நல்ல தேனை கண்டுப்பிடிக்க, ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விடவும். தண்ணீரில் அது கரைந்தால், அது கலப்படம் செய்யப்பட்டது. அதேபோல், சுத்தமான காட்டன் துணியை தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பிக்கும் போது சுடர்விட்டு எரிந்தால் அது சுத்தமானது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகில் மிக உயரமான சிலை எங்கிருக்கிறது தெரியுமா.. இந்தியாவில்தான். குஜராத் மாநிலம் சர்தார் சரோவர் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைதான் உலகிலேயே மிக உயரமான சிலையாகும். 182 மீட்டர் அதாவது 597 அடி உயரம் கொண்ட இந்த சிலை சீனாவில் உள்ள புத்தர் சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஆகியவற்றை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது. 2 ஆவதாக சீனாவில் உள்ள ஸ்பிரிங் கோயிலில் உள்ள புத்தர் சிலை 128 மீட்டர் உயரமும், 3 ஆவதாக சீனாவில் நன்சானில் உள்ள 108 மீட்டர் உயரம் கொண்ட மற்றொரு புத்தர் சிலையும் 3 ஆவது இடத்தில் உள்ளது. இதில் அமெரிக்காவின் 93 மீட்டர் உயரம் கொண்ட சுதந்திர தேவி சிலைக்கு 4 ஆவது இடமே கிடைத்துள்ளது.
பொதுவாக விலங்குகள் மனிதர்களைக் காட்டிலும் இயற்கை சார்ந்து மிகவும் நுண்ணுணர்வு மிகுந்தவையாக செயல்படக் கூடியவை இதில் குறிப்பாக பாம்புகள் நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணரக்கூடிய திறன் படைத்தவையாக விளங்குகின்றன இவைகளுக்கு நிலநடுக்கம் வருவது முன்கூட்டியே தெரிந்துவிடும் அதிலும் குறிப்பாக 75 மைல்கள் முன்பாகவே நிலநடுக்கம் ஏற்படுவதை இதை உணர்ந்து கொள்கின்றன மேலும் நிலநடுக்கம் தோன்றுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே பாம்புகள் அதை அறிந்து கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன எவ்வளவு ஆச்சரியம் பாருங்கள்
சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள், என அனைத்தும் பனிக்கட்டிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள ’ஐஸ் ஹோட்டல் 365’ என்ற விடுதி சுவிடனில் உள்ள ஜக்கஸ்ஜார்வி கிராமத்தில் உள்ளது. இந்த பனிக்கட்டி ஹோட்டல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.
பொதுவாக காதலர் தினம் என்றால் அனைவருக்கும் பிப்ரவரி 14 மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் காதலர் தினமானது பிப்ரவரி 7 ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. காதலர் தின வாரத்தின் முதல் நாள் ரோஸ் டேவில் ஆரம்பித்து ப்ரப்போஸ் டே, சாக்லெட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, இறுதியாக கிஸ் டேவில் முடிவடைகிறது.
பெரும்பாலும் அருவி நீர் நிறமற்ற வேகத்தில் கொட்டும். சற்று அடர்த்தியாகவும், வேகமாகவும் பாய்கிற போது அதன் குமிழிகள் பொங்குவதால் வெள்ளை நிறத்தில் இருப்பதை நம்மால் காண முடியும். உலகம் முழுவதுமே அருவிகள் வெள்ளை நிறத்திலேயே பொங்கி பிரவகிக்கின்றன. ஆனால் ஒரே ஒரு இடத்தை தவிர. அது கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள விக்டோரியா நிலம் எனப்படும் McMurdo Dry Valleys என்ற பள்ளத்தாக்கில்தான் அருவி ரத்த நிறத்தில் பாய்ந்தோடுகிறது. இந்த ரத்த நதி டெய்லர் பனிப்பாறையின் நாக்கு போன்ற பகுதியிலிருந்து டெய்லர் பள்ளத்தாக்கில் உள்ள வெஸ்ட் லேக் போனியின் பனி மூடிய மேற்பரப்பில் பாய்கிறது. ஏன் சிவப்பாக, ரத்த நிறத்தில் உள்ளது. பல லட்சம் ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள பூமியில் உள்ள இரும்பு ஆக்சைடு இந்த நீர் பரப்பில் கலந்து வருவதால் சிவப்பு நிறத்தில பாய்கிறது பனிக்காலங்களில் சிவப்பு நிற பனிப்பாளங்களாக உறைந்து கிடப்பதை பார்க்க பேரதிசயமாக விளங்குகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


