கூகுள் நிறுவனம், தனது ஆண்ட்ராய்டு இயங்கு தள ங்களுக்கு பிரபலமான உணவு வகை களின் பெயரைச் சூட்டுவது வாடிக்கை. மார்ஷ் மெல்லோவுக்குப் பின்னர் அடுத்த வெர்ஷனுக்கு கேரளாவின் பாரம்பரிய உணவு வகையான நெய்யப்பத்தின் பெயரைச் சூட்டணும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட ‘பீர்’ சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பீர்’ குடித்தால் போதும் உரிய நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக ஆல்கஹால்கள் உடல் வலியை போக்கும் தன்மை கொண்டவை. எனவே, வலி நிவாரணிகளுக்கு பதிலாக ‘2 பின்ட்’ அதாவது 16 அல்லது 20 அவுன்ஸ் அளவு பீர் குடித்தால் போதும் அதில் உள்ள ஆல்கஹால் வலி நிவாரணியாக செயல்படும். இதன் மூலம் உடல்வலி போக்கும். ஆனால் உடல் வலியை காரணம் காட்டி தொடர்ந்து ‘பீர்’ குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆல்கஹால் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.
அசுவமேத யாகம் செய்த சூர்ய வம்சத்தை சேர்ந்த சகரன் எனும் மன்னனின் இறந்துபோன மகன்களுக்கு முக்தி அளிப்பதற்காக கங்கா தேவி பூமியில் பிறப்பெடுத்து கங்கை நதியாக ஓடுவதாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாகவே கங்கையில் அஸ்தியைக் கரைத்து தங்கள் முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்கின்றனர்.
அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் பிவர்லி ஹில்ஸ் 90எச்20 என்ற பெயரில் தண்ணீர் பாட்டில் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.65 லட்சம். இந்த பாட்டிலில் நிரப்பப்படும் தண்ணீர் தெற்கு கலிபோர்னியானியாவின் மலையின் 5000 அடி உயரத்திலிருந்து எடுக்கப்படுகிறதாம். இந்த தண்ணீர்தான் உலகின் சுத்தமான நீராக கருதப்படுகிறது. இந்த தண்ணீர் அதிக சுவையானதாகவும், மென்மையானதாகவும், நம்பமுடியாத அளவு மிருதுவானதாகவும் உள்ளது. மேலும், இந்த குடிநீர் பாட்டிலின் மூடியில் 600 சிறிய வெள்ளை நிற வைர கற்கள் மற்றும் 250 கருப்பு வைர கற்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் இதோடு மலையிலிருந்து எடுக்கப்பட்ட ஒருவருடத்துக்கான தண்ணீரும் இந்த பாட்டிலை வாங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறதாம்.
அமேசான் காடுகள் அதிசயங்களுக்கும், மர்மங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் குறைவில்லாத மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். உலகின் மிகப் பெரிய வனப்பகுதியுமாகும். இந்த வனத்தின் அனைத்து ஆச்சரியங்களும் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் இதன் பிரம்மாண்டத்துக்கு ஓர் சாட்சி. இந்நிலையில் தெற்கு கொலம்பியாவில் Chiribiquete National Park என்ற இடத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியில் சுமார் 8 மைல் நீளமுள்ள பாறைத் தொடரில்தான் பழங்கால ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிரோன் மூலம் படம்பிடிக்கப்பட்டு முதன் முதலில் உலகுக்கு தெரிய வந்த போதிலும் அந்த இடத்துக்கு செல்வது அத்தனை எளிதானதாக இல்லை. அண்மையில் அங்கு சென்ற கொலம்பிய- பிரிட்டனைச் சேர்ந்த கூட்டு தொல்லியல் ஆய்வு குழுவினர் மிகக் கடினமான மலையேற்றத்துக்கு பின்னர்தான் அப்பகுதியை அடைந்தனர். அங்கு வரையப்பட்டிருந்த ஓவியங்கள் சுமார் 12 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கும் பழமையானவையாக இருக்கலாம் என்கின்றனர். அவற்றில் விலங்குகள், பறவைகள், மீன்கள், ஊர்வன என பல்வேறு பட்ட உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இது வரை இப்படி ஒரு பாறை ஓவியம் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்பது இதன் கூடுதல் ஆச்சரியமாகும்.
சீனாவில், யூகோங்-1 என்று பெயரிடப்பட்ட ஆய்வகத்திற்குள் நிலாவில் உள்ள தட்பவெப்பநிலை, காற்றழுத்தம் ஆகியவை இருக்கும். இதன் மூலம் நிலாவில் மனிதன் தங்கி அங்குள்ள சூழலை கையாள்வதற்கான ஆய்வாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. “விண்வெளி ஆய்வில் சீனா, உலகின் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. 2018-ம் ஆண்டு நிலாவின் மறைவிடங்களை ஆராயும் பணிக்கு முன்னோட்டமாக இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்களில் 4 பேர் கொண்ட முதல் குழு, 60 நாட்களும், 4 பேர் கொண்ட இரண்டாவது குழு 200 நாட்களும் தங்குவார்கள். இந்த ஆய்வகத்தில் ஒரு தங்குமிடம், 2 தாவரங்களுக்கான பசுமைக்கூடம் இருக்கும். சீனா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து நிலா கிராமத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
தமிழகத்தில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது
10 Nov 2025சென்னை, தமிழகத்தில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நேற்று முதல் தொடங்கியது.
-
நடிகர் அபினய் காலமானார்
10 Nov 2025சென்னை, நடிகர் அபினயின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
புதுக்கோட்டைக்கு 6 புதிய அறிவிப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Nov 2025புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.767 கோடியில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வீர கொண்டான் ஏரி ரூ.15 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
10 Nov 2025சென்னை, வார தொடக்கமான நேற்று தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விளக்கம் அளித்த மின்வாரிய அதிகாரிகள்
10 Nov 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொட்பாக மின்வாரிய அதிகாரிகள் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர்.
-
பீகாரில் இன்று 122 சட்டசபை தொகுதிகளில் இறுதி தேர்தல்
10 Nov 2025பாட்னா, பீகாரில் இன்று 122 சட்டசபை தொகுதிகளுக்கு இறுதி கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. களத்தில் 1,302 வேட்பாளர்கள் உள்ளனர்.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 14 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
10 Nov 2025சென்னை, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேரை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய
-
டி.ஜி.பி. நியமனத்தில் ஏன் குளறுபடி..? தமிழ்நாடு அரசுக்கு இ.பி.எஸ். கேள்வி
10 Nov 2025கோவை, டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் உரிய வழிமுறைகளை தி.மு.க. அரசு பின்பற்றவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாட பழனிசாமி டி.ஜி.பி.
-
அசைவ உணவு சாப்பிட்ட 2 ஊழியர்கள் பணிநீக்கம்: திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை
10 Nov 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 2 ஒப்பந்த ஊழியர்கள் அசைவ உணவு சாப்பிட்டதால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
-
நெல்லை, குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
10 Nov 2025சென்னை, தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் குறித்து நவ. 23, 24-ல் ஆலோசனை
10 Nov 2025சென்னை, தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்டங்களை மாற்றுவது தொடர்பாக சென்னையில் வருகிற நவ.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
10 Nov 2025சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
-
ரயில்வே வேலைக்கு நிலம்: லல்லு பிரசாத் மீதான வழக்கு ஒத்திவைப்பு
10 Nov 2025டெல்லி, ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற விவகாரத்தில் லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் தீவிரம் அடைகிறது பருவமழை
10 Nov 2025சென்னை, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வருகிற 16-ம் தேதி முதல் மீண்டும் தீவிரம் அடைகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பரிதாபாத் வெடிபொருள் பறிமுதலில் வெளியான புதிய தகவலால் பரபரப்பு
10 Nov 2025டெல்லி, பரிதாபாத் வெடிபொருள் பறிமுதலில் வெளியான புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேரை கொன்ற வாலிபர் தற்கொலை
10 Nov 2025வாஷிங்டன், அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிசூட்டில் 3 பேர் பலியானதை முன்னிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
-
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: நடத்தை விதிமுறைகள் அமல்
10 Nov 2025திருவனந்தபுரம், கேரளாவில் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச.
-
எஸ்.ஐ.ஆர். போன்ற புது யுக்திகளை கையாண்டாலும் தி.மு.க. இயக்கத்தை யாராலும், ஒருபோதும் அழிக்க முடியாது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
10 Nov 2025திருச்சி, எஸ்.ஐ.ஆர். போன்ற புது யுக்திகளை கையாண்டாலும் தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அழிக்க முடியாது என்று திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
சபரிமலைக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே
10 Nov 2025சென்னை, சபரிமலைக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்று வரும் வேளையில் ஒவ்வொரு வாக்காளரும் மிக கவனமாக இருக்க வேண்டும்: புதுக்கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
10 Nov 2025புதுக்கோட்டை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்.
-
வெள்ளை மாளிகையில் கண்களை மூடியபடி அமர்ந்திருந்த ட்ரம்ப்...! இணையத்தில் வைரலாகும் காட்சிகள்
10 Nov 2025வாஷிங்டன், வெள்ளை மாளிகையில் கண்களை மூடிய படி அதிபர் ட்ரம்ப் அமர்ந்திருந்தார்.
-
நா.த.கட்சி சார்பில் தண்ணீர் மாநாடு: சீமான் அறிவிப்பு
10 Nov 2025சென்னை, நாம் தமிழர் கட்சி சார்பில் வருகிற 15-ம் தேதி தண்ணீர் மாநாடு நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார்.
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 தமிழ்நாடு மீனவர்கள் கைது
10 Nov 2025சீர்காழி, எல்லை தாண்டி மீன்பிடித்த 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியிம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எத்தனை முனை போட்டி வந்தாலும் கவலை இல்லை: தமிழகத்தில் 7-வது முறை தி.மு.க. ஆட்சி அமைக்கும் : புதுக்கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
10 Nov 2025புதுக்கோட்டை, எத்தனை முனை போட்டி வந்தாலும் 2026 தேர்தலில் வென்று தமிழகத்தில் 7-வது முறையாக தி.மு.க.
-
மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் மூத்த குடிமக்களுக்கான 25 அன்புச்சோலை மையங்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்
10 Nov 2025சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் மூத்த குடிமக்களுக்கான 25 அன்புச்சோலை மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.


