சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற நவீன சோப் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். சோயா பீன்ஸ், தேங்காய் போன்றவற்றின் கொழுப்பு அமிலங்கள், மக்காச்சோளத்தில் இருந்து பெறப்படும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் கலவையால் தயாரிக்கப்படுகிறது. இந்த சோப்பின் ஓ.எப்.எஸ். எனப்படும் மூலக்கூறுகளால் குறைந்த அளவிலான சோப்பை பயன்படுத்தி அதிகமான கறைகளை அகற்றலாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இன்றைக்கு நவ நாகரிக நங்கைகளின் பிரத்யேகமான பேஷன் பொருளாக இருப்பது லிப்ஸ்டிக். ஆடைகளின் வண்ணங்களுக்கு ஏற்ப விதவிதமான லிப்ஸ்டிக்குகளை இன்றைய டீன்ஸ்கள் தங்களது ஹேண் பேக்கிலேயே வைத்து செல்லும் காலமாகி விட்டது. அனைவரும் நினைப்பது போல இது மேல் நாட்டு நாகரிகம் அல்ல. லிப்ஸ்டிக்கை முதன் முதலில் கண்டு பிடித்தவர்கள் இந்தியர்கள். சிந்து சமவெளி நாகரிகத்திலேயே லிப்ஸ்டிக் பயன்பாடு குறித்த பதிவுகள் உள்ளன. சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாப், ராஜஸ்தான் பெண்டிர் மணமகனை அலங்கரிக்க விதவிதமான இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி லிப்ஸ்டிக் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கோவிட் - 19 என்ற வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக உருப்பெற்றுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கானோர் இதற்கு பலியாயினர். உயிரை காப்பாற்றிய சின்ட்ரோம் கே நோய் குறித்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இரண்டாம் உலக போரின் போது நாஸி படையினர் யூதர்களை கொத்து கொத்தாக குறிவைத்து கொலை செய்தனர். அதனால் அவர்களை காப்பாற்றுவதற்காக சின்ட்ரோம் கே என்ற போலியான நோய் ஒன்று இருப்பதாக இத்தாலி டாக்டர்கள் பரப்பினர். இதன் மூலம் மருத்துவமனைக்கு வந்த யூதர்களை அவர்கள் நாஸிக்களிடமிருந்து காப்பாற்றினர். இதனால் யூதர்களை அங்கு தனிமைப்படுத்தி டாக்டர்கள் பாதுகாத்தனர். அவர்களை தொடர்பு கொண்டால் அந்த கொடிய நோயால் நாமும் மரணித்து விடுவோம் என உண்மையாகவே நாஸிக்கள் அஞ்சி யூதர்களை நெருங்கவில்லை.
செவ்வாய் கிரகத்தில் நாசாவின் இன்சைடர் விண்கலம் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தகவலை அனுப்பியது. அதில் செவ்வாய் கிரகத்தில் இருந்து தொடர்ந்து ஒரு வித மர்மமான ஒலி தொடர்ந்து இருந்து வருவதை அது பதிவு செய்து அனுப்பியுள்ளது. இது அங்கு வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்களின் எழுப்பும் ஒலியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்த போதிலும் இதை விஞ்ஞானிகள் இதுவரை அதை உறுதி செய்யவில்லை என்ற போதிலும் செவ்வாயிலிருந்து எழும் ஒலியின் மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பதுதான் ஆச்சரியமானது.
தொழில் நுட்ப யுகம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்றால் அது மிகையல்ல. முன்பு ஒரு ஆவணத்தை நகலெடுக்க வேண்டும் என்றால் மிகப் பெரிய போட்டோஸ்டெட் இயந்திரங்கள் தேவைப்பட்டன. தற்போது கம்பியூட்டர் யுகத்தில் ஸ்கேனர்கள் வந்துவிட்டன. தற்போது அவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில், கையடக்க காப்பி பேஸ்ட் எந்திரம் வந்து விட்டது என்றால் ஆச்சரியம் தானே.. இந்த நமக்கு தேவையான எதன் மீதும் வைத்து தேவையான பரப்பில் ஷேவிங் ரேஷரை இழுப்பது போல ஒரு இழு. அவ்வளவுதான் அப்படியே எழுத்தோ, படமோ காப்பி ஆகிவிடும். பின்னர் நமக்கு தேவையான காகித்த்தில் வைத்து மீண்டும் ஒரு இழு. அவ்வளவுதான் அப்படியே பிரிண்ட் ஆகிவிடும். கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா..
உலகிலேயே மிகவும் அமைதியான இடம் எங்குள்ளது என்ற தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இயற்கையான இடமோ, நகரோ அல்ல. மாறாக அது ஒர் அலுவலகம். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ரெட்மாண்ட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மைக்ரோஷாப்ட் தலைமையகத்தில் உள்ள பரிசோதனை கூடம்தான் அந்த இடம். இந்த இடத்தில் உள்ள சத்தத்தின் அளவு வெறும் 20 டெசிபலுக்கும் கீழே உள்ள இடம். இதன் மூலம் முந்தைய சாதனைகளை இந்த இடம் முறியடித்துள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


