கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 190 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது, ஹவாய் தீவுகளில் உள்ள கிலயூயே எரிமலை. இந்த எரிமலையில் ஹலெமா என்ற எரிமலைக் குழம்பு ஏரி மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது. இந்த எரிமலை, லாவா குழம்பைக் கக்கியபடி, பரவுவதால்தான் இதற்கு கிலயூயே என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அக்ரோ நிறுவனம் ஒன்று பறக்கும் ஆம்புலன்சை உருவாக்கியுள்ளது. நோயாளியையும், உடன் ஒரு மருத்துவ உதவியாளரையும் சுமந்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் உள்ளே லைவ் கேமரா வசதியும், ஆடியோ கனெக்ஷனும் இருப்பதால், மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்குள் நோயாளியின் நிலைமையை ஆராய்ந்து, தகுந்த மருத்துவ ஆலோசனைகளை உதவியாளருக்கு கொடுக்க முடியும். இந்த ட்ரோன், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அவசர காலத்தில் சிட்டாய் பறக்கும் இந்த ட்ரோனுக்கு ஓட்டுனர் இல்லை மற்றொரு ஆச்சரியம். ஜி.பி.எஸ் வைத்து லொகேஷனை அடையாளம் கண்டு, தானாக பறந்து செல்கிறது. இதன் விலை சுமார் ஆறு கோடியாம்.
மிகவும் அரிய வகை இளம் சிவப்பு நிற வெட்டுக்கிளி அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸ் மாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் ஆய்வாளரான டிர்க் பார்க்கர் என்ற 33 வயது இளைஞர் இதை கண்டுள்ளார். அவருக்கு தொடக்கத்தில் இது எத்தனை அரியது என்பது தெரிந்திருக்கவில்லை. பின்னர் பூச்சி இனங்கள் தொடர்பாக கூகுளில் தேடிய போதுதான் இது அரிய வகை என்பது தெரியவந்தது என்கிறார். மரபணுவில் ஏற்படும் எரித்ரிசைம் என்பதன் காரணமாக இந்த நிற மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது அதை தனது வீட்டில் செல்லப்பிராணியாக வைத்திருக்கிறார் பார்க்கர்.
இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை கொல்கத்தாவின் மேற்கு வங்கத்தில் உள்ள பட்டூலியில் கடந்த 2018 இல் திறக்கப்பட்டது. இந்தச் சந்தையில் 200 கடைகளுக்கு மேல் உள்ளது. கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் கட்டமைத்துள்ள இந்தச் சந்தையில் படகுகள் மூலமாகப் பட்டூலியில் உள்ள ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் கடைக்காரர்கள் பழம், காய்கறிகள், மீன் போன்றவை கிடைக்கும். படகுகள் மூலமாகக் கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது கடைகளைத் திறக்க மற்றும் பிற கட்டுமான வசதிகளை ஏற்பாடு செய்ய 10 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். அருகில் பிற சந்தைகள் இருந்தாலும் இங்கு வந்து பொருட்களை வாங்குவது என்பது புதிய அனுபவமாக உள்ளது என்று வாடிக்கையாளர்களும் வணிகர்களும் கூறுகின்றனர்.
வடகிழக்கு மாநிலத்தின் மிகப்பெரிய மாநிலமான அஸ்ஸாம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த மாநிலத்தின் பல விஷயங்கள் மிகவும் மர்மமானவை. இந்த மாநிலத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் இடம் உள்ளது. டிமா ஹாசோ மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள ஜதிங்கா பள்ளத்தாக்கு பறவைகளின் தற்கொலை ஸ்தலமாக அறியப்பட்டு மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில், பறவைகளின் தற்கொலையால் ஜதிங்கா கிராமம் உலகின் வெளிச்சத்திற்கு வருகிறது. உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி, புலம்பெயர்ந்த பறவைகளும் இங்கு வந்து தற்கொலை செய்துகொள்வதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இது போன்ற சம்பவம் 1901ம் ஆண்டு முதல் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் வெளியுலகம் 1957ல்தான் இதுபற்றி அறிந்தது. இந்த சம்பவம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் தீர்வு கிடைக்கவில்லை.
இன்றைக்கு பெருநகரங்களில் பெரும்பாலான வணிக தளங்களில் அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலமாகவே வந்து விட்டன. அதை மேற்கொள்வதற்கு இன்டர்நெட் வசதி அவசியம். வாடிக்கையாளர்களுக்கு சிரமம் இருக்கக் கூடாது என கருதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் இணையதள வசதியையும் இலவசமாகவே அளிக்கின்றன. இவ்வாறு ப்ரீயாக கிடைக்கும் வைபை வசதியை கண்டுபிடிக்க நாம் ஒவ்வொருமுறையும் வைபை ஆப்சனை ஆன் செய்து ஸ்கேன் செய்து..... இனி இந்த கவலை வேண்டாம். ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு போன்களில் செயல்படக் கூடிய ஹாட்ஸ்பாட் மேப் எனப்படும் செயலி உங்களுக்கு உதவும். இதை இன்ஸ்டால் செய்து கொண்டால் உங்கள் லோகேஷனை டிடெக்ட் செய்து விட்டு உங்களுக்கு அருகிலேயே எங்கே இலவச வைபை வசதி கிடைக்கும் என்ற தகவலை தெரிவிக்கும். சில இடங்களில் பாஸ்வேர்ட் தேவைப்படுமே என்று கவலைப்படுபவர்களுக்கு அதற்கான தனி பட்டியலையும் இணைத்து காட்டும். இனி எங்கு சென்றாலும் இலவசமாக இன்டர்நெட் வசதியை பெறலாம் ஜாலியாக.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


