சூரிய மண்டலம் உருவானபோது ஏற்பட்ட மோதலில் பல சிறுகோள்கள் பெரும் கோள்களிலிருந்து பிரிந்து உருவாகின. அப்படி உருவான ஒரு சிறிய கோளை அன்னிபாலே டி காஸ்பரிஸ் எனும் இத்தாலிய வானியலாளர் மார்ச் 17, 1852இல் கண்டு பிடித்தார். இதன் சிறப்பு என்ன தெரியுமா, இது தங்கம் உள்ளிட்ட அரிய வகை உலோகங்கள், தனிமங்களால் உருவான மிகப் பெரிய கோளாகும். எனவே இதற்கு 'கோல்டுமைன் ஆஸ்டிராய்டு' என நாசா பெயரிட்டது. உண்மையிலேயே விண்வெளியில் மிதக்கும் ஒரு தங்கச் சுரங்கமான இது, நமது சூரிய மண்டல சுற்றுவட்டப் பாதையில் தான் சுற்றி வருகிறது. இந்தச் சிறுகோளில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் 750 கோடிக்கு மேல் என்று நாசா மதிப்பிட்டுள்ளது. பல விலைமதிப்பற்ற உலோகங்கள், தனிமங்கள் நிறைந்திருப்பதால் அதன் ஒரு சிறு துண்டுகூடப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும் என்று நாசா கூறுகிறது. இந்த விண்வெளி தங்கச் சுரங்கம் பூமியிலிருந்து சுமார் 32 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களின் சுற்றுப்பாதைகளுக்கு இடையில் சுழன்றி வருகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இன்றைக்கு அனைத்து வீடுகளிலும் அன்றாட வீட்டு உபயோக பொருள்களில் ஒன்றாக வேக்குவம் கிளீனரும் மாறி நீண்ட காலமாகி விட்டது. ஆனால் தொடக்க காலத்தில் அவற்றை குதிரையில் பூட்டி இழுத்து சென்றனர் என்றால் நம்ப முடிகிறதா..நம்மூர் கழிவுநீர் லாரிகளை போல மிகப் பெரிய குழாய்கள் பொருத்தப்பட்ட டேங்கரை குதிரைகள் தெருக்களில் இழுத்து செல்லும். அந்த குழாய்களை ஜன்னல் வழியாக வீடுகளுக்குள் கொண்டு சென்று பெட்ரோல் மூலம் இயக்கப்படும் மோட்டார்கள் மூலம் தூசுகளும், குப்பைகளும் உறிஞ்சப்பட்டு டேங்கர்களில் சேமிக்கப்படும். அதுதான் இன்றைக்கு கையடக்க வேக்குவம் கிளீனரின் மூதாதை என்றால் ஆச்சரியம் தானே.
திருப்பதியில் தர்ம தரிசனம் தொடங்கி பல்வேறு தரிசன கட்டணங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகிலேயே அதிக வருவாய் கொண்ட கோயிலாகவும், அதிக பக்தர்கள் தரிசனம் செய்யும் கோயிலாகவும் திருப்பதி விளங்கி வருகிறது. அண்மையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய கட்டண அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி நாள் முழுவதும் உதய-அஸ்தமன சேவையை தரிசனம் செய்ய ரூ.1.50 கோடி கட்டணம். அதாவது வெள்ளிக்கிழமைகளில் இந்த கட்டணமும், மற்ற நாட்களுக்கு ரூ.1 கோடியும் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் நாள் முழுவதும் உதய சேவை தோடங்கி அஸ்தமன சேவை மற்றும் இரவு கோயில் நடை சாத்தும் வரையில் அனைத்து வழிபாடுகளையும் பக்தர்கள் தரிசிக்க இந்த கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் அபிஷேகம் நடைபெறும் என்பதால் ரூ.1.50 கோடி. இந்த வசதியை பக்தர்கள் 25 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது ஒருமுறை கட்டணம் செலுத்தி விட்டு ஏதேனும் ஒரு நாளை தேர்வு செய்து கொண்டால், 25 ஆண்டுகளுக்கும் அந்த நாளின் முழு சேவை வழிபாட்டையும் பக்தர்கள் தரிசிக்கலாம் என்பது கோயில் நிர்வாகத்தின் ஏற்பாடு. இதற்காக முதல் கட்டமாக ஆன் லைனில் 531 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து ரவீந்திரநாத் தாகூர் முதன்முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார். அதன் பிறகு சர் சி.வி.ராமன், ஹர் கோவிந்த குரானா, சுப்ரமணியன் சந்திரசேகர், அமர்த்தியா சென் வரை இந்தியர்கள் பலரும் நோபல் பரிசை வென்றுள்ளனர். இந்தியாவின் தேசப்பிதா எனப் போற்றப்படுபவரான காந்தி 5 முறை நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா. ஆனால் தொடர்ச்சியாக அவருக்கு விருது மறுக்கப்பட்டே வந்தது. 5-வது முறையாக 1948 இல் அவர் பரிந்துரைக்கப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு கோட்சேவால் சுட்டு கொல்லப்பட்டார்.
12-ம் நூற்றாண்டில் , 2-ம் சூரியவர்மனால் கட்டப்பட்ட அங்கோர் வாட்டை ஆரம்பத்தில் ஓர் விஷ்ணு தள வழிப்பாட்டு கோவிலாக இருந்தது. பின் 14 - 15-ம் நூற்றாண்டுகளில், புத்த மத துறவிகளால் கையகப்படுத்தப்பட்டு கூடுதலான புத்த சிலைகளும், கலைநய வேலைப்பாடுகளும் சேர்க்கப்பட்டு புத்த கோவிலாக மாற்றப்பட்டது.
ஒருவருக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படுவதற்கு மோசமான உணவுப் பழக்கங்கள், உடல் பருமன், அசிடிட்டி, வயிற்று அல்சர், மலச்சிக்கல், குறிப்பிட்ட மருந்துகள் போன்றவை காரணங்களாக அமைகின்றன. இவை தீவிரமாக இருந்தால், அடிவயிற்றில் வலி, வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, ஏப்பம், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
சட்டமன்றத்தில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20 Feb 2026சென்னை, தமிழக சட்டமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ
-
ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு
20 Feb 2026புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப
-
குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Feb 2026சென்னை, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிடட் 6 மாவட்டங்களில்
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
20 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
-
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
20 Feb 2026சென்னை, நகராட்சித்துறை தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து அமைச்சர் கே.என்.
-
இன்று நடபெறும் திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
20 Feb 2026சென்னை, திருச்சி இன்று நாடைபெறும் மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்கிறார்.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையாளர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
20 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
-
அமைச்சர் நேரு மீதான வழக்கை தி.மு.க. சட்டரீதியாக முறியடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
20 Feb 2026சென்னை, அமைச்சர் கே.என்.நேரு மீதான பொய்யான வழக்கை சட்டரீதியாக முறியடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி
20 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
20 Feb 2026சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற
-
ராமதாசுக்கு மேலும் பின்னடைவு: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..! அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை
20 Feb 2026சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க. - காங்., கூட்டணி வலுவானது கனிமொழி எம்.பி. கருத்து
20 Feb 2026தூத்துக்குடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
20 Feb 2026- திருச்செந்தூர், பெருவயல், பாவூர்சத்திரம்,வென்னிமலை கோவில்களில் மாசி உற்சவாரம்பம்.
- மருதமலை, திருப்போரூர், காங்கேயம் கோவில்களில் முருகர் உற்சவாரம்பம்.
-
இன்றைய நாள் எப்படி?
20 Feb 2026


