முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வலை போட்டு மீன் பிடித்த தேசிய கவி யார் தெரியுமா?

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு பரவலாக பேசப்பட்ட ஒரு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஆவர். நம் நாட்டின் தேசிய கீதமான “ஜன கண மன” பாடலை எழுதிய ஒரு அற்புத கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். இவர் கவிதை இயற்றுவதில் மட்டுமல்ல இசைப் பாடகர், கதாசிரியர், நாவலாசிரியர், ஓவியர், கல்வியாளர் போன்ற பல துறைகளிலும் கால்தடம் பதித்த அற்புத மாமனிதர் ஆவார். கவிதைக்காக நோபல் பரிசு வாங்கிய ரவீந்திரநாத் தாகூருக்கு சிறு வலைபோட்டு லாவகமாக மீன் பிடிக்கும் ஆற்றல் உண்டு. வடிகட்டி மாதிரி உள்ள சின்னஞ் சிறிய வலையில் பரபரப்பான கொல்கத்தா நகரத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமைதியாக ஓடும் ‘விளிண்டா’ ஆற்றங்கரையில் அவர் அடிக்கடி மீன் பிடிக்கச்செல்வது வழக்கம்.   பிடித்த மீனை சிறிதுநேரம் உள்ளங்கையில் வைத்திருந்துவிட்டு பிறகு ஆற்றில் விடுவாராம்.

திருமணம் செய்தால் ரூ.1.67 லட்சம் பரிசு தொகை : வித்தியாசமாக அறிவித்த நகர் எது தெரியுமா?

இத்தாலி நாட்டிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அந்நகரத்தின் மேயர் முடிவு செய்தார்  இதனை அடுத்து லாஸியோ நகரத்தின் மேயர் நிகோலா ஜிங்காரெட்டி என்பவர் இத்தாலியிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்துகொண்டு திருமணத்திற்கான ஆதாரத்தை காட்டினால் ரூபாய் 1.67 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பரிசை பெறுவதற்காகவே பலர் திருமணம் செய்ய முன்வந்துள்ளனர் கூறப்படுகிறது. இதே நகரத்தில் தான் பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நில முத்திரை

நில முத்திரைக்கு பூமி முத்திரை என்ற பெயரும் உண்டு. நோய் தடுப்பு சக்தியும் அதிகமாக்கி உடல் நலத்தை பாதுகாக்கும் முத்திரை இது. எலும்புகளின் அடர்த்திக்குறைவை நீக்கும்.  தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பைக்குறைக்கிறது. எலும்புகளுக்கும் மூட்டுக்களுக்கும் சக்தி கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரை செய்தால் சில நிமிடங்களிலேயே தூக்கம் கண்களை தழுவும்.

முதன் முதலில் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்

சிறைச்சாலைகள் பலவிதம் உண்டு, அதில் ஒரு விதம் தான் வீட்டுச்சிறை. முதன்முதலில் 'வீட்டுச்சிறை' வைக்கப்பட்டவர் ஈராக்கை சேர்ந்த விஞ்ஞானி அல்-ஹாத்திம். கி.பி.1011-ம் ஆண்டு எகிப்தில் வாழ்ந்த போது, மன்னரை குறித்து அவமதித்து பேசியதற்காக கிபி 1021 வரை வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வீட்டுச்சிறையில் அகப்பட்டுக் கொண்ட இன்னொரு விஞ்ஞானி கலிலியோ. பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது என்கிற அறிவியல் உண்மையை சொன்னதற்காக தண்டிக்கப்பட்டார்.தற்போது வீட்டுச் சிறை முறையை அதிகம் பயன்படுத்தும் நாடு இத்தாலி. அந்நாட்டில் கைதிகள் தண்டனை முடியும் நிலையில் இருந்தாலோ, உடல்நலக்குறைவாக இருந்தாலோ கைதிகளை வீட்டுச்சிறைக்கு மாற்றி விடுவார்கள். நியூசிலாந்தில் 2 வருடங்களுக்கு குறைவான தண்டனை பெற்ற கைதிகளை வீட்டிலேயே சிறை வைக்கிறார்கள்.வீட்டுச்சிறையில் அடைபட்டு உலகப்புகழ் பெற்றவர் மியான்மர் நாட்டை சேர்ந்த ஆங்சான் சூகி. காஷ்மீர் பிரிவினையை தூண்டியதற்காக வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார்  ஷேக் அப்துல்லா. அவர் அடைக்கப்பட்ட இடம் கொடைக்கானல். பாகிஸ்தானில் பூட்டோ, நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் உள்ளிட்டோரும் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்காலத்தில் இந்த பட்டியல் இன்னும் நீளமானது.

ஹார்மோன் பிரச்சனை

பெண்களுக்கு உடல் பருமன் அதிகமாக அல்லது குறைய ஹார்மோன் சம நிலையில்லாமல் இருப்பதுதான் காரணம். பெண்களுக்கு உண்டாகும் ஹைபோதைராய்டிஸம். இதனால் உடல் பருமன், மன தளர்ச்சி, சோர்வு, மன அழுத்தம், வறண்ட சருமம் ஆகியவை ஏற்படுகிறது.  மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் குறைப்பாட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

பிளாஸ்டிக் ரோபோ

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த ரிஷிகுமார் என்ற 14 வயது மாணவன் பிளாஸ்டிக் ரோபோ ஒன்றையும் உருவாகியுள்ளார். பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட இந்த ‌ரோபோ, குரல் உத்த‌ரவுக்குப் பணிந்து பாடுவது, நடனமாடுவது போன்றவற்றை செய்கிறது. இந்திய ராணுவத்தில் ரோபோவின் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியமாக கொண்ட இந்த மாணவர் , கடந்த 2 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான மொபைல் ஆப்ஸை உருவாக்கியுள்ளார். அவற்றை பல நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்திருக்கிறார். தற்போது 50 கிராம் எடை கொண்ட கணினி சிபியு-வை உருவாக்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago