முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வந்திருச்சு புதுசு

எவர்லாஸ்ட் நோட்புக் மூலம் எழுதுவதை டிஜிட்டலாக சேமிக்க வசதி வந்தாச்சு. இந்த நோட்புக்கில், எழுதலாம், பதிவு செய்து வைக்கலாம். கூடுதலாக, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றிலும் பகிரலாம். க்ளவுட் முறையில் கூகுள் ட்ரைவ் உள்ளிட்டவற்றில் கோப்புகளை சேமிக்கவும் வசதியுண்டு.

செயற்கையாக மழை

சீனாவின் வடமேற்கு மாகாண பகுதிகள் நிலவும் கடும் வறட்சியால் ஏற்பட்ட குடிநீர் தட்டுபாட்டை போக்க செயற்கையை மழையை பொழிய செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 9,60,000 சதுர மைல் பரப்பளவில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.மூன்று ஆண்டுகளில் நிறைவேறும் இந்த திட்டத்திற்கு  சுமார் 17 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எட்டே மாதத்தில் ...

பஞ்சாபை சேர்ந்த ரீனா - சூரஜ் குமார் தம்பதிகளுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு வயது எட்டு மாதம். ஆனால் பத்து வயது குழந்தை சாப்பிடும் உணவை இந்தக் குழந்தை சாப்பிடுவதுதான் ஆச்சரியம். இதனால் இந்த குழந்தையின் எடை தற்போது 17 கிலோவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, மூச்சு விடுவதற்கும் தூங்குவதற்கும் சிரமம் ஏற்பட்டதால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எவ்வளவு உயரம்!

சைபீரியாவிலுள்ள அல்டாஸ் மலைப்பகுதி, உலகிலேயே வெப்பநிலை குறைந்த பகுதிகளில் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில் இருப்பதால், இங்கு வெப்பநிலை மைனஸ் 50 டிகிரிக்கும் குறைவானதாகவே இருக்கும்.இந்தப் பகுதியில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் 4 ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்காக, அங்கு டாய்லெட் ஒன்று உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 8530 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த டாய்லட் உலகின் மிக அபாயகரமான டாய்லெட். டாய்லெட் உபயோகத்திற்கான டிஷ்யூ பேப்பர்கள் ஹெலிகாப்டர் மூலமாகவே கொண்டு வரப்படுகிறது.

புதிய வசதி

உலகம் முழுவதும் 200 கோடி பேர் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கில் உணவுகளை ஆர்டர் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம், ‘ஃபேஸ்புக் ஆர்டரிங்க்’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், வரும் அக்டோபர் மாதம் முதல் உணவு ஆர்டர் செய்யும் புதிய வசதி நடைமுறைப்படுத்தவுள்ளது.

உணவில் கவனம்

காரமான உணவுகள், இரைப்பையில் அமில சுரப்பை அதிகரித்து உடலை பரபரப்புடன் இருக்க செய்வதால் கோபத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது, காபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுதல், பிஸ்கட், சிப்ஸ், சூயிங் கம் மற்றும் செயற்கை சுவையூட்டிகள், ஆல்கஹால் ஆகியவை கோபத்தை ஏற்படுத்தும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago