மெக்சிகோ நகரம் கொள்ளை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு பேர் போனது. தற்போது புவியியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. 1325 ஆம் ஒரு ஏரியின் மீது இந்த நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் துரதிருஷ்டம் ஆண்டு தோறும் சுமார் 3.2 அடிகள் வரை இந்த நகரம் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதற்காக ஆஸ்டெக் ஆட்சியாளர்கள் ஒரு செயற்கை தீவை உருவாக்கினர். மேலும் 1521 இல் நகரம் தகர்க்கப்பட்ட போது இடிபாடுகளின் மீது ஸ்பானியர்கள் புதிய மெக்சிகோவை நிர்மாணித்தனர். ஆனால் நகர வாசிகள் தரைக்கு கீழே இருக்கும் நீரைத்தான் நம்பி இருப்பதால் கடந்த 60 ஆண்டுகளில் நீர் 32 அடிக்கும் கீழே சென்று விட்டது. இல்லாவிட்டால் நகரம் ஏரிக்குள் ஸ்வாகா ஆகியிருக்கும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கலர் கலராக வண்ண மீன்கள் காலுக்கு அடியில் சுற்றித் திரிய அதன் மத்தியில் மேஜை நாற்காலி போட்டு சாப்பிடும் அழகிய ஹோட்டல் எங்கிருக்கிறது தெரியுமா.. தாய்லாந்தில் உள்ள ஹோசிமின் நகரில்தான் இப்படி ஓர் அழகிய அனுபவத்தை அளிக்கும் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் கால் பாதம் வரை நிரம்பியிருக்கும் ஹால் ஒன்றில் அழகிய கலர் கலர் மீன்கள் நீந்தி விடப்பட்டிருக்கும் அவற்றின் நடுவில் வாடிக்கையாளர்கள் உணவு அருந்துவதற்கான மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். அதில் அமர்ந்து உணவருந்துவது மிகவும் அற்புதமான அனுபவத்தை அளிப்பதாக உள்ளது.
பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள அணு கடிகாரத்தில், ஒரு வினாடி தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் செயற்கைக்கோள் ஊடுருவல், வானியல் மற்றும் தொலை தொடர்பியல் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
நாய்கள், சுண்டெலி, முஞ்சூறு மற்றும் சுறா போன்ற பாலூட்டிகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்ற கருத்து உள்ளது. ஆனால் அவற்றை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மியாமியில் உள்ள ரட்சர்ஸ் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி ஒருவர் மேற்கொண்ட ஆய்வில் நாய், சுண்டெலி உள்ளிட்ட மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என கண்டு பிடித்தார். பொதுவாக மனிதர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளை நுகர்ந்து அவை எவை என கூற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 1879-ம் ஆண்டில் விஞ்ஞானி புரோகா என்பவர் வெளியிட்ட கட்டுரையில் விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்று தெரிவித்திருந்தது பொய் என நிரூபணம் ஆகியுள்ளது.
இன்றைக்கு பல இடங்களிலும் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் அலுத்துக் கொள்கிறார்கள். தெரு வியாபாரிகள் சிலர் வாங்கக் கூட மறுத்து விடுகின்றனர். புரளி உண்மையை விட வேகமாக பரவுகிறது. இந்நிலையில் 2 ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. பழைய 2 ரூபாய் நாணயம் இருந்தால் விரைவில் லட்சாதிபதியாகி விடலாம். இது தொடர்பாக வெளியான செய்தி ஒன்றில் ஓஎல்எக்ஸ் தளத்தில் பழைய 2 ரூபாய் நாணயங்களை, பழங்கால பொருள்கள் சேகரிக்கும் நபர்கள் வாங்குவதாக விளம்பரங்கள் வந்துள்ளன. எனவே இவற்றின் மதிப்பு ரூ. 5லட்சம் வரை கிடைக்குமாம். அதிலும் 1994, 1995, 1997, 2000 அச்சிடப்பட்ட நாணயங்களுக்கு அதிக கிராக்கி. இணையதளத்துக்கு சென்று முறைப்படி பதிவு செய்து வழிமுறைகளை பின்பற்றினால் நல்ல விலைக்கு இவற்றை விற்கலாம் என்கின்றன ஊடக செய்திகள்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் 2 செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களான பாப் மற்றும் அலைஸ் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை பேசும் மொழி ஆங்கிலத்தைப்போல தெரிந்தாலும் அவை அர்த்தம் புரியாத வகையிலேயே இருந்ததாம். இந்த மொழி செயற்கை நுண்ணறிவு ரோபோக்களுக்கு மட்டுமே புரியுமாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |