முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒளிரும் அழகிய தோல் கொண்ட மிகவும் ஆபத்தான அம்புத் தவளை

நச்சு அம்புத் தவளைகள் (Poison dart frog) இத் தவளைகள் கண்கவரும் பிரகாசமான நிறங்களில் காணப்படும். எதிரி விலங்குகளை தாக்கும் ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய விஷத்தினை தன் முதுகுப்பகுதியில் சுரக்குமாம். இது எதிரிகளை எச்சரிக்கை விடுத்துத் தாக்க பயன்படும் ஒரு கருவி. தவளை சுரக்கும் கொடிய விஷம் கிட்டத்தட்ட 10 மனிதர்களைக் கொல்லக்கூடியதாம். மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் இந்த தவளைகள் நச்சு அம்பு தவளைகள் என அழைக்கப்படுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் 220 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மேல் தோலில் அம்புகளை தடவி வேட்டையாட உபயோகித்தனர். இத் தவளைகள் கண்கவரும் பிரகாசமான நிறங்களில் காணப்படும். இந்த நிறம் ஒரு எச்சரிக்கை அடையாளம். மேல் தோலில் உள்ள விஷம் 20,000 எலிகளையும், 10 மனிதர்களையும் கொள்ள கூடியது. அழகென்றாலே ஆபத்து என்பதற்கு மிக சிறந்த உதாரணம் இந்த நச்சு அம்பு தவளைகள் தாம்.

புதிய பாதுகாப்பு

இந்திய பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், புரொஃபைல் புகைப்படத் திருட்டைக் கண்டுபிடிக்கவும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக். இந்த புதிய அம்சங்களின் மூலம், சமூகவலைதளத்தில் நண்பர் அல்லாதவர்கள் மற்றவர்களின் புரொஃபைல் படங்களைப் பயன்படுத்தவோ, பகிரவோ முடியாது. படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது. படத்தைச் சுற்றிலும் நீல பார்டர் மற்றும் ஒரு வளையம் தோன்றும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

1908 ஒலிம்பிக் போட்டிக்கு ரஷ்யா 12 நாள்கள் தாமதமாக வந்தது ஏன் தெரியுமா?

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜூலியஸ் சீசர் ஆண்டுக்கு 365 நாட்கள் என கணக்கிடப்பட்ட காலண்டரை பயன்படுத்த உத்தரவிட்டிருந்தான்.  இது லீப் வருடங்கள் உள்ளிட்ட பல்வேறு கால கணித மாறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில் Pope Gregory XIII கால கட்டத்தில் 1582 முதல் கிறித்துவ நாடுகள் கிரிகோரியன் காலண்டர் எனப்படும் நவீன காலமுறைக்கு மாறின. ஆனால் கிறித்துவம் அல்லாத பல நாடுகளும், ரஷ்யா  போன்ற நாடுகளும் அவற்றை ஏற்கவில்லை. இதனால் 1802 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு ரஷ்யா 12 நாட்கள் தாமதமாக வரும்படி நேர்ந்தது.  அதன் பின்னர் போல்ஷெவிக் ஆட்சியின் போது 1918 இல் ரஷ்யாவும் கிரிகோரியன் முறைக்கு மாறியது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன வென்றால், ஒலிம்பிக் பிறந்த தேசமான கிரீஸ் 1923 இல்தான் புதிய காலண்டர் முறைக்கு மாறியது என்பதுதான் சுவாரசியம்.

உடனடி தேடல்

கூகுள் நிறுவனம் இன்ஸ்டண்ட் சர்ச் வசதியை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மொபைல்களில் தேடலை விரைவாக வழங்குவதற்காகவே இன்ஸ்டண்ட் சர்ச் அறிமுகம் செய்யப்பட்டது. பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இன்ஸ்டண்ட் சர்ச்-ஐ கூகுள் தற்போது நீக்கியுள்ளது.

உப்பு கரிக்காத கடல்

கடல் நீர் என்றாலே உப்பு கரிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். விஞ்ஞானிகள் முதல் சாதாரண மக்கள் வரை இதை நன்றாக அறிவர். கடலின் உப்பு அளவை பிபிடி என குறிப்பிடுகின்றனர். அதாவது ஆயிரம் கிராம் நீரில் கரைந்திருக்கும் உப்பின் அளவு இது. தோராயமாக கடலில் சுமார் 1 லிட்டர் நீரில் 7 ஸ்பூன் அளவுக்கு அதாவது 34 பிபிடி முதல் 37 பிபிடி வரை உப்பு இருக்கும். உப்பின் காரணமாகவே கடல் நீர் நன்னீரை காட்டிலும் அடர்த்தியாக உள்ளது. அதே நேரத்தில் உப்புசுவை குறைவாக உள்ள கடலும் உலகில் உள்ளன. அதில் அண்டார்டிகா பகுதியில் உள்ள கடலின் மேல்மட்டத்தில் 34 பிபிடி அளவுக்கு காணப்படும். அதே நேரத்தில் ஆர்க்டிக் பகுதியில் உள்ள கடலில் 30 பிபிடி அளவுக்கே உப்பு கரிக்கும். இதற்கு இப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி  கரைந்து கடலில் கலப்பதும், ஏராளமான நன்னீர் நதிகள் மற்றும் மழை நீர் கடலில் கலந்து அதன் உப்பு சுவையை குறையச் செய்கின்றன. ஆனால் முதல் இடம் ஐரோப்பா மற்றும் ஸ்காண்டிநேவியன் பகுதியில் உள்ள பால்டிக் கடலுக்குத்தான். அதன் உப்பின் அளவு வெறும் 10 பிபிடி அளவுதான். இதற்கு காரணம் இப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட நன்னீர் நதிகள் இங்கு வந்து கலக்கின்றன. அதிக உப்புகரிப்பு சுவை உள்ள கடல் சொல்லவே வேண்டாம் மத்திய தரைக்கடல்தான். அதன் உப்பின் அளவு 38 பிபிடி. இங்கு கடலில் கலக்கும் நன்னீர் மற்றும் மழை நீரின் அளவை காட்டிலும் ஆவியாகும் நீரின் அளவு மிகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

மெழுகில் இத்தனை விஷயங்கள் இருக்கா?

பிரேசில் நாட்டிலுள்ள கார்னவ்பா என்னும் பனை மரத் (carnauba palm tree) தழையிலிருந்து கார்னப்வா மெழுகு உண்டாகிறது. பழுப்பு நிறத்திலுள்ள இம்மெழுகு தரையை அழகு படுத்தவும், மெழுகுவர்த்தி தயாரிக்கவும் பயன்படுகிறது. பெர்ரி என்னும் தாவரத்திலிருந்து உண்டாகும் பேபெர்ரி மெழுகிலிருந்தும் (bayberry wax) கூட மெழுகு வர்த்தி தயாரிக்கப்படுகிறது. தேனீக்கள் தம் தேன் கூட்டைக் (honeycombs) கட்டும்போது சுரக்கும் திரவமும் மெழுகாக விளங்குகிறது. ஒப்பனைப் பொருட்கள் (cosmetics), மெழுகுவர்த்திகள், பாலிஷ்கள், வண்ணத் தீட்டுகோல்கள் (crayons) மற்றும் செயற்கை மலர்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் இம்மெழுகு பயன்படுத்தப்படுகிறது. கம்பளி இழை கொண்ட விலங்குகளிலிருந்து (wool-bearing animals) பெறப்படும் கம்பளி இழை மெழுகு (wool wax) லெனோலின் (lanolin) எனப்படுகிறது; இதுவும் ஒப்பனைப் பொருட்கள் மற்றும் சோப்புகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கிடைக்கும் மெழுகுகளில் 90% பெட்ரோலியம் மெழுகே ஆகும். இது மணமற்றது, சுவையற்றது, வேதியியல் வினை புரியாதது என்பதால், பல்வேறு பயன்பாடுகளுக்கும் இம்மெழுகு ஏற்றதாக விளங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago