முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் 'மாதிரி'

சுமார் 49 ஆயிரம் சதுர அடியில் உலகின் மிகப் பெரிய மினியேச்சர் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மினியேச்சரில் ஆசியா உள்ளிட்ட 5 கண்டங்களின் முக்கிய கட்டடங்கள், சுற்றுலாத் தளங்கள் இடம்பெற்றுள்ளன. குலிவேர்ஸ் கேட் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மினியேச்சரில் லண்டனின் பக்கிங்காம் அரண்மனை, பிரான்சின் ஈஃபில் டவர், இந்தியாவின் தாஜ் மஹால், சிங்கப்பூரின் மெரினா பே உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், சுற்றுலாத் தலங்களின் மாதிரிகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. சுமார் 600 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதை உருவாக்கியுள்ளனர். மினியேச்சரை உருவாக்க சுமார் 260 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வரவுள்ளது.

தொட்டால் சாவு : உலகின் கொடிய நச்சு மரம் - மன்சிநீல்

இயற்கை எப்போதும் விந்தைகளால் ஆனது. அதன் புதிர்கள் முடிவற்றதும் கூட. புளோரிடா மற்றும் கரீபியன் கடல் பிரதேசங்களில் காணப்படும் ஒரு வகை ஆப்பிள் மரம் தான் உலகிலேயே மிகக் கொடிய நச்சு மரம் என அறியப்படுகிறது. இம் மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் ஆபத்தானது.மன்சிநீல் என்ற இந்த மரத்துக்கு பீச் ஆப்பிள் என்ற பெயரும் உள்ளது. இதன் ஏதேனும் ஒரு பகுதி நம் உடலில் பட்டால் அரிப்பு, சொறி, வீக்கம் ஏற்படும். கண்ணில் பட்டால் அவ்வளவுதான் கண் அவுட். பார்க்க கவர்ச்சியாக இருக்கும் இதன் அழகிய பழத்தை சாப்பிட்டால், சாப்பிட்டவுடனேயே நேரடியாக மேல் உலக  பயணம்தான்.அழகுக்கு பின்தான் ஆபத்து என்பது போல பார்க்க அழகாக காட்சியளிக்கும் இந்த மரம் சுமார் 50 அடி வரை கூட வளரக் கூடியது. இதை பற்றி கொலம்பஸ் கூட தனது குறிப்புகளில் சாவின் சிறிய ஆப்பிள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

திருமணம் செய்தால் ரூ.1.67 லட்சம் பரிசு தொகை : வித்தியாசமாக அறிவித்த நகர் எது தெரியுமா?

இத்தாலி நாட்டிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அந்நகரத்தின் மேயர் முடிவு செய்தார்  இதனை அடுத்து லாஸியோ நகரத்தின் மேயர் நிகோலா ஜிங்காரெட்டி என்பவர் இத்தாலியிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்துகொண்டு திருமணத்திற்கான ஆதாரத்தை காட்டினால் ரூபாய் 1.67 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பரிசை பெறுவதற்காகவே பலர் திருமணம் செய்ய முன்வந்துள்ளனர் கூறப்படுகிறது. இதே நகரத்தில் தான் பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மன் சர்க்கஸ் கம்பெனியில் நிஜ விலங்குகளுக்கு பதிலாக ஹோலோகிராம் உருவங்கள்

தற்காலத்தில் உலகம் முழுவதும் மிருகவதைக்கு எதிரான விழிப்புணர்வும், கோஷங்களும் பெருகி வருகின்றன. அதிலும் குறிப்பாக சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் மிருகங்களை அடித்து வதைத்து பழக்கி அவற்றை சாகசம் செய்வதற்கு பல்வேறு நாடுகளிலும் கடுமையான தடை சட்டங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நவீன யுகம் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று வழியை கண்டுபிடித்து தந்து விடுகிறது. தற்போது புதிய தொழில் நுட்பமான ஹோலோகிராம் தொழில் நுட்பம் இதற்கும் கை கொடுக்கிறது. அசலான மிருகங்களுக்கு பதிலாக ஹோலோ கிராம் உருவங்களை அசலான மிருகங்களை போலவே உருவாக்கிர அவற்றை சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்ய ஜெர்மனி சர்க்கஸ் நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது. அங்கு 2018 முதல் விலங்குகளை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ஹோலோகிராம் 3டியில் குதிரை, மீன்கள், யானை உருவங்களை அசல் விலங்குகளுக்கு பதிலாக பயன்படுத்தி கூட்டத்தை ஈர்த்து வருகிறது.

உலகை முதன்முதலாக கப்பலில் சுற்றி வந்த பயணி

பெர்டினல் மெக்கலன் என்ற ஸ்பெயின் நாட்டு மாலுமி 1519 இல் 5 கப்பல்களுடன் இந்தியாவை தேடி புறப்பட்டார். அவர் தென் அமெரிக்கா வந்து அங்கிருந்து மேற்கொண்டு செல்லும் வழியை தேடினார். அவர் வந்த கடற்பாதைதான் மெக்கல்லன் நீரிணை என்று அறியப்படுகிறது. பசிபிக் பெருங்கடல் வழியாக 99 நாட்கள் பயணம் செய்து குவாம் என்ற தீவை அடைந்தார். பின்னர் அங்கிருந்து பிலிப்பைன்ஸ் வந்தனர். அங்கு ஏற்பட்ட உள்நாட்டுகாரர்களுடனான சண்டையில் மெக்கல்லன் கொல்லப்பட்டார். மிஞ்சியவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். 1522 ஆம் ஆண்டு 3 வருட  பயணத்துக்கு பிறகு அவர்கள் மீண்டும் ஸ்பெயின் வந்தடைந்தனர். இந்த பயணம்தான் உலகை சுற்றி வந்த முதல் கப்பல் பயணம் என அறியப்படுகிறது. 

ஒருவர் மட்டும் வாக்களிப்பதற்காக வாக்கு சாவடி எங்கு அமைக்கப்பட்டது

குஜராத் மாநிலம் கிர் காட்டில் வசித்து வருபவர் மகந்த பரத்தாஸ் தர்சன்தாஸ். இவர் ஒட்டு போட்டதாலேயே நாடு முழுவதும் கவனம் பெற்றார். அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.. கிர் காட்டில் இவர் வசிக்கும் பகுதியில் இவர் மட்டுமே தனித்து வசித்து வருகிறார். இவர் வாக்களிப்பதற்காக கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் வசிக்கும் பகுதியில் ஒரே ஒரு ஓட்டுக்காக மட்டும் வாக்கு சாவடி அமைக்கப்பட்டது. அதன் மூலம் இவர் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். தற்போது 2019 வரை இவர் ஒருவருக்காக மட்டுமே ஆளரவமற்ற கிர் வனப்பகுதியில் வாக்கு சாவடி மையம் அமைக்கப்படடது என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago