முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பிளாஸ்டிக் கழிவிலிருந்து பெட்ரோல்

விண்ணைத் தொடும் பெட்ரோல் விலை, மலையளவு குவிந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள். இவை இரண்டுக்கும் ஒரு சேர தீர்வு கண்டுள்ளனர் பீகாரைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர். டில்லி இந்தியன் ஸ்டேட்டஸ்டிக்கல் இன்ஸ்டியூட் மாணவர்கள் 8 பேர் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் பெட்ரோலிய மூலப்பொருட்களை பிரித்தெடுத்துகும் முறையை கடந்த 2019ம் ஆண்டு கண்டறிந்தனர். இதற்காக அவர்கள் கடந்த 2020ம் ஆண்டு காப்புரிமையை பெற்றனர். அவர்கள் பீகார் மாநிலத்தில் இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோலிய பொருட்களை பிரித்தெடுக்கும் ஆலையை நிறுவியுள்ளனர். கிராவிட்டில் அக்ரோ மற்றும் எனர்ஜி என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த ஆலையை அவர்கள் வங்கி கடனாக பெறப்பட்ட ரூ25 லட்சம் பணத்தை கொண்டு துவங்கியுள்ளனர். இந்த ஆலையில் 200 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மொத்தம 175 லிட்டர் பயோ  பெட்ரோல் - டீசல் தயாரிக்கப்படுகிறது. அதுவும் லிட்டருக்கு ரூ.62 செலவில் இந்த பயோ-பெட்ரோல்-டீசல் தயாராகிறது. இதை அவர்கள் ரூ.70-க்கு விற்பனை செய்கின்றனர்.

பிளாஸ்டிக் ரோபோ

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த ரிஷிகுமார் என்ற 14 வயது மாணவன் பிளாஸ்டிக் ரோபோ ஒன்றையும் உருவாகியுள்ளார். பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட இந்த ‌ரோபோ, குரல் உத்த‌ரவுக்குப் பணிந்து பாடுவது, நடனமாடுவது போன்றவற்றை செய்கிறது. இந்திய ராணுவத்தில் ரோபோவின் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியமாக கொண்ட இந்த மாணவர் , கடந்த 2 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான மொபைல் ஆப்ஸை உருவாக்கியுள்ளார். அவற்றை பல நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்திருக்கிறார். தற்போது 50 கிராம் எடை கொண்ட கணினி சிபியு-வை உருவாக்கியுள்ளார்.

உடலில் 600 இடங்களில் டாட்டூ வரைந்து கொண்ட அழகி

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாடல் அழகி தனது உடல் முழுக்க 600 இடங்களில் டாட்டூ குத்திக் கொண்டுள்ளது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் மனிதர்களின் ஆதிகாலம் தொட்டே வழக்கத்தில் இருந்துவருகிறது. இன்றைய மாடர்ன் உலகில் டாட்டூ (Tattoo) என்ற பெயரில் இது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேனில் உள்ள வெஸ்ட்ஃபீல்டு பகுதிக்கு டாட்டூ மாடல் அழகி அம்பர் லூக் (26) ஷாப்பிங் சென்றார். உடல் முழுக்க அவர் டாட்டூ வரைந்திருந்ததால், அவரது தோற்றத்தைப் பார்த்ததும் அப்பகுதிமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இவர், சுமார் 600க்கும் மேற்பட்ட இடங்களில் தனது உடலில் டாட்டூ குத்தியுள்ளார். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.90 லட்சம் வரை செலவிட்டுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

புதிது இது

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்துவரும் நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில், விர்ச்சுவல் ரியாலிட்டி கேமிங்குடன் கூடிய உடற்பயிற்சி சாதனத்தை ஜெர்மனியைச் சேர்ந்த ஹைவ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.ஐகாரோஸ் ஃப்ளையிங் பிட்னெஸ் மெஷின் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சி சாதனத்தின் மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டியில் விளையாடிக்கொண்டே உடற்பயிற்சி செய்ய முடியும். இதன் மூலம் உடல் முழுமைக்குமான உடற்பயிற்சி சாத்தியம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

1908 ஒலிம்பிக் போட்டிக்கு ரஷ்யா 12 நாள்கள் தாமதமாக வந்தது ஏன் தெரியுமா?

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜூலியஸ் சீசர் ஆண்டுக்கு 365 நாட்கள் என கணக்கிடப்பட்ட காலண்டரை பயன்படுத்த உத்தரவிட்டிருந்தான்.  இது லீப் வருடங்கள் உள்ளிட்ட பல்வேறு கால கணித மாறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில் Pope Gregory XIII கால கட்டத்தில் 1582 முதல் கிறித்துவ நாடுகள் கிரிகோரியன் காலண்டர் எனப்படும் நவீன காலமுறைக்கு மாறின. ஆனால் கிறித்துவம் அல்லாத பல நாடுகளும், ரஷ்யா  போன்ற நாடுகளும் அவற்றை ஏற்கவில்லை. இதனால் 1802 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு ரஷ்யா 12 நாட்கள் தாமதமாக வரும்படி நேர்ந்தது.  அதன் பின்னர் போல்ஷெவிக் ஆட்சியின் போது 1918 இல் ரஷ்யாவும் கிரிகோரியன் முறைக்கு மாறியது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன வென்றால், ஒலிம்பிக் பிறந்த தேசமான கிரீஸ் 1923 இல்தான் புதிய காலண்டர் முறைக்கு மாறியது என்பதுதான் சுவாரசியம்.

வியப்பில் ஆழ்த்தும் வித்தியாசமான பாலம்

வியட்நாமில் டா நாங்கிற்கு வெளியே கல்லினால் வடிமைக்கப்பட்ட இரு கைகள் பாலத்தை தாங்குவது போல இருக்கும் ஒரு பிரமாண்டமான காட்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. கோல்டன் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் பாலம் பனாமா மலைகளுக்கு மேலே கடல் மட்டத்திலிருந்து 1,400 மீட்டர் அதாவது சுமார் 3280 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மேலிருந்து பார்த்தால் அந்த இடத்தை சுற்றியுள்ள பரந்த ஆழகான காட்சிகளை கண்டு ரசிக்கலாம். தங்க நிற வண்ணம் கொண்ட இந்த பாலம் ஊதா நிற லோபிலியா கிரிஸான்தமம்களால் (purple Lobelia Chrysanthemums ) வரிசையாக அமைந்துள்ளது மற்றும் கிட்டத்தட்ட 150 மீட்டர் நீளமுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலத்தை தாங்கி கொண்டிருக்கும் செதுக்கப்பட்ட கைகள் தான் பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் அழகிய காட்சியை தருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago