முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தேனீக்கள் : ஒரு லிட்டில் ஸ்டோரி

ஓய்வில்லா உழைப்புக்கு மட்டுமல்ல சுறுசுறுப்பு, கட்டுப்பாடு, கூட்டு முயற்சி ஆகியவற்றிக்கு தேனீயே அடையாளமாக இருக்கின்றது ஆண்டொன்றுக்கு 450 கிலோ மலரின் குளுக்கோஸ், புரோபோலிஸ் எனப்படும் பிசின், நீர் மற்றும் மகரந்தத்தை முன்கூட்டியே சேமித்துக் கொள்கிறது. எனவே உணவுப் பதப்படுத்துவதில் முன்னோடியும் தேனீதான். தேனீக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கின்றன. பெரும்பாலும் கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  மொத்தம் 44 இனங்கள் உள்ளன. அறிவியலில் ஏப்பிடே (Apidae) எனும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) எனும் இனத்தைச் சார்ந்தவை தேனீக்கள். மனிதனைப் போலவே தேனீக்களும் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும். தேனீக்களில் முதல் வகை இராணித் தேனீ. இதுதான் தேனீக்களில் மிகப் பெரியது. தலைமை வகிக்கும். இதன் ஆயுள் 3 ஆண்டுகள். இதன் வேலை இனப்பெருக்கம் செய்வது. 2 ஆவது ஆண் தேனீ. இதன் வேலை கூட்டை பராமரிப்பது, ராணித் தேனீயை கவனித்துக் கொள்வது. 3ஆவது வேலைக்காரத் தேனீ. ஒரு தேனீக் கூட்டத்தில் இதுதான் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இதன் வேலை உணவு சேகரிப்பது, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது போன்ற முக்கியமான அனைத்தையும் செய்யும். இதன் ஆயுள் 2 மாதங்கள். செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக் காலமாக தேனீக்கள் வேகமாக அழிந்து வருவது வேதனைக்குரியதுதானே..

வைட்டமின் சி

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று, இதுவரை ப்ளாஷ் பயன்படுத்தாமல், திடீரென்று செய்தால் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும். மற்றொன்று உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், ஈறுகளில் இரத்தம் கசியும். எனவே வைட்டமின் சி உணவுகளை அதிகம் எடுத்தால் இதை தவிர்க்கலாம்.

வியக்க வைத்த தமிழன்

கி.மு 1010ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட தஞ்சாவூர் கோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிலைகளை நன்றாக உற்றுநோக்கினால், அதில் ஐரோப்பிய உருவத் தோற்றமுடைய ஒருவரின் சிலை உள்ளது தெரியும். அந்த ஐரோப்பியர் யார் என்று தற்போது ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அவர் பிரான்ஸ் மன்னர் இரண்டாம் ராபர்ட். அவரது காலமும் கி.மு 10-ம் நூற்றாண்டுகள்தான். 1500ம் ஆண்டில் தான் வாஸ்கோடாகாமா உலகை சுற்றிவந்தார். அதுதான் உலகை ஒன்றிணைக்க முயற்சித்த முதல் நடவடிக்கை என்று எண்ணப்பட்ட நேரத்தில், தமிழன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே உலகத்தோடு தொடர்பு கொண்டு வாணிபம் செய்துவந்தது தெரியவந்தது. இதனாலேயே பிரான்ஸ் மன்னர்களின் சிலையை உலகின் சிறப்புவாய்ந்த கோயிலில் வடிவமைத்து வைத்துள்ளான் சோழப்பெருமகன்.

கம்பீரமான விலங்கு

இதன் முடி வெள்ளையாக காணப்பட்டாலும் இதன் தோல் கருப்பாக இருக்கும். இது நீர் நாய்களை வேட்டையாடும் போது கடல் பணியை ஒரு தளமாக பயன்படுத்துகின்றது. இதற்கு 42 பற்கள் இருக்கும் மற்றும் பெண் கரடி ஆண் கரடியை விட பாதி எடை மட்டுமே இருக்கும். ஒரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால் போலார் கரடிகளுக்கு அருமையான வாசனை சக்தி உள்ளது,கிட்டத்தட்ட ஒன்றறை மைல் தூரத்தில் இருக்கும் கடல் நாய்களின் வாசனையை கண்டுபிடித்துவிடும். இதன் குட்டிகள் பிறக்கும்போது மனித குழந்தைகளை விட சிறியதாக இருக்கும் அதாவது ஒரு எலி அளவு மட்டுமே இருக்கும். அவைகளுக்கு உணவு நிறைய கிடைத்தால் அவை ஒரே ஆண்டில் முழு மனிதன் அளவு வளர முடியும்.

உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் எது தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.

ஹோலோகிராபிக் வழிகாட்டி : இனி காரில் ஜாலியாக செல்லலாம்

முன்பெல்லாம் காரில் பயணம் சென்றால் ஒவ்வொரு ஊரிலும் தகவலை கேட்டு கேட்டு செல்ல வேண்டும். பின்னர் சாலை அடையாள பலகைகளை கொண்டு ஓரளவுக்கு பயணித்தோம். அதன் பின்னர் தொலைபேசி, செல்போன்கள் உதவின. அதைத் தொடர்ந்து தற்போது ஜிபிஎஸ் கருவிகள் வந்து விட்டன. இருந்த போதிலும் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போது இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கடினம். தற்போது ஓட்டுநர்களின் கவலையை போக்க வந்து விட்டது ஹோலோகிராஃபிக் வழிகாட்டி. இதன் மூலம் முன்புற கண்ணாடியில் ஜிபிஎஸ் வரைபடங்கள் ஒளி ஊடுருவம் தன்மையுடன் கூடிய ஹோலோ கிராஃபிக் படங்களாக தெரியும். இதனால் ஓட்டுபவருக்கும் காட்சி பாதிக்காது. செல்லும் வழியையும் சட்டென்று புரிந்து கொள்ள இயலும். வெகு விரைவில் உலகின் வாகன பயணத்தை மாற்றி அமைக்க வந்து விட்டது ஹோலோகிராஃபிக் வழிகாட்டி. இது தொழில் நுட்பத்தின் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago