சேலையை பெண்கள் மட்டும் தான் அணிய வேண்டுமா என்ன, நாங்களும் கட்டி அசத்துவோம்ல என கிளம்பிவிட்டால் மேற்கு வங்க ஆடை வடிவமைப்பாளர் ஒருவர். புஷ்பக் சென் என்ற அந்த துடிப்பு மிக்க 26 வயது இளைஞர்தான் தற்போது கொல்கட்டா வீதிகளில் சென்சேஷன். ஆடைகளுக்கு பாலின வேறுபாடு கிடையாது, அது பார்ப்பவரின் தலையில்தான் இருக்கிறது என உறுதிபட சொல்கிறார். தலையில் உச்சி குடுமியும், அடர்ந்த தாடியும், கட்டுமஸ்தான உடலுமாக புஷ்பக் சென், கவர்ந்திழுக்கும் வண்ணத்தில் சேலை கட்டி கொல்கத்தா வீதிகளில் நடந்து செல்லும் போது அனைவரின் கண்களும் இவரையே மொய்க்கின்றன. இவர் இத்தோடு விட்டாரா வெளிநாடுகளுக்கு சென்று சேலைகளில் பேஷன் ஷோ, தாஜ்மகால் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போட்டோ ஷூட் என அசத்தி வருகிறார். இவர் சேலையுடன் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ள புகைப்படங்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ரத்த அழுத்தம் சீராக, அதிக உடல் எடையை விரைவில் குறைக்க, வாயுத் தொல்லையிலிருந்து விடுபட, உடலில் இன்சுலின் அளவு சீராக, மலச்சிக்கல் பிரச்சினை இவை அனைத்தும் நீங்க, நாம் தினமும் எழுந்ததும் வெறும் 2 டம்ளர் தண்ணீர் குடித்தாலே போதும்.
கார்கள் தரையில் சீறிப் பாய்ந்த காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. மாறாக அவை விரைவில் வானில் பறக்க தயாராகி வருகின்றன. இதற்கான பல்வேறு முன்னோட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வந்த போதிலும் இதில் தென் கொரியாதான் முன் கை எடுத்துள்ளது. வெகு விரைவில் தனது நாட்டில் பறக்கும் டாக்ஸிகலை பயன்படுத்தப் போவதாக கடந்த 2020 இல் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது பறக்கும் கார் டாக்ஸியை வெற்றிகரமாக அந்நாடு பரிசோதித்துள்ளது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு Gyeonggi Province இல் உள்ள ஜிம்போ நகரில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பறக்கும் டாக்ஸியை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. ஜெர்மனி நிறுவனமான Volocopter இதற்கான பறக்கும் டாக்ஸியை வடிவமைத்து தந்துள்ளது. ஜிம்போவிலிருந்து தலைநகர் சியோல் வரை சுமார் 30 முதல் 50 கிமீ வரை இந்த பறக்கும் டாக்ஸி சேவையை செயல்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 2025க்குள் உறுதியாக இது தொடங்கப்பட்டு விடும் என்கிறது தென்கொரியா. அப்படியானால் விரைவில் நமது நாட்டிலும் நாமும் பறக்கும் டாக்ஸியில் விரைவில் பறக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை எனலாம்.
இன்றைக்கு அநேகமாக நமது தினசரி உணவில் இடம் பெறும் காய்கறி வகைகளில் கேரட் முக்கிய இடம் வகிக்கிறது. ஆரஞ்சு நிறத்தில் பச்சையாக தின்பதற்கேற்ற சுவையுடன் இன்றைக்கு கேரட் பயிரிடப்பட்டு கிடைக்கிறது. ஆனால் அதன் அசலான நிறம் என்ன தெரியுமா... 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் கேரட்டின் நிறம் ஊதா தான். கலப்பினங்கள் வாயிலாக மஞ்சள் மற்றும் வெள்ளி நிற கேரட்டுகள் உருவாகின. ஆரஞ்சு நிற கேரட்டுகளை நெதர்லாந்து (டச்சு) விவசாயிகள் பயிரிட்டு வந்துள்ளனர். மத்திய கால கட்டத்தில் ஊதா நிற கேரட்டை கலப்பினத்தின் மூலமாக இன்றைய சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றியவர்கள் அவர்கள் தான். இவை வளர்வதற்கு எளிதாக இருப்பதாக நம்பப்படுவதால் தொடர்ந்து இந்த நிறத்திலேயே பயிரிடப்பட்டு வருகின்றன.
இந்தியாவில், மஹாராஷ்டிராவில் உள்ள டென்கன்மால் போன்ற வறட்சி மிகுந்த பின்தங்கிய கிராமங்களில், தண்ணீர் சேகரித்து வருவதற்காகவே இரண்டு, மூன்று பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால் தண்ணீர் மனைவிகள் (water wives) எனக் குறிப்பிடப்படும் அவர்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது.
1984 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஜெர்மனி வீரர் Uwe Hohn என்பவர் தான் அதிகபட்ச தூரத்துக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார். அவர் எறிந்த தூரம் எவ்வளவு தெரியுமா 104.80 மீட்டர். அதற்கு முந்தைய சாதனை அமெரிக்காவைச் சேர்ந்த டாம் பெட்ரானோவ் ஈட்டி எறிந்த தூரம் 99.72. ஈட்டி எறிதலில் இதுவரை Uwe Hohn சாதனைக்கு அருகில் கூட செல்ல முடியவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


