முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உண்மை சீட்டா அழிந்தது யந்திர சீட்டா உயிர் பெற்றது

நாம் ஒரு விநோதமான யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். அதிகப்படியான அறிவியல் தாக்கத்தால் தொழில் நுட்ப மோகத்தில் மூழ்கியுள்ள நவீன யுகம். மறுபுறம் இயற்கை உயிரினங்கள் அழிந்து வரும் அவலம். இரண்டையும் சமநிலைப்படுத்த முடியாமல் மனித குலம் திணறி வருகிறது. உலகில் மிக வேகமாக ஓடக் கூடிய உயிரினம் சிறுத்தை இனத்தை சேர்ந்த சீட்டா. ஆனால் இந்தியாவை தாயகமாக கொண்ட சீட்டா கிட்டத்தட்ட அழிந்து விட்டது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட நமது நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு வாக்கில் சீட்டா முற்றிலும் வேட்டையாடி அழிக்கப்பட்டிருந்தது. சிவிங்கி என்று அழைக்கப்படும் ஆசிய சீட்டா, இந்தியாவில் 1952க்குப் பின் காணப்படவில்லை. சத்தீஸ்கரைச் சேர்ந்த இராமானுஜ பிரதாப் சிங் என்ற மன்னர் வேட்டைக்குப் பிரபலமானவர். அம்மன்னர், 1,150 புலிகளைக் கொன்றவர். இந்தியாவில் காணப்பட்ட கடைசி சிவிங்கியையும் இவர்தான் கொன்றார். அது கால்நடைகளை தாக்குவதாலும், விவசாயிகளின் அச்சத்தினாலும், முன்பு அரசர்களின் வேட்டையாடுதலுக்கான கவுரவத்தினாலும் இந்த சிறுத்தை இனம் அழிவை சந்தித்துள்ளது. தற்போது அதை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக ஆப்பிரிக்க காடுகளில் இருந்து கொண்டு இந்திய வனங்களில் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சரி இப்போ இயந்திர சீட்டாவுக்கு வருவோம். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் இயங்கி வரும் எம்ஐடி யின் கணிணி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் தான் தற்போது இந்த இயந்திர சீட்டாவை உருவாக்கியுள்ளது.  தற்போது வேகமாக வளர்ந்து வரும் ரோபோட்டிக்ஸ் துறையில் ஆர்வம் காட்டி வரும் இன்றைய உலகில் இந்த இயந்திர சீட்டா மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும் என அதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். இவை மனித குலத்தின் சாதனை என்பதா? இயற்கையை அழித்து விட்டு இயந்திரங்களை நோக்கி ஓடும் ஓட்டத்தை வேதனை என்பதா?  காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

கழிவுகள் மின்சக்தியாக ...

நுண்ணுயிர் எரிபொருள் செல்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை மின்சக்திக்கு மாற்றும் புதிய முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். குறைவான அளவு சிறுநீரில் ஸ்மார்ட்போன்கள் ஆறு மணி நேரம் சார்ஜ் ஆகும். ஆனால் இந்த முறை மூலமாக ஸ்மார்ட்போனுக்கு மூன்று மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியுமாம். இதற்காக நுண்ணுயிர் எரிபொருள் செல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நாம் இயற்கையாக உற்பத்தி செய்யும் கழிவுகளை நுண்ணுயிரிகள் நேரடியாக மின்சாரமாக மாற்றுகிறது. அவை துணைப்பொருளாக எலக்ட்ரான்களை தயாரிக்கின்றன. எலக்ட்ரான்கள் உற்பத்தி ஆவதன் மூலம் மின்சாரம் உருவாகிறது. இந்த நுண்ணுயிரிகள் 30 முதல் 40 மில்லிவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இது ஸ்மார்ட்ஃபோன், சிறிய விளக்குகளை சார்ஜ் செய்ய போதுமானதாகும்" என்றார்.

மாரடைப்பை கண்டறியும்

கார் ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு வந்தால் கண்டறியும் தொழில்நுட்பவசதியை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள். இதன் மூலம் மாரடைப்பால் ஏற்படும் வாகன விபத்துகள் தடுக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜப்பான் கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா, ஆய்வாளர்களுடன் இணைந்து ஓட்டுநரின் மனநிலையை உணர்ந்து எச்சரிக்கை செய்யும் வசதியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். உயர் அழுத்த எலெக்ட்ரோ கார்டியோகிராம் (ஈ.சி.ஜி.) மற்றும் பல மருத்துவ அளவீடுகளை வைத்து ஓட்டுநரின் மனநிலையை கார் உணரும் என்று அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர் கேவ்யன் நஜாரியன் கூறுகிறார். இந்த ஆய்வாளர் குழுவின் சோதனை  2020-ம் ஆண்டு நிறைவு பெறுமாம்.

ஜூனோ விண்கலம்

வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். இந்த விண்கலம், வியாழன் கிரகத்தின் வளிமண்டலம், மேகங்கள் உள்ளிட்டவை குறித்தும் புதிய தகவல்களை அனுப்பியிருக்கிறது. வியாழன் கோளில் புயல் வீசியிருப்பதும், அம்மோனியா ஆறுகள் இதன் மூல் தெரியவந்துள்ளது.

ஐஸ் வாட்டர்

நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் ஜில் தண்ணீரையே பருகுகின்றனர். இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜில் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் செரிமானம் ஆவதில் பிரச்சனை மற்றும் உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

அடையாளம் காண

கத்திரிக்காயில் ஓட்டை இருந்தால் உள்ளே புழு இருக்கும். அதனால் சிறு ஓட்டை கூட இல்லாமல் கவனமாக வாங்கவேண்டும். காம்பு நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். குச்சி போன்று இருந்தால் காய் முற்றல் என்று அர்த்தம். வெள்ளை வரிகள் இருந்தால் காய் கசக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago