முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பேச தாமதமாகும்...

நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் செல்போன் மற்றும் டேப்லெட்களில் விளையாடி பொழுதை கழிக்கு குழந்தைகள் பேசி பழகுவதில் காலதாமதமாகுவதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். 6 மாதம் முதல் 2 வயது வரையிலான 894 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. எனவே குழந்தைகளிடம் இருந்து அதை தவிர்க்க வேண்டும்.

செவ்வாயில் ஆக்சிஸன் தயாரித்த நாசா

செவ்வாயில் முதன்முறையாக நாசா தனது பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் மூலம் ஆக்சிஸனை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள மோக்ஸி என்ற இயந்திரம் மூலம் இந்த சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் செவ்வாயில் உள்ள சூழலை பயன்படுத்தி, அதில் உள்ள பெரும்பான்மையான கார்பன் டை ஆக்ஸைடை  ஆக்ஸிசனாக மாற்றியுள்ளது. இந்த முயற்சியானது மனிதர்கள் எதிர்காலத்தில் செவ்வாயில் குடியேறுவதற்கான ஒரு அச்சாரமாக எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்து வரும் மனித உடலின் வெப்பம் கடந்த 10 ஆண்டுகளில் 0.05F சரிவு

பொதுவாக ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் என்று நாம் படித்திருப்போம். 1851 ஆண்டில் கார்ல் ரெய்னஹோல்டு என்பவர் தெர்மோமீட்டரை கண்டு பிடித்தார். அவர் 10 தடவை 25000 பேர்களிடம் ரீடிங் எடுத்து, சராசரியாக மனித உடலின் வெப்ப நிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் என்று அறிவித்தார். இதையே அனைவரும் வேத வாக்காக எடுத்துக் கொண்டனர். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி மனித உடலின் வெப்பநிலை 1-2 டிகிரி குறைவாகவே காணப்படுவது தெரியவந்துள்ளது. பல்வேறு பதிவுகளில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் மேற்கொண்ட சோதனையில் கடந்த 100 ஆண்டுகளில் மனித உடலின் வெப்ப நிலை1.5 பாரன்ஹீட் குறைந்துள்ளது. இது போக கடந்த சில ஆண்டுகளில் இந்த குறைகின்ற வேகம் அதிகரித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டில் 0.05 பாரன்ஹீட் வெப்பம் குறைந்து வந்துள்ளது. வழக்கம் போல புவிவெப்பமயமாதல் என்ற பல்லவி பாடப்படுகின்ற போதிலும் இதற்கான சரியான அறிவியல் காரணம் இன்னும் தெரியவரவில்லை என்பதுதான் உண்மை.

நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண்

நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண்ணை தெரியுமா. அவர் பெயர் வங்காரி மாத்தாய். கென்யா நாட்டின் இகதி எனும் சிறிய ஊரில் 1940-ம் ஆண்டு ஏப்ரல் 1 இல்  பிறந்தவர் வங்காரி மாத்தாய். பெண்கள் கல்வி கற்க முடியாத சூழலில் இவர் படித்து அமெரிக்காவில் பட்டம் பெற்றார். மேலும் கென்யாவின் முதல் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர். நைரோபி பல்கலையில் பேராசிரியரானார். முதல் பெண் பேராசிரியர் என்ற பட்டத்தையும் பெற்றார். மார்ட்டின் லூதர் கிங் போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் தனது நாட்டில் இயற்கை வளத்தை காப்பதற்காக பசுமை பட்டை இயக்கத்தை உருவாக்கினார். அதன் மூலம் 30 ஆண்டுகளில் 3 கோடி மரங்களை நட முயற்சி மேற்கொண்டார். இயற்கை, சுற்றுச்சூழல் மட்டுமின்றி, பெண்கள் கல்வி, ஒடுக்குமுறை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினார். இவரது இயக்கம் ஆப்பிரிக்கா முழுவதும் பரவியது. இவரது போராட்டத்தை ஒடுக்க முயற்சித்த அரசின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இவருக்கு கிடைத்த செல்வாக்கால் தேர்தலில் போட்டியிட்டு அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பதவி வகித்தார். இயற்கை வளத்தை மேம்படுத்த எண்ணற்ற முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இதன் காரணமாக அவருக்கு 2004-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. 

உவ்வே... இனிமேலாவது புகையிலை பொருள்களை சாப்பிடாதீர்கள்

இந்தியாவில் தமிழகம் தவிர்த்து பெரும்பாலான வட மாநிலங்களில் பெரும்பான்மையோர் புகையிலை பொருள்களை பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு குறைந்த பட்ச லாகிரி வஸ்துவாக கருதப்படுகிறது. வட மாநிலங்களில் இரு பாலரும் இதை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருளை கேட்டால் இனி வாயில் வைக்கும் போதெல்லாம் அதன் நினைவு வரும். ஆம், நாம் கழிக்கும் சிறுநீரில் அதிகமாக யூரியா என்ற ரசாயனம் காணப்படுகிறது. இந்த யூரியாதான புகையிலை பொருள்களில் சுவையூட்டியாக சேர்க்கப்படுகிறதாம். இது தொடர்பாக மத்திய நோய் தடுப்பு கண்காணிப்பகமே அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. உவ்வே.. இனிமேலாவது புகையிலை பொருள்களை சாப்பிடாதீர்கள் மக்களே...

விண்வெளியின் கருந்துளையிலிருந்து வெளிச்சம்

விண்வெளி அறிவியல் குறித்து உற்று கவனித்து வருபவர்களுக்கு தெரியும் பிளாக் ஹோல் என்பது குறித்து. பிரபஞ்சத்தில் அறியமுடியாத புதிரான அப்பகுதி குறித்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் தலையை பிய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மனித முயற்சிகளுக்கு அப்பால் விரியும் அதை நோக்கி பயணிக்கும் துணிச்சலும் ஆற்றலும் இன்னும் மனித இனத்துக்கு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சூழலில் தான் முதன்முறையாக பிளாக் ஹோலின் பின் புறத்திலிருந்து வெளிச்சம் வருவதை விண்வெளி வீரர்கள் கண்டுள்ளனர். சுமார் 1800 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து இந்த ஒளி வநதுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அரிதான நிகழ்வு குறித்து நேச்சர் இதழிலும் அறிவியல் கட்டுரை ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago