முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பனிஉருகும் அபாயம்

பூமிப்பந்தின் தென்கோடியில் அமைந்துள்ள அண்டார்டிகா முழுவதும் பனிப்பாறைகளைக் கொண்ட கடல் ஆகும். கிரீன்ஹவுஸ் வாயுக்களாலும், வெப்பமயமாகும் கடலாலும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி வரும் வேளையில், மேற்கு அண்டார்டிகாவில் 91 புதிய எரிமலைகள் இருப்பதை சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றின் மூலம் எப்போது வேண்டுமானாலும் பனிப்பாறைகளுக்கு பாதிப்பு வரலாம். இதனால் பனி உருகி கடல் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது. இது உலகிற்கு மிக முக்கியமான எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. மேலும், இந்த நூற்றாண்டு பூமியின் தென் துருவத்திற்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வருவதாக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.

இந்த மரம் ரொம்ப காஸ்டலி

தங்கம், பிளாட்டினம், வைரம் போன்ற உலகின் அரிய வகை தனிமங்கள் தான் உலகின் விலைமதிப்பு மிக்கது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அதை இன்றோடு மறந்துவிடுங்கள். இந்த நகைகளை காட்டிலும் விலைமதிப்பற்ற மரம் ஒன்று இருக்கிறது. அந்த மரத்தின் பெயர் அகர் மரம். அதன் விலை கிலோ ரூ.75 லட்சம். அக்குலேரியா என்ற மரத்தின் ஒருவகைதான் இந்த அகர் மரம். இந்த மரத்துக்கு வேறுசில பெயர்களும் உண்டு. அவை கற்றாழை மரம் அல்லது கழுகு மரம். ஜப்பானில் கியாரா அல்லது கயனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா, ஜப்பான், அரேபியா, சீனா, மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த மரமே உலகின் மிக அரிதான விலைமதிப்புமிக்க ஒரு மரமாகும்.இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பிசின் மூலம் ஒருவகை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் அத்தியாவசியமான பொருளாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்த எண்ணெய் ஒரு கிலோ 25 லட்ச ரூபாய் ஆகும். அப்படி என்றால் இந்த மரம் தானே உலகிலேயே மிகவும் காஸ்ட்லி.

நுண்ணோக்கியை கண்டு பிடித்தவர் யார் தெரியுமா

ஆண்டனி வான் லியூவென்ஹாக் (Antonie van Leeuwenhock) என்ற டச்சுக்காரர் 1670ஆம் ஆண்டு வாக்கில் சிறு கண்ணாடி வில்லையைப் பயன்படுத்தி முதலாவது நுண்ணோக்கியைக் கண்டுபிடித்தார். பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்ட முதலாவது நுண்ணோக்கியைக் கண்டவர் இவரே. மிக நுட்பமான பொருட்களையும் பல்லாயிரம் மடங்கு பெரிதாகக் காட்டும் திறன் வாய்ந்த நுண்ணோக்கிகளும் இப்போது உள்ளன. தாவரத்தின் உயிரணுக்கள் (plant cell) போன்றவற்றை நுண்ணோக்கியின் துணையின்றிக் காண இயலாது என்பதை நாம் அறிவோம்.

உலகில் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது?

உலகில் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது தெரியுமா.. நீங்கள் இந்தியா என்று எண்ணினால் அது தவறு. இன்றைக்கும் சீனா தான் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. பண்டைய காலத்தில் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சீன பட்டுகளை கொண்டு செல்வதற்காகவே தனியாக வழித்தடங்கள் உருவாக்கப்பட்டன. அவை இன்றும் பட்டுச்சாலை அல்லது சில்க் ரூட் என அழைக்கப்படுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் பட்டு நூல் தயாரித்ததற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. அதே போல பருத்தி மற்றும் கம்பளி ஆடைகளை உருவாக்கியதிலும் சீனர்கள் முன்னோடிகளாக இருந்துள்ளனர்.

அழிவை நோக்கி....

பூமியில் அடுத்த 1000 ஆண்டுகள் மட்டுமே மனித இனத்தால் வாழ முடியும். இந்த கால இடைவெளிக்குள் ஏற்படும் மிகப்பெரிய இயற்கைப் பேரிடரால் மனித இனம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று  ஐன்ஸ்டீனுக்குப் பிறகு மூளை செயல்பாடு அதிகம் கொண்டவராகக் கருதப்படும் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

பேஸ் புக்கை திறந்தால் கன்னத்தில் பளார்

இந்திய அமெரிக்கரான மணீர் சேதி. இவர் பாவ்லோக் நிறுவனத்தில் நிறுவனர் மற்றும் சிஇஓவாக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது நிறுவனத்தின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும் என புரிந்து கொண்டார். இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவர் விநோதமான முயற்சி ஒன்றையும் உருவாக்கினார். அதில் பணியின் போது பேஸ்புக் பார்ப்பதால் பணி திறன் பாதிப்பதாக கருதிய அவர்,தான் பேஸ் புக் பக்கத்தை பார்க்கும் போதெல்லாம் தன்னை அறைவதெற்கென பெண் ஊழியரை பணியமர்த்தினார். இவர் தன்னை அறியாமல் பேஸ் புக்கை திறக்கும் போதெல்லாம் அந்த பெண் இவரை கன்னத்தில் அறைவதுதான் அந்த பெண்ணின் பணி. கரா என்ற அந்த பெண்ணுக்கு இதற்காக மணிக்கு 8 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.600)  என்ற சம்பளமாக வழங்கப்பட்டது. இதனால் ஒரு ஆச்சரியப்படத்தக்க மாற்றம் ஏற்பட்டதாக அவர் கூறினார். ஆம் அவரது உற்பத்தி திறன் ஜெட்வேகத்தில் 98 சதவீதம் அதிகரித்துள்ளது.  இதில் அவரை அந்த பெண் கன்னத்தில் அறையும்  புகைப்படத்தையும் சேதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதை பிரபல டெஸ்லா கார் நிறுவன அதிபர் Elon Musk தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததுடன் மனீஷ் சேதியின் இந்த யோசனைக்கு பாராட்டும் தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago