இன்று மனிதர்களை மிகவும் அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. தற்போது, தோல் புற்று நோயை மருத்துவர்கள் உதவி இன்றி நாமே சோதனை செய்து கண்டு பிடிக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் உறுதி செய்வதை விட துல்லியமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது நோயை கண்டறிந்து உறுதிசெய்கிறது. இதனை ஸ்மார்ட்போன்களிலே பொருத்தி அவரவர் தானாகவே பரிசோதிக்கலாம். புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய், மூளைப்புற்றுநோய் மிகவும் அபாயமானது. இந்த வகை நோய்களை கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
பருவ காலத்தின் போது இனப்பெருக்கத்துக்காகவோ, இரை தேடியோ பறவைகள் கண்டம் விட்டு கண்டம் செல்வதை வலசைக்கு போதல் என்று குறிப்பிடுகின்றனர். அதென்ன பறவைகள் மட்டும்தான் வலசை செல்லுமா, விலங்குகள், பூச்சிகள் செல்வதில்லையா என்று கேட்டால்... ஆம்.. அவற்றிலும் சில இது போல வலசை செல்கின்றன. சில பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆகியவை இரை மற்றும் இனப் பெருக்கத்துக்காக வாழக்கூடிய சூழலை நோக்கி இடம்பெயர்கின்றன. அலாஸ்கா கரிபு மான்கள், மெக்சிகோ மோனார்க் வண்ணத்துப்பூச்சிகள், ஆப்பிரிக்கத் தட்டான்பூச்சிகள், ஆப்பிரிக்க எருதுகள், சாம்பல் வண்ணத் திமிங்கிலங்கள் போன்றவை மிக நீண்ட தூரத்துக்கு வலசை செல்கின்றன.
ரஷ்யாவில் உள்ள Lipetsk பிராந்தியத்தில் அமைந்திருக்கும் கிராமம் Kamenka. தற்போது இந்த கிராமம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்குள்ள குடிகின கோரா என்ற பேமிலி பூங்காவில் வைக்கப்பட்டிருக்கும் சிலைதான் தற்போது டூரிஸ்ட் அட்ராக்சனாக உள்ளது. அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.. ஸ்லோவாக்கிய நாட்டுப்புற கதைகளில் காணப்படும் ஒரு வகை வில்லத்தனமான விலங்கு Zmei Gorynich. இதை தமிழில் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் நெருப்பை கக்கும் 3 தலை கொண்ட டிராகன் என்று சொல்லலாம். மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த சிலை காண்பவர்களை மிரட்டும் வகையில் நிஜமாகவே நெருப்பை கக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உக்ரேன் சிற்பி Vladimir Kolesnikov தான் அந்த சிலையை வடிவமைத்தவர் என்பது கூடுதல் சிறப்பு.
குழந்தைகளை முத்தமிடக்கூடாது என்று கூறக்கேட்டிருப்போம். அதற்கு காரணம் உள்ளது. குழந்தைகளை இதழ்களில் முத்தமிடும் போது, 85 சதவீதம் பாக்டீரியாக்கள் இதழ் மற்றும் வாய் மூலமாக பரவி குழந்தையின் நலனை பாதிக்கிறது. பிறந்த 3 மாதங்களில் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் தவிர்ப்பது நல்லது.
பார்ப்பதற்கு பூங்காவில் அழகிய வடிவமைப்புக்காக செய்து வைக்கப்பட்டுள்ளதை போல காட்சியளிக்கும் கல் கோளங்கள் கோஸ்டா ரிகாவில் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றை உள்ளூர் வாசிகள் கல் பந்துகள் என்றழைக்கின்றனர். 1 செமீ தொடங்கி 2 மீ விட்டம் கொண்ட சுமார் 15 டன் வரையிலான எடை கொண்ட ஏராளமான கல் கோளங்கள் கண்டறியப்பட்டன. இவை சுமார் கிபி 600 முதல் 1500 வரையிலான கால கட்டத்தைச் சேர்ந்தவையாக கூறப்படுகிறது. டிக்யூஸ் கலாச்சாரத்தை சேர்ந்த இந்த கற்கோளங்கள் எதற்காக செய்யப்பட்டன என்பது விளங்காத மர்மமாகவே வரலாற்றில் இது வரை இருந்து வருகிறது என்றால் ஆச்சரியம் தானே..
சீனாவில் மிலு இன மான்கள் ஏறக்குறைய அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன இலக்கியங்களில் மிலு மான்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சீனாவின் தனித்துவம் வாய்ந்த விலங்குகளில் இவ்வகை மான்களும் அடங்கும். கிட்டத்தட்ட 1900 ஆம் ஆண்டுகளில் இந்த மான் இனமே அழிந்து போயின. போர்கள், பேரிடர்கள், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த மான்கள் அழிந்தன. இவற்றின் இனத்தை மீண்டும் பெருக்க முடிவு செய்த சீன அரசு 1985 இல் மீண்டும் பிரிட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெறும் 22 மான்கள் மட்டும் விமானம் மூலம் பிரிட்டனிலிருந்து சீனாவுக்கு கொண்டு வரப்பட்டன. கடந்தாண்டுகளில் சீனா அரசின் முயற்சியால் அவை தற்போது 8 ஆயிரம் வரை பெருகியுள்ளன. நாடு முழுவதும் உள்ள 40 பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் தற்போது அவை விடப்பட்டு அந்த மிலு இன மான்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை ஏரிகளிலும், புல்வெளிகளிலும் துள்ளி குதித்து ஓடும் அழகிய காட்சிகள் நெஞ்சை அள்ளுபவையாக உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


