முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முகத்தை பராமரிக்க

ஒரு நாளைக்கு 2 முறை மட்டும் முகத்திற்கு சோப்பு போட்டு குளித்தால் நல்லது. இல்லையெனில், தோலில் வறட்சி ஏற்படும். மேலும், சூடாகவோஅல்லது அதிக குளிரான நீரைக்கொண்டு முகத்தை கழுவுவதால் முகப்பொலிவு ஏற்படாது. முகம் கழுவுவதற்கு முன்னால் நம் கைகளும், முகத்தை துடைக்க பயன்படுத்தும் துண்டையும் சுத்தமானதாக வைத்துக்கொள்ள வேண்டும்.

37 ஆயிரம் இலவச அறுவை சிகிச்சை செய்து அசத்திய டாக்டர்

37 ஆயிரம் இலவச அறுவை சிகிச்சை செய்து அசத்திய டாக்டர் யார் தெரியுமா..அவர் எங்கிருக்கிறார் தெரியுமா.. அவர் இந்தியாவில் தான் இருக்கிறார். இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புனித நகரான வாரணாசியைச் சேர்ந்தவர்தான் டாக்டர் சுபோத் குமார் சிங். இவர் அப்படி என்ன சாதித்து விட்டார். இவரது தந்தை ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். எதிர்பாராத விதமாக அவருக்கு வேலை போகவே சுபோத்தும் அவரது சகோதரர்களும் மெழுகுவர்த்தி, சோப் உள்ளிட்டவற்றை தயார் செய்து கடை கடையாக சென்று விற்று குடும்பத்தை காப்பாற்றினர். இந்த கடினமான சூழலுக்கு மத்தியில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். சுபோத். அது மட்டுமல்ல அவர் தனது தொழிலை தன்னுடைய மற்றும் தனது குடும்பத்தின் வளர்ச்சிக்கு மட்டும் உதவாமல், சமூகத்துக்கும் உதவும் வகையில் அமைத்துக் கொண்டார். இதன் மூலம் மேல் அன்ன பிளவு என்ற கோளாறால் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் அது போன்ற 37 ஆயிரம் அறுவை சிகிச்சைகளை செய்து ஏழை குழந்தைகளுக்கு வாழ்வளித்துள்ளார். தற்போது சுற்று வட்டாரம் மட்டுமின்றி நாடு முழுவதும் அசல் ஹீரோவாக டாக்டர் சுபோத் குமார் சிங் பாராட்டப்படுகிறார். அவருக்கு பாராட்டுகள குவிந்து வருகின்றன.

இளநீரின் நன்மை

ஒரு டம்ளர் இளநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, செல்களை ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து, விரைவில் முதுமை தோற்றம் வருவதைத் தடுக்கும்.

விவசாயம் செய்யும் எறும்புகள்

உலகில் மனிதனுக்கு பிறகு தனக்கு தேவையான உணவை தானே விவசாயம் செய்யும் உயிரினம் எது தெரியுமா..அது எறும்புதான்..இந்த எறும்புகள் இலைகளை சின்ன சின்னதாக கத்தரித்து எடுத்து வந்து தனது கூட்டுக்குள் வைத்துவிடும். சில நாட்கள் கழித்து அந்த இலைகளில் ஒருவைகையான பூஞ்சைகள் வளரும். அவற்றை எறும்புகள் உணவாக உண்ணும். இது தான் எறும்புகள் செய்யும் விவசாயம். அந்த இலைகள் காய்ந்த பின் அவற்றை வேலைக்கார எறும்புகள் வெளியே எடுத்து போட்டுவிடும். பிறகு புதிதாக இலைகளை வெட்டி வந்து வைக்கும். அதில் வளரும் பூஞ்சைகளை தான் உண்ணும். இப்படி தனக்கு தேவையான உணவை. தானே விவசாயம் செய்து உண்ணும் உயிரினம் தான் எறும்புகள்.

தெரிந்தும் தெரியாதது

சராசரியாக ஓர் ஆண் சிங்கம் 250 கிலோ வரை இருக்குமாம். இதன் கர்ஜிக்கும் சப்தம், 8 கி.மீ வரை எதிரொலிக்கும். காட்டில் வாழும் ஆண் சிங்கம் பத்தில் இருந்து பதினான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும். பெண் சிங்கங்களுக்கு பிடரிமயிர் அதிகமாக இருக்கும். பூனை குடும்பத்தில் புலிக்கு அடுத்து 2-வது பெரிய விலங்கு சிங்கம்.

அதிசய சிறுமி

சீனாவின் சுன்யி நகரில் வசிக்கிறாள், தந்தையால் கைவிடப்பட்ட வாங் அண்ணா என்ற 5 வயது சிறுமி. தனது பாட்டி, கொள்ளு பாட்டியுடன் வசித்து வரும் இவள்,  அவர்களுக்கு சமைப்பது, ஊட்டிவிடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகளை செய்வது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago