முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வந்திருச்சு இ-டாட்டூ

ஆய்வாளர்கள் புதிய வகை எலெக்ட்ரானிக் டாட்டூக்களை, உருவாக்கியுள்ளனர். ஸ்கின் மார்க்ஸ் என்று பெயரிட்டுள்ள இந்த இ-டாட்டூவினை தோலில் ஒட்டிக் கொள்ளலாம். தலைமுடியை விட மெல்லியதாக வடிவமைக்கப்பட்ட இந்த இ-டாட்டூவினை ஸ்மார்ட்போனில் இணைத்து இயக்கங்களை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

உண்மை சீட்டா அழிந்தது யந்திர சீட்டா உயிர் பெற்றது

நாம் ஒரு விநோதமான யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். அதிகப்படியான அறிவியல் தாக்கத்தால் தொழில் நுட்ப மோகத்தில் மூழ்கியுள்ள நவீன யுகம். மறுபுறம் இயற்கை உயிரினங்கள் அழிந்து வரும் அவலம். இரண்டையும் சமநிலைப்படுத்த முடியாமல் மனித குலம் திணறி வருகிறது. உலகில் மிக வேகமாக ஓடக் கூடிய உயிரினம் சிறுத்தை இனத்தை சேர்ந்த சீட்டா. ஆனால் இந்தியாவை தாயகமாக கொண்ட சீட்டா கிட்டத்தட்ட அழிந்து விட்டது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட நமது நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு வாக்கில் சீட்டா முற்றிலும் வேட்டையாடி அழிக்கப்பட்டிருந்தது. சிவிங்கி என்று அழைக்கப்படும் ஆசிய சீட்டா, இந்தியாவில் 1952க்குப் பின் காணப்படவில்லை. சத்தீஸ்கரைச் சேர்ந்த இராமானுஜ பிரதாப் சிங் என்ற மன்னர் வேட்டைக்குப் பிரபலமானவர். அம்மன்னர், 1,150 புலிகளைக் கொன்றவர். இந்தியாவில் காணப்பட்ட கடைசி சிவிங்கியையும் இவர்தான் கொன்றார். அது கால்நடைகளை தாக்குவதாலும், விவசாயிகளின் அச்சத்தினாலும், முன்பு அரசர்களின் வேட்டையாடுதலுக்கான கவுரவத்தினாலும் இந்த சிறுத்தை இனம் அழிவை சந்தித்துள்ளது. தற்போது அதை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக ஆப்பிரிக்க காடுகளில் இருந்து கொண்டு இந்திய வனங்களில் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சரி இப்போ இயந்திர சீட்டாவுக்கு வருவோம். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் இயங்கி வரும் எம்ஐடி யின் கணிணி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் தான் தற்போது இந்த இயந்திர சீட்டாவை உருவாக்கியுள்ளது.  தற்போது வேகமாக வளர்ந்து வரும் ரோபோட்டிக்ஸ் துறையில் ஆர்வம் காட்டி வரும் இன்றைய உலகில் இந்த இயந்திர சீட்டா மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும் என அதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். இவை மனித குலத்தின் சாதனை என்பதா? இயற்கையை அழித்து விட்டு இயந்திரங்களை நோக்கி ஓடும் ஓட்டத்தை வேதனை என்பதா?  காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

எர்த் என எப்படி பெயர் வந்தது

நம் முன்னோர் பூமி தட்டை என்று மேலை நாட்டினர் கொண்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே இதை அண்டம் என்ற சொல்லால் அழைத்தனர். அண்டம் அல்லது முட்டை நீள் உருண்டை வடிவம் கொண்டது  பூமி என்று இதன் பொருளாகும். தமிழில் மட்டும் பூமிக்கு 62 சொற்கள் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  பூமிக்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் "எர்த்" என்ற பெயர் ஆயிரம் ஆண்டு பழமையானது. இதில் சுவாரசியம் என்னவென்றால் பூமியைத் தவிர்த்த மற்ற அனைத்து கோள்களுக்கும் கிரேக்க, ரோமானிய ஆண், பெண் கடவுள்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. அதேநேரம் பூமிக்கு "எர்த்" என்ற பழைய ஆங்கிலா சாக்ஸன் மொழியால் ஆன பெயர் சூட்டப்பட்டது. நிலப்பகுதி என்ற எளிமையான அர்த்தம் கொண்ட சொல் அது. பழைய ஆங்கிலத்தில் எர்தா (ertha ) என்றும், ஜெர்மனில் எர்டே (erde) என்றும் குறிக்கப்படுகிறது.

சாகோன் நாகரீகம்

1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாகோன்கள் இன்றைய நியூ மெக்சிகோ பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சாகோன்கள் 100க்கும் அதிகமான அறைகள் கொண்ட லாவிஷ் கற்களால் ஆன வீடுகளில் வசித்து வந்துள்ளனர். மேலும், இங்கு பெண்களே ஆட்சி செய்ததாகவும், அவர்கள் தங்களது சக்திகளை தங்களின் மகள்களுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

பிளம்பருக்கு அடித்த ஜாக்பாட்

ஒவ்வொருவருக்கும் வாழ்வில் திருப்புமுனை எப்படி வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் பிளம்பர் வேலை செய்து வரும் Justin Cauley என்பவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இவர் அண்மையில் அங்குள்ள சர்ச் ஒன்றில் பாத்ரூமில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சுவரை தோண்டும் போது சுண்ணாம்பு காரை கொட்டுவதற்கு பதிலாக பணம் கொட்டியது. அத்தனையும் அசல் டாலர்கள். உடனே சுவரை உடைத்து பார்த்தில் இந்திய மதிப்பில் ரூ.4.5 கோடி பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் நேர்மையாக சிந்தித்த அவர் அந்த பணத்தை தான் எடுத்துக் கொள்ள விரும்பாமல் போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில் அங்கு 2014 இல் நடந்த கொள்ளை சம்பவத்தின் போது அடிக்கப்பட்ட பணம் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை கண்டுபிடித்த பிளம்பருக்கு ரூ.3 லட்சம் சன்மானம் அளித்து பாராட்டப்பட்டார். இந்த செய்தி பரவி பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில், மேலும் ஒரு ஜாக்பாட்டாக சர்ச் நிர்வாகம் அவருக்கு ரூ.15 லட்சம் பரிசளித்து அசத்தியுள்ளது.

தானியங்கி கார்

கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம், தானாகவே இயங்கும் ரோபோ கார் அறிமுகமாகியுள்ளது. சென்சார் மூலம் இந்த காரின் சக்கரங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. செயற்கைக் கோள் மூலம் கார் செல்லும் பாதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிக்கு 320 கி.மீ வேகத்துக்கு செல்லுமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago