முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் உலகப் போரில் வீசப்பட்ட 500 கிலோ வெடிக்காத குண்டு கண்டுபிடிப்பு - ஜெர்மனியில் 16,000 மக்கள் வெளியேற்றம்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

பெர்லின் : ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் 2-ம் உலகப்போரில் வீசப்பட்ட 500 கிலோ வெடிக்காத வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இந்த போரின் போது வீசப்பட்ட வெடிக்காத வெடிகுண்டுகள், ஜெர்மனியின் பல இடங்களில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகிறது. 2-ம் உலகப் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து விமானப்படைகள் 27 லட்சம் டன் வெடிகுண்டுகளை ஐரோப்பாவில் வீசின. இதில், பாதியளவு ஜெர்மனியில் வீசப்பட்டது. அதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் இன்னும் ஜெர்மனியில் புதைந்து கிடக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் ரோஜென்ஸ்பர்க் என்ற பகுதியில், 250 கிலோ எடையுள்ள வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அதை செயலிழக்கச் செய்வதற்காக, சுற்று வட்டார பகுதிகளில் வசித்த 5 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். ஆனால், அதை செயலிழக்க செய்யும்போது அந்த குண்டு பயங்கரமாக வெடித்தது. இதில், அருகில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

இந்நிலையில், பிராங்க்பர்ட் நகரில் ஐரோப்பிய மத்திய வங்கி தலைமையகத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அப்போது, 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு மண்ணில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை செயலிழப்பு செய்வதற்காக ஒரு கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள கட்டிடங்களில் வசிக்கும் 16 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து