முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இயந்திர மனித போலீஸ்

சீனாவில் ஹெனான் உள்ள லேங்க்லோ கிழக்கு ரயில்வே நிலையத்தில் ரோந்து பணிக்கு  இயந்திர மனிதன் பயன்படுத்தப்படுகிறது. முதல் நாளே அங்கு மூண்ட சிறு தீயைக் கண்டறிந்தது அந்த இயந்திர மனிதன். 1.6 மீட்டர் உயரமான இந்த இயந்திர மனித போலீஸ், குற்றவாளிகளையும், சந்தேகப்படும்படி யாரேனும் இருந்தால் அவர்களையும் முகத்தை வைத்து அடையாளம் காணும். தற்போது செங்ச்சாவ் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுவரும் அந்த எந்திரன் போலீஸ், அங்கு பணிபுரியும் ஊழியர்களையும் அவர்களது அடையாள அட்டை கொண்டு சரியாக அடையாளம் காண்கிறதாம்.

காற்றாழையில் இருந்து தோலாடை

ஆண்டு தோறும் தோல் மற்றும் இறைச்சிக்காக ஏராளமான வன விலங்குகள் கொல்லப்ட்டு வருகின்றன. இவற்றை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் புதிய சாதனையாக  இரண்டு இளைஞர்கள்  கற்றாழையிலிருந்து ‘தோல்’ ஆடை உருவாக்கி சாதனை படைத்து உள்ளனர்.விலங்குகளின் தோல்களில் இருந்து தயாரிப்படும் பல்வேறு வகையான  ஆடம்பர பொருட்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, சட்டவிரோதமாக விலங்குகள் வேட்டையாடப்படும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் , அட்ரியானோ டி மார்டி என்ற நிறுவனம்,  டெசர்டோ எனப்படும் கற்றாழை இலைகளைப் பயன்படுத்தி தோலைப் போன்றே  துணியை உருவாக்க ஒரு புதிய நுட்பத்தை வகுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான  அட்ரியன் லோபஸ் வெலார்டே மற்றும் மார்ட்டே செசரெஸ் ஆகிய இளைஞர்கள் இதை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாம்புக்கு உதவி

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் மேத்யூ என்பவர், சுமார் 2.5 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க உதவியுள்ளார். போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அந்த மலைப்பாம்பை ஏற்றிவிடாதபடி, அவர் உடனடியாக பாம்புக்கு அரணாக சாலையில் படுத்து அது கடந்து செல்லும் வரை இவ்வாறு 5 நிமிடங்கள் இருந்துள்ளார்.

சந்திரனில் மனிதனின் காலடி தடங்கள்

நிலவிற்கு மனிதன் செல்ல முடியுமா என்று ஒரு காலத்தில் சந்தேகம் இருந்தது. ஆனால் 969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி ‘அப்போலோ 11’ விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைகோளில் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்டிரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் பயணித்தனர். இந்தச் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட பின், 102 மணி நேரம் 45 நிமிடம் 39 விநாடி அளவில் பயணித்து நிலவை சென்றடைந்தது. நிலவில் முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ராங் தனது கால் பதித்தார். அங்கு பதிந்த காலடி தடங்கள் அப்படியே 100 மில்லியன் ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும்.. ஏன் தெரியுமா.. சந்திரனின் மேல் புறத்தில் காற்று, நீர் போன்ற சூழல் கிடையாது. எனவே காலடி தடத்தை காற்றோ, நீரோ அழிக்க வாய்ப்பு இல்லை. எனவே கோள்களில் மாற்றம் ஏற்படும் வரை அதாவது சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் வரை அது அப்படியே இருக்கும் என்றால் ஆச்சரியம் தானே...

ஒரே சமயத்தில் 9 பெண்களை திருமணம் செய்த மன்மத ராசா

பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ. மொடலாக உள்ளார். கடந்த ஆண்டு ஒன்பது பெண்களை கூட்டாக திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.இவருக்கு லுவானா கசாகி என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. என்றாலும், ஒரு தார மணத்தை எதிர்த்து புரட்சி செய்யவுள்ளதாக அறிவித்து, கடந்த ஆண்டு மேலும் 8 பெண்களை மணந்தார். அந்த மண நிகழ்வில் மனவி லுவானா கசாகியும் இருந்தார். பிரேசிலில் பலதார மணம் சட்டவிரோதமானது. எனவே மற்றைய 8 மனைவிகளுடன் சட்டபூர்வமாக திருமணம் நடக்கவில்லை. திருமணமாகி சில மாதங்களிலேயே மனைவிகளில் ஒருவரான அகதா என்பவர் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். பல மனைவிகளில் ஒருவராக வாழ விரும்பவில்லையென இப்பொழுது காரணம் கூறியுள்ளார். தற்போதைக்கு புதிதாக யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லையென ஆர்தர் கூறினாலும், விரைவில் இன்னும் 2 பெண்களை திருமணம் செய்து, மனைவிகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த விரும்புகிறார். அவர் மேலும் கூறியதாவது: என் ஒவ்வொரு மனைவியுடனும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

கதிர்வீச்சு அபாயம்

செவ்வாய் கிரகத்தில் வரும் 2039-ம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை தரையிறங்க வைக்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நீண்ட நாட்களாகவே அதிக முன்னுரிமை பட்டியலில் வைத்துள்ளது நாசா. ஆய்வுகள் தொடர்ந்துவரும் நிலையில் தற்போது அதிர்ச்சி தகவலாக, முன்னர் எண்ணியதை விடவும் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும்போது புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் இரு மடங்கு காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மாதிரி அமைப்பு ஒன்றினை வைத்து மேற்கொண்ட ஆய்விலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக அண்டவெளியிலுள்ள கதிர் வீச்சுக்கள் நேரடியாக செவ்வாய் கிரகத்தினை சென்றடைவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 2 weeks 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 week ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 week ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago