முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பிக் பெண்ட்

துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா உலகின் உயர்ந்த கட்டிடமாக இருக்கிறது. தற்போது, சுமார் 1,220 மீட்டர் உயரத்திலான கட்டிடம் ஒன்றை நியூயார்க்கில் வடிவமைக்க உள்ளனர். இதன் உயரத்தை விட மிக பெரிய சாதனை என்னவென்றால், இது தலைகீழான U வடிவில் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டிடத்துக்கு பிக் பெண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா?

சார்லஸ் டார்வின் என்பவரை பற்றி தெரியாவர்கள் இருக்க முடியாது. இந்த உலகில் புழு, பூச்சி தொடங்கி மனித இனம் வரை அனைத்தும் எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கு விடை காண முயன்றவர். அவர் உருவாக்கிய தியரியே.. அதாவது கோட்பாடே பரிணாம கொள்கை. இதன் மூலம் ஒரு செல்லிலிருந்து பிரிந்த புதிய உயிரினம் படிப்படியாக பல்கி பெருகி, தாவரங்கள், பூச்சிகள், தவளைகள், மீன்கள், பறவைகள், விலங்குகள், குரங்கின் வழியாக மனித இனம் தோன்றின என்கிறார். ஆனால் இன்றைய நவீன வீஞ்ஞானம் செல்லை மட்டுமின்றி அதனுள் புதைந்திருக்கும் கோடிக்கணக்கான மரபணுக்கள், அவை உருவாக காரணமாக டிஎன்ஏ, ஆர்என்ஏக்கள் என தனது பயணத்தை மிகவும் மைக்ரோ, நேனோ லெவலுக்கு கொண்டு சென்று விட்டது. அதில்தான் முக்கிய திருப்பம் நடந்துள்ளது. கடந்த 2015 இல் கேம்பிரிட்ஜ் பல்கலை நடத்திய ஆய்வில் தாவரங்களில் இருந்து வந்த மரபணுக்கள் வாயிலாக மனித இனம் தோன்றியிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி சுமார் 1 சதவீத மனித மரபணுக்கள் தாவரங்களிலிருந்து பெறப்பட்டவைதான் என அடித்து சொல்கின்றன. என்ன ஆச்சரியம் பாருங்கள்.. இப்போ சொல்லுங்கள் நாம் குரங்கிலிருந்து வந்தோமா, தாவரத்திலிருந்து வந்தோமா...

புதிய மருந்து கண்டுபிடிப்பு

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சிலர் வாரம் ஒருமுறை அல்லது தினமும் இன்சுலின் மருந்து ஊசி போட்டுக் கொள்கின்றனர். இதில் இருந்து தப்பிக்க புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  புதிய மருந்து மூலம் மாதம் ஒரு தடவை மட்டும் ஊசி போட்டால் போதும். இதை 2-ம் நிலை (டைப் 2) நீரிழிவு நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த மருந்து ‘ஜெல்’ போன்ற தோற்றம் உடையது. இதை ஊசி மூலம் செலுத்தியவுடன் உடலில் தேங்கிவிடும். பின்னர் உடல் வெப்பத்தின் மூலம் சிறிது சிறிதாக உருகி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இந்த மருந்து விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

கொடிய உயிர் கொல்லியான எயிட்ஸ்க்கு எதிராக தகவமைத்து கொண்ட மனித உடல்

இன்றைக்கு உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய வைரசான கொரோனாவைப் போல சில ஆண்டுகளுக்கு முன்பு ஹெச்ஐவி எனப்படும் எய்ட்ஸ் நோய் உலகையே அச்சுறுத்தியது. தற்போது போலவே மனித நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சலூன் கடைகளில் தனித்தனி ரேசர்களில் சவரம் செய்வது தொடங்கி, மருத்துவ மனைகளில் டிஸ்போசபிள் சிரிஞ்ச் எனப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் ஊசி என நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் வந்தன. இந்நிலையில் தற்போது அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹெச்ஐவி தொற்றுக்கு  ஆளாகி எந்தவித மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் உடல் நலம் தேறியுள்ளார். இது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலில் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான செல்களை பரிசோதித்த போதிலும் கூட அவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பது தடமின்றி அடியோடு மறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இது உலகில் இரண்டாவது சம்பவம் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.  இது தொடர்பான மருத்து ஆய்வு கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அப்பெண்ணின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எய்ட்ஸை வெற்றிகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது படிப்படியாக பிறருக்கும் தோன்றலாம். அதே போல எதிர்காலத்தில் கொரோனாவையும் இந்த மனித உடல் வெற்றி கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நிலா பூமியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி செல்கிறதாம்

பூமி சூரியனை சுற்றுவது போல, நிலா பூமியை சுற்றி வருகிறது என்பது அனைவருக்கும் அறிந்த விசயம்தான். ஆனால் பலருக்கும் தெரியாத விசயம் என்னவென்றால், நிலா கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறதாம்... இதனால் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த விலகல் ஒவ்வொரு ஆண்டும் 1.48 அங்குலம் அளவுக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது நமது நகங்கள் வளரும் வேகத்துக்கு இணையாக. அதே போல தொடக்கத்தில், அதாவது நிலா தோன்றிய போது பூமிக்கு மிக அருகில் இருந்துச்சாம்.. அதாவது அப்போது வெறும் 14 ஆயிரம் மைல் தொலைவில். தற்போது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவு 2 லட்சத்து 50 ஆயிரம் மைல். இன்னும் சில லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் நிலவை காட்டி சோறூட்ட முடியாது, காதலர்கள் நிலவை உதாரணம் காட்டி பாட முடியாது என்றால் ஆச்சரியம் தானே.

அதிவேகம்

சீனத் தலைநகர் பெய்ஜிங் - தொழில்நகரமான ஷாங்காய் நகரை இணைக்கும் வகையில் 1250 கிலோமீட்டர் தூரத்தை நான்கரை மணி நேரத்தில் கடக்கும் உலகின் அதிவேக புல்லட் ரெயில் சேவை சீனாவில் வரும் இந்த மாதம் 21-ம் தேதி தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago