முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆண்களுக்கு அதிகம்

அதிக உடல் எடை காரணமாக திடீரென மரணம் ஏற்படும் வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கு 3 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலின் எடை சராசரியாக இருக்கும் வரையில் எந்த பிரச்னையும் எழுவதில்லை. ஆனால் அதையும் தாண்டி உடல் எடை, அதிகரிக்க, அதிகரிக்க பக்க விளைவுகளும் அதிகரிக்கும். உலகம் முழுவதும் 40 மக்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில் அதிக உடல் பருமான மக்கள் சாதாரண எடையில் உள்ளவர்களைவிட மூன்று வருடங்கள் முன்னதாகாவே உயிரிழ்ந்து விடுவதாக கூறப்பட்டுள்ளது.இதேபோல், வயது முதிர்ச்சிக்கு முன்பே அகால மரணம் ஏற்பட அதிக உடல் எடை காரணமாக அமைகிறது என்றும், இந்த ஆபத்து பெண்களைவிட ஆண்களுக்கு மூன்று மடங்கு அதிகம் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிகப்படியான எடையுள்ள மக்கள் தங்கள் ஆயுட் காலத்தில் 10 வருடங்களை இழப்பதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

எரியும் பனிக்கட்டி

உலகில் முதன் முறையாக மீத்தேன் ஹைட்ரேட் எனும் எரிபொருளை சீன பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வருடமே, எரியக்கூடிய பனிக்கட்டி என அழைக்கப்படும் மீத்தேன் ஹைட்ரேட் வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்திருந்தது. எனினும் தற்போது தான் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த வாயுவானது பனிக்கட்டி போன்று தோற்றத்தினை கொண்டிருப்பதனாலேயே எரியும் பனிக்கட்டி என அழைக்கப்படுகின்றது. இயற்கை எரிபொருளாகக் காணப்படும் இவ்வாயு எவ்வாறு தோற்றம் பெறுகின்றது என்பது தொடர்பான விளக்கப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாயுவைக் கண்டறிய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் தென்கொரிய நாடுகளும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்த நிலையில்,  சீனா இதில் வெற்றிபெற்றுள்ளது.

குளோனிங் மூலம் புதிய உயிரை உருவாக்கியவர்

இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஜான் குர்டான். இவர் தான் முதன் முதலில் குளோனிங் மூலம் புதிதாக ஒரு உயிரை உருவாக்கியவர். விலங்கியல் துறை ஆராய்ச்சியாளரான இவர் 1962ம் ஆண்டில் Xenopus என்ற தவளையின் ஸ்டெம் செல்லில் இருந்து புதிதாக ஒரு தவளையை உருவாக்கினார். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே பின்னர் டாலி என்ற ஆட்டுக் குட்டி ஸ்டெம் செல் மூலம் உருவாக்கப்பட்டது. குளோனிங் மூலம் உயிர்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய இவர் தான், உடலில் உள்ள எல்லா செல்களிலும் உள்ள ஜீன்களும் ஒரே மாதிரியானவை என்று நிரூபித்தார். எந்தவொரு செல்லை கொண்டு அந்த உயிரினத்தை குளோனிங் முறையில் திரும்ப உருவாக்கி விடலாம் என்ற அவரது ஆராய்ச்சியை கண்டு உலகமே திகைத்து நின்றது.  இதற்காக இவருக்கும் ஷின்யா யமனகாவுக்கும் சேர்த்து நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மென்பொருள்

தேவையற்ற வீடியோவைத் தடுக்க புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரே மேட்டிக்ஸ் என்ற நிறுவனம் பேஸ்புக்கில் பதிவிடப்படும் மனதை பாதிக்கும் வகையில் உள்ள வீடியோக்களை தடுக்க செயற்கை நுண்ணறிவின் மூலம் பணியாற்றும் மென்பொருளை கண்டுபிடித்துள்ளது. இது தேவையற்ற வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிடமுடியாத வகையில் 95 சதவீதம் கட்டுப்படுத்துகிறது.

வைரத்தை முதன் முதலாக வெட்டி எடுத்து உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு

 இன்றைக்கு உலகிலயே அதிக விலையுள்ள ஆபரணம் எது என்று கேட்டால் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு சொல்வார்கள்.. அது வைரம்தான். அது சரி இந்த வைரம் எங்கிருந்து எப்போது முதன் முதலாக வெட்டி எடுக்கப்பட்டது தெரியுமா.. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தான் வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. தொடக்கத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள குண்டூர் டெல்டா பகுதிகளில்தான் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு வெட்டி எடுக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் பிரேசிலில் வைரம் இருப்பது கண்டுபிடிக்கப்படும் வரை உலகின் வைர சந்தையில் இந்தியாதான் நம்பர் ஒன். இந்தியாவிலிருந்து அந்நிய படையெடுப்புகளால் கொள்ளை போன் முக்கிய தொல் பொருள்களில் விலையுயர்ந்த வைரங்களும் அடக்கம். இது மிகவும் ஆச்சரியமான ஒன்று தானே

இந்த பல்லி புதுசு

பெருவில் புதிய பல்லி இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக அதன் தேசிய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய பல்லி இனம் லியோலேமஸ் வார்ஜண்டே(Liolaemus warjantay) என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இது அந்நாட்டு மலையான பெருவியன் ஆண்டிஸில் 4,500 மீட்டர் அதாவது 14,700 அடி உயரத்தில் வாழ்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பெருவின் அரேக்விபாவில் உள்ள கோட்டாஹுவாசி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை பல்லியான லியோலெமஸ் வர்ஜண்டே, லியோலெமஸ் இனத்தைச் சேர்ந்தவை. இதில் 280 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனப் பிரிவுகள் உள்ளன. இப்பல்லி கண்டுபிடிக்கப்பட்ட பகுதி 4, 90,550 ஹெக்டேர் பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை கொண்டதாகும்.. பல்லிக்கு பின்னால் இத்தனை பெரிய விஷயமா... அடேங்கப்பா..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago