முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல்

விண்ணைத் தொடும் பெட்ரோல் விலை, மலையளவு குவிந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள். இவை இரண்டுக்கும் ஒரு சேர தீர்வு கண்டுள்ளனர் பீகாரைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர். டில்லி இந்தியன் ஸ்டேட்டஸ்டிக்கல் இன்ஸ்டியூட் மாணவர்கள் 8 பேர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் பெட்ரோலிய மூலப்பொருட்களை பிரித்தெடுத்துகும் முறையை கடந்த 2019ம் ஆண்டு கண்டறிந்தனர். இதற்காக அவர்கள் கடந்த 2020ம் ஆண்டு காப்புரிமையை பெற்றனர். அவர்கள் பீகார் மாநிலத்தில் இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோலிய பொருட்களை பிரித்தெடுக்கும் ஆலையை நிறுவியுள்ளனர். கிராவிட்டில் அக்ரோ மற்றும் எனர்ஜி என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த ஆலையை அவர்கள் வங்கி கடனாக பெறப்பட்ட ரூ25 லட்சம் பணத்தை கொண்டு துவங்கியுள்ளனர். இந்த ஆலையில் 200 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மொத்தம 175 லிட்டர் பயோ  பெட்ரோல் - டீசல் தயாரிக்கப்படுகிறது. அதுவும் லிட்டருக்கு ரூ.62 செலவில் இந்த பயோ-பெட்ரோல்-டீசல் தயாராகிறது. இதை அவர்கள் ரூ.70-க்கு விற்பனை செய்கின்றனர்.

முதல் ஏ.டி.எம்

50 ஆண்டுகள் ஆன, ஏடிஎம்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் ஜூன் 27 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பார்க்லேஸ் வங்கி இந்த முதல் ஏடிஎம்மை அறிமுகம் செய்தது.  ஆறு இலக்க குறியீட்டை இட்டால் பணம் கிடைத்தது. இன்று உலகம் முழுதும் 3 மில்லியன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது எங்கு முதன்முதலாக அமைக்கப்பட்டதோ அந்த லண்டனில் சுமார் 70,000 ஏடிஎம்கள் உள்ளனவாம்.

நடைபயிற்சியால் நன்மை

உயிர்கொல்லி நோயான புற்று நோயில் இருந்து உயிரை காப்பாற்ற நிபுணர்கள் புதிய வகையான சிகிச்சையை கண்டறிந்துள்ளனர். அதாவது தினமும் 25 நிமிடங்கள் நடந்தால் மரணத்தில் இருந்து புற்று நோயாளிகள் தப்பிக்க முடியும். இந்த ஆய்வு அமெரிக்க புற்றுநோய் சங்கம் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்டது அதன்படி 992 குடல் புற்று நோயாளிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 7 ஆண்டுகளாக அவர்கள் தினமும் 25 நிமிடங்கள் நடை பயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களின் மரணம் 42 சதவீதம் குறைந்து இருந்தது. எனவே தினமும் 25 நிமிடம் நடை பயிற்சி மேற்கொண்டால் புற்று நோயாளிகள் சாவில் இருந்து தப்பிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மொழி, Tamil language

இந்தியாவுக்கு வெளியே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ். முதலில் அச்சில் ஏறிய இந்திய மொழி தமிழ். உலகில் அதிகம் பேரால் பேசப்படும் ஆங்கிலத்தில் 10 லட்சம் சொற்கள் உள்ளனவாம்.  தமிழில் 6 லட்சம் சொற்கள் உள்ளதாக நிகண்டுகள் கூறுகின்றன. தனது நிலத்துக்கு வெளியே கல்வெட்டுகள், தொல்படிமங்கள், சான்றாதரங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்.

வயர்லெஸ் சார்ஜர்

வயர்லெஸ் சார்ஜ் செய்ய புதுவகையான ஸ்டிக்கர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் பேட் மற்றும் ஸ்டிக்கரில் உள்ள இரு மெட்டல் எலக்ரோட்ஸ் பட்டன்களை போனின் யுஎஸ்பி போர்ட்டில் பொருத்தினால் சார்ஜ் ஏறிவிடும். இந்த ஸ்டிக்கர் சார்ஜர் மின்கடத்தல் முறையில் செயல்படுகிறது. இதன் விலை ரூ.6044.

உயரமான இடத்தில்...

மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் உள்ளிட்ட இமயமலையில் சிகரங்களில் ஏறுவதற்காகக் கூடும் (கடல்மட்டத்தில் இருந்து 5,360 மீ (17,600 அடி) உயரத்தில் உள்ள ) பேஸ் கேம்ப் பகுதியில் இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. இது நிறுவப்பட்டால் உலகின் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை வசதியாக அமையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago