முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மடக்கும் பைக்

டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை தயாரிக்க ஆர்வம் பெருகியுள்ள நிலையில், கச்சிதமான எலெக்ட்ரிக் பைக்கினை ஷென்ஷென் எனும் சீன நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மாசர்க்கிள் எஸ் 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் பைக் சுமார் 7 கிலோ எடை கொண்டது. மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை 5 எளிய முறைகளைப் பயன்படுத்தி மடித்து நமது கைப்பைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்பது இதன் கூடுதம் சிறபம்சம். 36 வோல்ட் பேட்டரியில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் பைக், இரண்டரை மணி நேரத்தில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடுமாம். ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மாசர்க்கிள் எஸ் 1 எலெக்ட்ரிக் பைக், 100 கிலோ எடை வரை தாங்குமாம்.  

வேகம் தேவை

இந்தியா, பணமில்லா பரிமாற்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் பரிமாற்றத்திற்குத் தேவையான இணைய சேவையில் போதிய வேகம் இல்லை. உலக அளவில் இணையதளத்திற்கான வேகத்தில் இந்தியா, 96- வது இடத்தில் உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்த வேகத்தில் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. இலங்கை, சீனா, தென் கொரியா, இந்தோனேஷியா, மலேசியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவை விட பலமடங்கு முன்னிலையில் உள்ளன. இணைய வேகத்தில் இந்தியா டவுன்லோட் சேவையில் 96- வது இடத்திலும், பேண்ட்வித் சேவையில் 105- வது இடத்திலும் உள்ளது.

புது முயற்சி

பாகிஸ்தானில், லாகூரை சேர்ந்த அகமது அலி என்ற சிறுவன் தனது கண்களின் விழிகளை 10 மி.மீட்டர் தூரம் வெளியே துருத்தி சாதனை படைத்துள்ளான். பள்ளியில் படிக்கும் அவன் அதை வீடியோ எடுத்து சமூகவலை தளங் களில் வெளியிட்டான். மேலும், கின்னஸ் உலக சாதனைக்காக அந்த வீடியோவை தற்போது அனுப்பி வைத்து இருக்கிறான்.

புளூடூத், ஜிபிஎஸ் 360 டிகிரி பார்வை கோணம் கொண்ட நவீன ஹெல்மெட்

க்ராஸ்ஹெல்மெட் என்பது அடுத்ததலைமுறை மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் ஆகும், இது ஒலி கட்டுப்பாடு, ஜிபிஎஸ், 360˚ காட்சித்திறன் என நமது சவாரி அனுபவத்தையே முற்றிலுமாக மாற்றிவிடும். இதுவே  முதல் ஒலி கட்டுப்பாட்டு செயல்பாடு, ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஒரு பிரத்யேக ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கொண்டு கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட நவீன ஹெல்மெட் ஆகும்.  பின்புறம் வரும் வாகனங்களின் காட்சி உங்கள் ஹெல்மெட்டின் முன்பகுதியில் உள்ள திரையில் தெரியும் என்பதால் திரும்பி பார்க்க வேண்டிய தேவை இருக்காது. இது மட்டுமின்றி , இந்த கிராஸ் ஹெல்மெட் ஜீபிஎஸ் வசதி உள்ளதால் நீங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு சரியான பாதையை காண்பிக்கும். 360 கோணம் பார்க்க முடியும் என்பதால் நீங்கள் சாதாரணமாக பார்க்க முடியாத சாலையின் பகுதியை கூட இதன் மூலம் பார்க்க இயலும் என்பது கூடுதல் வசதி.

முதல் உலகப் போரில் பஞ்சாபிய வீரர்கள்

 இந்த உலகம் நேரடியாக 2 உலகப் போர்களை கண்டுள்ளது. இனி நேரடியான உலகப் போர்கள் சாத்தியமில்லை என்ற கட்டத்துக்கு வரலாறு முட்டு சந்தில் வந்து நிற்கிறது. அதை மீறி நடந்தால், இந்த பூமி ஒரு பிடி சாம்பலாக மாறி பிரபஞ்சவெளியில் காணாமல் போய்விடும். ஆனாலும் உலக நாடுகள் ஒன்றையொன்று இன்னும் பிறாண்டிக் கொண்டுதான் இருக்கின்றன. அது கிடக்கட்டும்.. முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போதைய டிஜிட்டல் உலகில் பல வெளியில் தெரியாத ரகசியங்கள் படிப்படியாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் தி கார்டியன் வெளியிட்ட செய்தியில் முதலாம் உலகப் போர் தொடர்பான ஆவணங்ள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டதில் பிரிட்டனுக்காக 3.5 லட்சம் பஞ்சாபிய வீரர்கள் பங்கேற்றது தெரியவந்துள்ளது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் விரிந்து கிடக்கும் சீக்கிய பிராந்தியங்களிலிருந்து சிறிய குக்கிராமத்திலிருந்து கூட தன்னார்வலர்களாக 3.5 லட்சம் பஞ்சாபிய வீரர்கள் பங்கேற்றதாக தெரிகிறது.  ஆனால் இந்த எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என போர் வரலாற்றாய்வாளர்கள் கணிக்கின்றனர். இது இன்னும் விரிவான ஆய்வுக்கும், ஆவணப்படுத்தலுக்குமான செய்தியாகும். இது மிகவும் ஆச்சரியம் தானே..

பென்குயினை கணக்கெடுக்கும் போஸ்ட் ஆபீஸ்

ஆள் அரவமற்ற அமைதியாக பென்குயின்கள் மத்தியில் வேலை செய்ய விரும்புகிறீர்களா.. அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் அண்டார்டிகாவில் உள்ள பிரிட்டன் அறக்கட்டளைக்கு சொந்தமான போர்ட் லாக்ராய் என்ற இடத்திலுள்ள தபால் அலுவலகத்துக்கு தான். இந்த அலுவலகம் 1944 இல் பிரிட்டன் தன்னார்வ அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டு 1962 வரை தபால் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வீடுகளுக்கு எழுத விரும்பும் கடிதங்களை தயார் செய்து அனுப்பும் பணியை மேற்கொண்டது. ஆள் இல்லாத காலங்களில் பென்குயின் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டது. தற்போது யார் கடிதம் அனுப்புறா.. எனவே தபால்களை எண்ணுவதற்கு பதிலாக பென்குயின்களை எண்ணும் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது. என்ன நீங்க ரெடியா..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago