முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரகசியமாக சமூக சேவை ஆற்றி வந்த 9 நானாக்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

9 நானாக்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா.. இவர்கள் 30 ஆண்டுகளாக ரகசியமாக சமூக சேவையில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் இவ்வாறு சமூக சேவையில் ஈடுபடும் விஷயம் அவர்களது கணவன்மார்களுக்கு கூட தெரியாது. அவர்கள் அனைவரும் அதிகாலை 4 மணிக்கு ரகசியமாக சந்தித்து கொள்வர். தங்களை யார் என்று காட்டிக் கொள்ளாமலேயே ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடை போன்ற தங்களால் ஆன சேவைகளை செய்து வந்தனர். இவை அனைத்தையும் தங்களது வீடுகளிலேயே தயாரித்து கொண்டு வந்தும் கொடுத்தனர். அவர்கள் அளிக்கும் அந்த பைகளில் உங்களை சிலர் நேசிக்கின்றனர் என எழுதப்பட்டிருக்கும் என்றால் ஆச்சரியம் தானே..

வேகம் அதிவேகம்

உலகின் அதிவேக போர் விமானங்களில் முதல் இடத்தில் நார்த் அமெரிக்கன் எக்ஸ்-15. உலகின் அதிவேக போர் விமான மாடல் இதுதான். அதிகபட்ச வேகம் - மேக் 6.72 . இரண்டு ராக்கெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்ட போர் விமான மாடல். 2-வது இடத்தில் லாக்ஹீட் எஸ்ஆர்71 பிளாக்பேர்டு. அதிகபட்ச வேகம் - மேக் 3.0+ இதுவும் லாக்ஹீட் ஏ12 உளவு விமானத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. மொத்தமே 32 பிளாக்பேர்டு விமானங்களை தயாரிக்கப்பட்டன. 3-வது இடத்தில் லாக்ஹீட் ஒய்எஃப்-12. அதிகபட்ச வேகம் - மேக் 3.0. எதிரி விமானங்களை இடைமறித்துதாக்கும் தாக்கும் ரகத்தை சேர்ந்தது. அமெரிக்க விமானப்படையில் பயன்பாட்டில் உள்ளது. 74,000 அடி உயரத்தில் மேக் 3.2 வேகத்தில் பறக்கும்.மொத்தமே மூன்று விமானங்கள்தான் தயாரிக்கப்பட்டன.

முதல் உலகப் போரில் பஞ்சாபிய வீரர்கள்

 இந்த உலகம் நேரடியாக 2 உலகப் போர்களை கண்டுள்ளது. இனி நேரடியான உலகப் போர்கள் சாத்தியமில்லை என்ற கட்டத்துக்கு வரலாறு முட்டு சந்தில் வந்து நிற்கிறது. அதை மீறி நடந்தால், இந்த பூமி ஒரு பிடி சாம்பலாக மாறி பிரபஞ்சவெளியில் காணாமல் போய்விடும். ஆனாலும் உலக நாடுகள் ஒன்றையொன்று இன்னும் பிறாண்டிக் கொண்டுதான் இருக்கின்றன. அது கிடக்கட்டும்.. முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போதைய டிஜிட்டல் உலகில் பல வெளியில் தெரியாத ரகசியங்கள் படிப்படியாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் தி கார்டியன் வெளியிட்ட செய்தியில் முதலாம் உலகப் போர் தொடர்பான ஆவணங்ள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டதில் பிரிட்டனுக்காக 3.5 லட்சம் பஞ்சாபிய வீரர்கள் பங்கேற்றது தெரியவந்துள்ளது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் விரிந்து கிடக்கும் சீக்கிய பிராந்தியங்களிலிருந்து சிறிய குக்கிராமத்திலிருந்து கூட தன்னார்வலர்களாக 3.5 லட்சம் பஞ்சாபிய வீரர்கள் பங்கேற்றதாக தெரிகிறது.  ஆனால் இந்த எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என போர் வரலாற்றாய்வாளர்கள் கணிக்கின்றனர். இது இன்னும் விரிவான ஆய்வுக்கும், ஆவணப்படுத்தலுக்குமான செய்தியாகும். இது மிகவும் ஆச்சரியம் தானே..

ஆதம் பாலம்

1.7 மில்லியன் ஆண்டு பழமையான ராமர் பாலம் மனிதன் நீண்டகாலமாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆதம் பாலம் என்று அழைக்கப்படும் இது, இந்தியாவில் இருந்து இலங்கை வரை நீண்டு உள்ளது.  இது, இந்து தெய்வம் ராமரால் கட்டபட்டது. இந்த பாலம் 10 லட்சம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.

குடியமர்த்தப்பட்ட தமிழர்கள்

கடந்த 1860-ம் ஆண்டு கால கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிக அளவில் குடியமர்த்தப்பட்டனர். அந்நாட்டில் விளையும் கரும்பு, பருத்தி போன்ற வேளாண் பணிகளுக்காக தமிழகர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டனர். உலக நாடுகளில் வெளிநாட்டு மக்களை முதலில் குடியமர்த்திய முதல் நாடு தென் ஆப்பிரிக்காதான். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மாநிலத்தவர்கள் குடியமர்த்தப்பட்ட போது இந்தியா ஒப்பீனியன் என்ற பத்திரிகை வெளியிடப்பட்டது. அந்த பத்திரிகை தமிழில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்று வழி

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக் கூடிய கார்கள், 2030-இல் பயன்பாட்டில் இல்லாத நிலை உருவாகும். 2030-இல் எரிசக்திப் பற்றாக்குறையாலும் சுற்றுச்சூழல் கருதியும், பெட்ரோல் புழக்கமே அரிதாகிவிடுமாம். 2024-ல் ஒரு பேரல் பெட்ரோல் வெறும் 25 அமெரிக்க டாலராகக் குறையும் என்றும், 2030-க்குள் உலகில் எண்ணெய் தொழில் முடங்கிப் போகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்