில் நிலைநிறுத்தி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்![]() 2 days 6 hours ago |
ஜூசி க்ரீன் சிக்கன்![]() 5 days 2 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்![]() 1 week 2 days ago |
-
கோலி குறித்து பயிற்சியாளர்
16 Jun 2024விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
-
உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள்: 3 இந்திய நிறுவனங்கள் இடம்பிடிப்பு
16 Jun 2024புதுடில்லி; உலகளவிலான 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளது.
-
கடைசி ஓவரில் திரில் வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆஸி.,
16 Jun 2024நியூயார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
-
மழையால் போட்டி ரத்து: இந்தியா, கனடாவுக்கு தலா ஒரு புள்ளிகள்
16 Jun 2024புளோரிடா: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – கனடா அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
-
தலைநகரில் தண்ணீருக்காக சண்டை 3 பேர் காயம்
16 Jun 2024புதுடெல்லி: புதுடெல்லியில் காணப்படும் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தால் சண்டை நிலவியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
-
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்
16 Jun 2024நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேபாள அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் இதற்கு முன் பல அணிகள் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளன
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: ஆஸி., வெற்றியால் சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி
16 Jun 2024நியூயார்க்: ஸ்காட்லாந்தை வெளியேற்றிய ஆஸ்திரேலியா வெற்றியால்
சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி.
-
திருவொற்றியூரில் பயங்கரம்: எருமை மாடு முட்டியதால் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
17 Jun 2024திருவொற்றியூர் : திருவொற்றியூரில் எருமை மாடு முட்டி இழுத்து செல்லப்பட்டதில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிவாரண நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 Jun 2024சென்னை : திருவாரூர் மாவட்டம் வெள்ளங்குழி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.
-
தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் : இஸ்லாமியர்கள் வாழ்த்துகளை பறிமாறி உற்சாகம்
17 Jun 2024சென்னை : தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் மாநிலம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
-
குவைத் தீவிபத்தில் உயிரிழந்த மாரியப்பன் குடும்பத்திற்கு நேரில் நிதியுதவி வழங்கினார் கனிமொழி
17 Jun 2024தூத்துக்குடி : குவைத் தீவிபத்தில் உயிரிழந்த மாரியப்பன் குடும்பத்திற்கு நேரில் சென்று ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார் தி.மு.க. எம்.பி. கனிமொழி.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு
17 Jun 2024சென்னை, : விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-06-2024.
17 Jun 2024 -
சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன்: கொத்தையம் கிராம மக்களுக்கு இ.பி.எஸ். உறுதி
17 Jun 2024ரெட்டியார்சத்திரம்: கொத்தையம் கிராமத்தில் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன் என்று எடப்பாட
-
இலங்கை-இந்தியா இடையே பாலம்: இறுதிக்கட்டத்தில் ஆய்வுப் பணிகள்; அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்
17 Jun 2024கொழும்பு, இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்
-
சவுதியில் கடும் வெப்ப அலை: ஜோர்டன், ஈரானை சேர்ந்த ஹஜ் பயணிகள் 19 பேர் பலி
17 Jun 2024சவுதி, கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மலாவியில் பயங்கரம்: இறுதி ஊர்வலத்தில் வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பலி
17 Jun 2024லிலாங்வே : மலாவியில் இறுதி ஊர்வலத்தில் வாகனம் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சோக நிகழ்வு நடந்துள்ளது.
-
ரயில் விபத்துக்கு பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்
17 Jun 2024புதுடெல்லி : மேற்கு வங்க ரயில் விபத்துக்கு பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
17 Jun 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிரடியாக அதிகரித்த நிலையில் நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
விவாகரத்துக்கு காரணமான ஆப்பிள் நிறுவனம்: 53 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி தொழிலதிபர் வழக்கு
17 Jun 2024லண்டன், தம் மனைவி விவாகரத்து கோருவதற்கு ஆப்பிள் நிறுவனம்தான் காரணம் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட்.
-
முன்னாள் ஜெனரல் விலகல் எதிரொலி: போர் கேபினட்டை கலைத்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
17 Jun 2024டெல்அவீவ், காசா மீதான போர் திட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முக்கிய உறுப்பினர் விலகல் காரணமாக போர் கேபினட்டை கலைத்தார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 Jun 2024சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட
-
ஆட்டோ ஓட்டுனரின் கனவு ராக்கெட் டிரைவர்
17 Jun 2024ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத்வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்".
-
மேற்கு வங்க ரெயில் விபத்து எதிரொலி: 19 ரயில்கள் ரத்து
17 Jun 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் (வண்டி எண்: 13174) மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி நேற்று
-
இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்
17 Jun 2024சென்னை : இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார் த.வெ.க. தலைவர் விஜய்.