இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு பரவலாக பேசப்பட்ட ஒரு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆவர். நம் நாட்டின் தேசிய கீதமான “ஜன கண மன” பாடலை எழுதிய ஒரு அற்புத கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். இவர் கவிதை இயற்றுவதில் மட்டுமல்ல இசைப் பாடகர், கதாசிரியர், நாவலாசிரியர், ஓவியர், கல்வியாளர் போன்ற பல துறைகளிலும் கால்தடம் பதித்த அற்புத மாமனிதர் ஆவார். கவிதைக்காக நோபல் பரிசு வாங்கிய ரவீந்திரநாத் தாகூருக்கு சிறு வலைபோட்டு லாவகமாக மீன் பிடிக்கும் ஆற்றல் உண்டு. வடிகட்டி மாதிரி உள்ள சின்னஞ் சிறிய வலையில் பரபரப்பான கொல்கத்தா நகரத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமைதியாக ஓடும் ‘விளிண்டா’ ஆற்றங்கரையில் அவர் அடிக்கடி மீன் பிடிக்கச்செல்வது வழக்கம். பிடித்த மீனை சிறிதுநேரம் உள்ளங்கையில் வைத்திருந்துவிட்டு பிறகு ஆற்றில் விடுவாராம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கடைகளில் நாம் சாப்பிட வாங்கும் சிக்கனுடன் கூடவே, 2 துண்டு எலுமிச்சை பழங்கள் வைக்க ஒரு முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின் - சி தேவை. அதனால் தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின் - சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட வைக்கிறார்கள்.
இதன் முடி வெள்ளையாக காணப்பட்டாலும் இதன் தோல் கருப்பாக இருக்கும். இது நீர் நாய்களை வேட்டையாடும் போது கடல் பணியை ஒரு தளமாக பயன்படுத்துகின்றது. இதற்கு 42 பற்கள் இருக்கும் மற்றும் பெண் கரடி ஆண் கரடியை விட பாதி எடை மட்டுமே இருக்கும். ஒரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால் போலார் கரடிகளுக்கு அருமையான வாசனை சக்தி உள்ளது,கிட்டத்தட்ட ஒன்றறை மைல் தூரத்தில் இருக்கும் கடல் நாய்களின் வாசனையை கண்டுபிடித்துவிடும். இதன் குட்டிகள் பிறக்கும்போது மனித குழந்தைகளை விட சிறியதாக இருக்கும் அதாவது ஒரு எலி அளவு மட்டுமே இருக்கும். அவைகளுக்கு உணவு நிறைய கிடைத்தால் அவை ஒரே ஆண்டில் முழு மனிதன் அளவு வளர முடியும்.
சந்திரனிலும் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நம்முடைய பூமியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நமக்கு தெரியும். இதனால் அடிக்கடி ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும். நம்முடைய பூமியைப் போலவே சந்திரனிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. 1969 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சந்திரனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அப்பல்லோ விண்வெளி வீரர்கள் அவர்கள் ஆய்வு செய்யும் இடங்களை சுற்றி நில அதிர்வு அளவீடுகளை நிறுவினார்கள். இந்த ஆய்வில் சந்திரனில் நிலநடுக்கம் இருபதிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்திற்குள் ரிக்டர் அளவில் 5.5 வரை பதிவானது. சந்திரனில் 700 கிலோ மீட்டர் வரைக்கும் ஆழத்தில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நதியிலிருந்து, சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய 10,000 க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர். மேலும், பெரும் அளவில் வெண்கலத்தால் ஆன நாணயங்கள், வாள்கள், கத்திகள், ஈட்டிகள் மற்றும் இரும்பு ஆயுதங்களும் கிடைத்துள்ளன. 1646-ம் ஆண்டில், ஜியான்ஜோங் என்ற விவசாயிகள் தலைவர் மிங் வம்சவளியனரால் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது அவரது செல்வங்களை படைவீரர்கள் சிச்சுவான் உள்ள நதி வழியாக 1000 படகுகளில் எடுத்து சென்றபோது படகு மூழ்கியதாக நம்பப்படுகிறது. வறண்ட காலத்தில் நதியில் இருந்த தண்ணீரை வெளியேற்றி ஆராய்ச்சியாளர்கள் தோண்டியதில் இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டது.
குரங்களால் மனிதர்களைப் போல பேசவும், சிரிக்கவும் முடியாது. ஆனால், மக்காகிவ் வகைக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போலவே குரல் வளை உள்ளிட்ட குரல் எழுப்பும் உறுப்புகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஒலி சைகைகளை குரலாக மாற்றும் அளவுக்கு இவைகளுக்கு மூளை வளர்ச்சியடையவில்லையாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |