முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வாட்டும் வெப்பம்

ஆர்க்டிக் பிராந்தியத்தில் சராசரியைவிட 20 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பக்காற்று வீசுகிறதாம். வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் சராசரியைவிட சுமார் 5 டிகிரி செல்சியஸ்வரை அதிக வெப்பம் இருக்கும். இந்த முறை அது 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்ற அரிதான நிகழ்வுகள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களால் உருவாக்கப்படும் பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பூமி தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், வடதுருவத்தின் கடல் பகுதியிலும், நிலப் பகுதியிலும் மூடியிருக்கும் பனிக்கட்டிகள் உருகி வருவதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

கால்சியத்தின் பங்கு

வீடு கட்ட பயன்படுத்தும கான்கிரீட் கலவையைவிட 4 மடங்கு வலிமையானது மனித எலும்பு. பிறக்கும் போது ஒரு குழந்தையின் உடலில் சுமார் 350 எலும்புகளும், அதுவே வளர்ந்த ஒருவருக்கு சுமார் 206-ஆக இருக்கும். இந்த எலும்புகளின் உறுதிக்கு கால்சியமே முக்கிய காரணம்.  நம் உடலில் உள்ள மொத்த கால்சியத்தில் 99 சதவீதம் எலும்புகளில் தான் படிந்திருக்கிறது.

சந்திரசேகருக்கு டூடுல்...

நட்சத்திரங்கள் எல்லாம் அதன் அணுசக்தியை இழக்கும்போது இறந்த நட்சத்திரங்களாகி அதாவது கருங்குழிகளாக (பிளாக் ஹோல்)மாறுகின்றன என்று கூறியவர் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர். இவர்தான், கருங்குழி என்ற ஒன்று ‌உள்ளது என்று நிரூபித்தவர். இவரின் 107-வது‌ பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.

தன்னையே ரூ.40 லட்சத்துக்கு விற்க முயன்ற நைஜீரிய வாலிபர் கைது

ஆடு, மாடுகளை விற்பது போல மனிதர்களை விற்பனை செய்வது உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள ஒன்றாகும். இந்தியா போன்ற ஒரு சில நாடுகளில் அரிதான வன விலங்குகளை வளர்ப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றம். ஆனால் நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கனோ மாகாணத்தின் Kaduna நகரில் உள்ள 26 வயதான Aliyu Na Idris என்ற வாலிபர் ஒருவர் தன்னையே விற்பனை செய்வதாக விளம்பரம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதன் மூலம் அந்த செய்தி உலகம் முழுவதும் வைரலானது. இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் விலை என்று போர்டில் எழுதி அதை கையில் பிடித்தபடி படத்துக்கு போஸ் கொடுத்தார். தனக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு அவர் உதவ முடியும் என்று நம்பினார். இதையடுத்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய ரூ.1.50 கோடி கட்டணம்

திருப்பதியில் தர்ம தரிசனம் தொடங்கி பல்வேறு தரிசன கட்டணங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகிலேயே அதிக வருவாய் கொண்ட கோயிலாகவும், அதிக பக்தர்கள் தரிசனம் செய்யும் கோயிலாகவும் திருப்பதி விளங்கி வருகிறது. அண்மையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய கட்டண அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி நாள் முழுவதும் உதய-அஸ்தமன சேவையை தரிசனம் செய்ய ரூ.1.50 கோடி கட்டணம். அதாவது வெள்ளிக்கிழமைகளில் இந்த கட்டணமும், மற்ற நாட்களுக்கு ரூ.1 கோடியும் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் நாள் முழுவதும் உதய சேவை தோடங்கி அஸ்தமன சேவை மற்றும் இரவு கோயில் நடை சாத்தும் வரையில் அனைத்து வழிபாடுகளையும் பக்தர்கள் தரிசிக்க இந்த கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் அபிஷேகம் நடைபெறும் என்பதால் ரூ.1.50 கோடி. இந்த வசதியை பக்தர்கள் 25 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது ஒருமுறை கட்டணம் செலுத்தி விட்டு ஏதேனும் ஒரு நாளை தேர்வு செய்து கொண்டால், 25 ஆண்டுகளுக்கும் அந்த நாளின் முழு சேவை வழிபாட்டையும் பக்தர்கள் தரிசிக்கலாம் என்பது கோயில் நிர்வாகத்தின் ஏற்பாடு. இதற்காக முதல் கட்டமாக ஆன் லைனில் 531 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கோடீஸ்வரர் பிச்சை

கூகுள் இணையதள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தமிழரான சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம், 6.5 லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம்). ஆனால் இழப்பீடு என்ற வகையில் இவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகை கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி). நாள் ஒன்றிற்கு இந்திய மதிப்பில் ரூ.3.52 கோடி ஊதியமாக அவர் பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்