ஏரோ ஜெல், இதுதான் உலகிலேயே மிகவும் எடை குறைந்த பொருளாகும். மேலும் அடர்த்தியும் குறைவு. அதே நேரத்தில் இந்த பொருள் 1000 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரையிலும் வெப்பத்தை தாங்கக் கூடியது. அதே போல மைனஸ் 78 டிகிரி வரையிலும் உறை பனியை தாங்கும் திறன் கொண்டது. இந்த பொருளை 1931 இல் முதன் முறையாக சாமுவேல் ஸ்டீபன்ஸ் கிஸ்ட்லர் என்பவர் உருவாக்கினார். தற்போது விண்வெளி வீரர்களுக்கு தேவையான உடைகளை இதைக் கொண்டே தயாரிக்கிறார்கள். உறைந்த காற்று, உறைந்த நெருப்பு, உறைந்த மேகம் போன்ற செல்லப் பெயர்களும் இதற்கு உண்டு. தொடக்கத்தில் ஏரோஜெல் சிலிக்கா ஜெல்களை கொண்டு தயாரிக்கப்பட்டன. பின்னர் சாமுவேல் இதை அலுமினா, குரோமியா, டின் டையாக்சைடு, கார்பன் உள்ளிட்ட பல்வேறு தனிமங்களை கொண்டு தயார் செய்தார்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
1907 ஓர் விஞ்ஞான அதிசயம் நடந்தது. அதுதான் லியோ பேக்லேண்ட் என்பவர் பாலிமர் பேக்லைட் எனப்படும் பிளாஸ்டிக்கை கண்டறிந்த ஆண்டு. அதன் பிறகு அணு ஆயுதத்தை விட உலகையே அச்சுறுத்தும் ஒரு நச்சாக மாறும் என அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு உலகின் முக்கிய தேவை பிளாஸ்டிக்குக்கு ஒரு உடனடி மாற்று. இந்த சூழலில் நொய்டாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டறிந்ததுதான் காகித பாட்டில். சுக்ஸி பாட்டில் மற்றும் மக்கும் கழிவுகளை கொண்டு இவற்றை 2 ஆண்டு ஆய்வுக்கு பின் வடிவமைத்துள்ளனர். எளிதில் மக்கக் கூடியதாகவும், கசிவுத்தன்மை அற்றதாகவும் இவை உள்ளதாக கூறப்படுகிறது. அப்பாடா எப்படியோ பிளாஸ்டிக்கிலிருந்து தப்பினால் போதும் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்.
நமது புராணங்களில் ஆதிசேஷன், காளிங்கன், வாசுகி என ஏராளமான பாம்புகளை பற்றிய குறிப்புகள் உள்ளன. இவை உருவத்திலும், அளவிலும் மிகவும் பிரமாண்டமானவை. அதே போல அறிவியலிலும் அழிந்து போன உயிரினங்கள் பட்டியலில் சுமார் 40 அடிக்கும் மேலான நீளமுள்ள டைட்டானோவா வகை பாம்புகள் பற்றி குறிப்பிடப்படுகின்றன. இந்நிலையில் அண்மையில் நெட்டிசன் ஒருவர் கூகுள் எர்த் வழியாக பார்த்த போது பிரான்ஸ் நாட்டின் கடற்கரை ஒன்றில் சுமார் 400 அடி நீளமுள்ள பாம்பு எலும்புக்கூடு கிடப்பதாக பதிவிட்டிருந்தார். இது டைட்டானோவாவா என நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து விவாதித்தனர். இறுதியில் பிரான்சில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற Estuaire ஓவிய கண்காட்சிக்காக சீனாவை சேர்ந்த ஓவியர் ஹூவாங் யோங் பிங் என்பவர் 425 அடி நீளத்தில் உருவாக்கி கடற்கரையில் அமைத்திருந்த பாம்பு எலும்புக்கூடு சிலைதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
ஆர்கிமிடிஸ் என்பவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஒரு கணித மேதை; இவர் வாழ்ந்த காலம் கி.பி.287-212 ஆகும். ஆர்கிமிடிஸ் தமது கோட்பாடுகளை நிரூபிப்பதற்கு, உரிய சோதனைகளை நடத்திப் பார்ப்பதில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் கண்டுபிடித்த ஆர்கிமிடியன் திருகாணி தொழில் நுட்பம் நீரேற்றும் பயன்பாட்டிற்கு உரியதாக இன்றும் வேளாண் பாசனத் துறையில் விளங்கி வருகிறது. நெம்புகோல்கள் மற்றும் கப்பிகள் (pulleys) பயன்பாட்டிற்கு உரிய விதிகளை, ஆர்கிமிடிஸ்தான் அறிவியல் உலகிற்கு அளித்தார். ஆர்கிமிடிசின் வாழ்க்கையில் நடந்ததாகக் கூற்ப்படும் ஒரு நிகழ்வு இன்றும் அறிவியல் உலகில் நினைவு கூறப்படுவதாக விளங்கி வருகிறது. குளியலறையில் நிர்வாணமாகக் குளித்துக் கொண்டிருந்த நிலையில், அவர் ஓர் அறிவியல் உண்மையைக் கண்டறிந்தார்; உடனே, "கண்டுகொண்டேன், நான் கண்டு கொண்டேன்" என்னும் பொருள்படும் ‘யுரேகா! யுரேகா! (Eureka!)’ எனக் கூறியவாறே தெருவில் இறங்கி நிர்வாணமாக ஓடினார் என்பதே அந்நிகழ்வு. இந்நிகழ்ச்சி நடந்ததோ அல்லது கற்பனையோ, ஆனால் அவர் கண்டுபிடித்த உண்மை இன்றும் போற்றப்பட்டு வருகிறது; அவ்வுண்மை இதுதான்: "ஒரு பொருள் நீரில் மிதந்தால் அல்லது மூழ்கினால், அது தன் எடைக்கு சமமான நீரை வெளியேற்றுகிறது".
சுவாசக்குழாய் திறந்தால்தான் ஒருவரால் பேசமுடியும். நாம் பேசிக்கொண்டே சாப்பிடும்போது சுவாசக்குழாய் திறப்பதால், இதற்குள் உணவுப்பொருள் நுழையும் ஆபத்து அதிகம். அதை வெளியேற்ற நடக்கும் செயல்தான் புரையேறுதல். எனவே சாப்பிடும் போது பேசுவதை தவிர்ப்பதே நல்லது.
உலகம் முழுவதும் பயணம் செய்தாலும் அங்குள்ள எந்த பெட்டிக்கடையிலும் குடிநீர் பாட்டில் கிடைக்குமோ கிடைக்காதோ.. ஆனால் நிச்சயம் கோகோ கோலா கிடைக்கும். அந்த அளவுக்கு தனது வணிகத்தை பரந்து கடை விரித்துள்ளது. ஆனால் கோகோ கோலா கிடைக்காத நாடுகளும் உலகில் உள்ளன என்றால் நம்புவீர்களா.. இரும்புத்திரை நாடு என அழைக்கப்படும் வட கொரியா, அமெரிக்க சிங்கத்தை சீண்டி பார்த்த கியூபா ஆகிய 2 நாடுகளில்தான் கோகோ கோலா கிடைக்காது. அந்த கம்பெனி காரர்கள் தலைகீழாக நின்று தண்ணி குடித்து பார்த்தும் கூட இந்த 2 நாடுகளும் தங்களது நாடுகளில் அதை விற்க அனுமதி மறுத்து விட்டன. இருந்த போதிலும் தங்களது பக்கத்து நாடுகளான மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து சில வியாபாரிகள் இறக்குமதி செய்து விற்பதாக யூகங்கள் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
15 Dec 2025 -
மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைக்கும் முயற்சியை உடனே கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
15 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைக்கும் முயற்சியை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை உதவி இயக்குநர் அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
15 Dec 2025சென்னை, ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட நிலையில் கோர்ட் அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
-
2026 சட்டசபை தேர்தல் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி
15 Dec 2025தஞ்சாவூர், 2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது.
-
தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் முடிவு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
15 Dec 2025சென்னை, 2026 சட்டமன்ற தேர்தலிலும் ராயபுரத்தில்தான் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டின் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்: ஜே.பி.நட்டா அறிவிப்பு
15 Dec 2025புதுடெல்லி, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டார்.
-
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு முழு ஆதரவு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
15 Dec 2025டெல்லி, ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
15 Dec 2025சென்னை, பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
-
யூத எதிர்ப்புவாதத்தை தூண்டுகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் மீது நெதன்யாகு குற்றச்சாட்டு
15 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்: நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு
15 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.
-
ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
15 Dec 2025அம்மான், ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார்.
-
சிட்னி துப்பாக்கிச்சூட்டை நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகன்: ஆஸ்திரேலிய காவல்துறை தகவல்
15 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்கே முழு உரிமை உள்ளது: ஐகோர்ட் மதுரை கிளையில் வாதம்
15 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; சமணர் காலத்து தூண் என்றும், தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில்
-
வரலாற்றில் முதன்முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டியது: ஒரு சவரன் தங்கம் விலை
15 Dec 2025சென்னை, வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையானது.
-
சர்வதேச அளவில் முதலீடுகள் அதிகரிப்பு: தங்கத்தின் விலை மேலும் உயரும்..!
15 Dec 2025சென்னை, சர்வதேச அளவில் முதலீடுகள் அதிகரிப்பால் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரூ.32.90 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
15 Dec 2025சென்னை, ரூ.32.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஹஜ் இல்லத்திற்கு இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
-
மதுரை மாவட்டத்தில் 10 துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு
15 Dec 2025மதுரை, மதுரை மாவட்டத்தில் 10 துணை வட்டாட்சியர்கள் தற்காலிக வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
15 Dec 2025மேட்டூர், டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடம் : அமைச்சர் சேகர் பாபு அடிக்கல்
15 Dec 2025சென்னை, ரூ.49.70 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு மையக்கட்டிடத்திற்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
2026 சட்டசபை தேர்தல் போட்டியிடும் அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
15 Dec 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு
15 Dec 2025சென்னை, தமிழக்தில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
தே.மு.தி.க. மாநாடு 2.0: பிரேமலதா அழைப்பு
15 Dec 2025சென்னை, தே.மு.தி.க. மக்கள் உரிமை மீட்பு மாநாட்டிற்கு பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார் உக்ரைன் அதிபர் திடீர் அறிவிப்பு
15 Dec 2025கீவ், மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
15 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


