முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இந்தியாவுக்கு முதல் நோபல் பரிசு

உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுக் கொடுத்தவர் கவிஞர் ரவீந்திராத் தாகூர். இவர் 1861 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி தேவேந்திரநாத் தாகூர், சாரதா தம்பதிகளுக்கு கொல்கத்தாவில் பிறந்தார். இளம் பருவத்திலேயே இலக்கியம், ஓவியம், இசை , கவிதை என்று பன்முகத்திறமைக் கொண்டிருந்தார். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1878 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றவர் அங்குள்ள கல்விமுறையை அறிந்துகொண்டார். அதன்படி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வங்காளத்தில் 'சாந்தி நிகேதன்' பள்ளியைத் துவங்கினார். இங்கு படித்தவர்தான் புகழ்பெற்ற இந்திய இயக்குநர் சத்யஜித்ரே. ’கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பிற்காக தாகூருக்கு இலக்கியத்திற்காக நோபல் பரிசு கடந்த 1913 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது. அப்பரிசை வென்ற  முதல் ஆசியர் என்ற பெருமையும் தாகூருக்கு உள்ளது.

உலகின் மிக பழமையான ஒயின் பாட்டில் அண்மையில் கண்டுபிடிப்பு

மேலைநாடுகளில் ஒயினை தயாரிப்பதும், அவற்றை நூறாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக பாதுகாப்பதும் வழக்கம். அண்மையில் ரோமை சேர்ந்த செல்வந்தர் ஒருவரின் கல்லறை ஜெர்மனியில் அமைந்துள்ளது. அதில்தான் உலகிலேயே மிகவும் பழமையான ஒயின் பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒயின் 4 நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கிட்டத்தட்ட 1650 ஆண்டுகள் பழமையானதாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பதால் திறந்தால் என்ன ஆகும் என்றோ, தற்போது அது நச்சுத் தன்மைய உடையதாகவோ மாறியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இருந்த போதிலும் திறக்கப்படாத பாட்டிலில் அடைக்கப்பட்ட மிக பழமையான ஒயினாக இது கருதப்படுகிறது.

உலகின் மிகச்சிறிய நாடு எது தெரியுமா?

உலகின் மிகச்சிறிய நாடு ‘வாடிகன் சிட்டி’. இது மொத்தமாக 0.44 சதுர கிலோமீட்டர் அளவே உடையது. மொத்தமாக 110 ஏக்கர் மட்டுமே, இதன் பரப்பளவு. இது ரோம் நகரின் உள்ளேயே அமைந்துள்ளது. இது உலகளாவிய கத்தோலிக சபையின் தலைமை இடமாக உள்ளது. உலகின் மிகப்பெரிய தேவாலயமான புனித பீட்டர் பஸிலிக்கா இங்கு உள்ளது. இது 1929ம் ஆண்டு, முசோலினி போப்புடன் செய்துக் கொண்ட லாட்டரன் உடன்படிக்கையின் போது உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, இது நடுநிலை நாடாக இருந்தபடியால், மேலும் கத்தோலிக சபையின் தலைநகராக இருந்தபடியால், தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. உலகெங்கிலும் உள்ள 100 கோடி கத்தோலிகர்களின் தன்னார்வ கொடையே இதன் வருமானம். இதைத் தவிர, அருங்காட்சியக நுழைவுக் கட்டணம், தபால் தலைகள், சுற்றுலா நினைவுப் பொருட்கள் வழியாக பணம் கிடைக்கிறது. இதன் மொத்த மக்கள் தொகை, கிட்டத்தட்ட 1000 மட்டுமே. இது பிறப்பினால் வரும் குடியுரிமை அல்ல. இது கத்தோலிக சபையின் பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தப்படும் நபர்களுக்கு, மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, அந்த பொறுப்பின் காலத்திற்கேற்ப, குடியுரிமை வழங்கப்படும். அந்தப் பொறுப்பின் காலத்திற்கு பிறகு, தன்னிச்சையாகவே, லாட்டரன் உடன்படிக்கையின் படி, அந்தக் குடியுரிமை இத்தாலிய குடியுரிமையாக மாற்றப்படும்.

ஆளில்லா விமானம் டெலிவரி

இணைய வர்த்தக சேவையில் முதன்முதலா அமேசான் நிறுவனம், ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் டோர் டெலிவரி சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொருட்கள் ஆர்டர் செய்து சுமார் 13 நிமிடங்களுக்குள் உரியவரிடம் கொண்டு சேர்க்கப்படும்.பாப்கார்ன் போன்ற மிகவும் எடை குறைவான பொருட்கள் மட்டுமே டிரோன் விமானம் மூலம் டெலிவரி செய்யப்படும். ட்ரோன் மூலம் முதன்முதலில் டிசம்பர் 7 ஆம் தேதி அதன் முதல் விற்பனையை தொடங்கியது. இந்த டிரோன் 400 அடி உயரத்தில் பறந்து செல்லும் திறன் உடையது. வாடிக்கையாளர்களின் டெலிவரி குறித்த ப்ரோக்ராம்மிங் ட்ரோன் விமானத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் படி பறந்து சென்று பொருட்களை உரியவர்களிடம் கொண்டு சேர்கிறது.

தங்கத் தகடு பொருத்திய கார், பைக்கில் வலம் வரும் இளைஞன்

தங்க ஆபரணங்களை அணிவதில் பெரும்பாலானோருக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. ஆனால் அதே வேளையில் உடலில் யாரும் கிலோ கணக்கில் தங்கத்தை நகைகளாக செய்து அணிந்து கொண்டு வலம் வருவதில்லை. வியட்நாமைச் சேர்ந்த 39 வயது இளைஞர் இதில் சற்று வேறு ரகம். இவர் தங்கத்தின் மீது தீராத மோகம் கொண்டவர். இவரது உடலில் இவர் அணிந்திருக்கும் தங்க நகை மட்டும் எவ்வளவு தெரியுமா 2 கிலோ.  ஆன் ஜியாங் மாகாணத்தில் வசித்து வரும் டிரான் டக் லோய் என்ற இளம் தொழில் முனைவோர்தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர்.  இவருக்கு விதவிதமான உருவங்களை தங்க ஆபரணங்களாக செய்து அணிந்து கொள்வதில் தீராத ஆர்வம் உடையவர். ஆப்பிரிக்க பல்லி, டிராகன் போன்ற பல்வேறு உருவங்களை தங்கத்தால் செய்து விரலில் மோதிரமாகவும், கழுத்தில் சங்கிலியாகவும் அணிந்துள்ளார். அது மட்டுமா, தனது காரை முழுக்க முழுக்க தங்கத் தகடுகளால்  வேய்ந்துள்ளார். காரின் டயரில் இருக்கும் இரும்பு பிளேட்களுக்கு பதிலாக தங்கத்தில் செய்து பொருத்தியுள்ளார். அது மட்டுமா தங்கத் தகடுகளால் வேயப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களையும் இவர் வைத்துள்ளார். இதற்காக அந்நாட்டு பணத்தில் மில்லியன் கணக்கில் செலவிட்டுள்ளார். இதை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மில்லியன் கணக்கானோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

புதிய கிரகம்

பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில், உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது. இது பூமியை விட 2 அல்லது 3 மடங்கு பெரியது. இதன் ஓரத்தில் ‘ஜிஜே 625’ என்ற நட்சத்திரமும் உள்ளது.  இந்த கிரகத்தை கனாரி தீவுகளில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் டி ஆஸ்ட்ரோ பிசியா டி கனாரீஸ்’ நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago