முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சந்திரனில் நில நடுக்கம் ஏற்படுவதை புகைப்படம் எடுத்த சந்திரயான் விண்கலம்

நமது பூமியில் நில நடுக்கம் ஏற்படும் என்பது நமக்கு தெரியும். பூமிக்கடியில் இருக்கும் டெக்டானிக் பிளேட் என்று அழைக்கப்படக் கூடிய பாறைத் திட்டுகள் நகரும் போது இது போன்ற நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.  இதே போல, சந்திரனின் மேற்பரப்பிலும் புவி அடுக்குகள் போல தட்டுகள் அமைந்திருப்பதும், அவை நகர்கின்ற போது நிலநடுக்கம் ஏற்படுவதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதில் குறிப்பாக இந்தியா அனுப்பிய சந்திரயான் இது தொடர்பான  படங்களை எடுத்து அனுப்பியுள்ளது என்றால் ஆச்சரியம் தானே...

வெப்பத்தை தணிக்க

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பைக் குறைக்க பல்வேறு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின், புதிய முயற்சியாக கால்சைட் தூசுகளை வளிமண்டலத்தில் தூவுவதன் மூலம் பூமியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். கால்சைட் முறையால் வளிமண்டலத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ஓசோன் படலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கால்சைட் தூசுப்படலம் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காரணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

கழுதைகளை காணவில்லை

இன்றைய தலைமுறையினரில் பலர், கழுதைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பைக்கூட பெற்றிருக்க மாட்டார்கள். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கழுதை வீட்டு விலங்காக இருந்தது. கழுதை தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, பாலூட்டிகளில் குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று.  40 ஆண்டுகள் வரைகூட கழுதைகள் உயிர் வாழும். கழுதைகள் தற்போது வெகுவாக அருகி வருகின்றன. 2007 - 2012 காலகட்டத்தில் இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை 23% வீழ்ச்சி அடைந்தது. 2012 - 2019 ஆண்டுகளில் அது மேலும் 61.23% வீழ்ந்து, இப்போது வெறும் 1,20,000 கழுதைகள் மட்டுமே உள்ளன. இது உலகளாவிய போக்காக உள்ளது. சீனாவில் 1992-இல் ஒரு கோடியே பத்து லட்சம் கழுதைகள் இருந்தன; இப்போது வெறும் 26 லட்சமாகச் சுருங்கி விட்டன.

நுரையீரல்கள் இன்றி...

கனடாவை சேர்ந்த மெலிஸ்சா என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவை அடுத்து அவரை பரிசோதித்த டாக்டர்கள் நோய் பாதித்த நுரையீரலை அகற்றி விட்டு தானமாக பெற்று மாற்று நுரையீரல் பொருத்த முடிவு செய்தனர். இதற்கிடையே உடல் உறுப்புகள் செயல் இழப்பதை தடுக்கவும்,  அவரின் உயிரை காப்பாற்றவும் 2 நுரையீரல்களும் அகற்றப்பட்டு, சிறிய செயற்கை நுரையீரல் பெனாய்ட்டின் இதயத்துடன் பொருத்தப்பட்டது.  நுரையீரல்கள் இன்றி செயற்கை நுரையீரலுடன் 6 நாட்கள் உயிர் வாழ்ந்தார். அதன் பின்னர் அவருக்கு நுரையீரல் தானமாக கிடைத்ததை அடுத்து பொருத்தப்பட்டன. தற்போது  உடல் நலத்துடன் இருக்கும் அவர், உலகிலேயே நுரையீரல் இன்றி 6 நாட்கள் உயிர் வாழ்ந்த முதல் மனிதர் ஆவார்.

செல்பி மோகம்

செல்பி மோகத்தால் ஏற்படும் மரணத்தில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். கடந்த ஆண்டு மட்டும் இந்தியா வில் 76 பேரும், பாகிஸ்தானில் 9 பேரும், அமெரிக்காவில் 8 பேரும், ரஷ்யாவில் 6 பேரும், பிலிப்பைன்ஸில் 4 பேரும், சீனாவில் 4 பேரும் இறந்துள்ளனர். இவர்களில் 68% பேர் 24 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் 75.5% பேர் ஆண்கள்.

பளபளப்பு தேன்

தேனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து ஸ்கரப் செய்து கழுவவேண்டும். இது சரும துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தாமல் அதில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். எனவே இனிமேல் சோப்பு தேவையின்றி முகத்தை சுத்தம் செய்யலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago