முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வியக்க வைத்த தமிழன்

கி.மு 1010ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட தஞ்சாவூர் கோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிலைகளை நன்றாக உற்றுநோக்கினால், அதில் ஐரோப்பிய உருவத் தோற்றமுடைய ஒருவரின் சிலை உள்ளது தெரியும். அந்த ஐரோப்பியர் யார் என்று தற்போது ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அவர் பிரான்ஸ் மன்னர் இரண்டாம் ராபர்ட். அவரது காலமும் கி.மு 10-ம் நூற்றாண்டுகள்தான். 1500ம் ஆண்டில் தான் வாஸ்கோடாகாமா உலகை சுற்றிவந்தார். அதுதான் உலகை ஒன்றிணைக்க முயற்சித்த முதல் நடவடிக்கை என்று எண்ணப்பட்ட நேரத்தில், தமிழன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே உலகத்தோடு தொடர்பு கொண்டு வாணிபம் செய்துவந்தது தெரியவந்தது. இதனாலேயே பிரான்ஸ் மன்னர்களின் சிலையை உலகின் சிறப்புவாய்ந்த கோயிலில் வடிவமைத்து வைத்துள்ளான் சோழப்பெருமகன்.

மர்மங்கள் நிறைந்த அதிசய கிணறு

நூறாண்டுகள் பழமையான மர்மங்கள் நிறைந்த அதிசய ஊற்று கிணறு ஒன்று உள்ளது. எங்கே.. இந்தியாவிலா என்றால்.. அதை பற்றி கேட்கவே வேண்டாம்.. பல நூறு ஆண்டுகள் பழமையான குளங்கள், கிணறுகள் போன்றவற்றுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை.. இது அமைந்துள்ளது பிரான்சில். அங்குள்ள Burgundy என்ற பிராந்தியத்தில் அமைந்துள்ள இது Fosse Dionne spring என பிரபலமாக அறியப்பட்டுள்ளது. கடந்த 1700 களில் இதை சுற்றிலும் பொது குளியலறைகள் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் விநாடிக்கு 311 லிட்டர் வெளியேறுகிறது. சீசன் நேரங்களில் இது 3 ஆயிரம் லிட்டராகவும் அதிகரிக்கும். ரோமானியர்களால் குடிநீராகவும், செல்டியர்களால் புனித நீராகவும் இது கருதப்பட்டு வந்தது. பூமிக்கு அடியில் மிகவும் ஆழமாகவும், நீண்டு செல்லும் சுரங்க பாதைகளையும் கொண்டதாக இதில் எங்கிருந்து நீர் ஊற்று வருகிறது என்பது கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது. உள்ளே சென்றவர்கள் யாரும் திரும்ப வருவதில்லை என்ற வதந்தி பரவியதையடுத்து அதற்குள் டைவர்கள் குதிக்க அரசு தடை விதித்திருந்தது. இதனால் இதன் மர்மம் நீடித்தே வந்துள்ளது.  கடந்த ஆண்டு தொழில்முறை டைவர் ஒருவர் முறையான அனுமதி பெற்று அதன் உள்பகுதிகளுக்கு சென்று படம் பிடித்து திரும்பினார். இருந்த போதிலும் அவராலும் நீர் ஊற்று எங்கிருந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. மிகப் பெரிய அரண்மனை அளவுக்கு பூமிக்கு அடியில் உள்ள நீர் சுரங்கத்தில் அவர் படம் பிடிப்பு நடத்திய காட்சிகள் உலகம் முழுவதும் பரவி இந்த ஊற்று நீர் கிணற்றுக்கு மேலும் விளம்பரத்தை தேடி தந்துள்ளது.

சிரிப்பால் அளந்தவர்

சார்லி சாப்ளின், ஒரே வருடத்தில் 12 ஹாலிவுட் படங்கள் நடித்து சாதனை புரிந்தவர், நடிப்பு மட்டுமின்றி, இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன் முகம் கொண்டவர்.

போக்குவரத்து விளக்குகள் எப்போது வந்தன?

ஜே.பி.நைட் என்பவர் லண்டன் மாநகரில் 1868ஆம் ஆண்டு இப்போக்குவரத்து விளக்குகளைக் கண்டு பிடித்தார். மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் இவ்விளக்குகள் நிறுவப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்நாளில் மோட்டார் வாகனங்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கவில்லை. குதிரையை அல்லது குதிரை பூட்டிய வண்டிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர்.பச்சை, சிகப்பு ஆகிய இரு வண்ணங்கள் மட்டுமே அப்போது பயன்படுத்தப்பட்டு வந்தன. உருளையில் நிரப்பப்பட்ட வாயுவினால்தான் அவ்விளக்குகள் எரிந்து வந்தன; இவ்வமைப்பு அப்போது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.அமெரிக்காவின் மிக்சிகன் நகரில் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில், காவல் துறையைச்சார்ந்த வில்லியம் பாட்ஸ் என்பவர் இரயில்வே சமிக்கைகளின் அடிப்படையில் போக்குவரத்து விளக்குகளை அமைக்க முயற்சி செய்தார். பச்சை, சிகப்பு, காவி பூசிய மஞ்சள் ஆகிய நிறங்களுடன் கூடிய விளக்குகளை நிறுவி இவர் தமது முயற்சியில் 1920ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1923ஆம் ஆண்டு போக்குவரத்து விளக்குகள் நிறுவப்பட்டன. முதலாவது தானியங்கிப் போக்குவரத்து விளக்கு 1927ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிறுவப்பட்டது.

பிரிண்டட் சர்க்யூட் போர்டை கண்டுபிடித்தவர்

எலெக்ட்ரானிக் உலகில் உள்ள பொருள்களுக்கு மிகவும் முக்கியமானது பிரிண்டட் சர்க்யூட் போர்டு ஆகும். ஒவ்வொரு எலெக்டாரானிக் பொருள்களின் உட்புறமும் பச்சை நிறத்தில் இருக்குமே அதுதான். இதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பவுல் எய்ஸ்லெர். 1936 ஆம் ஆண்டு ரேடியோ என்ற வானொலி பெட்டியை இயங்கச் செய்வதற்காக இந்த பிசிபி எனப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டை கண்டுபிடித்தார்.

'மாஸ்பெக் பேனா'

நமது உடலில் பத்து நொடிகளில் புற்று நோய் இருப்பதை கண்டறியும் புதிய வகை பேனா ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  இதற்கு 'மாஸ்பெக் பேனா' என்று பெயரிட்டுள்ளனர். இதன் மூலம் புற்றுநோய் கட்டி கண்டறியப்படுவதுடன், அதனை அகற்றவும் முடியும் என்கின்றனர். பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அறுவை சிகிச்சை செய்த பின்னரும் சில புற்று நோய் அணுக்கள் உடலில் தேங்கியிருக்கும். இந்த பாதிப்பை மாஸ்பெக் பேனா மூலம் சரி செய்ய முடியுமாம். அறுவை சிகிச்சையின்போது புற்றுநோய் அணுக்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் இந்தப் பேனாவால் ஒரு துளி நீர் செலுத்தப்படும். அதன்பின் அங்கிருக்கும் திசுக்கள் புற்றுநோய் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பது 96 சதவிகிதம் தெரிந்துவிடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago