முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கார்/ பைக்குகளுக்கு நைட்ரஜன் நிரப்பலாமா

நமது பைக் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு டயர்களில் ஏர் நிரப்புவது வழக்கம். அவை பொதுவான காற்றுதான். ஆனால் தற்போது புதிதாக சில பெட்ரோல் நிலையங்களில் நைட்ரஜன் வாயு நிரப்புகின்றனர். இவை வாகனங்களுக்கு நல்லதா... கொஞ்சம் பார்க்கலாமா...இந்த வகையான காற்று தான் ரேஸ் கார்/பைக் டயர்களில் நிரப்பப்படுகிறது. இந்த நைட்ரஜன் காற்றை நம் டயரில் அடைப்பது மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. வாகனங்களில் நைட்ரஜன் ஏர் அடைக்கப்படுவதால் டயர் ஏர் பிரஷர் குறையாது. மேலும் பிரஷர் அளவை துல்லியமாக கணக்கிடும் எந்திரங்கள் தற்போது வந்துள்ளதால் டயருக்கு தேவையான துல்லியமான பிரஷர் கிடைக்கும். முழுமையாக நைட்ரஜன் ஏர் இருப்பதால் அது இரும்புடன் சேர்ந்து ரியாக்ட் ஆகாமல் இருக்கும். இதனால் துரு பிடிக்காது. பஞ்சர் ஏற்பட்டாலும் காற்று வெளியேற சாதாரண டயரை விட சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் டயரின் வாழ்நாள் அதிகரிக்கும். ஆகவே இனிமேல் உங்கள் சாய்ஸ்...நைட்ரஜன் தானே.

ஊழியர்களுக்கு சுதந்திரம்

ஆப்பிள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களை விட மைக்ரோசாப்ட் நிறுவனமே ஊழியர்கள் புதிய சிந்தனைகளுடன் பணிபுரிய சுதந்திரம் அளிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் வேலைவாய்ப்பு குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமர் பிர்வாத்கார் என்பவரின் நிறுவனம் ஆய்வு நடத்தியது.இதில், பேஸ்புக் நிறுவனம் ஊழியர்களிடையே புதிய சிந்தனைகளை விதைக்கத் தவறிவிட்டது எனவும், ஆப்பிள் நிறுவனத்தை விட மைக்ரோசாப்ட் நிறுவனமே ஊழியர்களை புதிய சிந்தனைகளுடன் பணியாற்ற அனுமதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வரிசையில் கூகுள், ஐபிஎம் போன்ற நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

மிகவும் உயரமான மலைப்பிரதேசங்களில் வளரும் அரிய வகை மலர் கண்டுபிடிப்பு

மிகவும் உயரமான இடங்களில் வளரும் அரிய வகை மலரை கண்டறிந்துள்ளனர். சீனாவின் யுன்னான் பிரதேசத்தில் உள்ள துணை ஆல்பைன் மலைப்பகுதியில் சுமார் 3590 மீட்டர் உயரத்தில் இந்த செடி வளர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. Entosthodon elimbatus என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த செடி நான்கு முதல் எட்டி மிமீ உயரம் வரை வளரக் கூடியது. மேலும் பாறைகளின் பிளவுகளில் உள்ள மண்ணில்தான் இது வளருமாம். இந்த விசித்திரமான தாவரம் குறித்த ஆய்வு கட்டுரை அறிவியல் இதழ்களிலும் கடந்த 2020இல் வெளியிடப்பட்டன.

தானியங்கி சைக்கிள்

தானியங்கி கார்கள் தயாரிப்பில் வெற்றியடைந்துள்ள கூகுள் நிறுவனம் விரைவில் தானியங்கி சைக்கிள்களை நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் அறிமுகம் செய்யவுள்ளது. தானாக ஓட்டும் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த சைக்கிள்களால் பொருளாதாரம் முன்னேறுமாம்.

செல்போனை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா

தொலைபேசியை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைக்கு அனைவரின் கைகளிலும் தவழும் செல்போனை கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா...மோட்டரோலா நிறுவனத்தின் ஜான் எப் மிட்சல், மார்ட்டின் கூப்பர் ஆகிய இருவரும் சேர்ந்து முதல் கம்பி்யில்லா ரேடியோ ஒலி அலைகள் மூலம் செயல்படும் செல்போனை 1973ம் ஆண்டு தயாரித்தனர். அதன்மூலம் கம்பியில்லா செல்போன் தொழில் நுட்பத்துக்கு வழிவகுத்தனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன் 2 கிலோ எடையுடன் இருந்தது. பின்னர் 1983 முதல் எடை குறைவான செல்போன்கள் விற்பனைக்கு வரத்தொடங்கின.

குட்டித் தூக்கம்

பரபரப்பான வேலைக்கு நடுவே மூளைக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுத்தால் அதாவது குட்டித்தூக்கம் போட்டால் புத்துணர்ச்சியை பெறலாம். தொடர்ந்து வேலை செய்யாமல் நடுவில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நினைவுத் திறன் அதிகரிக்கும். குட்டித்தூக்கம் மூலமாக மன அழுத்தம் குறையும். மேலும், ஸ்ட்ரெஸை எளிதாக நம்மால் கையாள முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago