முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

lightning, மின்னல்

பெரும்பாலும், மின்னல் தாக்குதலுக்கு பலியானவர்கள் மரங்களின் அடியில் தஞ்சம் புகுந்தவர்கள்தான். இது ‘சைட் ஃபிளாஷ்' என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு அருகில் ஒரு உயரமான பொருளை மின்னல் தாக்கும்போது, அங்கே இருக்கும் பாதிக்கப்பட்டவருக்கு தாக்குதல் பரவுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.  மின்னல் தாக்குதலினால் 2019 ஜூலை 25 முதல் 31 வரை அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் நடந்ததாகவும் . வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதிகளில் அதிகப்படியாக மின்னல் தாக்குதல்கள் நடந்தன என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகைபிடிப்பதை கைவிடுவது எப்படி

இந்தியாவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையான 10 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணத்தை தழுவுவதாக இந்திய அரசு கூறுகிறது. 2016-17ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி (Global Adult Tobacco Survey), இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகம். புகை பழக்கத்தை விட சில யோசனைகள்...காலை எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் வெந்நீரில் எலுமிச்சம் பழ ரசத்தை கலந்து பருகவேண்டும். அதில் சுவைக்காக தேன் சேர்த்துக் கொள்ளலாம். புகைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம், "சிகரெட் பிடிக்கக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்" என்ற உங்கள் இலக்கை திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். புகைப்பழக்கத்தில் இருந்து விலகவேண்டும் என்ற விருப்பம் உங்கள் உள் மனதில் ஏற்படவேண்டியது அவசியம். அத்துடன் கால வரையறையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். புகைப்பிடிக்கும் இச்சை அதிகமானால், அமைதியாக அமர்ந்து, மூச்சை ஆழமாக இழுத்துவிடவும். தண்ணீர் குடிக்கவும், இப்படிச் செய்வதால் உங்கள் கவனமும், இலக்கும் ஒன்றிணையும்.இஞ்சி மற்றும் நெல்லிக்காயை இடித்து காயவைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எலுமிச்சை ரசம் மற்றும் உப்பு சேர்த்து, அதை எப்போதும் உங்களுடனே வைத்திருங்கள். சிகரெட் புகைக்கவேண்டும் என்று தோன்றும்போது, இஞ்சி, நெல்லிக்காய், எலுமிச்சை கலவையை சாப்பிடவும். இதைத்தவிர, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை சாப்பிடலாம் அல்லது அவற்றின் பழரசங்களை குடிக்கலாம். இது புகைப்பிடிக்கும் வேட்கையை அடக்கும்.

வீடு கட்டும் விலங்கினம் எது தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்

குஞ்சு பொரிப்பதற்கு முன்னால் பறவைகள் கூடுகட்டுகின்றன. அதே போல குட்டி போடுவதற்கு முன்பாக விலங்குகள் ஏதேனும் கூடு அல்லது வீடு கட்டுகின்றனவா.. என்று கேட்டால், ஆம் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பாலூட்டிகளில் ஒரு விலங்கினம் அவ்வாறு வீடு கட்டுகிறது. குச்சிகள், இலைகள், வைக்கோல்கள், பசுந்தழைகள் ஆகியவற்றை கொண்டு வந்து பஞ்சு பொதி போன்ற வீட்டையும், குட்டிகளுக்கு மெத்தென்ற படுக்கையையும் அந்த விலங்கு தயார் செய்கிறது. அது சினையாக இருக்கும் 3 மாத, 3 வார, 3 நாள் கால கட்டத்தில் அது இவ்வாறான கூடு கட்டும் பணிகளில் ஈடுபடுகிறது. நாம் அந்த விலங்கை தினமும் பார்த்து வந்தாலும் நம் அனைவருக்கும் தெரியாத ரகசியமாக இந்த நடவடிக்கை இருப்பதை அறிந்தால் அது ஆச்சரியம் தானே. அந்த விலங்கு வேறு எதுவும் இல்லை. நாம் அன்றாடம் பார்க்கும் சேற்றில் திளைக்கும் பன்றிதான் அது.

மிரட்டும் மலசேஷ்யா

குளிர் காலத்தில் பொடுகு தொல்லை அதிகரிப்பதோடு, தலையில் மலசேஷ்யா என்ற பூஞ்சை தொற்றும் உருவாகும். முகம், மார்பு, முதுகு ஆகிய உடலின் பிற பாகங்களுக்கும் பூஞ்சைத் தொற்று பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு தீர்வு வாரத்திற்கு இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

மாறிய கோவில்

12-ம் நூற்றாண்டில் , 2-ம் சூரியவர்மனால் கட்டப்பட்ட அங்கோர் வாட்டை ஆரம்பத்தில் ஓர் விஷ்ணு தள வழிப்பாட்டு கோவிலாக இருந்தது. பின் 14 - 15-ம் நூற்றாண்டுகளில், புத்த மத துறவிகளால் கையகப்படுத்தப்பட்டு கூடுதலான புத்த சிலைகளும், கலைநய வேலைப்பாடுகளும் சேர்க்கப்பட்டு புத்த கோவிலாக மாற்றப்பட்டது.

சூரியன் மறையாத அதிசய தீவு எங்குள்ளது தெரியுமா?

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் உள்ள சொம்மாரோயி என்ற தீவு காலம் மற்றும் நேர அடிப்படையில் உலகின் மற்ற பகுதியில் முற்றிலும் மாறுபட்டதாகும். ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இந்த தீவில் நவம்பரில் இருந்து ஜனவரி வரை இருட்டாகவே இருக்கும். அதே போல் ஆண்டில் சில மாதங்கள் இதற்கு நேர் எதிரானதாக இருக்கும். அதன்படி தற்போது அந்த தீவில் சூரியன் மறையாத காலம். அங்கு மே மாதம் 18- ஆம்தேதி நள்ளிரவு முதல் சூரியன் மறையாத காலகட்டம் தொடங்கும். ஜூலை 26- ஆம் தேதி வரை 69 நாட்களுக்கு இப்படித் தான் இருக்கும். இதனால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை நிறையவே மாறியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago