முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒரு கிலோ டீத்தூள் ரூ.99999 கேட்டால் அசந்து போவீங்க

இந்தியாவில் அதுவும் அசாம் மாநிலத்தில் விளைவிக்கப்படும் டீத்தூள்தான் தற்போது சுமார் ரூ.1 லட்சத்துக்கு அதாவது ரூ.99999 க்கு விற்பனையாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் திப்ருகார் மாவட்டத்தில் அமைந்துள்ள மனோகரி டீ எஸ்டேட்டில் விளையும் மனோகரி கோல்ட் டீத்தூள்தான் தற்போது ஏலத்தில் கிலோவுக்கு ரூ.99999 க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. அதற்கு முன்னதாக அதிக பட்ச விலையாக கோல்டன் பட்டர்ஃபிளை டீத்தூள்தான் ரூ.75 ஆயிரத்துகு விற்று சாதனை படைத்தது. தற்போது அதை மனோகரி டீத்தூள் முறியடித்துள்ளது.

நவீன கருவி ‘இலி’

மனிதர்களின் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் ஹ்மனாய்டு ரோபோக்களின் தயாரிப்பு சர்வதேச அளவில் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் குரல் கட்டளைகளை ஏற்று அதனை பிற மொழிகளில் மொழி பெயர்த்து தரும் நவீன ரக மொழிபெயர்ப்பு கருவி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ‘இலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பென் டிரைவ் போன்ற வடிவத்தை கொண்ட ‌இந்தக் கருவி ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை ஏற்று, அதற்குரிய சீன,‌ ஜப்பான் மற்றும் ஸ்பானிஷ் சொற்களை ஒலி வடிவில் தருகிறது. இந்தக் கருவியின் சிறப்பு, இதை பயன்படுத்துவதற்கு இணைய வசதி என்பது தேவையில்லை என்பது மற்றும் 2 நொடிகளில் மொழிப்பெயர்பை கேட்கலாம்.

வேகமான டைப்பிங்கிற்கு....

கம்ப்யூட்டர் கீபோர்ட்டில் உள்ள F மற்றும் J  கீ-யின் கீழே ஒரு கோடு இருக்கும். கம்ப்யூட்டர் கீபோர்டில் இம்மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வந்தவர் ஜூன் ஈ.போட்டிச் (June E. Botich). கீபோர்டில் இம்மாதியான கோடு கடந்த 15 வருடங்களாகத் தான் உள்ளது. காரணம், கம்ப்யூட்டர் கீபோர்டின் F மற்றும் J-யில் உள்ள கோடு, ஒருவர் வேகமாக டைப் செய்வதற்காக அமைக்கப்பட்டது. இரண்டு கையிலும் உள்ள ஆள்காட்டி விரலை இந்த F மற்றும் J-யின் மீது வைத்து டைப் செய்வது தான் டைப்பிங் செய்வதன் சரியான நிலையாகும். சரியான நிலையில் வைத்து டைப் செய்தால், பார்க்காமல் டைப் செய்யலாம். இதனால் செய்யும் வேலையின் நேரம் மிச்சப்படுத்தப்படும். 2002-ம் ஆண்டு வரை கம்ப்யூட்டர் கீபோர்டில் இது மாதிரி எந்த ஒரு கோடும் இருந்ததில்லை.

கேரட்டின் உண்மையான நிறம் என்ன தெரியுமா?

இன்றைக்கு அநேகமாக நமது தினசரி உணவில் இடம் பெறும் காய்கறி வகைகளில் கேரட் முக்கிய இடம் வகிக்கிறது. ஆரஞ்சு நிறத்தில் பச்சையாக தின்பதற்கேற்ற சுவையுடன் இன்றைக்கு கேரட் பயிரிடப்பட்டு கிடைக்கிறது. ஆனால் அதன் அசலான நிறம் என்ன தெரியுமா... 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் கேரட்டின் நிறம் ஊதா தான். கலப்பினங்கள் வாயிலாக மஞ்சள் மற்றும் வெள்ளி நிற கேரட்டுகள் உருவாகின. ஆரஞ்சு நிற கேரட்டுகளை நெதர்லாந்து (டச்சு) விவசாயிகள் பயிரிட்டு வந்துள்ளனர். மத்திய கால கட்டத்தில் ஊதா நிற கேரட்டை கலப்பினத்தின் மூலமாக இன்றைய சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றியவர்கள் அவர்கள் தான். இவை வளர்வதற்கு எளிதாக இருப்பதாக நம்பப்படுவதால் தொடர்ந்து இந்த நிறத்திலேயே பயிரிடப்பட்டு வருகின்றன.

மொபைல் சார்ஜ் தீர்ந்து விட்டதா?

மொபைல் போன் வைத்திருப்பவர்களின் கவலை பெரும்பாலும் சட்டென்று கரைந்துவிடக் கூடிய பேட்டரி சார்ஜ்தான்.  தற்போது வெளியூர் பயணங்களின் போது பலரும் பவர் பேங்க் வைத்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் மொபைலை சார்ஜ் செய்வதாக இருந்தாலும், பவர் பேங்கை சார்ஜ் செய்வதாக இருந்தாலும் அதற்கான மின் இணைப்பை தேட வேண்டியது அவசியமாகும். மின் இணைப்பு கிடைக்காத வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால், மொபைல் பேட்டரி சார்ஜ் டவுண் ஆகி விட்டால்.. மிகவும் கஷ்டம்தான். இதனால் நமது மனமும் டவுனாகி விடும். இனி அந்த கஷ்டம் வேண்டாம். மொபலை சார்ஜ் செய்ய தற்போது சோலார் மொபைல் சார்ஜர் வந்து விட்டது. இதற்கு சிறிய அளவு வெளிச்சம் போதும். அதை அப்படியே நமது மொபைலில் இணைத்து விட்டால்... நாள் முழுவதும் பேட்டரி டவுன் ஆகாமல் ஜாலியாக அரட்டை கச்சேரியை தொடரலாம்.. இதன் விலையும் சுமார் ரூ.300 லிருந்து தொடங்கி பல்வேறு ரகங்களில் ஆன் லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இனி வாங்கி உங்களது நண்பிகள், நண்பர்களை அசத்துங்கள்..

கணிணியில் பயன்படுத்தப்படும் மவுஸ் தொடக்கத்தில் மரத்தில் செய்யப்பட்டது

சில நேரங்களில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் வரலாறு குறித்து தெரியவந்தால் அதில் நாம் அறிந்திராத பல்வேறு சுவாரசியமான செய்திகள் அடங்கியிருக்கும். அதில் ஒன்று, தற்போது நாம் கணிணியில் பயன்படுத்தி வரும் மவுஸ். 1964 இல் ஸ்டான்போர்ட் பொறியாளர் டக்ளஸ் ஏங்கல்பார்ட் என்பவர்தான் மர மவுஸை உருவாக்கியவர். அதில் இரண்டு சக்கரங்கள் மற்றும் ஒரு பொத்தான் கொண்ட மரப்பெட்டி வடிவத்தில் இருந்தது என்றால் ஆச்சரியம் தானே.. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago