எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அகமதாபாத் : ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா - விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் இருவரின் அசத்தல் அரைசதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.
121 ரன்கள் குவிப்பு...
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்திருந்தது.
2-வது நாள் ஆட்டம்...
நேற்று ஆட்டத்தைத் தொடங்கிய கே.எல். ராகுல் மற்றும் ஷுப்மல் கில் இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அசத்தலாக விளையாடி அரைசதம் விளாசிய கேப்டன் ஷுப்மல் கில் 100 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் சதமடித்தார். அவர் 197 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அவருக்குப் பின்னர் கைகோர்த்த விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா இருவரும் சேர்ந்து நிதானமாக தொடங்கினர். அதே வேகத்தில் அவர்கள் சில பந்துகளை எல்லைக் கோட்டுக்குத் தெறிக்கவிட்டனர்.
172 ரன்கள் முன்னிலை...
இதனால், அணியின் ஸ்கோர் வேகமாக எகிறியது. இந்திய அணி 99 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்துள்ளது. துருவ் ஜூரல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 74 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 52 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய அணி 172 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் சேஸ் 2 விக்கெட்டுகளும், சீல்ஸ், ஜோமல் வாரிகன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
மகளுக்கு அர்பணிப்பு
முதல் நாள் ஆட்டநேர முடிவில் கே.எல்.ராகுல் 53 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தார். இதனை தொடர்ந்து நேற்று 2-வது நாள் ஆட்டத்தில் கே.எல். ராகுல் 197 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரின் 11-வது டெஸ்ட் சதமாகும். சதம் விளாசிய கே.எல்.ராகுல் சதத்தை தனது மகளுக்கு அர்பணிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் கொண்டாடினார். இரண்டு விரலை வாயில் வைத்து கொண்டு கை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


