முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டீசல் என்ஜின் என ஏன் பெயர் வந்தது

ருடால்ஃப் டீசல் பிரான்ஸில் 1858 இல் ஜெர்மனியில் பிறந்தார். பிரெஞ்ச் - பிரஷ்யா போரின்போது பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இங்கிலாந்தில் இவரது பெற்றோர் குடியேறினர். படிப்பைத் தொடர்வதற்காக டீசல் மட்டும் பிரான்ஸில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஜெர்மனியில் உள்ள முனீச் நகரில் உள்ள ராயல் பவேரியன் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். உடல்நலம் குன்றியதால் 1879-ல் படிப்பைத் தொடரமுடியவில்லை. இன்ஜின்கள் குறித்து டீசல் ஆராய்ந்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து விதவிதமான இன்ஜின்களை வடிவமைத்தார். நீராவி இன்ஜினில் 90 சதவீத எரிபொருள் வீணாவதைக் கண்டறிந்தார். இறுதியில் நீராவி இன்ஜினுக்கு மாற்றாக ‘கம்ப்ரெஷன் இக்னிஷன்’ இன்ஜினை கண்டுபிடித்தார். அதுவே அவரது பெயரில் டீசல் இன்ஜின் எனப்படுகிறது. டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886-ல் வெளியிட்டார். 1913-ல் ருடால்ஃப் டீசல் திடீரென காணாமல் போனதாகவும், ஒரு வாரம் கழித்து அவரது உடல் நார்வே அருகே வடகடலில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டீசல் இன்ஜினை உருவாக்கிய டீசல் 55 ஆவது வயதில் மறைந்தார்.

ஜிபிஎஸ் இல்லாமலே

இன்றைய நவீன மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வரைபடங்கள், சாலை குறியீடுகள், திசைகாட்டிகள், ஜிபிஎஸ் கருவிகள் என ஏரானமானவற்றை நம்பி இருக்க வேண்டியுள்ளது. அப்படியும் சிலர் வழி தவறி விடுகின்றனர். ஆனால் எந்த வரைபடத்தையும் வைத்திருக்க முடியாத நீருக்கு அடியில், பல்லாயிரம் மைல்கள் ஆழமுள்ள கடலுக்குள்.. அதுவும் சூரிய ஒளி புகாத கும்மிருட்டில்.. ஆனால் சில சுறாக்கள் தங்கள் உடலிலேயே இயற்கை ஜிபிஎஸ் அல்லது காந்தமானியை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பல நூறு மைல்கள் சென்றாலும் மீண்டும் தனது இருப்பிடத்துக்கு மிகச் சரியாக அவை திரும்பி விடுகின்றனவாம்.  ஆய்வில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடலுக்கு அடியில் நீந்தி சுறாக்கள் மிகச் சரியாக ஆஸ்திரேலியா வந்து விட்டு 9 மாதங்களுக்கு பிறகு திரும்பிச் செல்வது தெரியவந்துள்ளது. இது இயற்கையின் ஆச்சரியம் தானே..

கோபுரத்தின் நிழல் தலைகீழாக தெரியும் அதிசய கோயில்

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் பண்டைய கட்டிட கலைக்கு சாட்சியமாக விளங்குபவை கோயில்கள். அதிலும் இன்று வரையிலும் பல்வேறு விற்பன்னர்களாலும் அவிழ்க்க முடியாத கட்டிட கலை நுட்பங்களை அவை தங்களுக்குள் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் விருபாட்சர் கோயிலாகும். இக்கோயிலில் அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா.. எப்படி தஞ்சை பெரிய கோயிலில் கோபுரத்தின் நிழல் கீழே விழாதோ... அதே போலு இந்த கோபுரத்தின் நிழல் கிழே விழும்போது தலைகீழாக தெரியும். அதாவது ஒரு லென்ஸ் வழியாக கோபுரத்தை படம் பிடித்தால் எப்படி தலைகீழாக காட்சி அளிக்குமோ அது போல அதன் நிழல் அங்குள்ள ரங்கநாதர் மண்டபத்தில் கோபுரத்தின் தலை கீழாக விழுவதை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம். எந்த ஒரு இடை ஊடகமும் இல்லாமல் நிழல் தலைகீழாக மாற என்ன காரணம்?  இதுவரை யாருக்கு புரியாத புதிராக உள்ளது இந்த மர்மம்.

இறந்தவரின் கடைசி ஆசை

மெக்சிகோவில் உள்ள Puerto San Carlos என்ற இடத்தைச் சேர்ந்தவர் Don Adán Arana. இவர் ஆசையாய் ஓட்ட வேண்டும் என விரும்பியதால் அவரது மகன்கள் அவருக்கு சரக்கு வேன் அதாவது டிரக் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் Don Adán Arana அதன் பின்னர் நீண்ட நாட்கள் இந்த பூமியில் உயிர் வாழ இயலவில்லை. அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மரண படுக்கையில் போராடிய அவர் தன்னுடன் சேர்த்து தனக்கு பிடித்தமான அந்த டிரக்கையும் மண்ணில் என் அருகில் புதைத்து விடுங்கள், மரணத்துக்கு பிறகு "அங்கே" நான் ஓட்டிச் செல்ல வசதியாக  இருக்கும் என தெரிவித்தாராம். அதன் பின்னர் அவர் இறந்து விடவே, அவரது இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவருடன் சேர்த்து அவருக்கு அருகிலேயே அந்த டிரக்கையும் உறவினர்கள் மண்ணில் புதைத்துள்ளனர். இதற்காக டிரக்கை இறக்கும் அளவுக்கு மிகப் பெரிய குழி தோண்டி  கான்கிரீட்டால் தொட்டி போல கல்லறையை கட்டியுள்ளனர். பின்னர் அவருடன் சேர்த்து அந்த டிரக்குக்கும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது.

கூகுல் ஆப்

புதிய முறையில் புகைப்படம் எடுக்க ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்காக கூகுல் புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் மூலம் நகரக்கூடிய புகைப்படங்களை எடுக்க முடியும். இந்த ஆப் மூலம் நகரும் புகைப்படத்தை ஜிஃப் ஃபைல் மற்றும் அனிமேடட் புகைப்படங்களை எடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

தெரிந்தும் தெரியாதது

ஏப்ரம் மாதத்தின் முதல் நாளான முட்டாள்கள் நாளின் உண்மைக்காரணமாக வரலாற்றால் அறியப்படுவது நாட்காட்டி மாற்றம் தான். அதாவது கி.பி1582-ம் ஆண்டு வரையில் ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் மாதம் தான் முதல் மாதமாகவும் புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டது. கிர்கோரி என்ற போப் தான் தற்போதைய ஆங்கில நாட்காட்டியை உருவாக்கியவர். இந்த நாட்காட்டியைப் பலர் ஏற்றுகொண்டனர். சிலர் ஏற்கவில்லை. புதிய நாட்காட்டி முறைப்படி மாறியவர்கள் பழைய நாட்காட்டி முறையைப் பின்பற்றி ஏப்ரல் 1-ஐ புத்தாண்டாகக் கொண்டாடுவதை முட்டாள்கள் நாள் என நய்யாண்டி செய்ய ஆரம்பித்தனர். இதுவே நாளடைவில் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் நாள் என்று கூறப்படக் காரணமாக அமைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago