கர்நாடக மாநிலம் தஷிண கன்னட மாவட்டத்தில் உள்ள கடப்பா தாலுகாவில் ராமகுஞ்சா கிராமத்தில் பாண்டவர் குகை எனப்படும் தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கல்லால் ஆன கல்லறை ஒன்று இருப்பதாக உள்ளூர் வாசிகள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் எம்எஸ்ஆர்எஸ் கல்லூரியின் தொல்லியல் துறை தலைவர் பேரா. முருகேஷி மற்றும் ஆய்வு மாணவர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்லால் ஆன கல்லறையை கண்டறிந்தனர். அது மட்டுமின்றி அதன் மேற்புறத்தில் உள்ள கல்லில் வட்ட வடிவில் அல்லது பூஜ்ய வடிவில் எழுதப்பட்டிருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இது குறித்து முருகேஷி கூறுகையில், அதன் மேற்புறத்தில் காணப்படுவது வட்டமா அல்லது அப்போதே இங்கு வாழ்ந்த மக்கள் பூஜ்யத்தின் பயன்பாடுகளை அறிந்துள்ளனரா என்பது வியப்பாக உள்ளது. இது குறித்து மேலும் ஆய்வு செய்தால் பல்வேறு வரலாற்று உண்மைகள் தெரியவரும் என்றார். கற்கால தொல்லியல் எச்சத்தின் மீது எழுதப்பட்டுள்ளது பூஜ்யமா என்ற கேள்வி விஞ்ஞானிகள் மட்டுமின்றி பொது மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கார்கள் தரையில் சீறிப் பாய்ந்த காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. மாறாக அவை விரைவில் வானில் பறக்க தயாராகி வருகின்றன. இதற்கான பல்வேறு முன்னோட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வந்த போதிலும் இதில் தென் கொரியாதான் முன் கை எடுத்துள்ளது. வெகு விரைவில் தனது நாட்டில் பறக்கும் டாக்ஸிகலை பயன்படுத்தப் போவதாக கடந்த 2020 இல் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது பறக்கும் கார் டாக்ஸியை வெற்றிகரமாக அந்நாடு பரிசோதித்துள்ளது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு Gyeonggi Province இல் உள்ள ஜிம்போ நகரில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பறக்கும் டாக்ஸியை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. ஜெர்மனி நிறுவனமான Volocopter இதற்கான பறக்கும் டாக்ஸியை வடிவமைத்து தந்துள்ளது. ஜிம்போவிலிருந்து தலைநகர் சியோல் வரை சுமார் 30 முதல் 50 கிமீ வரை இந்த பறக்கும் டாக்ஸி சேவையை செயல்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 2025க்குள் உறுதியாக இது தொடங்கப்பட்டு விடும் என்கிறது தென்கொரியா. அப்படியானால் விரைவில் நமது நாட்டிலும் நாமும் பறக்கும் டாக்ஸியில் விரைவில் பறக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை எனலாம்.
இதய பாதிப்புக்கு ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்படுவது போல் சிறுநீரகம் செயலிழந்தால் பொருத்துவதற்கு செயற்கை சிறுநீரகத்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வில்லியம் பிஷல், சுவோராய் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். கையடக்க வடிவிலான இந்த கருவி, காபி கப் அளவில் நானோ தொழில் நுட்ப முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்பை பயன்படுத்தி அதில் சிறுநீரக முடிச்சுகளில் இருந்து திசு செல்களை எடுத்து சல்லடையில் தேனடை உருவாக்குவது போல் செல்களை வளர வைக்கிறார்கள். பின்னர் அந்த எந்திரத்தை அடிவயிற்றுக்குள் வைத்து சிறுநீரக ரத்த நாளங்களுடன் இணைத்து பொருத்தி வைத்து விடுவார்கள். இந்த செயற்கை கருவி ரத்த சுத்திகரிப்பு மட்டுமின்றி இயற்கையாக சிறுநீரகம் செய்யும் வேலைகளை செய்யும்.
ரேஷன் கடைகளில் ஸ்வைப் மிஷின் வரப்போவதாக சொல்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே கோயிலுக்குள் நுழைந்து விட்டது ஸ்வைப் மிஷின். திருச்சி மாவட்டம் திருவரங்கம் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஸ்வைப் மிஷின் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பதியிலும் இந்த மிஷின் வைக்கப்பட்டுள்ளதாம்.
whats app செயலியை திறக்காமலேயே நாம் நமது நண்பர்களுக்கு... நண்பிகளுக்கு மெசேஜ் அனுப்ப முடியுமா.. இதென்ன புது கதையா இருக்கு என்பவர்களுக்குத் தான் இந்த தகவல்.. முடியும்.. எப்படி.. அதற்கு முதலில் Google Assistant செல்லுங்கள்..அதில் send the whatsapp message to XXX அதாவது XXX என்ற இடத்தில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர் பெயரை கூற வேண்டும்.. பின்னர் அவருக்கு அனுப்ப வேண்டிய வாய்ஸ் மெசேஜையும் பதிய வேண்டும்..இப்போது send என்பதை கிளிக் செய்தால் நண்பரின் வாட்ஸ் அப்புக்கு உங்கள் வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கும்.. இது எப்படி இருக்கு...
பியா...பெண்களுக்கு கர்ப்பம் குறித்த பயத்தை ஏற்படுத்தும் நோய்தான் டோகோபோபியா. இந்த நோயானது இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது. முதல் வகையானது கர்ப்பம் குறித்த எந்த முன் அனுபவமும் இல்லாமல் குழந்தை பிறப்பு குறித்து பிறர் கூறுவது கேட்டு அவர்களுக்கு ஏற்படும் அச்சம். இரண்டாவது வகை முந்தைய கால கர்ப்ப காலத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக ஏற்படும் அச்சம். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களது உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களது பயத்தை போக்கி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்
27 Jan 2026மதுரை: ஜெயலலிதா ஆட்சி அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கும்பகோணத்தில் இன்று நடைபெறும் இ.யூ.மு.லீக் மாநாட்டில்பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
27 Jan 2026சென்னை, கும்பகோணத்தில் இன்று (ஜன.28) நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
-
சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
27 Jan 2026சென்னை, வரும் 02.02.2026 மற்றும் 03.02.2026 அன்று நடைபெறவுள்ள "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு-2026" தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படவுள்ளத
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று ஆரம்பம்
27 Jan 2026டெல்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் போராட்டம்; 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
27 Jan 2026மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
-
சென்னை, கிண்டியில் ரூ.417 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான மருத்துவமனை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
27 Jan 2026சென்னை: சென்னை கிண்டியில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
கர்நாடகா மாநிலத்தில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: சித்தராமையா, சிவக்குமார் கைது
27 Jan 2026பெங்களூரு: கர்நாடகாவில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற சித்தராமையா, சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
தே.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன்: த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் விளக்கம்
27 Jan 2026சென்னை: த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தான் டி.டி.வி.தினகரன் விரும்பினார் என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி, இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
கதாநாயகியாக இருக்கும்: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து தஞ்சையில் கனிமொழி எம்.பி. பேச்சு
27 Jan 2026தஞ்சாவூர், தி.மு.க.
-
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
27 Jan 2026சென்னை, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன.
-
18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
-
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Jan 2026சென்னை, பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு என்று உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது என்ற
-
த.வெ.க.வுடன் ராமதாஸ் கூட்டணியா?
27 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி: இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
தென்தமிழகத்தில் ஐந்து நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
27 Jan 2026சென்னை: தென்தமிழகத்தின் வரும் பிப்.1 வரை 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ வர்த்தக ஒப்பந்தம் முடிவானது: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ஒப்பந்தங்களின் தாய் வர்த்தக ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்கும்படி கோரிக்கை
27 Jan 2026டெல்லி, பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
27 Jan 2026- நெல்லை நகரம் லட்சுபி நரசிங்க பெருமாள் வருசாபிசேகம்
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தந்த பல்லக்கு, மாலை தங்க குதிரை வாகனம், அம்பாள் தங்க பல்லக்கு
-
இன்றைய ராசிபலன்
27 Jan 2026 -
இன்றைய நாள் எப்படி?
27 Jan 2026


