அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவை தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன. இது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா? ஆச்சரியம் உண்டு! அப்பறவை, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைகளோ கிடையாது! கடலின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுக்கும்? அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன. ஒரு சிறிய பறவைக்கு 16,600 கி.மீ., பறப்பதற்கு ஒரு சிறுகுச்சி ஆதாரமாக இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே..
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
மருதாணி, அருகம்புல், பூவரசு ஆகியவற்றை கொண்டு தோலில் ஏற்படும் பிரச்னைகளை சர் செய்யலாம். மருதாணியின் துளிர் இலைகள் ஒருகைப்பிடி அளவுக்கு எடுத்து, 2 பல் பூண்டு, 6 மிளகு ஆகியவற்றை லேசாக தட்டிபோட்டு, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி 50 மில்லி அளவுக்கு குடித்துவர தோலில் ஏற்படும் அரிப்பு, தொற்று, சிறுகொப்புளங்கள், படர்தாமரை போன்றவை விலகும்.
ஆண்டு தோறும் தோல் மற்றும் இறைச்சிக்காக ஏராளமான வன விலங்குகள் கொல்லப்ட்டு வருகின்றன. இவற்றை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் புதிய சாதனையாக இரண்டு இளைஞர்கள் கற்றாழையிலிருந்து ‘தோல்’ ஆடை உருவாக்கி சாதனை படைத்து உள்ளனர்.விலங்குகளின் தோல்களில் இருந்து தயாரிப்படும் பல்வேறு வகையான ஆடம்பர பொருட்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, சட்டவிரோதமாக விலங்குகள் வேட்டையாடப்படும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் , அட்ரியானோ டி மார்டி என்ற நிறுவனம், டெசர்டோ எனப்படும் கற்றாழை இலைகளைப் பயன்படுத்தி தோலைப் போன்றே துணியை உருவாக்க ஒரு புதிய நுட்பத்தை வகுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான அட்ரியன் லோபஸ் வெலார்டே மற்றும் மார்ட்டே செசரெஸ் ஆகிய இளைஞர்கள் இதை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாம் மணக்க மணக்க போட்டு குளிக்கும் சோப் எப்போ வந்துச்சு தெரியுமா...நம் தாத்தா, பாட்டன் காலத்தில் இருந்ததா...ஒரு 100 அல்லது 200 ஆண்டுகள் இருக்குமா.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். சோப் கண்டுபிடித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும்.. இதை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் பாபிலோனியர்கள் எனப்படும் தற்போதைய ஈராக்கியர்கள்தான் என்றால் ஆச்சரியம் தானே... பாபிலோனியாவின் கடைசி அரசன் நபோனிதஸ் ஆட்சிக் (கிமு 556-530) காலத்தில் அவனது உத்தரவின் பேரில் அரண்மனை ரசவாதிகள் சாம்பல், விலங்குகளின் கொழுப்பு, எண்ணெய், மெழுகு, உப்பு இவற்றைக் கொண்டு சவர்க்காரம் எனப்படும் சோப்பை தயாரித்தனர். முதலில் தரையையும், பின்னர் ஆடைகள், பாத்திரங்களையும் இறுதியில் குளிப்பதற்கும் பயன்பட்டன. இது வணிகர்கள் கண்ணில் படவே நைசாக சிரியா, ரோம், எகிப்து என மொரோக்கோ வரை பயணித்து சோப் பரவலானது. அது சரி.. அதற்கு சோப் என யார் பெயர் வைத்தார்.. கிபி 79 இல் ரோமானிய எழுத்தாளர் பிளினி தி எல்டர் என்பவர் சோப்பை குறிப்பிடும் மூலச் சொல்லான sapo என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தவறுதலாக soap என குறிப்பிட்டு விட்டார். அதுவே இன்று வரை சோப்பாக நிலைத்து விட்டது.. என்ன ஓகேவா..
நீரிலும், வானிலும் செல்லக் கூடிய வகையில் உலகின் மிகப் பெரிய விமானத்தை சீனா தயாரித்து வருகின்றது. இந்த விமானம் வானில் பறந்துகொண்டிருக்கும் போதே நிலத்திலும், நீரின் மேற்பரப்பிலும் இறங்கும் வகையில் இவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.AG600 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 37 மீட்டர் மொத்த நீளமும், 38.8 மீட்டர் நீளமுள்ள இறக்கையையும் கொண்டது. 53.5 டன் சுமைகளை எடுத்துக்கொண்டு புறப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ்விமானம், 20 டன் நீரையும் சுமந்து செல்லும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் 4500 கி.மீ பறக்கும் வல்லமை கொண்ட இந்த விமானம் வானில் பறக்கும் போது 53 டன் சுமையை தாங்கக் கூடிய சக்தி கொண்டது.
இந்தியாவில் மக்கள் விலங்குகளை கடவுளாக வணங்கும் பழக்கம் தொடர்கிறது. மக்கள் வணங்க நினைக்கும் முதல் இனங்கள் எலிகள் அல்ல என்றாலும், ராஜஸ்தானில் எலிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் உள்ளது. அதாவது ராஜஸ்தானில் உள்ள கர்ணி மாதா கோவில் எலி கோவில் என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் கிட்டத்தட்ட 20,000 எலிகள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த கோயிலில் எலிகளை பராமரிக்க வசதியாக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஆங்காங்கே சுவர்கள், பல இடங்களில் பெரிய ஓட்டை போடப்பட்டுள்ளன. மேலும் எலிகள் உண்பதற்கான உணவு மற்றும் பால் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் எலி குடித்த பால் தான் இங்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள எலிகள் நம்மீது ஏறினால் அதிர்ஷ்டம் என நம்பப்படுகிறது. அதே போல் வெள்ளை எலியை பார்த்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள எலிகள் கடவுளின் அம்சமாக பார்க்கப்படுவதால் யாரேனும் எலியை கொன்றுவிட்டால் அதற்கு பதிலாக தங்கத்தினால் ஆன எலியை கோயிலுக்கு வழங்குகின்றனர். இந்த பழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
மீண்டும் தங்கம் விலை உச்சம்
11 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனை ஆனது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக மனு தாக்கல்: அ.தி.மு.க.வுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
11 Nov 2025புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அ.தி.மு.க.
-
போதைப்பொருள் வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானார் நடிகர் ஸ்ரீகாந்த்
11 Nov 2025சென்னை : போதை பொருட்களை பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் நுங்கம்பாக்கம் லேக் வியூ பகுதியை சேர்ந்த நடிகர் ஸ்ரீகாந்தை கடந்த ஜூன் 23-ந்தேதி சென்னை போதை பொருள் நுண்ணறிவு பி
-
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
11 Nov 2025சென்னை : திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை
-
இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ பதவியேற்றார்
11 Nov 2025நியூயார்க் : இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமனான செர்ஜியோ கோர் பதவியேற்பு விழா அதிபர் டிரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
-
ராஜபாளையம் அருகே கோவிலில் இரட்டைக்கொலை: இ.பி.எஸ். கண்டனம்
11 Nov 2025சென்னை : ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சென்னை பெண் கவுன்சிலர் அலுவலகம் மீது நா
-
நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
11 Nov 2025சென்னை : நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாகிஸ்தானில் துணிகரம்: கோர்ட் வெளியே குண்டு வெடித்ததில் 12 பேர் பலி
11 Nov 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நீதிமன்றம் வெளியே நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் பலியானார்கள்.
-
2 நாள் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
11 Nov 2025திம்பு : 2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-11-2025.
11 Nov 2025 -
பீகார் மாநில சட்டசபை தேர்தல் முடிவு: கருத்துக்கணிப்பு விவரம் வெளியீடு
11 Nov 2025புதுடெல்லி : பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் அல்லது கூட்டணி யார்? என்ற கருத்துக்கணிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
-
13 முறை எஸ்.ஐ.ஆர் நடந்துள்ளது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
11 Nov 2025கோவை : தமிழ்நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக போராட்டம் நடத்தியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
வெள்ளகுதிர இசை வெளியீட்டு விழா
11 Nov 2025வெள்ளகுதிர படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் கே.
-
டெல்லி கார் வெடிப்பில் தொடர்பு: யார் இந்த மருத்துவர் உமர் முகமது?
11 Nov 2025டெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராகக் கருதப்படும் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் நடக்கும் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தக்கூடாது: சுப்ரீம் கோர்ட்
11 Nov 2025புது டெல்லி : தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பதோடு, சிறப்பு தீவ
-
டெல்லி கார் வெடிப்பு: பலி 12 ஆக அதிகரிப்பு
11 Nov 2025டெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது
-
அதர்ஸ் திரைவிமர்சனம்
11 Nov 2025படத்தின் தொடக்கத்தி்ல் ஒரு வேன் விபத்துக்குள்ளாகி பின்னர் வெடித்து சிதறுகிறது.
-
தி.மு.க. வரலாற்றை ஆவணப்படுத்தும் பணி தொடரும்: துணை முதல்வர்
11 Nov 2025சென்னை : தி.மு.க. வரலாற்றை ஆவணப்படுத்தும் நம் பணி தொடரும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி குண்டு வெடிப்பு: பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில் நலம் விசாரித்தார் முதல்வர் ரேகா
11 Nov 2025புதுடெல்லி : டெல்லி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கும் என்று காயமடைந்து சிகிச்சை பெற்று
-
டெஸ்ட் தொடர் எளிதாக இருக்காது: தென்னாப்பிரிக்க அணிக்கு சவுரவ் கங்குலி எச்சரிக்கை
11 Nov 2025மும்பை : இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்கு
-
புரட்டிப்போட்ட புங்-வாங் புயல்: பிலிப்பின்ஸ், தைவானில் மக்கள் வெளியேற்றம்
11 Nov 2025மணிலா : புங்-வாங் புயலால் பிலிப்பின்ஸ் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: என்.ஐ.ஏ. விசாரணை தொடக்கம்
11 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ. விசாரணையை தொடங்கியுள்ளது.
-
ஈக்வடார் சிறைச்சாலையில் கலவரம்: 31 பேர் உயிரிழப்பு
11 Nov 2025மச்சாலா : ஈக்வடார் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.
-
வாரணவாசி அருகே விபத்தில் சிக்கிய லாரி: பயங்கரமாக வெடித்து சிதறிய சிலிண்டர்கள்
11 Nov 2025அரியலூர் : அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியதால் பலத்த சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு
-
கரூர் நெரிசல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜரான ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள்
11 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக மாவட்ட சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. விசாரணைக்கு த.வெ.க.


