முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆஸ்கர் விருதுகள்

திரைப்படங்களுக்கு மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. முதன்முதலில் 1929 இல் மே 16 ஆம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. அதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே விருதில் வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. மூடி முத்திரையிடப்ப்டு சீல் வைக்கப்பட்ட கவரில் வெற்றி பெறுபவரின் பெயரை அறிவிக்கும் வழக்கம் 1941 இல் தான் தொடங்கியது. 1940க்கு முன்பு வரை லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெற்றியாளர்களை அதன் மாலை பதிப்பில் முந்தைய நாளே அறிவித்துவிடுவதன் காரணமாகவே, 1941 இல் முத்திரையிடப்பட்ட கவர் முறை தொடங்கியது.

தானியங்கி சைக்கிள்

தானியங்கி கார்கள் தயாரிப்பில் வெற்றியடைந்துள்ள கூகுள் நிறுவனம் விரைவில் தானியங்கி சைக்கிள்களை நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் அறிமுகம் செய்யவுள்ளது. தானாக ஓட்டும் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த சைக்கிள்களால் பொருளாதாரம் முன்னேறுமாம்.

ஸ்மார்ட் ஷூ

டிஜிட் சோல் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ஷூவை வடிவமைத்துள்ளது. இந்த ஷூ தானாகவே காலுக்கு ஏற்றார் போல் இறுக்கமாகிக் கொள்ளும். வேகம், காலடிகளின் எண்ணிக்கையை ட்ராக் செய்யும். மேலும், நாம் நடக்கும் தூரம், வேகம், எத்தனை படிகளை கடக்கிறோம் போன்ற பல தகவல்களையும், தேவைக்கு ஏற்ற வகையில் பாதத்திற்கு குளிர் மற்றும் சூட்டை வழங்கக் கூடியதாகவும் உள்ளது.

’ப்ளூ வேல்’ கேம்

உலக அளவில் பிரபலமாக வரும் ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம் 50 நாட்களுக்கு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள் கடினமாக்கப்படும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற சவால் விடுக்கப்படும். இந்த விளையாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்களை நிஜ உலகத்துடனான தொடர்பை இழக்க செய்து, விர்ச்சுவல் எனப்படும் மாய உலகத்துக்குள் அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டுவதுதான் இதன்  நோக்கம். இந்த விளையாட்டை வடிவமைத்த ரஷ்யாவின் பிலிப் புடேய்கின் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தண்ணீர் ஃபிளைட்

தெற்கு சீனாவில் ஏஜி 600 ரக விமானம் வடிவமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 37 மீட்டர் நீளமும், 53.3 டன் எடை கொண்ட இந்த விமானம் உலகின் மிகப் பெரிய விமானம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதில் 370 டன் தண்ணீரை நிரப்பும் வகையில் கொள்ளளவு கொண்ட டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறபம்சம்.

விமானத்தில் சாப்பிடும் போது உணவின் ருசி குறைவாகத்தான் இருக்கும் ஏன் தெரியுமா?

நாம் வீடு மற்றும் வெளி இடங்களில் உண்பதை காட்டிலும், விமானத்தில் சாப்பிடும் உணவு சில நேரங்களில் உப்பு சப்பில்லாமல் இருப்பது போல நமக்கு தோன்றும். அதற்கு காரணம் விமானம் அதிக உயரத்தில் பறப்பதால், நுகர்வு திறனும், சுவை உணரும் திறனும் நமக்கு குறைவாக இருக்கும். எனவே, விமானத்தில் கொடுக்கப்படும் உணவுகளை நாம் சாப்பிடும் போது, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு போன்ற நான்கு சுவைகளை உணரும் சக்திகள் நமது நாவிற்கு குறைந்து விடுகிறது. விமானங்கள் பொதுவாக 31,000-40,000 அடி உயரத்தில் பறக்கின்றன. அப்போது, நம் நாக்கில் உள்ள சுவைக்கும் தன்மை குறைந்து விடும். ஒரு விமானம் காற்றடைக்கப்பட்ட ஒரு எந்திரம் ஆகும். ஆதலால், ஈரப்பதம் குறைந்து விடும். இதனால் நம் வாயில் உமிழ்நீர் குறைந்து சுவைக்கும் தன்மையும் குறைந்து விடும். இது உணவின் சுவை மாறுபடுவதில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி, குறைந்த காற்று அழுத்தம், விமானத்தில் செல்லும் போது ஏற்படும் இரைச்சல் மற்றும் ஈரப்பதம் இல்லாதது அனைத்தும் நாம் உணவை ருசிக்கும் விதத்தை பாதிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago