கடலில் அரியவகை உயிரினங்கள் வாழ உதவுவது பவளப்பாறைகள். அதேநேரம், கடல்பகுதியின் தட்ப வெட்பத்தைப் பேணுவதிலும் பவளப்பாறைகளுக்கு மிக முக்கிய பங்குண்டு. பவளப் பாறைகளில் காணப்படும் பாலிப்ஸ் உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன. இந்த பாலிப்ஸ் உயிரிழந்து விட்டால் பவளப்பாறைகளும் உயிரிழந்து விடும். உலகின் ஒரு சில கடல் பகுதிகளிலேயே பவளப்பாறைகள் உருவாகின்றன. இவை வளர கடல் அலை குறைவாக இருக்க வேண்டும்; இந்த பாலிப்ஸ் உயிரினம் சாதாரணமாக ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. இந்து மகா சமுத்திரத்தில் மட்டும் 200 வகைகள் காணப்படுகின்றன. இவற்றை கடினமானவை, மிருதுவானவை என 2 ஆக பிரிக்கலாம். பவளப் பாறைகளை சார்ந்து தான் பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள் மற்றும் முள்தோல் பிராணிகளும் அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. மிகப்பெரிய கடல்வளங்களை உள்ளடக்கியதாக இருக்கும் பவளப் பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன் ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, பவளப் பாறைகளை பலரும் வெட்டி எடுப்பது, கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் இவை பெரிதும் பாதிக்கின்றன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் செட்டிநாடு அரண்மனை காரைக்குடியில் அமைந்துள்ளது. அண்ணாமலைச் செட்டியார் இந்த அரண்மனையை வடிவமைத்து, 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கச் செய்தார். கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து அலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள், மற்றும் ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டு செட்டிநாடு அரண்மனை கட்டப்பட்டுள்ளது.
இன்றைக்கு செல்போனில் படம் பிடிக்க அனைவரும் செல்பி ஸ்டிக்கை பயன்படுத்துகின்றனர். ஆனால் செல்பி ஸ்டிக்கே படம் எடுக்க பயன்பட்டால்... இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அடுத்த கட்டமாக 360 டிகிரி கோணத்திலும் படம் பிடிக்கக் கூடிய செல்பி ஸ்டிக்குகள் அறிமுகம் ஆகியுள்ளன. Vecnos IQUI என அறியப்படும் இந்த ஸ்டிக்குகளில் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் விரும்பிய திசையிலும், 360 டிகிரி கோணத்திலும் படம் பிடிக்க முடியும். இதற்கென சிறப்பு செயலி மற்றும் மென்பொருள்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இனி படமெடுக்க செல்போனோ, கேமராவையோ தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதில்லை. இந்த செல்பி ஸ்டிக் போதும்..
அன்னப்பறவை என்றாலே நமக்கெல்லாம் பொதுவாக பால் போன்ற வெள்ளை நிற அன்னப் பறவைகள்தான் நினைவுக்கு வரும். நம்மூர்களில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த வெள்ளை நிற அன்னப் பறவைகள் தற்போது மிகவும் அருகி விட்டன. அவை அரிய வகை பறவையினங்களில் ஒன்றாக மாறிவிட்டன. தற்போது வட கொரியாவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்காக அந்நாட்டு அரசு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுதான் கருப்பு நிற அன்னப் பறவைகளை அதிக அளவில் இனப் பெருக்கம் செய்து, அதன் இறைச்சியை விற்பதன் மூலம் உணவுத்தட்டுப்பாட்டை போக்க முடியும் என அந்நாட்டு அரசு நம்புகிறது. இதனால் தற்போது வட கொரியாவில் கருப்பு நிற அன்னப்பறவையின் ராஜ்ஜியம் மேலோங்கத் தொடங்கியுள்ளது. அவற்றை வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்யும் தொழில் மடமடவென வளர்ந்து வருகிறது. வெள்ளை அன்னப் பறவைகளைப் போலவே கருப்பு நிற அன்னப் பறவைகளும் பிரத்யேக குணங்களைக் கொண்டதாக உள்ளன. அவற்றின் இறைச்சி கருப்பு நிறத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. நம்மூர்களில் ஒரு சில இடங்களில் காணப்படும் கருமை கோழிகளை போன்றவைதான் இவையும். எனவே கருப்பு அன்னப் பறவைகள் இனப் பெருக்கத் திட்டத்தை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொழுப்பு நீக்கப்பட்ட உணவுப் பொருட்களும் பிம்பிளை உண்டாக்கும். கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் அதிகமாக குடிப்பதாலும், குறிப்பாக கொழுப்பு குறைவான தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது, அந்த சர்க்கரை கொலாஜன் இழைகளைப் பாதிப்பதோடு, பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பிக்க முடியாமலும் செய்யும். இதனால் முகப்பரு ஏற்படுகிறது.
ஒட்டகங்களை பற்றிய கட்டுக்கதைகளில் ஒன்று, அது கிடைக்கும் போது நீரை பருகிவிட்டு, உடலின் ஒரு பகுதியில் சேமித்து வைத்துக் கொள்கிறது என்பதுதான் அது. ஆனால் அறிவியல் பூர்வமான உண்மை அதுவல்ல. அது நீண்ட காலம் நீரை குடிக்காமல் கொளுத்தும் பாலைவனத்தில் சமாளிப்பதற்கு காரணம் அதன் ரத்ததில் உள்ள ஓவல் வடிவ ரத்த அணுக்கள் தான். மேலும் இவை 240 சதவீதம் வரை விரிவடையும் தன்மை கொண்டவையும் கூட. மற்ற உயிரினங்களுக்கு 150 சதவீதம் வரை மட்டுமே விரிவடையும். மேலும் இவை உடலில் நீரிழப்பு ஏற்பட்டு ரத்தம் அடர்த்தியானாலும் அதில் நீந்தி சென்று ஆக்ஸிசனை ரத்த நாளங்களுக்கு கொண்டு செல்லும் திறன் பெற்றுள்ளன. எனவே ஒட்டகம் தனது எடையில் 40 சதவீதம் வரை நீரிழப்பை சமாளிக்கிறது. இது தான் ஒட்டகம் நீண்ட நாள்களுக்கு நீர் குடிக்காமல் சமாளிப்பதன் ரகசியம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 5 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-06-2025.
16 Jun 2025 -
படை தலைவன் திரை விமர்சனம்
16 Jun 2025வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஒரு குட்டி யானையை நாயகன் சண்முக பாண்டியன் வளர்க்கிறார்.
-
கட்ஸ் திரை விமர்சனம்
16 Jun 2025நாயகன் ரங்கராஜ் சிறு வயதில் தாய், தந்தையை இழந்து, பின்னர் படித்து போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார்.
-
ஜூன் 20ல் வெளியாகும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்
16 Jun 2025பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் முதலாவது திரைப்படம் ’சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’.
-
அருண் பாண்டியன் நடிக்கும் அஃகேனம்
16 Jun 2025அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க் , ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா, கல்கி உள்ளிட்ட பலர் நடிப்பில், அறிமுக இயக்குநர் உதய்.
-
அடுத்த ஆண்டு 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தேதிகளை அறிவித்தது மத்திய அரசு
16 Jun 2025புதுடெல்லி : இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சாதி பற்றிய விவரங்களும் சேர்க்கப்படும்.
-
சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதி பதவியேற்பு
16 Jun 2025சென்னை : தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
-
மகளிர் உரிமைத்தொகைக்கு ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
16 Jun 2025தஞ்சை : வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
நா முத்துக்குமார் நினைவை போற்றும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
16 Jun 2025மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.
-
இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
16 Jun 2025சென்னை : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
சற்றே குறைந்த தங்கம் விலை
16 Jun 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 16) பவுனுக்கு ரூ.120 என குறைந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.74,440-க்கு விற்பனையானது.
-
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் தமிழ்நாடு கவர்னர் மாறவில்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
16 Jun 2025தஞ்சாவூர் : கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் அமையவிருக்கும் பல்கலைகழகத்துக்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம்.
-
'தமிழ் மொழி' நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
16 Jun 2025தஞ்சை : சுப்ரீம் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது
16 Jun 2025சென்னை : ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., (ஆயுதப்படை பிரிவு) ஜெயராமை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
-
டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது: ஐகோர்ட்
16 Jun 2025சென்னை : டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் மீதான வழக்கை ரத்து செய்து
-
தேனியில் அனைத்து துறைகள் ஆய்வு கூட்டம்: துணை முதல்வர் பங்கேற்பு
16 Jun 2025தேனி : தேனியில் நடைபெற்று வரும் அனைத்து துறைகள் சார்பிலான ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார்.
-
தமிழகத்தில் பார்லி. தொகுதிகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது : தஞ்சை திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
16 Jun 2025தஞ்சாவூர் : 'குடும்ப கட்டுப்பாடு செய்த காரணத்தினால், தமிழகத்திற்கு ஒரு ஆபத்து வந்து இருக்கிறது.
-
முழுமையான பதிலடி கொடுத்த பிறகே பேச்சுவார்த்தை குறித்து முடிவு : ஈரான் அறிவிப்பு
16 Jun 2025டெஹ்ரான் : இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முழுமையான பதிலடி கொடுத்த பிறகே, பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
-
சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்
16 Jun 2025கனடா : சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் 3 விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு
16 Jun 2025தஞ்சாவூர் : தஞ்சாவூர் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் அவர் பேசியதாவது:-
-
கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்
16 Jun 2025சென்னை : கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
-
விரைவில் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
16 Jun 2025லிமாசோல் : இந்தியா விரைவில் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
மலிவான அரசியல் செய்ய குற்றங்களை தேடி அலைகிறார் எடப்பாடி பழனிசாமி : அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
16 Jun 2025சென்னை : ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடக்காதா? அதை வைத்து ஏதேனும் மலின அரசியல் செய்ய முடியாதா?
-
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்
16 Jun 2025திருவனந்தபுரம் : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்.
-
தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
16 Jun 2025தஞ்சாவூர் : பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் வருகை தந்துள்ள முதல்வர்மு.க.ஸ்டாலின் அங்குள்ள முதல்வர் மருந்தகத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட