Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நாமே கண்டுபிடிக்கலாம்

இன்று மனிதர்களை மிகவும் அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. தற்போது, தோல் புற்று நோயை மருத்துவர்கள் உதவி இன்றி நாமே சோதனை செய்து கண்டு பிடிக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் உறுதி செய்வதை விட துல்லியமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது நோயை கண்டறிந்து உறுதிசெய்கிறது. இதனை ஸ்மார்ட்போன்களிலே பொருத்தி அவரவர் தானாகவே பரிசோதிக்கலாம். புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய், மூளைப்புற்றுநோய் மிகவும் அபாயமானது. இந்த வகை நோய்களை கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது.

டிஜிட்டல் மாத்திரை

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகளுக்கு இன்ஜெஸ்டிபுள் சென்சார் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘டிஜிட்டல் மாத்திரைகள்’ வழங்கப்படவுள்ளன. இந்த மாத்திரை பயணிகளின் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை, பயணிகளின் தூக்கம் முறை, உடலின் வெப்பநிலை மற்றும் இதய துடிப்பு போன்ற தகவல்களை வழங்குகிறது. இதன்மூலம் பயணிகளின் உடல்நிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளமுடிகிறது.

அதிசய பெண்

எல்லா ஹார்ப்பர் எனும் பெண்ணுக்கு ஏற்பட்ட அரிய வகை ஆர்த்தோபெடிக் நிலையால் கால் மூட்டு பின்பக்கமாக திரும்பியது. இதனால் இவர் கால்களை முன்னாள் மடக்கும் வகையில் உருவ நிலை மாற்றம் கொண்டார். இதனால் இவரை ஒட்டக பெண் என அழைத்தனர்.

இயற்கை முறையில்

நெதர்லாந்தில் குளிர்சாதனத்துக்கு மாற்று வழியாக பூமிக்கடியில் பாதாள குளிர்சாதனப் பெட்டி அமைத்து உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வருகின்றனர். இந்த குளிர்சாதனப் பெட்டிக்கு மின்சாரம் தேவையில்லை. இதில் சேமிக்கப்படும் உணவை உண்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம .

புலிக்கு ஆதரவு

அமெரிக்காவில் சின் சினாட்டியில் மிருக காட்சி சாலையில்  மலேசிய புலி ஒன்றால் ஒதுக்கப்பட்ட 3 பெண் குட்டிகளை மிருக காட்சி சாலை ஊழியர் தனது வீட்டுக்கு தூக்கி சென்று வளர்த்தார். அவரது வீட்டில் உள்ள 6 வயது ஆஸ்திரேலிய ஷெப்பர்டு நாய் 3 புலிக்குட்டிகளையும் தற்போது அன்புடன் பராமரித்து வருகிறது.

ஆனியும், ஆவணியும் சொன்ன சேதி

பாமா விஜயம் என்ற படம், இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய படம். அதில் பாடல் ஒன்றில், ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என்று கண்ணதாசன் பாடல் எழுதியிருப்பார். அந்த பாடல் சொல்லும் சுவராஸ்யமான சேதி ஒன்று உண்டு. கண்ணதாசன் காரைக்குடி அருகே உள்ள சிறு கூடல் பட்டியில் பிறந்தவர். அந்த ஊருக்கு அருகிலேதான் நமது கோவில் நகரம் மதுரை உள்ளது. அந்த நகரில் தெற்கு ஆவணி மூல வீதி உள்ளது. அந்த வீதியில்தான் நகரின் பெரும்பாலான நகைக்கடைகள் உள்ளன. அதை குறிக்கும் வகையிலேயே கண்ணதாசன்  ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என குறிப்பிட்டு இருப்பார். இது போன்ற எண்ணற்ற  வாழ்வியல் சுவராசியங்களை திரை மறைவு ரகசியமாக கண்ணதாசன் குறிப்பிட்டு இருப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago