முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரிக்சாகாரருக்கு ரூ.1 கோடி சொத்து

ஒடிசா மாநிலம் கட்டாக் என்ற இடத்தில் வசித்து வருபவர் Minati Patnaik. 63 வயதான இவர் கணவரை இழந்து விட்டார். கணவரை இழந்த 1 வருடத்துக்குள் தனது மகளையும் இழந்துள்ளார். இதனால் இவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ரிக்ஷா தொழிலாளி புத்தா சமல் என்பவரும் அவரது குடும்பத்தினரும் தான் எந்த பிரதிபலனும் எதிர்பார்ப்பும் இன்றி Minati Patnaik க்கு உதவி வந்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் தனது ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகள், தங்கம் ஆகியவற்றை புத்தா சமல் குடும்பத்தினருக்கு அளிப்பதாக உயில் தயார் செய்து வைத்துள்ளார். இது குறித்து Minati Patnaik கூறுகையில், சிறு வயது முதலே எனது குழந்தையை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அழைத்து சென்று வருபவர் புத்தா சமல். எனது கணவர் இறந்த பிறகு என்னை மிகவும் கவனத்துடன் எந்த பிரதிபலனும் பாராமல் அவரும், அவரது குடும்பத்தினரும் பராமரித்து வருகின்றனர். எனக்கு பிறகு எதிர்காலத்தில் சட்டரீதியாக அவர்களுக்கு எந்த பிரச்னையும் வரக் கூடாது என்பதற்காக எனது ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்து, நகைகள் ஆகியவற்றை புத்தா சமல் குடும்பத்தினருக்கு உயிலாக எழுதி வைத்துள்ளேன். காசு பணம் என்பதையும் தாண்டி மனித உறவுகள் தான் மதிப்புமிக்கவை என்பதற்கு உதாரணமாக புத்தா சமல் குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளாக எனது குடும்பத்திற்காக உழைத்துள்ளனர் என்றார் நெகிழ்ச்சியாக. அவரது இந்த கருணையுள்ளதை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

சுற்றுசூழலின் நண்பன்

ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் ரயிலின் சோதனை ஓட்டம் ஜெர்மனியில் நடந்தது. இந்த ரயிலுக்கு கோராடியா ஐலிண்ட் ரயில் என்று பெயரிட்டுள்ளனர். கார் எஞ்சினை விட சத்தம் குறைவான இந்த ரயிலின் எஞ்சின், நீராவியை மட்டுமே வெளியேற்றும். அதேபோல, ரயிலில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள் அனைத்தும் மின்கலங்களில் இருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையிலும், இழுவை சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50 மைல்கள் வேகத்தில் செல்லும் இந்த ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.

கிணறுகள் வட்ட வடிவில் இருப்பது ஏன் தெரியுமா?

கிணறு என்பது மழைநீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒருவகை குழி ஆகும். கிணறுகள் எங்கு இருந்தாலும் அதிகபட்சமாக வட்ட வடிவிலே அமைக்கப்பட்டிருக்கும். அதற்கு காரணங்கள் இருக்கின்றன. வட்டமாக கிணறு அமைப்பதற்கான காரணம், வட்டம் என்பது இரண்டு அரை வட்ட வளைவுகள் ஒன்று சேர்வதால் உருவாகின்றது. பொதுவாக ஆர்ச் எனப்படும் அரை வட்ட வடிவம் கொண்ட வளைவுக்கு அதிகளவில் எடை தாங்கும் திறன் உண்டு. அதனால் தான் அந்த காலத்தில் கட்டிடங்கள், மண்டபங்கள், பாலங்கள் போன்றவைகள் அனைத்து இடங்களிலும் அரை வட்ட வடிவ வளைவுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். கிணறுகள் தோண்டியவுடன், அவற்றின் நான்கு பக்கங்களிலும் கிணற்றின் வடிவம் சிதையாமல் இருக்க செய்வது அதை சுற்றிலும் வட்டவடிவில் உள்ள மண் மற்றும் கல்லின் எடைகள் தான் காரணமாகின்றன. இதனால் அவை மண், கல் சரிவு ஏற்படாமலும், கிணறு உறுதியாகவும் இருப்பதற்கு உதவுகின்றன. கிணற்றை வட்டவடிவில் அமைக்கும்போது மட்டுமே அதன் எடை தாங்கும் திறன் அதிகரிக்கிறது, எனவே தான் கிணறு வட்டமாக அமைக்கப்படுகிறது.

அதிவேக போலீஸ் கார்

புகாட்டி வேரோன் ரகக் கார், மணிக்கு 407 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். 2.5 விநாடிகளில் 97 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் இந்தக் காரின் விலை 10 கோடியே 41 லட்ச ரூபாய். இந்த கார் துபாய் போலீஸ் பிரிவில் இணைக்கப்பட்டதன் மூலம், அதிவேகமான போலீஸ் காரை கொண்டுள்ள முதல் நாடு என்ற சிறப்பை அந்நாடு பெற்றுள்ளது.

ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் சாதனை

1984 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஜெர்மனி வீரர் Uwe Hohn என்பவர் தான் அதிகபட்ச தூரத்துக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார். அவர் எறிந்த தூரம் எவ்வளவு தெரியுமா 104.80 மீட்டர். அதற்கு முந்தைய சாதனை அமெரிக்காவைச் சேர்ந்த டாம் பெட்ரானோவ் ஈட்டி எறிந்த தூரம் 99.72. ஈட்டி எறிதலில் இதுவரை Uwe Hohn சாதனைக்கு அருகில் கூட செல்ல முடியவில்லை.

ஒலிம்பிக்கில் கயிறு இழுக்கும் போட்டி

இன்றைக்கு எந்த ஒரு ஆண்டுவிழா, பள்ளி, கல்லூரி விழா என்றால் தவறாமல் இடம் பிடிக்கும் விளையாட்டுகளில் ஒன்றாக கயிறு இழுக்கும் போட்டி இடம் பெறும். இருந்தாலும் இதையெல்லாம் யாரும் விளையாட்டாக கூட மதிப்பதில்லை. ஆனால் ஒரு கால கட்டத்தில் இந்த போட்டிகள் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தன என்றால் ஆச்சரியம் தானே.. 1900 தொடங்கி 1920 வரையிலான காலகட்டத்தில் இந்த விளையாட்டும் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு கயிறு இழுக்கும் போட்டி உள்பட 33 விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago