முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 16 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

சகாராவில், பிரான்ஸ் படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவன் அத்னான் அபு வாலித் அல்-சஹ்ராவி சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை பிரான்ஸ் அதிபர் தெரிவித்து உள்ளார்.

சகாராவில், கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி, மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டுள்ளார். பொது மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். அவரை பற்றிய தகவல் தருவோருக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

 

இந்த நிலையில் சகாராவில், பிரான்ஸ் அதிரடிப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் சஹ்ராவி கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்து உள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்  இது மிகப்பெரிய வெற்றி எனவும் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து