Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நட்சத்திரங்களை விட மரங்களின் எண்ணிக்கை அதிகம்

கேட்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். நாம் அனைவருக்கும் தெரியும் இந்த பிரபஞ்சத்திலேயே உயிரினங்கள் வாழக்கூடிய ஒரே கிரகம் பூமிதான். அது சரி. அதை விட ஆச்சரியம் என்னவென்றால் மில்கிவே என அழைக்கப்படும் கேலக்ஜியில் உள்ள நட்சத்திரங்களை காட்டிலும் பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதிகம் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். 20215 இல் நேச்சர் இதழில் வெளியான ஆய்வு ஒன்றில் கூறப்பட்டிருந்த தகவலின்படி மில்கிவேயில் சுமார் 100 முதல் 400 மில்லியன் வரைதான் நட்சத்திரங்கள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாம். அதாவது 3.04 ட்ரியல்லியன் என்கிறது அந்த ஆய்வு. ஆச்சரியம் தானே..

ஹேர்கட்டில் அசத்தலான உருவங்கள் பஞ்சாப் சகோதர்கள் அசத்தல்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். அதே போல கலைக் கண்ணோடு பார்த்தால் எந்த பொருளையும் தங்களுடைய படைப்பாற்றலால் மேஜிக் போல மாற்றி விடும் வித்தை படைத்தவர்கள் படைப்பாளிகள். அப்படித்தான் பஞ்சாபில் உள்ள சிகை திருத்தும் கலைஞர்கள் தனது அசத்தலான முடி வெட்டுதல் மூலம் சிறப்பான உருவங்களை உருவாக்கி அசத்துகின்றனர். அவர்களது கைவண்ணத்தில் வாடிக்கையாளர்களின் தலையே கேன்வாசாக, தலையில் மைக்கேல் ஜாக்சன், மிக்கி மவுஸ் என விதவிதமான உருவங்கள் ஜொலிக்கின்றன. பஞ்சாபில் உள்ள சிகை திருத்தும் தொழில் செய்து வரும் சகோதரர்களான Dabwali என்ற பகுதியைச் சேர்ந்த Rajwinder Singh Sidhu மற்றும் Gurwinder Singh Sidhu ஆகியோர்தான் இந்த சாதனையை படைத்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு உருவங்களை ஹேர்கட் மூலம் செய்து தருகிறோம் என்கின்றனர் ஸ்டைலாக அவர்கள் தங்களது கேசத்தை ஒதுக்கியபடி. 

4 செமீ அகலமே கொண்ட உலகின் மிகவும் ஒல்லியான நதி

உலகின் மிகப் பெரிய நதி அமேசான். இது பல கண்டங்களை கடந்து செல்கிறது.  அதன் அகலம் மட்டும் சுமார் 6 மைல்கள். மழைக்காலங்களில் சில சமயம் 24 மைல்கள் வரை அகன்று பரந்து விரிந்திருக்கும். ஆனால் அதற்கு எதிர்மாறாக உலகிலேயே மிகவும் ஒல்லியான நதி எங்கே ஓடுகிறது தெரியுமா? சீனாவில். சீனாவின் வடக்கு பகுதியில் உள்புற மங்கோலியாவில் ஓடும் ஹூவாலாய் நதிதான் உலகிலேயே மிகவும் ஒல்லியான நதி. சுமார் 17 கிமீக்கும் அதிகமான தொலைவை கடந்து செல்லும் இந்த நதியின் அகலம் வெறும் 15 செமீ. ஒரு சில இடங்களில் இதன் அகலம் வெறும் 4 செமீ. ஒரே எட்டில் நாம் அதை தாண்டி விடலாம். ஒல்லியாக இருப்பதால் அது மற்ற நதிகளை காட்டிலும் ஓட்டத்திலும், பாய்ச்சலிலும் எந்த குறைவும் இல்லை என்பது ஆச்சரியம் தானே.

போக்குவரத்து விளக்குகள் எப்போது வந்தன?

ஜே.பி.நைட் என்பவர் லண்டன் மாநகரில் 1868ஆம் ஆண்டு இப்போக்குவரத்து விளக்குகளைக் கண்டு பிடித்தார். மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் இவ்விளக்குகள் நிறுவப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்நாளில் மோட்டார் வாகனங்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கவில்லை. குதிரையை அல்லது குதிரை பூட்டிய வண்டிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர்.பச்சை, சிகப்பு ஆகிய இரு வண்ணங்கள் மட்டுமே அப்போது பயன்படுத்தப்பட்டு வந்தன. உருளையில் நிரப்பப்பட்ட வாயுவினால்தான் அவ்விளக்குகள் எரிந்து வந்தன; இவ்வமைப்பு அப்போது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.அமெரிக்காவின் மிக்சிகன் நகரில் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில், காவல் துறையைச்சார்ந்த வில்லியம் பாட்ஸ் என்பவர் இரயில்வே சமிக்கைகளின் அடிப்படையில் போக்குவரத்து விளக்குகளை அமைக்க முயற்சி செய்தார். பச்சை, சிகப்பு, காவி பூசிய மஞ்சள் ஆகிய நிறங்களுடன் கூடிய விளக்குகளை நிறுவி இவர் தமது முயற்சியில் 1920ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1923ஆம் ஆண்டு போக்குவரத்து விளக்குகள் நிறுவப்பட்டன. முதலாவது தானியங்கிப் போக்குவரத்து விளக்கு 1927ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிறுவப்பட்டது.

ஒரு ரூபாய் நோட்டில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

முதல் ஒரு ரூபாய் நோட்டு இங்கிலாந்தில் அச்சிடப்பட்டது. இந்த நோட்டு  நவம்பர் 30, 1917 அன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது. அப்போதைய பிரிட்டிஷ் மன்னரான ஐந்தாம் ஜார்ஜின் படம் அந்த ஒரு ரூபாய் நோட்டின் இடது மூலையில் அச்சிடப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக 1861-ம் ஆண்டு முதலே இந்தியாவில் நாணயங்கள் வெளியிடப்பட்டன. இருந்த போதிலும், ஒரு ரூபாய் நோட்டு 1917-ம் ஆண்டில்தான் புழக்கத்தில் வந்தது. காரணம் ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிக்க பயன்படுத்திய வெள்ளி,  2 ஆம் உலகப் போரில் ஆயுதத் தயாரிப்பிற்காக உருக்கப்பட்டுவிட்டது. 1917-ம் ஆண்டில் வெளியிடப்பட்டபோது, ஒரு ரூபாயின் மதிப்பு 10.7 கிராம் வெள்ளிக்கு சமமாக இருந்தது. 10 கிராம் வெள்ளியின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.670. இந்த 100 ஆண்டுகளில் ஒரு ரூபாயின் மதிப்பு 600 மடங்கு குறைந்துள்ளது. பணத்தை சீராக அல்லது பரிசாக வழங்கும்போது, ஒரு ரூபாய் நோட்டு ஒன்றினைச் சேர்த்து 101/- ரூபாயாக மொய் எழுதும் பழக்கம் காலம் காலமாக நம்மிடையே இருந்துவருகிறது. எனவே ஒரு ரூபாயின் மதிப்பு இது போன்ற சந்தர்ப்பங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஷூக்களின் நீளம் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா?

ஒரு கால கட்டத்தில் அதிகாரத்தின் குறியீடாகவும், செல்வந்தர்களின் அடையாளமாகவும் ஷூக்கள் அணியும் பழக்கம் நிலவி வந்தது நமக்கு தெரியும். பின்னர் போர் வீரர்களும், உயர் அதிகாரிகளும் அவற்றை அணிய தொடங்கினர். இன்றைக்கு விற்பனை பிரதி நிதி தொடங்கி அனைத்து தரப்பினரும் அணியும் பேஷன் பொருளாக ஷூ மாறியுள்ளது. மத்திய கால கட்டத்தில், அதாவது 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஷூக்கள் சுமார் 2 அடி நீளம் கொண்டவையாக தயாரிக்கப்பட்டன என்றால் ஆச்சரியம் தானே...இவை மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக கேசம், கம்பளி, இறகு போன்றவை திணிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டன. தற்போது இந்த வகை ஷூக்கள் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகங்களில் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago