முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீடாமங்கலத்தில் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் குப்பைகள் அகற்றும்பணி

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      திருவாரூர்
Image Unavailable

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வெண்ணாறு லயன்கரை தெருவில் புதிதாக தொடங்கப்பட்ட டாக்டர்.அம்பேத்கார் இளந்தளிர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நீடாமங்கலம் இரயில்வே கேட் அருகில் கிழக்கு புறம் நீண்ட நாட்களாக குப்பை மற்றும் கழிவுப் பொருள்கள்,செடி கொடிகள் படர்ந்து கிடந்தன.

 பாராட்டு

 அங்கு கொடிய விஷ முள்ள பாம்புகள்,பூச்சிகள் இரவு பகல் நேரங்களில் சாலையில் நடமாடி கொண்டிருந்தது.அருகில் சிறுவர்கள் விளையாடக்கூடிய இடமும் உள்ளது.அங்கு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் அம்பேத்கார் இளந்தளிர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் விக்னேஷ் தலை¬யிலும்,செயலாளர் பாலச்சந்திரன் முன்னிலையிலும் மன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நீடாமங்கலம் பேரூராட்சி துப்புறவு மேற்பார்வையாளர் அசோகன் உதவியோடு அந்த இடத்தை பொக்லின் இயந்திரம் மூலம் சுத்தம் செய்தனர். நற்பணி மன்றத்தினரை அப்பகுதிமக்கள் பாராட்டினர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து