முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய அப்டேட்

சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துகளுக்கு நமது உணர்வுகளை தெரிவிக்கும் விதத்தில் ரியாக்‌ஷன் பட்டன்கள் உள்ளன.  பேஸ்புக்கில் கடந்த ஆண்டில் மட்டும் 300 பில்லியன் தடவை இதை பயன்படுத்தியுள்ளனர். லைக் பட்டன்கள் மட்டுமே இதுவரை இருந்த நிலையில், பேஸ்புக் மெசஞ்சர் ஆப்பில் டிஸ்லைக் பட்டன் விரைவில் வரவுள்ளது.

சருமம் பளபளக்க...

ஆரஞ்சு அல்லது எலுமிச்சை பழங்கள் அல்லது ஆப்பிள் பழ த்தை குழைத்து பேஸ் பேக் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து மெல்லிய காட்டன் துணியில் துடைத்து எடுக்க வேண்டும். இதை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ளநச்சுகள் நீங்கி சருமம் நல்ல நிறத்துடன் காணப்படும்.

குரூப் காலிங் வசதி

மைக்ரோசாப்ட் ஸ்கைப் மற்றும் ஹேங்அவுட்ஸ் போன்றவற்றில் அமைந்துள்ள குரூப் காலிங் வசதி தற்போது பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கிலும் அறிமுகப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.ஃபேஸ்புக் பக்கத்தில் குரூப் சாட் ஆப்ஷனை க்ளிக் செய்து, அதில் க்ரூப் காலிங் செய்தால் எளிதாக நண்பர்களுடன் உரையாடலாம். வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் இரண்டுமே இந்த குரூப் காலிங் ஆப்ஷனில் செய்ய இயலும்.

மத்யாசனம்

தோள்பட்டை கழுத்து வலியால் அவதிப்படுபவர்களுக்கு மத்யாசனம் சிறந்த தீர்வு. இந்த யோகா செய்வதால், மன அழுத்தம், கழுத்துவலி, நரம்பு பிரச்சனை ஆகியவை தீரும். அதேபோல் வயிற்று பகுதியில் அழுத்தம் தரப்படுவதால் கொழுப்புகள் குறைந்து தொப்பை குறைய வழிவகுக்கும். சுவாசத்தை சீர்படுத்தும். மார்புக் கூடு விரிவடையும். தைராய்டு சுரப்பிகள் நன்றாக இயங்கும்.

பரங்கி மலை : தெரிந்ததும் தெரியாததும்

பரங்கி மலை இந்தியாவின் பழமையான வரலாற்று சின்னங்களில் ஒன்று. இந்திய நிலவியல் வரை படத்தை தயாரித்த ஆங்கிலேயர்கள் இந்த மலையிலிருந்துதான் இமய மலையை அளவு எடுத்தார்கள் என வரலாறு சொல்கிறது. கடல் மட்டத்தில் இலிருந்து 300 அடி உயரமுள்ள இந்த மலையில்தான் செயிண்ட் தாமஸ் செதுக்கிய கற்சிலுவை ஒன்று இங்கு இன்றும் புழகத்தில் உள்ளது. ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான தாமஸ் கேரளா வழியே சாந்தோம் வந்து அங்கிருந்து சைதாப்பேட்டை சின்னமலைக்கு இடம்பெயர்ந்து இறுதியாக இந்த மலைக்கு வந்து சேர்ந்ததாக கிறிஸ்துவ பெருமக்கள் நம்புகிறார்கள். இந்த மலைக்குச் செல்வதற்கு, 135 படிக்கட்டுகளைக் கொண்ட பாதையை ஆர்மீனியர்கள் அமைத்தனர். புனித தோமையரின் சிறு எலும்புத் துண்டு ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதேபோல 12 திருத்தூதர்களின் திருப்பண்டங்கள் (எலும்புத் துண்டு, சதைத் துண்டு உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள்) உட்பட 124 புனிதர்களின் திருப்பண்டங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மிக முக்கியமாக, புனித லூக்காவினால் கி.பி.50-ம் ஆண்டு வரையப்பட்டு, தோமையரால் இம்மலைக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் அன்னை மரியாவின் ஓவியமும் இங்கு பாதுகாக்கப்படுகிறது.

மின் விசிறி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

மனிதன் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாக்கப் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தான். முன்னாளில் மர இலைகளும், பறவைச் சிறகுகளும் விசிறியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. பனை ஓலைகளை நீரில் நனைத்து விசிறியாகப் பயன்படுத்தினர்.வௌவாலின் சிறகுகளைப் பார்த்து வியந்த ஜப்பானியர்கள் கி.பி.8ஆம் நூற்றாண்டில் அத்தகைய விசிறிகளை உருவாக்கினர்.மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஸ்கைலர் வீலர் (Schuyler Wheeler) என்பவர் 1886ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மின் விசிறியைக் கண்டுபிடித்தார். இதன் தொழில்நுட்பம் மிக விரைவாகப் பிற நாடுகளுக்கும் பரவி மக்களிடம் பெரும் புகழ் பெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago