முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மறதி நோய்

வயது மூப்பின் காரணமாகவும், மன அழுத்தம் காரணமாக அல்சைமர் எனும் மறதி நோய் ஏற்படுவதாக நம்பப்பட்டு வந்த நிலையில்,  தற்போது வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, சோயா ஒரு சில தானியங்கள், சில பால் பொருட்கள் உள்ளிட்டவற்றில் உள்ள அதிக புரதம் மறதி நோயை உண்டாக்குவதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாரடைப்பை தடுக்க...

இன்று, உலகில் அதிகமாகப் பயிரிடப்படும் உணவுப் பொருட்களில் 4-வது இடத்தில் இருக்கும் உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட், ஸ்டார்ச், வைட்டமின் சி, வைட்டமின் பி 6, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், போலிக் ஆசிட், கால்சியம், பைட்டோகெமிக்கல்ஸ், காப்பர், நியாசின் ஆகியவை உள்ளன. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மாரடைப்பு வருவதைத் தடுக்கும்.

கற்கால ஓவியங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பாக்கம் மலைத்தொடர் ஒட்டிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது செத்தவரை மலையில் ஆவணம் செய்யப்படாத புதிய பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர்.செத்தவரை ஊரின் தெற்கு மூலையில் செத்தவரை மலைகள் தொடங்கும் இடத்தில் கும்பசுனை என்ற இடத்தில் உள்ள பெரிய பாறையில் இரண்டு இடங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் மற்றும் இதனருகே உள்ள பாறையில் வெண்சாந்து ஓவியமும் இருப்பது கண்டறியப்பட்டது. ஓவியத்தில் மான் ஒன்றும் அதன் அருகே யானை போன்ற ஒரு உருவம் காணப்படுகிறது. மற்றொரு முனையில் உள்ள செஞ்சாந்து ஓவியத்தில் இரு மனிதர்கள் மட்டும் உள்ளனர். மேலும் அருகில் உள்ள மற்றொரு குன்றிலும் ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவையாவும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களாகக் கருதலாம். இதன் காலம் சுமார் 5000 வருடங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

கொல்கத்தா-லண்டன் பேருந்து சேவை

கொல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு பேருந்து சேவை இயக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் உண்மை. அதுதான் அன்றைய நாளில் உலகின் மிக நீளமான பேருந்து சேவையாகவும் காணப்பட்டது. 1957 இல் தொடங்கப்பட்ட அந்த பேருந்து சேவைக்கு "ஆல்பர்ட்"  என்றும் பெயரிடப்பட்டது. இந்த பேருந்தானது இங்கிலாந்து, பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், இந்தியா ஆகிய 11 நாடுகள் வழியாக  32,669 கி.மீ தூரம் பயணம் செய்து லண்டனிலிருந்து கொல்கத்தாவை அடையும்  வகையில் இயக்கப்பட்டது. அப்போது பயணக் கட்டணம் ரூ.8 ஆயிரம். 1976 வரை இந்த சேவை செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியாவையும்  ஐரோப்பியாவை இணைக்கும் வகையில் செயல்பட்ட அந்த பேருந்து சேவை ஒரு வரலாற்று ஆச்சரியம் தானே...

கிரேக்கர்களால் கட்டப்பட்ட ஆப்கன் நகரம்

கான்ஸ்டிநோபில் என்ற நகரம் எது தெரியுமா.. இன்றைக்கு ஆப்கானிஸ்தானில் நவீன நகரமாக அறிப்படும் இஸ்தான்புல்தான் அது. இந்த இஸ்தான்புல் பல்வேறு சிக்கலான வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கிமு 657 இல் இந்த நகரம் கிரேக்கர்களால் நிறுவப்பட்டது. அப்போது அது பைசான்டியம் என அழைக்கப்பட்டது. பின்னர் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு ரோமானிய பேரரசன் கான்ஸ்டன்டைன் தனது பேரரசின் தலைநகராக இதை மாற்றினான். அதன் பின்னர் அது ஐரோப்பாவின் முக்கிய நகராக மாறியது. அவர் இறந்த பிறகு அந்த நகருக்கு கான்ஸ்டான்டி நோபில் என பெயரிடப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் அந்த நகரம் இஸ்தான்புல் என அழைக்கப்படும் வரை அது அந்த பெயராலேயே விளங்கியது என்றால் ஆச்சரியம் தானே...

பறக்கும் டாக்சியை பரிசோதித்த தென் கொரியா

கார்கள் தரையில் சீறிப் பாய்ந்த காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. மாறாக அவை விரைவில் வானில் பறக்க தயாராகி வருகின்றன. இதற்கான பல்வேறு முன்னோட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வந்த போதிலும் இதில் தென் கொரியாதான் முன் கை எடுத்துள்ளது. வெகு விரைவில் தனது நாட்டில் பறக்கும் டாக்ஸிகலை பயன்படுத்தப் போவதாக கடந்த 2020 இல் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது பறக்கும் கார் டாக்ஸியை வெற்றிகரமாக அந்நாடு பரிசோதித்துள்ளது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு Gyeonggi Province இல் உள்ள ஜிம்போ நகரில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பறக்கும் டாக்ஸியை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. ஜெர்மனி நிறுவனமான Volocopter இதற்கான பறக்கும் டாக்ஸியை வடிவமைத்து தந்துள்ளது. ஜிம்போவிலிருந்து தலைநகர் சியோல் வரை சுமார் 30 முதல் 50 கிமீ வரை இந்த பறக்கும் டாக்ஸி சேவையை செயல்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 2025க்குள் உறுதியாக இது தொடங்கப்பட்டு விடும் என்கிறது தென்கொரியா. அப்படியானால் விரைவில் நமது நாட்டிலும் நாமும் பறக்கும் டாக்ஸியில் விரைவில் பறக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை எனலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago