முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

திப்பு சுல்தான் ஓவியம் ரூ.6.32 கோடிக்கு விற்பனை

இந்திய சுதந்திர போரின் போது மைசூர் சமஸ்தானத்து மன்னர்களான ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் படைகள் 1780 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் படைகளை ஓட ஓட விரட்டியடித்தனர். பொள்ளிலூர் என்ற இடத்தில் இந்த சண்டை நடைபெற்றது. இந்த வெற்றியை குறிப்பிடும் வகையில் பொள்ளிலூர் சண்டை என்ற தலைப்பில் சுமார் 32 அடி நீளமுள்ள 10 மிகப் பெரிய காகிதங்களில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் ஓவியமாக தீட்டப்பட்டது. இந்த ஓவியம் லண்டனில் புதன் கிழமை ஏலத்துக்கு வந்தது. அப்போது 630000 பவுன்ட்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6.32 கோடிக்கு விற்பனையானது.

நீதிமன்றம் வைத்திருக்கும் பறவை

காகங்கள் உலகில் உள்ள மிகவும் புத்திசாலித்தனமான பறவைகள். கருவிகளைப் பயன்படுத்தக்கூடியதும் கருவிகளை உருவாக்கக்கூடியதுமான ஒரே பறவை காகம்தான். ஒரு காகம் தனிப்பட்ட மனித முகங்களை அடையாளம் கண்டு நினைவில் வைத்திருக்கும் திறன் கொண்டது. ஆபத்து பற்றிய தகவல்களை மற்ற காகங்களுடன் அவைகள் தங்கள் மொழியில் பகிர்ந்து கொள்ளும். காகங்கள் தங்கள் பிரச்சனைகளை பேசி தீர்க்க நீதிமன்றம் போன்ற செயல்பாட்டில் ஈடுபடுகின்றன. அங்கு அவைகள் இளவயது காகங்கள் உணவை திருடுவது போன்று செய்யும் எந்த குற்றத்தையும் செய்த காகத்தை தண்டிக்கிறது. இது காகங்களிடம் காணப்படும் வித்தியாசமான செயல் என சொல்லப்படுகிறது. ஒரு வேலையை வெற்றியாக செய்து முடித்த பிறகு மனிதர்கள் உணரும் சாதனை உணர்வைப் போலவே ஒரு கருவியை வெற்றிகரமாகப் பயன்படுத்திய பிறகு காகங்களும் அதிக நம்பிக்கையுடன் நடந்து கொள்கின்றனவாம். மனிதர்களைப் போலவே காகங்களும் எதையாவது சாதிக்க வேண்டும் என்பதில் மகிழ்ச்சி அடைவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

நீர்யானை, Hippopotamus

நீர்யானை பன்றி வகையை சேர்ந்தது. ஆப்பிரிக்காவை பூர்விகமாக கொண்டதாகும். நீர்யானை சிந்தும் வியர்வை சிவப்பாக இருக்கும். நீர்யானை பிறந்ததும் ஒரு சுண்டெலியை விட சிறிதாக இருக்கும். நீருக்குள்ளேயே பிறக்கும் குட்டிகள் நீருக்கு அடியில் இருந்தபடியே தாயிடம் பாலருந்துகின்றன. பார்க்க சாதுவாக இருந்தாலும் நீர்யானை கொட்டாவி விட்டால் அது தன் எதிரியை கோபமுடன் தாக்க போகிறது என்று அர்த்தம்.

வழி இருக்கு...

நாம் சமையலில் சேர்க்கும் பொருட்கள் சில இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன.       மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை.   இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் 

பெயர்களுக்கு தடை

சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் குழந்தைகளுக்கு ஜிகாத், சதாம், இஸ்லாம், குர்ரான், மெக்கா, இமாம், ஹஜ், மதினா போன்ற பெயர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி அத்தகைய பெயர்களை வைத்தால் அந்தக் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட அரசு சலுகைகள் மறுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

செரபியம் காடுகள்

340 ஹெக்டேரில் பரவியுள்ள செரபியம் காடுகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ளது. நகரங்களில் இருக்கும் கழிவு நீரை, சுத்திகரித்து குழாய்கள் மூலம் இங்கு அனுப்பி மரங்களை வளர்த்துள்ளனர். இங்கு பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை. கழிவு நீரில் இருக்கும் சத்துக்களும், சூரிய ஒளியும், இங்கு மரங்களை வேகமாக வளர வைக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago