Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கோழிகள் காது மடல்களின் நிறத்திலேயே முட்டை இடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

கோழிகளுக்கு வெளிப்புறமாக தெரியும் வகையில் காதுகள் இல்லாவிட்டாலும், அவைகளுக்கும் காது மடல்கள் உள்ள. கோழிகளின் இனங்களை பொறுத்து காது மடல்களின்  வண்ணங்களும் அதற்கேற்ப மாறுபட்டு காணப்படும். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இது வழக்கமானதுதான். ஆனால் கோழிகள் தங்களின் காது மடல்களின் வண்ணத்திலேயே முட்டையிடும் என்பதுதான் ஆச்சரியம். வெள்ளை மடலை கொண்ட கோழி வெள்ளை முட்டையையும், அடர் வண்ணத்தை கொண்ட கோழி அடர் வண்ணத்திலும் முட்டையிடும் என்றால் அது ஆச்சரியம் தானே... இனி முட்டையை பார்க்கும் போது கூடவே உங்களுக்கு கோழிகளின் காது மடலும் நினவைுக்கு வரக் கூடும். ஆனால் ஒரே மாதிரி வெள்ளை வெளேரென முட்டையிடும் பிராய்லர் கோழிகளுக்கு இந்த விதி  பொருந்தாது என்பதை மறந்து விட வேண்டாம்.

இந்த மரம் ரொம்ப காஸ்டலி

தங்கம், பிளாட்டினம், வைரம் போன்ற உலகின் அரிய வகை தனிமங்கள் தான் உலகின் விலைமதிப்பு மிக்கது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அதை இன்றோடு மறந்துவிடுங்கள். இந்த நகைகளை காட்டிலும் விலைமதிப்பற்ற மரம் ஒன்று இருக்கிறது. அந்த மரத்தின் பெயர் அகர் மரம். அதன் விலை கிலோ ரூ.75 லட்சம். அக்குலேரியா என்ற மரத்தின் ஒருவகைதான் இந்த அகர் மரம். இந்த மரத்துக்கு வேறுசில பெயர்களும் உண்டு. அவை கற்றாழை மரம் அல்லது கழுகு மரம். ஜப்பானில் கியாரா அல்லது கயனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா, ஜப்பான், அரேபியா, சீனா, மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த மரமே உலகின் மிக அரிதான விலைமதிப்புமிக்க ஒரு மரமாகும்.இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பிசின் மூலம் ஒருவகை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் அத்தியாவசியமான பொருளாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்த எண்ணெய் ஒரு கிலோ 25 லட்ச ரூபாய் ஆகும். அப்படி என்றால் இந்த மரம் தானே உலகிலேயே மிகவும் காஸ்ட்லி.

இப்படியும் வினோதம்

பிரான்சை சேர்ந்த ஓவியர் ஆபிரகாம் பாய்ன்செவல் என்பவர் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் முயற்சியை மேற்கொண்டார். பொதுவாக முட்டைகளின் மீது கோழி அமர்ந்து சூடுபடுத்தி குஞ்சு பொறிக்க செய்யப்படுகிறது. ஆனால் அவர் விசே‌ஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியின் கீழே 10 முட்டைகளை வைத்து அதன் மீது அமர்ந்தார். இந்த நிலையில் 22 நாட்கள் கடந்த பின் அடைகாத்த முட்டைகளில் இருந்து 4 குஞ்சுகள் பொறித்து வெளிவந்தன. இந்த வினோத நிகழ்ச்சியின் மூலம் இவர் சாதனை படைத்துள்ளார். இவர் முட்டைகளை அடைகாக்க தொடங்கிய நாளில் இருந்து 24 மணி நேரத்தில் தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே நாற்காலியில் இருந்து எழுந்தார். முட்டைகளுக்கு குறைந்தது. 37 டிகிரி வெப்பம் கொடுத்தார்.

உலகை ஆளும் ரோபோ

சீனா, மனிதர்களை போன்ற உருவம் கொண்ட ரோபோவை தயாரித்து அதை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த மனித ரோபோ பெண் வடிவில் உள்ளதால் இதற்கு 'ஜியா ஜியா' என பெயரிடப்பட்டுள்ளது. இது மனிதர்கள் போலவே முகபாவனைகளை மாற்றும் திறன் கொண்டது. இதற்கு செயற்கை அறிவுத்திறன் வழங்கப்பட்டுள்ளது.ஜியா ஜியா- வை சீனாவில் உள்ள ரெஸ்டாரன்ட்டுகள், நர்சிங் ஹோம், மருத்துவமனை வேலைகளுக்கும் வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, கேள்விகளுக்கு, ஏற்ப பதிலளிக்கும். சொன்ன வேலைகளை துரிதமாக செய்யுமாம்.

பால் ஏன் வெள்ளையாக உள்ளது?

பால் 87 சதவீதம் நிறமற்ற நீரைக் கொண்டிருந்தாலும் வெள்ளை நிறத்தில்தான் காணப்படுகிறது. இது ஏன் தெரியுமா.. பாலில் புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாலில் உள்ள புரதங்களின் முக்கிய வகைகளில் ஒன்று கேசின்கள் ஆகும். அவை கால்சியம் மற்றும் பாஸ்பேட்டுடன் சிறிய கொத்தாக சேர்ந்து மைக்கேல்ஸ் எனப்படும் சிறிய துகள்களை உருவாக்குகின்றன. இந்த சிறிய துகள்களைத ஒளி தாக்கும்போது அது ஒளி விலகல் ஏற்பட்டு அதை சிதறச் செய்கிறது. பால் அனைத்து ஒளி அலைநீளங்களையும் பிரதிபலிக்கிறது. எதையும் உறிஞ்சாது. இதனால் பால் வெள்ளை நிறமாக தோன்றுகிறது. எல்லா பாலும் வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. பீட்டா கரோட்டின் போன்ற கரோட்டினாய்டுகள் காரணமாக பாலில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் காரணமாக சில வேளைகளில் மஞ்சள் நிறத்தையும் பிரதிபலிக்கும்.

ஹேக்கிங்கைத் தவிர்க்க...

பேஸ்புக் நிறுவனம், பயனாளர்களின் மொபைல் போனுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ்களை ஹேக் செய்யமால் தவிர்க்க பாஸ்வேர்டுகளுடன் யுஎஸ்பி வடிவிலான திறவுகோல் பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ’செக்யூரிட்டி கீ’ என்று பெயரிடப்பட்டுள்ள இதை கணினியின் யுஎஸ்பி போர்ட் மூலம் இணைத்து உங்கள் அக்கவுண்ட்டில் லாக்இன் செய்து கொள்ளலாம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago