1. மூளை செயல்பாடு அதிகரிக்கும் மற்றும் நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.2. கொழுப்பு எரிப்பதை அதிகரிக்கிறது மற்றும் உடல் திறன் அதிகரிக்கிறது.3. இதில் இருக்கும் ஆக்சிஜெனேற்றத்தடுப்பான் (antioxidant) பல்வேறு வகையான புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது.4. இருதய நோய் வருவதை குறைக்கலாம். 5. நீரிழிவு நோய் வரும் ஆபத்தை குறைக்கலாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகிலேயே அதிக காஸ்ட்லியான நகரம் எது தெரியுமா.. நீங்கள் கற்பனை செய்வது போல அமெரிக்காவில் உள்ள நியூயார்க் அல்லது வாஷிங்டன், சவுதி அரேபியாவில் உள்ள துபாய், ரியாத் என்று கற்பனை குதிரையை தட்டி விட்டீர்கள் என்றால் அதை கொஞ்சம் நிறுத்துங்கள். இது முற்றிலும் யாரும் எதிர்பாராத ஒன்றாகும். உலகிலேயே அதிக காஸ்ட்லியான நகரம் இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் தான். ஆகஸ்ட் -செப்டம்பர் நிலவரப்படி உலகில் காஸ்ட்லியான நகரங்கள் என பட்டியலிடப்பட்ட 173 நகரங்களில் டெல் அவிவ் தான் முதலிடம் பிடித்துள்ளது. பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. ஜூரிச் 4 ஆவது நகரம், ஹாங்காங் 5 ஆவது இடம். நியூயார்க் நகரத்துக்கு 6 ஆவது இடம் தான் கிடைத்துள்ளது. ஜெனீவா 7, கோபன்ஹேகன்8, லாஸ் ஏஞ்சல்ஸ்9 ஓசாகா 10 என பட்டியலில் இடம் பிடித்துள்ளன. கடந்தாண்டு பாரீஸ், ஜூரிச், ஹாங்காங் ஆகியவை பட்டியலில் முன்னணியில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த உயிரினமாக இருந்தாலும் அதன் உடல் இயங்குவதற்கு மூளையும் இதயமும் மிகவும் அடிப்படையானவையாகும். இவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் உடல் இயங்க இயலாது. ஆனால் ஒரே ஒரு உயிரினம் மட்டும் தலை இல்லாமல் சுமார் 1 வாரம் காலம் வரை உயிர் வாழும் என்பது ஆச்சரியம் தானே. அது வேறெதுவும் இல்லை. நாம் நம் சமையலறைகளில் பார்க்கும் கரப்பான்கள் தான் அவை. இதற்கு காரணம், அவை சுவாசிப்பதற்கு வாயையோ, மூளையையோ சார்ந்திருக்கவில்லை. அதன் உடல் முழுவதும் உள்ள துளைகள் வாயிலாகவே சுவாசிக்கிறது. அதே நேரத்தில் வாய் இல்லாவிட்டால் கரப்பான் இறந்து விடும். ஏனெனில் உணவு, தண்ணீர் இல்லாமல் எந்த ஜீவனாலும் உயிர் வாழ முடியாது தானே.
இயற்கை எப்போதும் விநோதங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. அதில் போபாப் எனப்படும் மரமும் ஒன்று. இந்த மரத்தில் அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா... தென் ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் இவ்வகை மரங்கள் காணப்படுகின்றன. இவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் வாழக் கூடியவை. போபாப் (Baobab) என்ற இந்த மரங்களை அங்கே Gentle Giants என்கின்றனர். இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால் வறட்சியை தாக்குபிடித்து வளர்பவை. அதே நேரத்தில் மண்ணிலிருந்து எடுக்கும் நீரை இந்த மரங்கள் சேமித்து வைத்துக் கொள்கின்றன. மழை இல்லாத வறண்ட காலங்களில் அப்பகுதி மக்கள் இந்த மரத்தில் துளை போட்டு நீரை எடுத்துக் கொள்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... சிலர் இவற்றை தமிழகத்துக்கும் கொண்டு வந்தனர். மதுரை பார்ச்சூன் ஹோட்டல், பெங்களூரு அருகே சாவனூரில் 500 ஆண்டுகள் பழமையான மரம், சென்னை அடையாறு தியோசபிகல் வளாகத்தில் பராமரிக்கப்படும் இவற்றை நாம் பார்க்கலாம்.
ஒரு சின்ன எறும்புதானே என எதையும் அலட்சியமாக கருதக் கூடாது. உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என்பது நமது முன்னோர் வாக்கு. அப்படி பார்த்தால் மிக சிறிய உயிரினங்களான எறும்புகள், மிகப் பெரிய மனிதர்களை காட்டிலும் பூமி பந்தில் அதிகம் வாழ்கின்றன. பூமியில் சுமார் 7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார் என்றால், எறும்புகளின் எண்ணிக்கையோ 100 டிரில்லியனுக்கும் அதிகம். உலகில் உள்ள அனைத்து எறும்புகளின் மொத்த எடையையும் கணக்கிட்டால் மனிதர்களின் மொத்த எடையை காட்டிலும் அதிகமாக இருக்கும்.
ஹேக்கர்களிடம் இருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்க வலுவான பாஸ்வேர்டு வைத்து கொள்ள வேண்டும். உங்கள் போன் மறைகுறியாக்கப்பட்டதா? என்பதை செக் செய்யுங்கள். Encryted என்று கூறப்படும் இந்த பாதுகாப்பு அம்சம் என்பது டேட்டாவை ஓப்பன் செய்யும் முன் செய்ய வேண்டிய ஒரு பாதுகாப்பு வழியாகும். மேலும், போனில் உள்ள சாப்ட்வேர்களை அப்டேட் செய்ய வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


