முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஹேக்கிங்கைத் தவிர்க்க...

பேஸ்புக் நிறுவனம், பயனாளர்களின் மொபைல் போனுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ்களை ஹேக் செய்யமால் தவிர்க்க பாஸ்வேர்டுகளுடன் யுஎஸ்பி வடிவிலான திறவுகோல் பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ’செக்யூரிட்டி கீ’ என்று பெயரிடப்பட்டுள்ள இதை கணினியின் யுஎஸ்பி போர்ட் மூலம் இணைத்து உங்கள் அக்கவுண்ட்டில் லாக்இன் செய்து கொள்ளலாம்

3500 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மியை டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்த விஞ்ஞானிகள்

உலக அதிசயங்களில் எகிப்து நாட்டில் உள்ள பிரமிடும் அதில் வைக்கப்பட்டுள்ள மம்மிகளும் மக்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருபவை.  மம்மிக்களை ஆய்வு செய்யும்போது பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக 3500 ஆண்டுகளுக்கு முன்பே உடலை பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை எகிப்தியர்கள் எவ்வாறு கண்டடைந்தனர் என்பது விளங்காத மர்மமாகவே உள்ளது. இதனால் மம்மிக்களை ஆய்வு செய்யும் போது அவற்றை திறப்பதால் பாதுகாக்கப்பட்ட உடல்கள் தற்போது பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மம்மிக்களை திறக்காமலேயே அவற்றை டிஜிட்டல் தொழில் நுட்ப முறையில் ஆய்வு செய்யும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து  பிரமிடிலிருந்து கடந்த 1881 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட அமேன்ஹோடெப் என்ற மன்னரின் மம்மியை டிஜிட்டல்  முறையில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல்வேறு அதிசய தகவல்கள் வெளியாகின. அவர் இறக்கும் போது அவருக்கு வயது 35.  சுமார் 5 அடி உயரம் கொண்ட அந்த மன்னரின் பற்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளன.  உடலை சுற்றியிருந்த துணிக்குள் மன்னருக்கு தங்கத்தாலான ஆடையும் அணிவிக்கப்பட்டிருந்தது. உடலில் காயங்கள் இல்லாததால் அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தெரியவில்லை. இவர் கிமு 1525 முதல் 1504 வரை 21 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இதனால் இவர் மிகவும் இள வயதிலேயே முடி சூடி இருக்கலாம். இன்றைக்கு மருத்துவம் தொழில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ள போதிலும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடலை பதப்படுத்தும் தொழில் நுட்பத்தை எகிப்தியர்கள் எவ்வாறு தெரிந்து வைத்துள்ளனர் என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.

டீசல் என்ஜின் என ஏன் பெயர் வந்தது

ருடால்ஃப் டீசல் பிரான்ஸில் 1858 இல் ஜெர்மனியில் பிறந்தார். பிரெஞ்ச் - பிரஷ்யா போரின்போது பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இங்கிலாந்தில் இவரது பெற்றோர் குடியேறினர். படிப்பைத் தொடர்வதற்காக டீசல் மட்டும் பிரான்ஸில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஜெர்மனியில் உள்ள முனீச் நகரில் உள்ள ராயல் பவேரியன் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். உடல்நலம் குன்றியதால் 1879-ல் படிப்பைத் தொடரமுடியவில்லை. இன்ஜின்கள் குறித்து டீசல் ஆராய்ந்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து விதவிதமான இன்ஜின்களை வடிவமைத்தார். நீராவி இன்ஜினில் 90 சதவீத எரிபொருள் வீணாவதைக் கண்டறிந்தார். இறுதியில் நீராவி இன்ஜினுக்கு மாற்றாக ‘கம்ப்ரெஷன் இக்னிஷன்’ இன்ஜினை கண்டுபிடித்தார். அதுவே அவரது பெயரில் டீசல் இன்ஜின் எனப்படுகிறது. டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886-ல் வெளியிட்டார். 1913-ல் ருடால்ஃப் டீசல் திடீரென காணாமல் போனதாகவும், ஒரு வாரம் கழித்து அவரது உடல் நார்வே அருகே வடகடலில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டீசல் இன்ஜினை உருவாக்கிய டீசல் 55 ஆவது வயதில் மறைந்தார்.

சஹாராவில் மக்கள்

உலகின் மிகவும் வறண்ட நிலமான பாலைவன பூமி சஹாரா. உலகில் சஹாரா பாலைவனம் மூன்றாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,200,000 சதுர கிலோமீட்டர்கள். கடந்த 100 ஆண்டுகளில் சஹாரா பாலைவனம் 10% வளர்ச்சியடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். சஹாராவில் மக்கள் வாழ்கிறார்கள் தெரியுமா? சுமார் 2.5 மில்லியன் மக்கள் சஹாராவை தங்கள் வீடு என்று அழைக்கிறார்கள். இவர்கள் இங்கு நாடோடிகளாக வாழ்கின்றனர். ஒட்டகங்களுடன் பயணம் செய்யும் பெடோயின் நாடோடி மக்கள் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கைச் சுற்றிலும் பாலைவனத்தைச் சுற்றி நகர்கிறார்கள். பருவ மாற்றம் மற்றும் அவர்களின் தேவைகளைப் பொறுத்து இயற்கை வளங்களுக்கு அருகில் கூடாரங்கள் அடித்து முகாம்களை உருவாக்குகிறார்கள். சஹாரா வறண்டது என்ற போதிலும் இரவில் வெப்பநிலை வியக்கும் அளவில் குறைகிறது. வெப்பநிலை -6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறையும். பல மலைத்தொடர்களில் பனி தவறாமல் விழுகிறது. சஹாரா பாலைவனத்தில் மொத்தம் 20 ஏரிகள் உள்ளன. சஹாராவில் உள்ள ஒரே நன்னீர் ஏரி சாட் ஏரி. இங்கு 1960கள் வரையிலும் கூட சிங்கங்கள் வாழ்ந்தன. அவை பாலைவனத்தின் வறட்சியால் அழியவில்லை. மனிதர்களின் வேட்டையினாலேயே அவை முற்றிலும் அழிந்து போயின என்பது மிகுந்த சோகம்தானே.

Hiccups, விக்கல்

ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...  நின்று போகும் தீராத விக்கல்! ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு, சர்க்கரையை வாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!

தங்க சாப்பாடு

ஐதராபாத்தில் நடைபெற்ற திருமணத்தில் 24 கேரட் மதிப்பிலான தங்க சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களின் சாப்பாட்டு இலையில் தங்கத்தால் செய்யப்பட்ட இலையினை வைக்கும்போது உருகிவிடுகிறது. இந்த தங்கமானது, செரிமானப் பகுதியில் உறிஞ்சப்படாததால் சாப்பிடுவதற்கு சுவையற்றது மற்றும் பாதுகாப்பானது ஆகும். இதன் விலை வழக்கமான விலையை விட ரூ.250 முதல் 300 வரை அதிகமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago