செல்போனே கதி என்று கிடக்கும் இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு பேனா பெரிய அளவில் பழக்கத்தில் இருக்காது. பேனா மூடியை கடிக்கும் பழக்கம் உடைய நபர்களின் பாதுகாப்பு கருதி தான் இந்த துளை வைக்கப்படுகிறது. கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், உண்மைதான். பேனா மூடியை பழக்க தோஷத்தில் கடித்துக் கொண்டிருக்கும் நபர்கள், அதை ஏதேச்சையாக விழுங்கி விட்டால், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. பேனா மூடியை விழுங்கி, அது மூச்சுக்குழாயை அடைத்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம், அந்த சமயத்திலும் கூட மூச்சுக்காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த துளை.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஹரியானா மாநிலத்தில் இருந்து இமாச்சல பிரதேசத்ரதிற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. டிசம்பரில், இந்த ரயில் தண்டவாளப்பாதை பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தாலும் இந்த ரயில் தடையில்லாமல் 365 நாட்களும் ஓடக்கூடியதாகவுள்ளது. பனிக்கட்டிகள் தண்டவாளத்தில் விழுந்தாலும் அதனை அப்புறப்படுத்தும் நவீன கருவிகளுடன் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ரயில் பாதை ஐ.நா. பாரம்பரிய பாதுகாப்பு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. தற்போது தேசிய தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த நிலையில், பல ரயில்கள் பல மணி நேரம் தாமதமாகவும், சில ரயில்கள் ரத்தும் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ஹரியானா - இமாசலப்பிரதேச ரயில் சிறப்பு மிக்கதாக திகழ்கிறது.
உலகில் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால் அந்தந்த நாட்டின் பாஸ்போர்ட் மற்றும் இரு நாடுகளின் விசா ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும். பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அந்நாட்டு குடிமக்களுக்கு இஸ்ரேல் செல்ல அனுமதி கிடையாது. எனவே பாகிஸ்தானியர்களுக்கு இஸ்ரேல் செல்வதற்கான விசா கிடைக்காது. அதே போல மேலும் ஒரு வித்தியாசமான சட்டம் அந்நாட்டில் உள்ளது. அங்கு கல்விக்காக ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக செலவிட்டால் அவர்கள் அரசுக்கு 5 சதவீத வரி செலுத்த வேண்டும் என்பதுதான் அது. எனவே பெரும்பாலான மக்கள் உயர்கல்வி படிக்க ஆர்வம் காட்டுவது இல்லை.
இத்தாலியில் 42 மீட்டர் ஆழம் கொண்ட நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. வெந்நீர் ஊற்றுக்கு பெயர் போன இத்தாலியின் கொல்லி இகானி பகுதியில் இந்த நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. 10 மீட்டர் மற்றும் 20 மீட்டர் ஆழத்தில் குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீச்சல் குளத்தின் சிறப்பம்சத்தை கேள்விப்பட்ட பல நீச்சல் வீரர்கள் இங்கு நீத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
37 ஆயிரம் இலவச அறுவை சிகிச்சை செய்து அசத்திய டாக்டர் யார் தெரியுமா..அவர் எங்கிருக்கிறார் தெரியுமா.. அவர் இந்தியாவில் தான் இருக்கிறார். இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புனித நகரான வாரணாசியைச் சேர்ந்தவர்தான் டாக்டர் சுபோத் குமார் சிங். இவர் அப்படி என்ன சாதித்து விட்டார். இவரது தந்தை ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். எதிர்பாராத விதமாக அவருக்கு வேலை போகவே சுபோத்தும் அவரது சகோதரர்களும் மெழுகுவர்த்தி, சோப் உள்ளிட்டவற்றை தயார் செய்து கடை கடையாக சென்று விற்று குடும்பத்தை காப்பாற்றினர். இந்த கடினமான சூழலுக்கு மத்தியில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். சுபோத். அது மட்டுமல்ல அவர் தனது தொழிலை தன்னுடைய மற்றும் தனது குடும்பத்தின் வளர்ச்சிக்கு மட்டும் உதவாமல், சமூகத்துக்கும் உதவும் வகையில் அமைத்துக் கொண்டார். இதன் மூலம் மேல் அன்ன பிளவு என்ற கோளாறால் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் அது போன்ற 37 ஆயிரம் அறுவை சிகிச்சைகளை செய்து ஏழை குழந்தைகளுக்கு வாழ்வளித்துள்ளார். தற்போது சுற்று வட்டாரம் மட்டுமின்றி நாடு முழுவதும் அசல் ஹீரோவாக டாக்டர் சுபோத் குமார் சிங் பாராட்டப்படுகிறார். அவருக்கு பாராட்டுகள குவிந்து வருகின்றன.
லண்டனைச் சேர்ந்த குழு ஒன்று படம் வரையும் புதிய ரக ரோபோ ஒன்றினை வடிவமைத்துள்ளது. லைன் அஸ் (Line-us) என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ கடினமான படங்களை கூட அழகாகவும் மிகக் குறுகிய நேரத்திலும் வரையக்கூடியது. சந்தைக்கு வரும் முன்னரே இணையதளத்தில் 30 மணி நேரத்தில் 1000 லைன் அஸ் ரோபோக்கள் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


