முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மனிதர்களை மிஞ்சும் ரோபோ

ரோபோகள் மருத்துவர்களால் செய்ய முடியாத பல செயல்களை நொடிப் பொழுதில் செய்து முடித்து விடுகிறது. அமெரிக்காவில் உள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஒன்று, 2.5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய ரோபோவினை வடிவமைத்துள்ளனர். பொதுவாக மூளை அறுவை சிகிச்சை செய்ய மனிதர்களால் குறைந்தது 2 மணி நேரமாகும். ஆனால் அதே அறுவை சிகிச்சையை வெறும் 2.5 நிமிடத்தில் செய்யக்கூடிய திறன் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரோபோ. மேலும் சி.டி ஸ்கேன் தொழில்நுட்பத்தில் மூளையின் பகுதிகளை பிரித்து அறியக்கூடிய திறனையும் இந்த ரோபோ பெற்றுள்ளது. மூளை அறுவை சிகிச்சையில் மட்டுமல்ல, இடுப்பு தொடர்பான ஆபரேஷன்களிலும் இந்த சாதனம் பயன்படுத்தபடுகிறது.

இசையால் இனிமை

ஹெட்போன்களை நாம் பயன்படுத்தும்போது, நம் காதுக்கு 90 டெசிபல் ஒலியானது நேரடியாக வருகிறது. குறிப்பாக ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்டால் அவருக்கு காது கேட்காமல் போக அதிக வாய்ப்புள்ளது. பிறர் பயன்படுத்தும் ஹெட்போன்களை பயன்படுத்தினால் தொற்று நோய்கள் ஏற்படுமாம்.

உலகம் எங்கும்...

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான, அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் பேரும்,  ஆஸ்திரேலியாவில் சுமார் 1 லட்சம் பேரும், இலங்கையில் 60 லட்சம் பேரும், அமீரகத்தில் 2 லட்சம் பேர், சிங்கப்பூரில் 2 லட்சம் பேரும், இங்கிலாந்தில் 3 லட்சம் பேர், பிஜி தீவில் 50 ஆயிரம் பேர், மொரிசியஸ் தீவில் 50 ஆயிரம் பேர், மலேசியா, கனடா, தென்னாப்பிரிக்காவில், ரீயூனியன் தீவு  என பல நாடுகளில் நம்மவர்கள் அதிகம் வசிக்கின்றனராம்.

இதுதான் காரணம்

கடைகளில் நாம் சாப்பிட வாங்கும் சிக்கனுடன் கூடவே, 2 துண்டு எலுமிச்சை பழங்கள் வைக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின் - சி தேவை. அதனால் தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின் - சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட வைக்கிறார்கள்.

செவ்வாயில் உயிர்கள்

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரத்தை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பாறைகளில் நீரோட்டம் இருந்ததற்காக புகைப்பட சான்றுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் சமீபகாலம் வரை உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

வந்திருச்சு இ-டாட்டூ

ஆய்வாளர்கள் புதிய வகை எலெக்ட்ரானிக் டாட்டூக்களை, உருவாக்கியுள்ளனர். ஸ்கின் மார்க்ஸ் என்று பெயரிட்டுள்ள இந்த இ-டாட்டூவினை தோலில் ஒட்டிக் கொள்ளலாம். தலைமுடியை விட மெல்லியதாக வடிவமைக்கப்பட்ட இந்த இ-டாட்டூவினை ஸ்மார்ட்போனில் இணைத்து இயக்கங்களை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago