முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆடம்பரத்தின் உச்சம்

இந்தோனேஷியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி மன்னர் சல்மானுக்காக, சொகுசு கார் உட்பட இவருக்கு தேவையான 460 டன் சாதனங்கள்  சவுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இவர் விமானத்தில் இருந்து இறங்க, தங்கத்தால் ஆன நகரும் படிகட்டு பயன்படுத்தப்பட்டதுதான் ஆச்சரியத்தின் உச்சகட்டம்.

தட்டான்கள் இருக்கும் இடத்தில் கொசு இருக்காது ஏன் தெரியுமா?

டிராகன்ஃபிளைஸ்(Dragonflies) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தட்டான், தட்டாரப்பூச்சி எனவும், தும்பி எனவும், தட்டாம்பூச்சி எனவும் அழைப்பார்கள். தட்டான் பூச்சிகள் மிக வேகமாக லாவகமாக பறக்கின்றன. மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் விரைவாக பறக்க கூடியவை. இவை ஒரு ஆண்டில் 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கக் கூடியது. ஏறத்தாழ 6000 வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் இதுவரை 503 தட்டான் இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தட்டான் பூச்சிகள் ஏறத்தாழ 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும் ஒரு உயிரினம். டினோசர்களை விட மிகவும் பழமையானவை. தட்டான்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. அவைகள் சூடான காலநிலை மற்றும் தண்ணீருக்கு அருகில் வாழ விரும்புகின்றன. தட்டான் பூச்சிகள் கொசுக்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றன. தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் தொல்லை குறைவாக இருக்கும்.

அண்டார்டிகா துருவ பிரதேசத்தில் தனியாக பயணம் செய்த முதல் இந்திய பெண்

அண்டார்டிகா எனப்படும் பூமியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பனிப்படர்ந்த துருவ பிரதேசம். இங்கு பயணம் மேற்கொள்வது மிகப் பெரிய சாகசம். ஏறக்குறைய உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளப்படும் பயணம் என்று கூட சொல்லலாம். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து அந்நாட்டில் ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றும் இந்திய வம்சாவளி பெண்ணான  ஹர்பிரீத் சான்டி முதன்முறையாக துருவ பிரதேசத்தில் தனியாக பயணம் மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார். 40 நாட்கள் அப்பகுதியில் அவர் மேற்கொண்டு திரும்பிய சாகச பயண செய்தி தற்போது ஊடகங்களில் வேகமாக  பரவி வருகிறது. அவரது துணிச்சலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

அனைத்துக்கும் ஒன்றே

பென் டிரைவ் போல வந்துள்ள ரிமோட்டினால் டி.வி, மீடியா பிளேயர், லைட், ஏசி என அனைத்தையும் கன்ட்ரோல் செய்யும் புது ரிமோட் வந்திருக்கிறது. செவன்ஹக்ஸ் நிறுவனத்தின் படைப்பு தான் இது. இதன் மூலம் மொத்தம் 25 ஆயிரம் பொருட்களை இயக்கலாமாம். ஸ்மார்ட் ரிமோட் வைஃபை, ப்ளூடூத், இன்ஃப்ரா ரெட் மூலம் பொருட்களை கட்டுப்படுத்துகிறது.  135 மி.மீ நீளமும், 41 மி.மீ அகலமும் கொண்ட ஸ்மார்ட் ரிமோட்டோடு, சார்ஜ் பேஸ், 3 ரூம் சென்சார்கள் உட்பட 10 ஆயிரத்து 156 ரூபாய்க்கு வாங்கி இஷ்டப்படி பொருட்களை ஒன் மேன் ஆர்மியாக கன்ட்ரோல் செய்து கலக்கலாம்.

உலகில் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான பூ மீண்டும் தோன்றியது

சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் பழமையான பூ ஒன்று மீண்டும் 2020 ஆம் ஆண்டில் தன்னை இந்த பூமிக்கு வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. அதன் பெயர் Valviloculus pleristaminis என்பதாகும். ஆஸ்திரேலியாவின் மென்மையான தோற்றமுடைய பிளாக்ஹார்ட் சஸ்ஸாஃப்ராஸ் மலருடன் தொடர்புடையது. இது ஒரு கண்ட திட்டிலிருந்து மற்றொரு கண்ட திட்டுக்கு இடம் மாற்றமாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவிலிருந்து 4000 தொலைவில் உள்ள தென்கிழக்கு ஆசிய பகுதியான மியான்மரின் இந்த மலர் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் விட்டம் 2 மிமீ. இதன் மையத்தில் சுமார் 50 மகரந்த மொட்டுகள் சுழல் வடிவில் அமைந்திருக்கும்.  இவை கண்டம் தாண்டி சென்றது ஆச்சரியம் தானே..

வீட்டில் சீனித்துளசி வளர்த்தால் சர்க்கரைக்கு குட்பை சொல்லி விடலாம்

ஸ்டிவியா (Stevia) என்று சொல்லப்படும் ‘இனிப்புத் துளசி அல்லது சீனித்துளசி’ மூலிகைப் பயிர் வகையைச் சேர்ந்தது. இத்துளசியின் தாயகம் பராகுவே. ஜப்பான், கொரியா, சீனா மற்றும் கனடாவிலும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. சீனாதான் அதிகம் ஏற்றுமதி செய்கிறது. கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நாட்டுச் சர்க்கரையை விட, வெள்ளைச் சர்க்கரை மனிதனை அதிக நோய்களுக்கு ஆளாக்குகிறது. நாட்டுச் சர்க்கரை வாங்க முடியாதவர்கள் சீனித்துளசி செடிகளை வளர்க்கலாம். நான்கு பேர் அருந்த நான்கு இலைகளை சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இதனால் வெள்ளைச் சர்க்கரை வாங்கவும் தேவையில்லை, நோய்வாய்ப்பு ஏற்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இந்தச் செடிகளை எளிதாக வீட்டில் வளர்க்கலாம். மற்ற செடிகளைப் போல இதற்கும் கவனிப்பு இருந்தாலே போதுமானது. கரும்பின் சர்க்கரையை விட 20 சதவிகிதத்துக்கும் மேல், இனிப்புச் சுவை அதிகமாக உள்ளது. மேலும், இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளன. சீனித்துளசி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்வதில்லை. இதனால் சர்க்கரை நோயாளிகளும் இனிப்பு துளசியின் பொடியை தேநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றில் கலந்து பயன்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பு. அப்புறம் என்ன...இப்போதே நர்சரிக்கு சென்று சீனித்துளசிக்கு ஆர்டர் செய்து விடுங்கள். என்ன சரிதானா..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago