பூமியின் கீழ் மட்டத்தில் உள்ள அழுத்தம் குறித்த மாதிரிகளை ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கி பரிசோதித்தனர். அப்போது பூமியின் கீழே 2,900 கிமீ ஆழத்தில் வளிமண்டலத்தை காட்டிலும் 1.3 மில்லியன் மடங்கு அதிக அழுத்தம் உருவாக்க முடியும் என கண்டறியப்பட்டது. அது மட்டுமின்றி இதன் மூலம் வைரங்களை உருவாக்குவதற்கான புதிய வழிகளும் தெரிய வந்தன. அறிவியல் கோட்பாட்டின்படி அதிகமான அழுத்தத்தில் கார்பன் அணுக்கள் வைரங்களாகின்றன. இந்த சோதனையின் போது நிலக்கடலை பட்டர் (வெண்ணெய்யை) பரிசோதித்த போது அதிலிருந்தும் வைரம் தயாரிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
15 சதவீத இந்தியர்கள், தெற்காசியர்கள் உடலில் உள்ள குறிப்பிட்ட ஜீன்/புரத வகை சர்க்கரை நோய் (நீரிழிவு), மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு ஆகியவை ஏற்படுவதற்கான இடர்ப்பாட்டை 1.5 மடங்கு அதிகரிப்பதாக, சென்னை ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பயனாக, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட சாத்தியம் உள்ளவர்களை உண்மையில் அவர்களுக்கு நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே கண்டுபிடிக்கலாம். இந்த மரபணு அமைப்பு குறிப்பிட்ட நபர்களின் உடலில் ஆயுள் முழுவதும் மாறாமல் இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. இதய, ரத்தக்குழாய், வளர்சிதை நோய்கள் ஏற்படும் குடும்ப வரலாறு உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை உடல் நல நடவடிக்கை எடுப்பதற்கும், நோயை சிறப்பான முறையில் கையாள்வதற்கும் இந்த கண்டுபிடிப்பு உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
மெக்சிகோவில் உள்ள Puerto San Carlos என்ற இடத்தைச் சேர்ந்தவர் Don Adán Arana. இவர் ஆசையாய் ஓட்ட வேண்டும் என விரும்பியதால் அவரது மகன்கள் அவருக்கு சரக்கு வேன் அதாவது டிரக் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் Don Adán Arana அதன் பின்னர் நீண்ட நாட்கள் இந்த பூமியில் உயிர் வாழ இயலவில்லை. அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மரண படுக்கையில் போராடிய அவர் தன்னுடன் சேர்த்து தனக்கு பிடித்தமான அந்த டிரக்கையும் மண்ணில் என் அருகில் புதைத்து விடுங்கள், மரணத்துக்கு பிறகு "அங்கே" நான் ஓட்டிச் செல்ல வசதியாக இருக்கும் என தெரிவித்தாராம். அதன் பின்னர் அவர் இறந்து விடவே, அவரது இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவருடன் சேர்த்து அவருக்கு அருகிலேயே அந்த டிரக்கையும் உறவினர்கள் மண்ணில் புதைத்துள்ளனர். இதற்காக டிரக்கை இறக்கும் அளவுக்கு மிகப் பெரிய குழி தோண்டி கான்கிரீட்டால் தொட்டி போல கல்லறையை கட்டியுள்ளனர். பின்னர் அவருடன் சேர்த்து அந்த டிரக்குக்கும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது.
சீனாவில் உள்ள சாங்ஷி மாகாணத்தில் 1974 இல் தொல்லியல் ஆய்வாளர்கள் தடயம் ஒன்றை கண்டறிந்தனர். அங்கு தோண்டிய போது சுமார் 8 ஆயிரம் களிமண் வீரர்களின் அணிவகுப்பு சிலைகளாக வடிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டெரகோட்டா ஆர்மி என அழைக்கப்படும் இந்த இடம் சுமார 98 சதுர கிமீ பரப்பளவில் உள்ளது. கின் வம்சத்தின் முதல் பேரரசரான கின் ஷி ஹூவாங் ஆட்சி காலத்தில் அதாவது சுமார் கிபி 246 இல் போரில் இறந்த வீரர்களின் நினைவாக இது அமைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது வரை இது பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உலகையே அழிக்க வந்த நாசகார அரக்கன் பிளாஸ்டிக் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆகவே பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.அதே வேளையில் பிளாஸ்டிக் மாற்றாக காகித பைகள் சூழலை பாதிப்பதில்லை என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் இது நம்பிக்கை இல்லை மூட நம்பிக்கை என விளாசுகிறார்கள் விஞ்ஞானிகள். பிளாஸ்டிக் பைகளை போலவே காகித பைகளும் சுற்று சூழலுக்கு அச்சுறுத்தலானவை. காகித தயாரிப்பின் போது 75 சதவீத சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என ஆய்வுகள் சொல்கின்றன. காகித தயாரிப்பின் போது 80 சதவீதத்துக்கும் அதிகமான பசுமையை பாதிக்கும் வாயுக்கள் வெளியாவதாகவும், நீர் மாசுபாடு ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் ஏராளமான எரிசக்தி ஆற்றலையும் இவை செலவிடுகின்றன. ஆகவே எது சிறப்பு என்றால் நம்மூர் மஞ்சப்பை அல்லது சணல்பை. இனி சாக்கு பையை கேவலமாக பார்க்காதீர்கள் மக்களே..
இந்தியாவுக்கு வெளியே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ். முதலில் அச்சில் ஏறிய இந்திய மொழி தமிழ். உலகில் அதிகம் பேரால் பேசப்படும் ஆங்கிலத்தில் 10 லட்சம் சொற்கள் உள்ளனவாம். தமிழில் 6 லட்சம் சொற்கள் உள்ளதாக நிகண்டுகள் கூறுகின்றன. தனது நிலத்துக்கு வெளியே கல்வெட்டுகள், தொல்படிமங்கள், சான்றாதரங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு
15 Jun 2025டெல்அவீவ் : இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு 70 சதவீதமாக குறைப்பு
15 Jun 2025சென்னை : கூட்டுறவு துறை மூலம் மத்திய உணவுத்துறையிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டு ரேஷன் கடைகளில் கைரேகை பதிவின் 90 சதவீதம் துல்லியத்தை 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
-
ரபேல் விமானங்களை வீழ்த்தியதா பாக்.,? - டசால்ட் நிறுவனம் மறுப்பு
15 Jun 2025பாரிஸ் : ஆபரேஷன் சிந்தூரின் போது ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் என்று டசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
நவீன தமிழ்நாட்டை செதுக்கியவர்: தந்தையர் தினத்தில் கருணாநிதி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Jun 2025சென்னை : தந்தையர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
-
ஈரானில் ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் உடேன வெளியேற இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
15 Jun 2025டெஹ்ரான் : ஈரானில், ராணுவ ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா: பழங்குடியின மாணவிக்கு ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார் விஜய்
15 Jun 2025சென்னை : த.வெ.க.
-
திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய போர் விமானம்..!
15 Jun 2025திருவனந்தபுரம் : பிரிட்டனுக்கு சொந்தமான எப்-35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிக்கப்பட்டது.
-
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம்: இஸ்ரேல் - ஈரான் இடையே 4-வது நாளாக தீவிர மோதல்
15 Jun 2025டெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே 4-வது நாளாக தொடர்ந்த தீவிர மோதலால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
வெடி விபத்து மற்றும் நீரில் மூழ்கி பலியான பெண் மற்றும் பள்ளி மாணவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
15 Jun 2025சென்னை : கடலூர் மாவட்டம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலிான பெண் மற்றும் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் ஏரியில் மூழ்கி பலியான பள்ளி மாணவரின் குடும்பத்தினருக்கு நிதிய
-
ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கிய ஹவுதி படை
15 Jun 2025தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
-
இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Jun 2025சென்னை : கடந்த 4 ஆண்டுகளில் 'இடைநிற்றலே இல்லாத' மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இடைநிற்றல் மாணவர்களை மீண்டும
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 80 பேர் பலி-320 பேர் படுகாயம்
15 Jun 2025தெஹ்ரான் : ஈரானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈரானின் ஐ.நா.
-
திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jun 2025சென்னை : நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு
15 Jun 2025ஆண்டிப்பட்டி : மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
-
இங்கிலாந்தில் பயங்கரம்: ஒரே இரவில் 30 ஆயிரம் முறை மின்னல் தாக்குதல்
15 Jun 2025லண்டன் : இங்கிலாந்தில் ஒரே இரவில் 30 ஆயிரம் முறை மின்னல் தாக்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வடிவேல் ராவணனை நீக்கம்: பா.ம.க. பொதுச்செயலாளரை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு
15 Jun 2025சென்னை : பா.ம.க. பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
-
நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு; 100-க்கும் மேற்பட்டோர் பலி
15 Jun 2025அபுஜா : நைஜீரியாவின் மத்திய பெனுவே மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
-
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தஞ்சை, கல்லணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
15 Jun 2025தஞ்சாவூர் : தஞ்சை கல்லணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி நீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
சைப்ரஸ் சென்றார் பிரதமர் மோடி
15 Jun 2025புதுடெல்லி : பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளாக நேற்று மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் சென்றார்.
-
பாக். ராணுவ தளபதிக்கு அழைப்பா? - அமெரிக்கா வெள்ளை மாளிகை மறுப்பு
15 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் 250வது ஆண்டு ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-06-2025.
16 Jun 2025 -
அருண் பாண்டியன் நடிக்கும் அஃகேனம்
16 Jun 2025அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா, கல்கி உள்ளிட்ட பலர் நடிப்பில், அறிமுக இயக்குநர் உதய்.
-
படை தலைவன் திரை விமர்சனம்
16 Jun 2025வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஒரு குட்டி யானையை நாயகன் சண்முக பாண்டியன் வளர்க்கிறார்.
-
கட்ஸ் திரை விமர்சனம்
16 Jun 2025நாயகன் ரங்கராஜ் சிறு வயதில் தாய், தந்தையை இழந்து, பின்னர் படித்து போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார்.
-
நா முத்துக்குமார் நினைவை போற்றும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
16 Jun 2025மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.