முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

காரீயத்தால் மூடப்பட்ட ஆவணங்கள்

மேரி கியூரியை அனைவருக்கும் தெரியும். அவர்தான் கதிர்வீச்சு மிக்க ரேடியம் என்ற தனிமத்தை கண்டு பிடித்தார். அவர் இறந்த பின் அவரது உடல் என்ன ஆனது தெரியுமா.. வாருங்கள் பார்க்கலாம்... நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண் மேரி கியூரி. இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமே. மேரி கியூரியும் பியரி கியூரியும் தனித்தனியே ஆராய்ச்சியை தொடர்ந்தனர். கதிரியக்க தனிமத் தேடலைத் தொடர்ந்த மேரி, அடுத்தடுத்து யுரேனியம், பொலோனியம் ஆகியவற்றைவிட அதிக கதிர்வீசும் மற்றொரு தனிமத்தைக் கண்டுபிடித்தார். அதற்கு ’ரேடியம்’ எனப் பெயரிட்டார். மேரி கியூரியின் கதிரியக்க ஆராய்ச்சிக்காக 1903-ல் பியரி கியூரி, ஹென்றி பெக்குரல் ஆகியோருடன் கூட்டாக இயற்பியலுக்கான நோபல் பரிசு தரப்பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் பெண் மேரி கியூரி. மேரி கி யூரி மறைந்து போய் 150 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனா ல் அவர் பயன்படுத்திய பொருட்களி ன் மேல்பாதிக்கப்பட்டுள்ள  ரேடியம் தனிம கதி ர்வீச்சின் தாக்கம் இன்னும் அவற்றில் உள்ளன. இது குறைய இன்னும 1500 ஆண்டுகள் ஆகும். அதுதான் கதி ர்வீச்சு தனிமத்தின் குணாம்சம் . அதன் அரை ஆயுள் காலம் 1500 ஆண்டுகள் ஆகும். எனவே மேரி கி யூரி மற்றும் பியரி கியூரி பயன்படுத்திய நோ ட்டுகள், பேப்பர்கள், அவர்களின் எழுதுகோல்கள், போன்றவற்றை ஒரு பெ ட்டியி ல் போட்டு அதனை ஒரு அகுல கனமுள்ள காரிய தகடு கொ ண்டு மூடி பத்திரமாக வை த்துள்ளனர். அதுபோல மேரிகியூரி மற்றும் பியரி கியூரி இருவரின் உடல்களிலும் கூட ரேடியம் தனிமத்தின் கதிர்வீச்சு இருக்கும், எனவே அவர்களின் கல்லறையும் கூட ஒரு அங்குல கனமுள்ள காரீய தகடால் மூடப்பட்டு வைக்கப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

ஒரு சமயத்தில் ஒரு நாசி துவாரத்தின் வாயிலாக மட்டுமே சுவாசிக்க முடியும்

இன்றைய நவீன யுகத்தில் மன அழுத்தம் குறைய சுவாச பயிற்சி, பிராணயாமம் என பல்வேறு மூச்சு பயிற்சிகளும், யோக பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. நாம் நாசித் துவாரத்தின் வாயிலாக மூச்சை இழுத்து அதை நுரையீரலுக்கு அளிப்பதன் மூலம் பிராண வாயு உடலுக்கு சென்று தேவையான ஆற்றலை அளிக்கிறது. ஆனால் நாம் சுவாசிக்கும் போது ஒரு நேரத்தில் ஒரு நாசித் துவாரத்தின் வாயிலாக மட்டும்தான் சுவாசிக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா... ஒரே நேரத்தில் இரு நாசித் துவாரங்கள் வாயிலாகவும் மனிதன் சுவாசிப்பது கிடையாது. கேட்பதற்கு மிகவும் இது சிக்கலானது. ஒரு துவாரத்தின் வழியாக சுவாசித்தாலும் இரு நாசிகளும் சம அளவில் பிராண வாயுவை பகிர்ந்து கொள்கின்றன. ஒவ்வொரு நாசித் துவாரத்தின் வாயிலாகவும் சுவாசிப்பது சில மணி நேரங்களுக்கு ஒரு முறை மாறி மாறி நடக்கும் என்பதும் ஆச்சரியமான ஒன்று தானே.

தங்கத்தை முதலில் தோண்டி எடுத்தவர்கள் யார் தெரியுமா?

தங்கச் சுரங்கத் தொழில் ஏறக்குறைய 5000 ஆண்டுகட்கு முன் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தங்கம் எகிப்து நாட்டில்தான் முதலில் தோண்டி எடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்; தங்கச் சுரங்கத் தொழிலின் பல்வேறு படிநிலைகளைக் (stages) காட்டும் சுவரோவியங்கள் அங்கு காணப்படுகின்றன. ஆற்றுத் தண்ணீரிலிருந்தும் தங்கம் பெறப்பட்டது; நீரிலிருந்து ஆற்று மணலைச் சலித்து, எடை மிகுந்த தங்கத் துகள்களை வடிகட்டி எடுத்தனர். கி.மு. 3000 ஆண்டுகளில் தங்க மோதிரங்கள் ஒரு வகை ஊதியமாகத் தரப்பட்டதாம். நாணயங்களாகத் தங்கம் வழங்கப்பட்டதோடு, அணிகலன்களாகவும் அது பயன்படுத்தப்பட்டது. சுமார் கி.மு.2000 ஆண்டுகளில் தரைக்கு அடியில் இருந்து தங்கத் தாதுப் பொருட்களைக் (ores) கண்டறிந்து, அவற்றிலிருந்து தங்கம் பெறப்பட்டது. தங்கம் அதன் தரத்திற்கேற்ப நாணயத்திற்கு மாற்றாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பிரிட்டனில் இந்த நாணய மாற்றுமுறை 1821ஆண்டு அறிமுகப்பட்டது என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

உயிருள்ள பொ‌ம்மை

லூலு ஹசிமோட்டோ எ‌னப் பெயரிடப்பட்ட உயிருள்ள பெண்ணைப் போல் வடிவமைக்கப்பட்ட  பொம்மையை ஜப்பானைச் சேர்ந்த பேஷன் டிசைனர் ஹிடோமி கோமகி வடிவமைத்துள்ளார்.  இது அனைவரையும் அங்கு வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அழகிப் போட்டி ஒன்றில்‌ அரை இறுதிக்குத் தேர்வான 134 மாதிரிகளில் ஹசிமோட்டோவும் ஒன்று என்பது தான் ஆச்சர்யம்.

மற்றொறு கோள்

சூரியக்குடும்பத்தில் இதுவரை 9 கோள்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் புளூட்டோவுக்கு கோள்களுக்கான தகுதி இல்லை எனக்கூறி அது நீக்கப்பட்டது.  இந் நிலையில் செவ்வாய் கோள் போன்ற விண்பொருள் ஒன்று சூரியக்குடும்பத்தின் எல்லையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த விண்பொருளின் காந்த விசையை பொருத்தே அது கோளா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிக நீளமான நதிகள் எங்குள்ளன தெரியுமா?

உலகிலேயே மிகவும் நீளமான நதிகள் மூன்றுதான். அவை நைல், அமேசான் மற்றும் யாங்ட்ஸீ. நைல் நதியின் மூலம் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள 11 நாடுகள் பயன் பெறுகின்றன என்றால் பார்த்து கொள்ளுங்கள். அதே போல தென் அமெரிக்காவில் பாயும் அமேசானும் மிகப் பெரிய நதியாகும். இதற்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகவும் நீளமான நதியான யாங்ட்ஸீ சீனாவில் பாய்கிறது. ஆனால் இது மட்டும் தான் ஒரே நாட்டில் பாய்ந்து பலன் அளிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago