ஆண் மயில், தோகையை விரித்தாடுவது பெண் மயிலைக் கவர்வதற்கே. ஆண் மயில்கள் ஒளிவீசும் வண்ணங்களோடு கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டு விளங்குபவை. ஆண்மயிலின் மிகக் கவர்ச்சியான உறுப்பாக விளங்குவது அதன் நீண்டு வளர்ந்த தோகையே ஆகும். ஒரு ஆண் மயிலின் நீளம் 7 அடி இருக்குமானால் அதன் தோகை மட்டுமே 3 அடி நீளம் வரை இருக்கும். இதன் வால் பகுதி நீலம், பச்சை மற்றும் பொன் நிறங்களின் கலவையாக விளங்கும். ஆங்காங்கே அமைந்துள்ள ‘கண்கள்’ போன்ற பகுதிகள் வண்ணத்தில் மாற்றத்தை உண்டாக்கக் காரணமாக அமைந்துள்ளன. மயில் தன் குட்டையான வால் பகுதியிலுள்ள நீண்ட இறகுகளை அதாவது தோகைகளை உயர்த்தி விரித்து ஆடும்போது மிக அழகாகக் காட்சியளிக்கும். பழங்காலத்தில் கிரேக்கர்களும் ரோமானியர்களும் ஆண் மயிலைப் புனிதமான உயிரினமாகக் கருதி வழிபட்டு வந்தனர்; இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் அவ்வாறே என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
பிரதமர் மோடி அறிவித்த 500, 1000 ரூபாய் தாள்கள் முடக்கப்பட்ட அறிவிப்பிற்கு பிறகு இதை அறிந்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். 2,000 ரூபாய்க்கே வியக்கும் நபர்களுக்கு இந்தியா 5,000 , 10,000 தாள்களையும் வெளியிட்டது பற்றி தெரியுமா? 1954 - 1978 ஆண்டுகளுக்கு மத்தியில் இந்திய அரசு 5,000 மற்றும் 10,000 ரூபாய் தாள்களை வெளியிட்டது. பிறகு இது நிறுத்தப்பட்டது.
தற்காலத்தில் மன அழுத்தம், குழப்பம் போன்றவற்றால் சிக்கி தவிப்பர்வர்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீண்டுவர உட்டியாணா ஆசனம் பெரிதும் உதவுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வருபவர்களின் முகம் மிகவும் பொலிவாக காணப்படும். சுறுசுறுப்பு வந்தடையும். இனவிருத்தி உறுப்புகள் ஆரோக்கியமடைந்து ஆண்மை மிகுதிப்படும். குறிப்பாக ஆண்மை நமது கட்டுப்பாட்டுக்குள் வரும்.
பல் துலக்கும் பற்பசை பிளாஸ்டிக் டியூப்களில் அடைக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் இன்றைக்கு உலகமே தத்தளித்து வருகிறது. எனவே இதற்கு மாற்றாக கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் காகித கேப்ஸ்யூல்களை கண்டு பிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இதில் பற்பசை நிரப்பப்பட்டிருக்கும். அதை வாயில் போட்டு ஒரு கடி... அவ்வளவுதான் கேப்ஸ்யூல் கரைந்து விடும்.. பற்பசை வாயில் நிரம்ப.. ஃப்ரெஷ்ஷால் பல் துலக்க வேண்டியதுதான்... வெகு விரைவில் இந்தியாவுக்கு வரும்.. இனி பற்பசைக்கான பிளாஸ்டிக் தேவையில்லை..
பொதுவாக மனிதன் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு மூக்கு மட்டுமே காணப்படும். ஆனால் ஒரு விலங்குக்கு ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றல்ல, நான்கு மூக்குகளை கொண்டுள்ளது. அவை ஸ்லக்குகள் என்ற ஒரு வகை நத்தைகள் ஆகும். இவற்றின் மூக்கு மனிதனின் நாசிகளைப் போல வாசனைகளை நுகரும் வேலையை மட்டும் செய்வதில்லை. மாறாக நிலத்தில் கலந்துள்ள ரசாயனம், சத்தங்கள், வெளிச்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான செயல்பாடுகளையும் அவை மூக்கினாலேயே மேற்கொள்கின்றன... என்றால் ஆச்சரியம் தானே.
இயற்கை எப்போதும் விந்தைகளால் ஆனது. அதன் புதிர்கள் முடிவற்றதும் கூட. புளோரிடா மற்றும் கரீபியன் கடல் பிரதேசங்களில் காணப்படும் ஒரு வகை ஆப்பிள் மரம் தான் உலகிலேயே மிகக் கொடிய நச்சு மரம் என அறியப்படுகிறது. இம் மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் ஆபத்தானது.மன்சிநீல் என்ற இந்த மரத்துக்கு பீச் ஆப்பிள் என்ற பெயரும் உள்ளது. இதன் ஏதேனும் ஒரு பகுதி நம் உடலில் பட்டால் அரிப்பு, சொறி, வீக்கம் ஏற்படும். கண்ணில் பட்டால் அவ்வளவுதான் கண் அவுட். பார்க்க கவர்ச்சியாக இருக்கும் இதன் அழகிய பழத்தை சாப்பிட்டால், சாப்பிட்டவுடனேயே நேரடியாக மேல் உலக பயணம்தான்.அழகுக்கு பின்தான் ஆபத்து என்பது போல பார்க்க அழகாக காட்சியளிக்கும் இந்த மரம் சுமார் 50 அடி வரை கூட வளரக் கூடியது. இதை பற்றி கொலம்பஸ் கூட தனது குறிப்புகளில் சாவின் சிறிய ஆப்பிள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


