எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்றிட மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு இன்று (03.03.2017) நடைபெற்றது. இந்த ஆய்வின்போது நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி) ஃ உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி , நாமக்கல் கலெக்டர் மு.ஆசியா மரியம் இ.ஆ.ப அவர்களுடன் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், ஆவத்திபாளையம் காவிரி ஆற்றில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக குடிநீர் எடுக்கப்பட்டு வரும் பணிகளையும், ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 12-வது வார்டு அலமேடு பகுதியில் குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் பணிகளையும், ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 7-வது வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், சுள்ளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சுண்டவலவு கோட்டமேடு பகுதியில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி) உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி சாலையின் ஓரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதனைத்தொடர்ந்து கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், சேலூர் ஊராட்சிக்குட்பட்ட சாணார்பாளையத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதையும், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், கொந்தளம் ஊராட்சியில் காவிரி ஆற்றிலிருந்து கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் தொட்டி மற்றும் குழாய் விஸ்தரிப்பு பணிகளையும், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வீசாணம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி) உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து நகராட்சிகள், அனைத்து பேரூராட்சிகள், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களின் அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி) உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி தலைமையில், கலெக்டர் மு.ஆசியா மரியம் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் இது குறித்து நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி) உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி பேசும்போது தெரிவித்ததாவது,நாமக்கல் மாவட்டம், வறட்சியான மாவட்டம், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகள் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள கடை கோடி கிராம மக்களுக்கும் குடிநீர் தேவையை நிறைவேற்றிட பல்வேறு நிதியுதவிகளின் கீழ் ரூ.7.12 கோடி மதிப்பீட்டில் ஏறத்தாழ 260க்கும் மேற்பட்ட குடிநீர்த்திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக 14-வது நிதிக்குழு மானியத்திட்டம், ஊராட்சி ஒன்றிய பொது நிதி, இடைநிரவல் பொது நிதி, தாய் (சேமிப்பு) த்திட்டம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியுதவி போன்ற பல்வேறு நிதியுதவிகளைப் பயன்படுத்தி இந்த ஆண்டு (2016-17) மேற்குறிப்பிட்டுள்ளவாறு 260-க்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் ரூ.7.12 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்நிதியினைக் கொண்டு, மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக விளங்கக்கூடிய குடிநீர்த்திட்டப்பணிகளை மட்டுமே இந்நிதியினை பயன்படுத்தி, குடிநீர் திட்டப்பணிகளை நிறைவேற்றிட வேண்டும். இருக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். வறட்சியான இந்தக் காலக்கட்டத்தில் மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அந்தந்த அலுவலர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். நகராட்சி அலுவலர்கள், பேரூராட்சித்துறை அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைத்திட உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். நீர் ஆதாரங்களை தொடர்ந்து கண்காணித்து பாதுகாத்திடவும், மக்களுக்கு தொடர்ந்து குடிநீர் கிடைத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (வறட்சி) உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சோ.மதுமதி தெரிவித்தார். இந்த தல ஆய்வு மற்றும் ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக நாமக்கல் மாவட்ட கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.சந்தானம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) க.சந்திரசேகர், வருவாய் கோட்டாட்சியர்கள் மா.இராஜசேகரன், இரா.கீர்த்தி பிரியதர்சினி, பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் இரா.ஜெகாதீஸ்வரி உட்பட பேரூராட்சி செயல் அலுவலர்கள், அனைத்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி பொறியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
அழுத்தத்தைக் கையாள தோனியிடம் கற்றுக் கொண்டேன்: தீப்தி சர்மா
11 Jul 2025லண்டன் : அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.
-
கீப்பராக துருவ் ஜுரெல்: பி..சி.சி.ஐ.
11 Jul 2025இந்தியா - இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.
-
இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தகுதியான நபர் நிதீஷ் குமார் ரெட்டி : அனில் கும்ப்ளே புகழாரம்
11 Jul 2025லண்டன் : இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறுவதற்கு தகுதியான நபர் என்பதை நிதீஷ் குமார் ரெட்டி நிரூபித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ள
-
என்னை செதுக்கியவர்: கம்மின்சை புகழ்ந்த நிதீஷ் ரெட்டி
11 Jul 2025லண்டன் : இந்திய வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ் எனக் கூறியுள்ளார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த கோலியின் விமர்சனத்திற்கு முதல் முறையாக காம்பீர் பதில்
11 Jul 2025பெங்களூரு : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விராட் கோலியின் விமர்சனத்திற்கு முதல் முறையாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீர் பதிலளித்துள்ளார்.
-
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகிறார் சுப்மன் கில்? - தேர்வு செய்ய பி.சி.சி.ஐ ஆர்வம்
11 Jul 2025புதுடெல்லி : இலங்கை, ஐ.சி.சி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா: - இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
11 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம்
12 Jul 2025மும்பை : யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் இடம்பெற்றுள்ளதற்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் ஆயிரம் சதவீதம் உறுதி: த.வெ.க. திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
லாக் அப் மரணங்கள்: விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்
12 Jul 2025சென்னை, லாக் அப் மரணங்கள் தொடர்பாக, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.