முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

27 முறை மாரடைப்பு

கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்ட இங்கிலாந்தின் வெட்னஸ்பெரி பகுதியை சேர்ந்த 54 வயதான ராய்வுட்கால்  என்பவர் போட்டி ஒன்றில் விளையாடிய போது முதன் முறையாக இவருக்கு மார்பில் வலி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் இரு முறை மாரடைப்பு ஏற்பட்டது. இதனிடையே இவருக்கு கரோனரி ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் தயாரானபோது குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர். பலமுறை இருதயம் நின்று துடித்துள்ளதால் ஆக்சிஜன் அளவு குறைந்திருக்கும், இதனால் இவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக குறைவு என அவர் அஞ்சியுள்ளனர். அடுத்த நாள் மதியம் ஒரு மணி அளவில் இவருக்கு 27-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவரை மருத்துவமனையில் சேர்த்து 24 மணி நேர இடைவெளியில் இது ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

பாலூட்டிகளை போல அல்லாமல், பெரும்பாலான பறவைகளுக்கு சிறுநீர் பைகள் கிடையாது. கழிவுகளை வெளியேற்ற சிறுநீரை வெளியேற்றுவதை காட்டிலும் குழம்பு வடிவிலான எச்சத்தை அவை கழிவாக வெளியேற்றி விடுகின்றன. அதே நேரத்தில் தீக்கோழிகள் மற்ற பறவைகளிடமிருந்து சற்றே மாறுபடுகின்றன. அவைகளுக்கும் சிறு நீர் பைகள் இல்லை என்ற போதிலும், பாலூட்டி விலங்கினங்களைப் போலவே தீக்கோழியும் சிறுநீரையும், எச்சத்தையும் முற்றிலும் தனித்தனியாக பிரித்து வெளியேற்றுகின்றன என்பது ஆச்சரியம் தானே..

பேச தாமதமாகும்...

நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் செல்போன் மற்றும் டேப்லெட்களில் விளையாடி பொழுதை கழிக்கு குழந்தைகள் பேசி பழகுவதில் காலதாமதமாகுவதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். 6 மாதம் முதல் 2 வயது வரையிலான 894 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. எனவே குழந்தைகளிடம் இருந்து அதை தவிர்க்க வேண்டும்.

இன்றைய நவீன ஆடையான டி சர்ட் எப்போது தோன்றியது தெரியுமா?

இன்றைக்கு நவீன பேஷனில் ஒன்று கலந்து விட்ட டி சர்ட் தொடக்கம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் 19 ஆம் நூற்றாண்டுக்கு செல்ல வேண்டும். 1898 மற்றும் 1913 ஆகிய நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற மெக்சிகோ அமெரிக்க போரின் போதுதான் டி சர்ட் அணியும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு 1913 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை தங்களது வீரர்களுக்கு டி சர்ட்களை விநியோகித்தது. ஆனால் 1920 களில்தான் அதன் பெயர் டி சர்ட் என்ற பெயரை பெற்றது.  F. Scott Fitzgerald என்ற நாவலாசிரியர்தான் முதன் முதலில் தனது நாவலில் அதற்கு டி சர்ட் என்ற பெயர் வைத்தார். பின்னர் அதுவே நிலைத்தது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் 2 பில்லியன் டி சர்ட்கள் விற்பனையாகின்றன என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

காந்தியின் அஸ்தி அமெரிக்காவில் பாதுகாக்கப்படுகிறதா? - தொடரும் சர்ச்சை

அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட்டில் இருந்து சில நிமிடங்களில் அடைகிற தொலைவில் இருக்கும் புகழ்பெற்ற சன்செட் பொலிவார்டில் உள்ள ஏரி ஆலயத்தில் அமைந்திருக்கிறது காந்தி உலக அமைதி நினைவகம். இந்த ஆலயத்தின் நிறுவனர் பரமஹம்ச யோகானந்தா. இது 1950ல் கட்டப்பட்டது. இந்த இடத்தில் சீனாவில் இருந்து வந்த பழமையான கல் பெட்டியில் ஒரு வெள்ளிப் பேழையும், ஒரு வெண்கலப் பேழையும் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேழைகளில்தான் காந்தியின் அஸ்தி இருப்பதாக கூறப்படுகிறது. 1948ல் காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு, அவரது அஸ்தி 20 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இந்தியாவின் பல பாகங்களுக்கு மக்கள் நினைவுக்கூட்டங்கள் நடத்துவதற்காக அனுப்பிவைக்கப்பட்டன. இவற்றில் சில பாகங்கள் எப்படியோ வெளிநாடு கொண்டுசெல்லப்பட்டுவிட்டது. தற்போது அதை இந்தியாவுக்கு கொண்டு வந்து நதி தீரத்தில் கரைக்க வேண்டும் என காந்தியின் பேரனான துஷார் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர். இது எவ்வாறு அமெரிக்காவுக்கு சென்றது என்பது மர்மமாக உள்ளது என காந்தி குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கரடிகளை காப்பாற்றிய நாய்க்கு சர்வதேச விருது

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயிலிருந்து 100 கோலா கரடிகளை மீட்க உதவிய துணிச்சலான நாய்க்கு சர்வதேச விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் காட்டுத் தீ பரவியது. இதில் ஏராளமான மரங்கள், செடிகள், கொடிகள் கருகியதுடன், பறவைகள், விலங்குகளும் பாதிக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்ட அரிய வகை விலங்கான கோலா கரடிகளை மீட்கும் பணியில் சிறப்பு குழுவினர் ஈடுபட்டனர். இதில் மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்களுடன் இணைந்து  பயிற்சி பெற்ற நாய் ஒன்றும் அவர்களுக்கு இணையாக தீரமாக போராடி உதவியது. பீர் (Bear) எனப் பெயரிடப்பட்டுள்ள ஆஸ்திரேலியன் கூலி இன நாய்தான் இந்த வீர சாகசத்துக்கு சொந்தக்காரி.  இதற்காக ஆஸ்திரேலியாவின் Sunshine Coast பகுதியில் அமைந்திருக்கும் University of the Sunshine Coast பல்கலை கழகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது இந்த வீர தீர சாகசத்தை புரிந்த பீருக்கு International Fund for Animal Welfare என்ற சர்வதேச விலங்குகள் தன்னார்வ அமைப்புதான் விருது வழங்கி கவுரவித்துள்ளது. உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் இந்த நாய் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago