முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கிரேட் நிக்கோபார்

நிகோபார் தீவுக்கூட்டங்களில் உள்ள மிகப்பெரிய தீவு கிரேட் நிக்கோபார் தீவு. இந்தத் தீவுப்பகுதியில் ஸ்க்ரப் பவுல் மற்றும் மெகாபாட் என்ற இரண்டு அரிய காட்டு கோழியினங்கள் உள்ளன. போர்ட் பிளேர் நகரத்திலிருந்து ஹெலிபாக்டர் சேவைகள் மற்றும் சொகுசுப்படகு மூலமாக இந்த தீவை நாம் அடையலாம்.

வியாழனை விட 10 மடங்கு மிகப் பெரிய கோள்

சூரிய மண்டலத்தில் நமக்கு தெரிந்து 9 கோள்கள் உள்ளன. ஆனால் அதையும் தாண்டி பால்வெளி மண்டலத்துக்குள் சென்றால் எண்ணற்ற கோள்களும், நட்சத்திரங்களும் கோடி கணக்கில் கொட்டி கிடக்கின்றன. இயற்கையின் முடிவற்ற ஆச்சரியங்களில் ஒன்றாக பிரபஞ்சம் எப்போதும் திகழ்ந்து வருகிறது. அதற்கு சாட்சியாக தற்போது வியாழனை விட மிகப் பெரிய கோளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கோள் பூமியிலிருந்து 325 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாம். இது வியாழனை விட 10 மடங்கு பெரியது, இதன் எடை ஏறக்குறைய 10 சூரியன்களுக்கு சமம் என்கின்றனர். இது தொடர்பான விஞ்ஞான தகவல்கள் நேச்சர் இதழிலும் வெளியாகி உள்ளன. “b Cen (AB)b" என பெயரிடப்பட்டுள்ள இந்த கோள் தனிப்பட்ட சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறென்ன பிரபஞ்சத்தின் ஆச்சரியங்கள் விரிவடைந்து கொண்டே போகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

மிதக்கும் தபால் நிலையம்

உலகிலேயே மிதக்கும் தபால் நிலையம் எங்கிருக்கு தெரியுமா.. அது வேறு எங்கும் இல்லை. இந்தியாவில்தான். அதுவும் குளுகுளு காஷ்மீரில். ஸ்ரீ நகரில் உள்ள தால் ஏரியில் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிதக்கும் தபால் அலுவலகம் திறக்கப்பட்டது.  அப்போதைய முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சச்சின் பைலட் ஆகியோரால்தொடங்கப்பட்டது. படகு ஒன்றில் தான் இந்த அலுவலகம் செயல்படுகிறது. ஏரியில் மிதந்தபடியே உள்ளூர் மக்களுக்கான தபால் சேவைகளை செய்து வருகிறது.   உலகளவில் இந்தியாவில் தான் அதிக தபால் அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் சுமார் 1,55,015 தபால் அலுவலகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

ரூ. 1 கோடிக்கு விற்பனையான காளைமாடு

இந்த ஆண்டுக்கான வேளாண் கண்காட்சி பெங்களுருவில் நடைபெற்றது. இந்தாண்டுக்கான கண்காட்சியை பெங்களுரூ வேளாண் அறிவியல் பல்கலை கழகம் ஒருங்கிணைக்கிறது. நவம்பர் 11 முதல் 14 வரை நடைபெற்ற இந்த கண்காட்சி ஜிகேவிகே வளாகத்தில் நடைபெற்றது. இதில் பாரம்பரிய தானிய விதைகள், நாட்டு மாட்டு ரகங்கள், விலையுயர்ந்த பாரம்பரிய ஜாதி மாடுகள், வேளாண் கருவிகள், உழவு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளும் பங்கேற்றனர்.இதன் ஹை அட்ராக்சனாக விளங்கியது எது வென்றால் ஒரு நாட்டு காளை மாடு ரூ.1 கோடிக்கு விற்பனையானது என்பதுதான். போரே கவுடா என்பவருக்கு சொந்தமான மூன்றரை வயது கொண்ட Hallikar ரக காளை மாடுதான் தற்போது அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. உயர் ஜாதி நாட்டு மாட்டு ரகமான இந்த காளையின் உயிரணுவுக்கு மிகுந்த டிமான்ட் இருப்பதால் ஒரு டோஸ் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன் உயிரணு விற்பனை மூலம் மாதம் ஒன்றிற்கு சுமார் ரூ.25 லட்சம் வரை வருவாய் வருவதாக சொல்லப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... எனவே இந்த காளைக்கு மிகுந்த தேவை இருப்பதால் விலையும் அதிகமாக உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார். பொதுவாக மாடுகள் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தான் விலை போகும். தற்போது ரூ.1 கோடிக்கு காளை விற்பனையான சம்பவம் விவசாயிகள் மத்தியில் ஆச்சரியமாக பகிரப்பட்டு வருகிறது.

பாலினம் அறிய

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் பாலினம் குறித்து அறிய எளிய சோதனையாக டிரானோ பரிசோதனை உள்ளது. இந்த பரிசோதனைக்கு ஒரு பாத்திரத்தில் தாயின் சிறுநீரை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் டிரோனோ சேர்க்க, இவை இரண்டும் கலந்து வரும் நிறம் பச்சையாக தோன்றினால், பெண் குழந்தை. நீலமாக தோன்றினால் ஆண் குழந்தை என்றும் அறிந்து கொள்ளலாம்.

முழுக்க பெண்களால் இயக்கப்படும் ரயில் நிலையம் எங்குள்ளது தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலம ஜெய்ப்பூரில் உள்ள காந்தி நகர் ரயில் நிலையத்தின் சிறப்பு என்ன தெரியுமா.. இந்தியாவில் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடைய ஓடும் ரயில் நிலையத்தில் ஜெய்ப்பூர் காந்தி நகரே முழுமையாக பெண்களை கொண்ட முதல் ரயில் நிலையம். கடந்த 2019 பிப்ரவரி மாத இறுதியில் இது செயலுக்கு வந்ததுடன் 40க்கும் மேலான பெண் ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago