முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டாப் 5 இந்தியர்

உலகளவில் உள்ள பெரும் பணக்காரர்களில் 30 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இதில் முதலிடத்தில் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி - 21 பி.டாலர். 2-வது சன் ஃபார்மா தலைவர் திலீப் சங்வி - 20 பி. டாலர். 3-வது விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி - 19.1 பி.டாலர். 4-வது எச்சிஎல் தலைவர் ஷிவ் நாடார் - 14.8 பி.டாலர். 5-வது லக்‌ஷ்மி மிட்டல் - 13.5 பி.டாலர்.

தங்கத்தை முதலில் தோண்டி எடுத்தவர்கள் யார் தெரியுமா?

தங்கச் சுரங்கத் தொழில் ஏறக்குறைய 5000 ஆண்டுகட்கு முன் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தங்கம் எகிப்து நாட்டில்தான் முதலில் தோண்டி எடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்; தங்கச் சுரங்கத் தொழிலின் பல்வேறு படிநிலைகளைக் (stages) காட்டும் சுவரோவியங்கள் அங்கு காணப்படுகின்றன. ஆற்றுத் தண்ணீரிலிருந்தும் தங்கம் பெறப்பட்டது; நீரிலிருந்து ஆற்று மணலைச் சலித்து, எடை மிகுந்த தங்கத் துகள்களை வடிகட்டி எடுத்தனர். கி.மு. 3000 ஆண்டுகளில் தங்க மோதிரங்கள் ஒரு வகை ஊதியமாகத் தரப்பட்டதாம். நாணயங்களாகத் தங்கம் வழங்கப்பட்டதோடு, அணிகலன்களாகவும் அது பயன்படுத்தப்பட்டது. சுமார் கி.மு.2000 ஆண்டுகளில் தரைக்கு அடியில் இருந்து தங்கத் தாதுப் பொருட்களைக் (ores) கண்டறிந்து, அவற்றிலிருந்து தங்கம் பெறப்பட்டது. தங்கம் அதன் தரத்திற்கேற்ப நாணயத்திற்கு மாற்றாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பிரிட்டனில் இந்த நாணய மாற்றுமுறை 1821ஆண்டு அறிமுகப்பட்டது என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

நிலவில் தண்ணீர்

நிலவில் பெரிய அளவில் தண்ணீர் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அப்பல்லோ விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவிற்கு சென்றபோது அங்கிருந்து எடுத்துவரப்பட்ட மாதிரிகளின் மூலம் அங்கு நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிலவில் உள்ள நீர் வருங்காலத்தில் விண்வெளி ஆய்வாளர்களின் தாகத்தை தணிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

15 ஆண்டுகளாக மலையை குடைந்து சாலை அமைத்த மக்கள்

மலைச்சாலைகள் எப்போதும் நம்மை மிகவும் ஈர்ப்பை ஏற்படுத்துபவைதான். ஆனால் அதே நேரத்தில் மிக அபாயகரமான இடங்களில் கூட வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளை கண்டால் யாருக்கும் லேசாக ஜெர்க் ஆகும் தானே.. ஆனால் சீனாவில் உள்ள சாங்சி மாகாணத்தில் உள்ள Shenlongwan என்ற பகுதிக்குச் செல்லும் மலைச்சாலை சற்றே வித்தியாசமானது. அது என்ன என்கிறீர்களா.. 1526 மீட்டர் நீளமே கொண்ட இந்த மலைச் சாலையை அப்பகுதி கிராம மக்களே சேர்ந்து சுமார் 15 ஆண்டுகளாக மலையை குடைந்து உருவாக்கியுள்ளனர். கடந்த 1985 இல் தொடங்கிய பணிகள், இதன் இறுதி கட்ட பணிகள் கடந்த 2000 இல்தான் முடிவடைந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சென்னை மாநகராட்சி எப்போது தொடங்கப்பட்டது

சென்னைக்கென ஒரு நகர நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி 1687 செப்டம்பர் 28 ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்த அதிகாரிகளுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் ஜோசையா சைல்ட். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜோசையா சைல்டும் துணை ஆளுநர் ஒருவரும் இங்கிலாந்து சென்று மன்னர் இரண்டாம் ஜேம்சைச் சந்தித்து இது குறித்து விவாதித்தனர். முடிவில், அதே ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சென்னையை மாநகராட்சியாக அறிவித்து, அரச பிரகடனத்தை வெளியிட்டார் இரண்டாம் ஜேம்ஸ். அதை தொடர்ந்து 1688 செப்டம்பர் 29ஆம் தேதி மன்னரின் ஆணை அமலுக்கு வந்தது. ஒரு மேயர், ஆல்டர்மென் எனப்படும் 12 கவுன்சிலர்கள், பர்ஜெஸ் எனப்படும் பிரதிநிதிகள் (60 முதல் 100 பேர்வரை) ஆகியோருடன் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. ஆல்டர்மென் எனப்படும் கவுன்சிலர்கள் பிரிட்டிஷ், பிரெஞ்ச், இந்திய வர்த்தக சமூகத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டு மேயரால் நியமிக்கப்பட்டனர். நத்தேனியல் ஹிக்கின்சன் சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார்.

உலகிலேயே மிகப் பெரிய புத்தகம்

உலகிலேயே மிகப் பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago