முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பூனை விரும்பிகளுக்கான சிறப்பு புத்தக மையம்

புத்தகப் பிரியர்களுக்கு என விதவிதமான புத்தகக் கடைகள், நூலகங்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் உள்ளன. ஆனால் பூனை பிரியர்களுக்கான வித்தியாசமான புத்தக கடை எங்காவது உள்ளதா என்றால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பெயர் Mon Chat Pitre. பிரான்ஸ் நாட்டில் உள்ளAix-en-Provence என்ற மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய புத்தக கடைதான் பூனை பிரியர்களுக்கான வித்தியாசமான புக் ஸ்டோர் ஆகும். இங்கு விதவிதமான புத்தகங்கள் மட்டுமின்றி விதவிதமான பூனைகளுடன் கொஞ்சியபடி புத்தகங்களை பார்வையிடவும், படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடை முழுவதும் பூனைகள் ஓடியாடி விளையாடுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் தம்பதிகளான Solène Chavanne மற்றும் Jean-Philippe Doux ஆகியோர்தான் இக்கடைக்கு உரிமையாளர்கள். அங்கு பூனைகளை கொஞ்சியபடி பார்வையாளர்கள் புத்தகங்களை பார்வையிடலாம் என்பது பூனை விரும்பிகளை உற்சாகம் கொள்ள செய்துள்ளது. எப்படி ஒரு வித்தியாசமான யோசனை பாருங்கள்..

உலகிலேயே சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நாடு எது தெரியுமா?

உலகிலேயே சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நாடு எது தெரியுமா..உலகிலேயே அழகிய நாடு என வர்ணிக்கப்படும் பிரான்ஸ்தான் அது. ஐநாவின் சுற்றுலா கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 2017 இல் ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்ஸ் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 86.9 மில்லியன். இதற்கு அடுத்தபடியாக அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்த நாடு ஸ்பெயின். அங்கு விசிட் அடித்தவர்கள் எண்ணிக்கை 81.8 மில்லியன். அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றவர்கள் 76.9 மில்லியன், சீனா-60.7 மில்லியன்,இத்தாலி - 58.3 மில்லியன் என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

மிளகு ஓரிஜினலா, கலப்படமா...

நாம் வாங்கும் பொருள் ஓரிஜினலா கலப்படமா என்ற குழப்பம் எப்போதும் இருக்கும். அதிலும் குறிப்பாக அதிக விலை கொடுத்து வாங்கும் மிளகில் கலப்படத்தை எப்படி கண்டு பிடிப்பது..  இதற்காக  சோதனைச்சாலைக்கெல்லாம் செல்ல வேண்டியதில்லை.. அதை நீங்கள் வீட்டிலேயே வைத்து கண்டுபிடித்து விடலாம்.. எப்படி என்று பார்க்கலாமா... சிறிய அளவு கருப்பு மிளகு எடுத்து மேஜை மீது வைத்து கட்டை விரலால் இந்த மிளகை அழுத்தவும். அல்லது நசுக்கவும். மிளகு அவ்வளவு எளிதில் உடையாது. ஆனால் அதில் கலப்பட மிளகு இருந்தால் நீங்கள் அதை நசுக்க முடியும். நசுக்கப்பட்ட மிளகு ஒளி வெளிர் கருப்பட்டிகளாக மாறும். மிளகை சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போடவும். மிளகு தரமானதாக இருந்தால் தண்ணீரின் அடியில் மூழ்கி விடும். மிளகு போலியானதாக இருந்தால், பப்பாளி விதையாக இருந்தால் அது நீரில் மிதக்க செய்யும். மிளகை கடித்தால் காரத்தன்மையுடன் இருக்கும். பப்பாளி விதையாக இருந்தால் அது வாசனை தன்மையற்று, சுவையற்று சுருங்கி இருக்கும்.

முதன் முதலாக

உலக நாடுகளில் முதன் முதலாக ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை ஐஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வரும் 2020 ஆண்டிற்குள் இந்த புதிய சட்டம் அந்நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

70 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு வரும் லியோனார்ட் வால் நட்சத்திரம்

பூமிக்கு அருகே சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக நெருக்கமாக வால் நட்சத்திரம் ஒன்று வருகிறது. வானின் அரிய நிகழ்வான இதை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இதை கருதலாம். மேலும் இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என வானியியலாளர்கள் கூறுகின்றனர். இந்த வால் நட்சத்திரம் அரிசோனா பல்கலை கழகத்தைச் சேர்ந்த கிரிகோடி பே லியோ ஹார்ட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வால் நட்சத்திரத்துக்கு சி2021 ஏ1 லியோனார்ட் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போதைய கணிப்பின் படி இந்த வால் நட்சத்திர்ம் டிசம்பர் மாதத்தில் பூமிக்கு மிக நெருக்கமாக கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொது மக்கள் இந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. ஆனால் சென்னை வாசிகளுககு இந்த வாய்ப்பு மிகவும் குறைவு என்றே சொல்லப்படுகிறது. அதே போல டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக டெல்லி வாசிகளுக்கும் வால் நட்சத்திரத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது துரதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும். டிசம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பூமிக்கு நெருக்கமாக கடக்கும் போது தெளிவாக பார்க்கலாம். உச்சமாக  இதை நாம் 13 ஆம் தேதி வடகிழக்கு திசையில் மிகத் தெளிவாக பார்க்கலாம். வாழ்வில் ஒரே முறை மட்டுமே கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் வால் நட்சத்திரத்தை கண்டு களிக்கலாம்.

முதுமையை தவிர்க்க ...

நம் என்றும் இளமையாய் இருக்க பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ள மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்களான பூசணி, மாம்பழம், சர்க்கரை வள்ளிக் கிழங்கை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், கொழுப்பு குறைந்த சோயா பீன்ஸ், சோயா மாவு, சோயா பால் போன்றவை எடுத்துக்கொண்டால் நல்லது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago