முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சாணத்திலிருந்து மின்சாரம் தயாரித்து 50 தெருவிளக்குகளை எரிய செய்யும் கிராமம்

நவீன அறிவியலில் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்த செய்திதான் சாட்சி. முன்பு மாற்று எரிபொருள் என்ற வகையில் சாண எரிவாயு முறைகள் பின்பற்றப்ப்டடன. பெரும்பாலும் தற்போது அதையாரும் தொடர்வதில்லை என்ற போதிலும் இன்றைக்கும் அது ஒரு சிறந்த மாற்று எரிபொருள்தான். அதே போல மாற்று எரிசக்தி என்ற முறையில் தற்போது அறிவியலில் புதிய முறையாக மாட்டுச் சாணம் உள்ளிட்ட கால்நடை கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை மேல்நாட்டு பண்ணைகளில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சண்டிகர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தொடங்கப்பட்ட போதிலும் இன்னும் பரவலாகவில்லை. இதற்கு முன்மாதிரியாக காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்துள்ள வரதராஜபுரம் ஊராட்சி திகழ்கிறது. இங்கு கால்நடை கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த கிராமத்தில் உள்ள 50 தெரு விளக்குகள் எரிய வைக்கப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 12 மணிநேரம் இந்த ஆற்றலை  பயன்படுத்தி விளக்குகள் எரிகின்றன. இதை இன்னும் திட்டமிட்டு விரிவாக்கினால் கிராமத்துக்கான மின் தேவையையே சமாளிக்கலாம் என்கின்றனர். 

திருட்டை தடுக்க

டிஸ்யூ பேப்பர் திருட்டை தடுக்க பெய்ஜிங் நகரில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் அதிநவீன முறையில் முகத்தை ஸ்கேன் செய்யும் கேமரா பொருத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் கழிப்பிடத்துக்கு வருபவர்களை ஸ்கேன் செய்த பின்னரே 2 அடி நீளத்துக்கு டிஸ்யூ பேப்பர் கிடைக்கும்.

பார்வை அற்றவர்களுக்காக விரைவில் செயற்கையாக தயாரான ரோபோ கண்கள்

இன்றைக்கு அனைத்து துறைகளிலும் ரோபோடிக்ஸ் இல்லாத இடமே இல்லை என்று சொல்லிவிடலாம்.. பார்வையற்றோரின் பார்வையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த தொழில்நுட்பம் விரைவில் நிஜமாக போகிறது. ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (HKUST) ஆராய்ச்சியாளர்கள் குழு சமீபத்தில் ஒரு மனித, குழிவான விழித்திரையை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்மாதிரி புரோஸ்டெடிக் கண்ணை உருவாக்கியுள்ளது, இது நானோஒயர்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை விழித்திரை சிலிகான் பாலிமரில் பொருத்தப்பட்டுள்ளது, இது நானோ கனெக்டர்களுக்கு இடையில் ஒரு இடையீடாக பங்கு வகிக்கிறது. இந்த செயற்கை விழித்திரை ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 0.3 மைக்ரோவாட் முதல் 50 மில்லி வாட் வரை பரந்த அளவிலான தீவிரங்களின் ஒளியைக் கண்டறிய முடியும். தற்போது சோதனை வடிவில் இருக்கும் இவற்றில் இன்னும் களையப்பட வேண்டிய ஏராளமான சிக்கல்கள் நிறைய உள்ளன. இருந்த போதிலும் விரைவில் அவை நிஜமாக்கப்படும் என நம்பலாம்.

அனைவருக்கும் ஏற்றது

உடற்பயிற்சியில் ஏரோபிக், அனரோபிக் என 2 வகை பயிற்சி முறைகள் உள்ளன. குறைந்த நேரத்தில் அதிகப்படியான ஆற்றலை வெளிப்படுத்தி ஓடும் 100 மீ. ஓட்டப்பந்தயம் ஏரோபிக் பயிற்சியாகவும், அதிக நேரத்தில் மிதமாக ஓடக்கூடிய 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் அனரோபிக் பயிற்சியாகும். அனரோபிக்  அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

பூமியின் பரிணாம வளர்ச்சியில் பறவைகள் எப்படி தோன்றின தெரியுமா?

பொதுவாக மீன்கள் போன்ற நீர் வாழ் விலங்குகளிலிருந்து பறவைகள் தோன்றியிருக்கலாம் நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் பறவைகள் பரிணாம வளர்ச்சியில் டினோசர்களிடமிருந்தே தோன்றியதாம். இவை இரண்டும் ஊர்வன இனங்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக பறவையானது முதலையிலிருந்தே தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதே போல திமிங்கலம், டால்பின் ஆகியவற்றுக்கு ஒரு காலத்தில் பின்னங்கால்கள் இருந்தனவாம். அதன் அடையாளமாக அவற்றின் உடலில் ஒரு சிறிய எலும்பு உள்ளது. இதுதான் அவற்றுக்கு பின்புற துடுப்பாக மாற்றமடைந்திருக்கலாம் என்கின்றனர். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

தற்காப்பு கலையான ஜூடோவின் தாயகம்

இன்றைக்கு ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெற்றுள்ளதும், திரைப்படங்களில் சண்டை காட்சிகள் மூலம் பிரபலமானதுமான ஜூடோ எங்கு தோன்றியது தெரியுமா..ஜப்பானில். Kanō Jigorō (1860–1938) என்பவரால் பழைய ஜப்பானிய சமுராய் மரபில் காணப்பட்ட ஜூஜிட்சு மற்றும் பழைய சீன மரபுகளிலிருந்தும் 1882 இல் உருவாக்கப்பட்டது. இதற்காக கோடோகான் ஸ்கூல் ஆஃப் ஜூடோ பள்ளியும் உருவாக்கப்பட்டது. ஜூடோவுக்கும் கராத்தேவுக்கும் என்ன வித்தியாசம். இரண்டுமே வெறும் கைகளால் சண்டையிடுவது போல தோன்றினாலும், கராத்தே ஒரு சண்டைகலை, ஜூடோ ஒரு தற்காப்பு கலை. 1964 இல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதன்முறையாக ஜூடோ இடம் பெற்றது. 1992 இல் பெண்களுக்கான ஜூடோ போட்டிகள் ஒலிம்பிக்கில் இடம் பெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago