முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

களையெடுக்கும் ரோபோ

தோட்டங்களில் வளரும் களைகளை கொல்லக்கூடிய புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டெர்டில் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ முற்றிலும் சூரிய மின்சக்தியில் செயற்படக்கூடியது. இதை பயன்படுத்தி களைகளை கொல்ல முடிவதால் எதிர்காலத்தில் கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என இதை வடிவமைத்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

திப்பு சுல்தான் ஒரு ராக்கெட் விஞ்ஞானி

இன்றைக்கு செயற்கை கோள்களை சுமந்த படி விண்ணில் பறக்கும் ராக்கெட்டுகளை நாம் தொலைகாட்சிகளில் பார்த்திருப்போம். அதே போல ராணுவத்தினரின் போர் பயிற்சியின் போதும் ராக்கெட் வடிவிலான ஏவுகணைகளை கண்டிருப்போம். ராக்கெட், ஏவுகணை இரண்டும் ஒரே தொழில்நுட்பத்தில் செயல்படக் கூடியவைதான். இதில் என்ன ஆச்சரியம் என்றால் 18 ஆம் நூற்றாண்டுவரை அனைத்து நாடுகளிலும் ராக்கெட்டுகள் மரம் அல்லது மூங்கிலை கொண்டே தயாரிக்கப்பட்டன. உலகிலேயே முதன் முதலாக உலோகத்தினாலான ராக்கெட்டை செய்தவன் திப்பு சுல்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். குண்டூர் யுத்தத்தின் போது ஆங்கில படைகளை உலோக ராக்கெட்டுகளை பயன்படுத்தி தெறிக்க விட்டான். அவன் உருவாக்கிய ராக்கெட்டுகள் 20 செமீ நீளம் 8 செமீ விட்டமும் கொண்டவையாக சுமார் 3 கிமீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டவையாக விளங்கின. அன்றைய கால கட்டத்தில் மிக தொலை தூரம் சென்று தாக்கும் ராக்கெட் திப்புவினுடையது மட்டும்தான் என்பது ஒரு வரலாற்று ஆச்சரியம் தானே..

ராட்சத பென்குயின்கள்

பென்குயின்கள் சுமார் 6 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது டைனோசர் இருந்த காலத்திலேயே வாழ்ந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பென்குயின்கள் ராட்சத வடிவில் இருந்துள்ளன. நியூஸிலாந்து நாட்டில் வைப்பாரா எனும் நகரத்தில் வாழ்ந்த பென்குயின்கள், சுமார் 150 செமீ உயரத்துடன் வாழ்ந்ததாக புதை படிவங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய உயரமான, 17 பென்குவின் இனங்கள் இயற்கையின் காலநிலை மாற்றம், பேரழிவுகளால் அழிந்ததாம். ஆனால், இப்போது உள்ள பென்குயின்கள் வெறும் 43 சென்டிமீட்டர் உயரத்துடனே உள்ளன. இதன் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள்.

மிதக்கும் தபால் நிலையம்

உலகிலேயே மிதக்கும் தபால் நிலையம் எங்கிருக்கு தெரியுமா.. அது வேறு எங்கும் இல்லை. இந்தியாவில்தான். அதுவும் குளுகுளு காஷ்மீரில். ஸ்ரீ நகரில் உள்ள தால் ஏரியில் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிதக்கும் தபால் அலுவலகம் திறக்கப்பட்டது.  அப்போதைய முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சச்சின் பைலட் ஆகியோரால்தொடங்கப்பட்டது. படகு ஒன்றில் தான் இந்த அலுவலகம் செயல்படுகிறது. ஏரியில் மிதந்தபடியே உள்ளூர் மக்களுக்கான தபால் சேவைகளை செய்து வருகிறது.   உலகளவில் இந்தியாவில் தான் அதிக தபால் அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் சுமார் 1,55,015 தபால் அலுவலகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இருதயம் கவனம்

வருடாந்திர மருத்துவ பரிசோதனை செய்வது, அன்றாட உணவில்  உப்பின் அளவினை சற்று குறைத்து எடுத்து கொள்ளுதல். கைவீசி நடத்தல், படிகட்டு ஏறி இறங்குதல்,  டி.வி. பார்க்கும் பொழுது ஜாக் செய்வது,  வீடு பெருக்கி துடைப்பது,   குழந்தைகளுடன் பார்க்கிற்கு சென்று விளையாடுதல், இரவு உணவுக்குப் பிறகு சிறிது நடத்தல் போன்ற எளிய பயிற்சிகள் இருதயத்தை தீங்கு ஏற்படாமல் பாதுகாக்கும்.

குளிர் நல்லது

டிசம்பர் மாதத்தில் உடலை உலுக்கும் குளிர் காற்று சில்லென்று ஊடுருவும்.  இந்த குளிர் காற்றில் உடலுக்கும், மூளைக்கும் தேவைப்படும்  ஆக்சிஜன் அதிக அளவில் உள்ளது.இந்த  ஆக்சிஜனை  மக்கள் அதிக அளவில் பெற வேண்டும் என்பதற்காகவே  மார்கழியில் வீட்டு வாசலில் கோலம் போடும் கலாச்சாரமும்,  கோவில்களில் அதிகாலை பூஜைகளும் மார்கழியில்  கடைபிடிக்கப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago