முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வேகமான டைப்பிங்கிற்கு....

கம்ப்யூட்டர் கீபோர்ட்டில் உள்ள F மற்றும் J  கீ-யின் கீழே ஒரு கோடு இருக்கும். கம்ப்யூட்டர் கீபோர்டில் இம்மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வந்தவர் ஜூன் ஈ.போட்டிச் (June E. Botich). கீபோர்டில் இம்மாதியான கோடு கடந்த 15 வருடங்களாகத் தான் உள்ளது. காரணம், கம்ப்யூட்டர் கீபோர்டின் F மற்றும் J-யில் உள்ள கோடு, ஒருவர் வேகமாக டைப் செய்வதற்காக அமைக்கப்பட்டது. இரண்டு கையிலும் உள்ள ஆள்காட்டி விரலை இந்த F மற்றும் J-யின் மீது வைத்து டைப் செய்வது தான் டைப்பிங் செய்வதன் சரியான நிலையாகும். சரியான நிலையில் வைத்து டைப் செய்தால், பார்க்காமல் டைப் செய்யலாம். இதனால் செய்யும் வேலையின் நேரம் மிச்சப்படுத்தப்படும். 2002-ம் ஆண்டு வரை கம்ப்யூட்டர் கீபோர்டில் இது மாதிரி எந்த ஒரு கோடும் இருந்ததில்லை.

ஜிபிஎஸ் இல்லாமலே

இன்றைய நவீன மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வரைபடங்கள், சாலை குறியீடுகள், திசைகாட்டிகள், ஜிபிஎஸ் கருவிகள் என ஏரானமானவற்றை நம்பி இருக்க வேண்டியுள்ளது. அப்படியும் சிலர் வழி தவறி விடுகின்றனர். ஆனால் எந்த வரைபடத்தையும் வைத்திருக்க முடியாத நீருக்கு அடியில், பல்லாயிரம் மைல்கள் ஆழமுள்ள கடலுக்குள்.. அதுவும் சூரிய ஒளி புகாத கும்மிருட்டில்.. ஆனால் சில சுறாக்கள் தங்கள் உடலிலேயே இயற்கை ஜிபிஎஸ் அல்லது காந்தமானியை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பல நூறு மைல்கள் சென்றாலும் மீண்டும் தனது இருப்பிடத்துக்கு மிகச் சரியாக அவை திரும்பி விடுகின்றனவாம்.  ஆய்வில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடலுக்கு அடியில் நீந்தி சுறாக்கள் மிகச் சரியாக ஆஸ்திரேலியா வந்து விட்டு 9 மாதங்களுக்கு பிறகு திரும்பிச் செல்வது தெரியவந்துள்ளது. இது இயற்கையின் ஆச்சரியம் தானே..

2000 ஆண்டுகள் பழமையான கல்லறையில் எழுதப்பட்டிருந்தது பூஜ்யமா?

கர்நாடக மாநிலம் தஷிண கன்னட மாவட்டத்தில் உள்ள கடப்பா தாலுகாவில் ராமகுஞ்சா கிராமத்தில் பாண்டவர் குகை எனப்படும் தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கல்லால் ஆன கல்லறை ஒன்று இருப்பதாக உள்ளூர் வாசிகள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் எம்எஸ்ஆர்எஸ் கல்லூரியின் தொல்லியல் துறை தலைவர் பேரா. முருகேஷி மற்றும் ஆய்வு மாணவர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்லால் ஆன கல்லறையை கண்டறிந்தனர். அது மட்டுமின்றி அதன் மேற்புறத்தில் உள்ள கல்லில் வட்ட வடிவில் அல்லது பூஜ்ய வடிவில் எழுதப்பட்டிருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இது குறித்து முருகேஷி கூறுகையில், அதன் மேற்புறத்தில் காணப்படுவது வட்டமா அல்லது அப்போதே இங்கு வாழ்ந்த மக்கள் பூஜ்யத்தின் பயன்பாடுகளை அறிந்துள்ளனரா என்பது வியப்பாக உள்ளது. இது குறித்து மேலும் ஆய்வு செய்தால் பல்வேறு வரலாற்று உண்மைகள் தெரியவரும் என்றார். கற்கால தொல்லியல் எச்சத்தின் மீது எழுதப்பட்டுள்ளது பூஜ்யமா என்ற கேள்வி விஞ்ஞானிகள் மட்டுமின்றி பொது மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆபத்தை எதிர்நோக்கி...

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மயக்கவியல் துறை ஆய்வாளர்கள் 19-32 வயதுக்குட்பட்ட 2,000த்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வில், தினசரி 2 மணி நேரத்துக்கு மேல் ஒருவர் சமூக வலைதளங்களை பயன்படுதினால், அது அவருக்கு சமூகத்தில் இருந்து தனிமைப்படும் உணர்வை அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம்.

இனி பயணச்சீட்டு வாங்க சில்லறை வேண்டாம் - க்யூஆர் கோடு போதும்

சென்னையில் விரைவு ரயில், மின்சார ரயில் பயணச்சீட்டுகளை எடுப்பதற்கு கால தாமதத்தை தவிர்க்க, தெற்கு ரயில்வே தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பயணச்சீட்டு வழங்கும் கவுண்ட்டர் அறை அருகே இதை வைத்துள்ளது. இதனை பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களே பயணச்சீட்டு எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பயணிகளின் கூடுதல் வசதிக்காகவும், மேலும் கால தாமதத்தை தவிர்க்கவும், தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தில் 'க்யூ. ஆர்' கோடு மூலமாக பணம் செலுத்தும் வசதியையும், பயணச்சீட்டு பெறும் முறையையும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பயணிகள் 'க்யூ. ஆர்' கோடை ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று கொள்ளலாம். மேலும் மாதாந்திர பயண சீட்டை க்யூஆர் கோடு மூலம் புதுப்பித்து கொள்பவர்களுக்கு 0.5 சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிட் மரணத்தை காட்டிலும் சுற்றுசூழல் மாசால் இறந்தவர்கள் அதிகம்

கோவிட் பெருந்தொற்று உலகம் முழுவதும் 59 லட்சம் பேர் கடந்தாண்டில் இறந்தனர். ஆனால் அதை காட்டிலும் அதிகமானோர் சுற்றுச்சூழல் மாசால் உயிரிழப்பதாக ஐநா எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 90 லட்சம் சிசுக்கள் குறைபிரசவத்தில் இறந்து போவதாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமெடுத்து வருவதாக ஐநா அலறுகிறது. நீரில் பாதிப்பு, காற்று பாதிப்பு, ரசாயன உரங்கள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அது தொடர்பான ரசாயனங்கள் என சுற்றுச்சூழலுக்கான அச்சுறுத்தல் நீண்ட சங்கிலி தொடர் போல நீண்டு செல்வதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இது குறித்து உலக நாடுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க தவறினால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago