முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஃபேஸ்புக் பயன்பாடு

உலக அளவில் அதிக பேஸ்புக் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் மொத்தம் 24.1 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை 24 கோடிதான். கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டார்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகரித்துள்ளதாம்.

எரியும் பனிக்கட்டி

உலகில் முதன் முறையாக மீத்தேன் ஹைட்ரேட் எனும் எரிபொருளை சீன பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வருடமே, எரியக்கூடிய பனிக்கட்டி என அழைக்கப்படும் மீத்தேன் ஹைட்ரேட் வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்திருந்தது. எனினும் தற்போது தான் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த வாயுவானது பனிக்கட்டி போன்று தோற்றத்தினை கொண்டிருப்பதனாலேயே எரியும் பனிக்கட்டி என அழைக்கப்படுகின்றது. இயற்கை எரிபொருளாகக் காணப்படும் இவ்வாயு எவ்வாறு தோற்றம் பெறுகின்றது என்பது தொடர்பான விளக்கப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாயுவைக் கண்டறிய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் தென்கொரிய நாடுகளும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்த நிலையில்,  சீனா இதில் வெற்றிபெற்றுள்ளது.

நாள்தோறும் 200 உயிரினங்கள் அழிகின்றன

சூழல் மாசு உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 150-200 வகையான தாவரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சூழல் சமநிலை இழப்பால் டைனோசர்கள் அழிந்ததிலிருந்து தற்போது உலகம் எதிர் கொண்டு வரும் சூழல் அச்சுறுத்தல் முன்பை விட அதிகமாகும் என எச்சரிக்கின்றனர்.

ஆலமரம் ஆச்சரியம்

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இருக்கும் மாவட்டம் லண்டி கோட்டல். லண்டி கோட்டலில் இருக்கும் ஒரு இராணுவ முகாமில் தான் ஒரு ஆலமரம் நூறாண்டுகளுக்கு மேலாக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஒருவர்  மரம் தன்னை நோக்கி வந்ததாக கூறியதை அடுத்து இந்த மரத்தை சிறை வைத்தார்களாம்.  இன்றளவும் அந்த மரம் சங்கலிகளால் கட்டுப்பட்டு தான் வைத்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில், இந்த மரத்தை ஆணையை மீறி யாரேனும் செயற்பட்டால், அவர்களுக்கும் இதே தண்டனை என பிரிட்டிஷ் அதிகாரி கண்டித்தும் இருந்தாராம்.

புதிய கண்டுபிடிப்பு

கார்பன் டை ஆக்சைடை மீத்தேனாக மாற்றும் முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ரோடியம் என்ற நுண்துகள் மூலம் நிகழ்த்தப்படும் வேதிவினையால் உலக அளவில் ஏற்படும் மாசுபாட்டுக்கு முக்கிய காரணியாக விளங்கும் கார்பன் டை ஆக்சைடினை மீத்தேனாக மாற்ற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காலில் விழுவது

சக்திதான் எல்லா உறுப்புகளின் உருவாக்கத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது. இதை குறிப்பிட்ட வகையில் ஒருங்கிணைத்தால், ஒருவரின் உடலிலிருந்து சக்தி வெளிப்படுமாம். நம் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் நடப்பதாக, விஞ்ஞானிகள் நிரூபித்து இருக்கிறார்கள். அந்த சக்தியை பயன்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் காலில் விழும் வழக்கம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago