விண்வெளி அறிவியல் குறித்து உற்று கவனித்து வருபவர்களுக்கு தெரியும் பிளாக் ஹோல் என்பது குறித்து. பிரபஞ்சத்தில் அறியமுடியாத புதிரான அப்பகுதி குறித்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் தலையை பிய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மனித முயற்சிகளுக்கு அப்பால் விரியும் அதை நோக்கி பயணிக்கும் துணிச்சலும் ஆற்றலும் இன்னும் மனித இனத்துக்கு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சூழலில் தான் முதன்முறையாக பிளாக் ஹோலின் பின் புறத்திலிருந்து வெளிச்சம் வருவதை விண்வெளி வீரர்கள் கண்டுள்ளனர். சுமார் 1800 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து இந்த ஒளி வநதுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அரிதான நிகழ்வு குறித்து நேச்சர் இதழிலும் அறிவியல் கட்டுரை ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை எழுதுவோருக்கு எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். "ரா' என்றால்"இல்லை' "மன்' என்றால் "தலைவன்'. "இதுபோன்ற தலைவன் இதுவரைஇல்லை' என்பது இதன் பொருள்.
நம்மூர் ஞானிகள் தொடங்கி ஆன்மிக பேச்சாளர்கள் வரை அனைவரும் விழிப்புணர்வு, இங்கே, இப்போது என்று பேசுவதை கேட்டிருப்போம். அதாவது எப்போதும் நிகழ்காலத்தில் அறிவுப்பூர்வமான விழிப்புணர்வுடன் இருப்பதையே இவ்வாறு கூறுகிறார்கள் என ஒரு வாறு நாம் அனுமானிக்கலாம். இருந்த போதிலும் நமது எண்ணங்களும், நினைவுகளும் கடந்த காலத்திலேயே இருக்கின்றன. நிகழ்காலத்தோடு நாம் கொள்ளும் தொடர்பு சற்று தாமதமாகத்தான் நிகழ்கிறது என ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பேலார் மருத்துவ கல்லூரியில் டாக்டர் டேவிட் ஈகிள்மேன் என்பவர் மேற்கொண்ட ஆய்வில் நிகழ்காலத்திலிருந்து நாம் சுமார் 80 மில்லி விநாடிகள் பின்தங்கியே இருக்கிறோம் என்று கண்டறிந்துள்ளார். அதாவது சம்பவம் நடப்பதற்கு சற்று பிந்தி நாம் இறந்த காலத்தில் இருக்கிறோம்். நாம் உணர்ந்து கொள்வதற்கு முன்பாகவே சம்பவங்கள் நடந்து முடிந்து விடுகின்றனவாம். என்ன கொடுமை சார் இது...
கர்நாடக சங்கீதம் குறித்து இன்றைக்கும் பரவலாக பல்வேறு கற்பிதங்கள் நிலவி வருகின்றன. உண்மையில் தமிழிசை தான் பிற்காலத்தில் கர்நாடக இசை என அழைக்கப்பட்டது. அதற்கான குறிப்புகள் சிலப்பதிகாரம் தொடங்கி பல பழந்தமிழ் நூல்களில் உள்ளன. ஆனால் வடமொழி பழைய இலக்கியங்கள் எதிலும் சாஸ்திரிய இசைக்கான குறிப்புகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. போலவே தமிழிசை குறித்த கல்வெட்டுகளும் சான்றுகளும் ஏராளமாக உள்ளன என்பதும் கவனிக்கத் தக்கது.எனவே ஒரு காலத்தில் இந்திய நிலப்பரப்பு முழுவதும் பரவியிருந்தது கர்நாடக இசை எனப்படும் தமிழிசைதான். அது பிற்காலத்தில் பல்வேறு இசை வடிவங்களின் கலப்பால் தமிழிசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி என பிரிவுகளை கண்டது. கர்நாடக இசையில் தியாகராஜர், ஷ்யாமா சாஸ்திரி, முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் மும்மூர்த்திகளாக போற்றப்படுகின்றனர். அதே போல தமிழிசைக்கும் மும்மூர்த்திகள் என அருணாச்சல கவிராயர், முத்து தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை ஆகியோர் போற்றப்படுகின்றனர்.
நமது வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு அடுப்பில் அதை பற்ற வைக்கும் போதோ, அல்லது சிலிண்டரில் ஏதேனும் கசிவு ஏற்படும் போதோ உடனே நமக்கும் வாசனை ஏற்பட்டு உஷாராகி விடுகிறோம். அப்படியானால் நாம் பயன்படுத்தும் எரிவாயுவுக்கு வாசனை உள்ளதா என்றால்... கிடையாது. உண்மையில் அதன் இயல்பான நிலையில் புராபேன், பியூட்டேன் ஆகியவற்றின் கலவையாகும். இவற்றிற்கு அடிப்படையில் வாசனை கிடையாது. சமையல் பணிகளின் போது விபத்து ஏற்படாமல் தடுக்கவும், கசிவை புரிந்து கொள்ளவும் அதில் எதில் மெர்காப்டன் என்ற தனிமம் கலக்கப்படுகிறது. இதுதான் சமையல் எரிவாயுக்கு வாசனையை கொடுக்கிறது. இதை கலந்த பிறகே சிலிண்டரில் நிரப்பபட்டு நமது வீடுகளுக்கு வருகிறது சமையல் எரிவாயு.
விஞ்ஞானத்தில் எப்போதும் புதுமைகள் சாத்தியம் தான். அண்மையில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள உயிரினம் ஆக்சிஸன் அதாவது பிராண வாயு இல்லாமலேயே உயிர் வாழக்கூடியது. இது அறிவியலில் அதிசயம். சால்மன் மீன்களின் தசையில் வாழக்கூடிய உயிரினம் இது. 10 உயிரணுக்களுக்கும் குறைவாகக் கொண்ட இந்த ஒட்டுண்ணிக்கு ஹென்னிகுயா சால்மினிகோலா என்று பெயரிடப்பட்டுள்ளது.ஜெல்லிமீன் மற்றும் பவளப்பாறை இனத்தை சேர்ந்த உயிரினமாக இந்த ஒட்டுண்ணி கருதப்படுகிறது. இவை பிராணவாயுவை உள்வாங்குவதும் இல்லை, மூச்சுவிடுவதும் இல்லை. பரிணாம வளர்ச்சியில் புதிய திசையை காட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் வியக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து நாமும் வியப்போம்.. என்ன ஓகேவா..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026


