முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம்: ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

சென்னை, கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், அனைத்து ஆவணங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கருர் காவல்துறையினர் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய் பிரசாரம் செய்த வாகனம் இடித்து, விபத்து நேரிட்டுள்ளதே, அந்த சம்பவத்தில், இடித்துவிட்டு ஓடியதாக விஜய் வாகனம் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. அவ்வாறு செய்யாவிட்டால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், கரூர் பலி சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டது. மேலும், அனைத்து ஆவணங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கருர் காவல்துறையினர் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

த.வெ.க. கட்சியினருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், கடும் கூட்டம் சேர்வதை முன்கூட்டியே கணித்திருக்க வேண்டாமா? இந்த இடத்தை காவல்துறைதான் அனுமதித்திருக்கிறது? பிறகு, இங்கு இவ்வளவு கூட்டம் சேரும்போது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறது, ஆனால் நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. விஜய் வந்த வாகனம் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை.

கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் எல்லாம் சம்பவம் நடந்ததும் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள். ஒருவர் கூட பொறுப்பேற்கவில்லை. தலைவர்கள் பலரும் தலைமறைவாகிவிட்டார்கள். விஜய் பிரசாரம் செய்த வாகனம் ஏன் இன்னமும் பறிமுதல் செய்யப்படவில்லை.

இது குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது., த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்த இதே இடத்தில்தான் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். விஜய் பிரசாரப் பயணத்துக்கு 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். காவல்துறை அனுமதி வழங்கிய நேரத்தைக் காட்டிலும் மிகக் கால தாமதமாகவே விஜய் பேச வந்தார். மாலை 3 மணிக்கு விஜய் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 12 மணி முதலே மக்கள் கூடத் தொடங்கிவிட்டனர். இரவு 7 மணிக்கு மேல்தான் விஜய் அங்கு வந்தார். அரசு மீது மிக எளிதாக குற்றச்சாட்டுகளை சொல்லிவிடலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து