முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வாட்ஸ்அப் இல் புதிய அப்டேட்

உலகளவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், அவ்வப்போது வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை பூர்த்திசெய்யும் விதமாக புது புது வசதிகளை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் அனுப்பிய தகவலை டெலிட் செய்யும் வசதிக்கு, கூடுதல் நேரம் வழங்கிட திட்டமிட்டுள்ளது. தற்போது, வாட்ஸ்அப்பில் நீங்கள் அனுப்பிய தகவலை 1 மணி நேரம் 8 நிமிடங்களுக்கு பிறகு டெலிட் செய்திட முடியாது. ஆனால், புதிய அப்டேட்டில் 2 நாள் 12 மணி நேரத்திற்குள் டெலிட் செய்யும் வகையிலான வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட உரையாடலிலும், குழு உரையாடலிலும் அனுப்பிய தகவல்களை அழித்திட கூடுதல் நேரம் கிடைக்கிறது. வெளியான செய்தியின்படி, இந்த புதிய அப்டேட் வசதி வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.410 இல் காணப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் அனைத்து சாதனங்களுக்கும் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டவு சொற்கள்

இணையதள ஹேக்கிங் நடவடிக்கைகளை தடுக்க பலர் பல்வேறு கடவுச்சொற்களை கணினிகளிலும், மொபைலிலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிகமான பயனர்கள் பயன்படுத்திய கடவுச்சொல் 123456 என்பது கீப்பர் செக்யூரிட்டி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெப்பத்தை தணிக்க

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பைக் குறைக்க பல்வேறு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின், புதிய முயற்சியாக கால்சைட் தூசுகளை வளிமண்டலத்தில் தூவுவதன் மூலம் பூமியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். கால்சைட் முறையால் வளிமண்டலத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ஓசோன் படலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கால்சைட் தூசுப்படலம் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காரணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

மதிக்கும் பிராணி

காகிதப் பணத்தை உலகில் முதன்முதலாகப் புழக்கத்துக்கு விட்டவர்கள் சீனர்கள்தான். கி.மு. 119-ஆம் ஆண்டிலேயே சீனர்கள் காகிதப் பணத்தை உருவாக்கிவிட்டனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டையும் பல விலங்கின ஆண்டுகளாகக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் எலி ஆண்டையே மிகவும் புனிதமாகக் கருதுகிறார்கள்.

பகவதி அம்மன்

கொடுங்களூர் கோயிலில் உள்ள பத்ரகாளி அம்மன் எட்டு கரங்களுடன் அதி உக்கிரமாக அருள் பாலிக்கிறார். இதற்குமதுரையை எரித்த பின் கண்ணகி, உக்கிர கோலத்தில் இங்கு வந்து அம்மனை வேண்டி தவத்தில் ஈடுபட்டதை அடுத்து கண்ணகியை தன்னுள் இழுத்து, அவருக்கு முக்தி வழங்கியதால் தான் இந்த உக்கிரமாம்.

பெரிய மூளை

ஆர்க்டிக் பகுதியில், கரிம மாசுபாடுகள், சுகாதார பிரச்சினைகளால், வனவிலங்குகளில் பெரிய மூளை கொண்ட, போலார் கரடிகளுக்கு ஹார்மோன் பிரச்னை, மூளை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago