நமது வரலாற்று புத்தகங்களில் சிரபுஞ்சி அதிக மழை பெய்யும் இடம் என படித்திருப்போம். ஆனால் உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம் மேகாலயாவில் உள்ள மவ்சின்ராம் என்ற கிராமம் தான். இங்கு ஆண்டுக்கு 470 அங்குலம் அதாவது 12 ஆயிரம் மிமீ அளவுக்கு மழை பதிவாகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 33 மிமீ மழை பெய்கிறது. எனவே இந்த பகுதி எப்போதும் ஈரமாகவே இருக்கும். எனவே இங்கு வசிக்கும் மக்கள் உடல் முழுக்க மழையை மறைத்தபடி ஆடை அணிந்து கொண்டே வெளியிடங்களில் வேலை பார்ப்பர். தங்களுக்கு குடையாக வாழை இலை அல்லது மூங்கிலால் செய்யப்பட்ட குடைகளை பயன்படுத்துகின்றனர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இந்தியாவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையான 10 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணத்தை தழுவுவதாக இந்திய அரசு கூறுகிறது. 2016-17ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி (Global Adult Tobacco Survey), இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகம். புகை பழக்கத்தை விட சில யோசனைகள்...காலை எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் வெந்நீரில் எலுமிச்சம் பழ ரசத்தை கலந்து பருகவேண்டும். அதில் சுவைக்காக தேன் சேர்த்துக் கொள்ளலாம். புகைப்பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம், "சிகரெட் பிடிக்கக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்" என்ற உங்கள் இலக்கை திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். புகைப்பழக்கத்தில் இருந்து விலகவேண்டும் என்ற விருப்பம் உங்கள் உள் மனதில் ஏற்படவேண்டியது அவசியம். அத்துடன் கால வரையறையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். புகைப்பிடிக்கும் இச்சை அதிகமானால், அமைதியாக அமர்ந்து, மூச்சை ஆழமாக இழுத்துவிடவும். தண்ணீர் குடிக்கவும், இப்படிச் செய்வதால் உங்கள் கவனமும், இலக்கும் ஒன்றிணையும்.இஞ்சி மற்றும் நெல்லிக்காயை இடித்து காயவைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எலுமிச்சை ரசம் மற்றும் உப்பு சேர்த்து, அதை எப்போதும் உங்களுடனே வைத்திருங்கள். சிகரெட் புகைக்கவேண்டும் என்று தோன்றும்போது, இஞ்சி, நெல்லிக்காய், எலுமிச்சை கலவையை சாப்பிடவும். இதைத்தவிர, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை சாப்பிடலாம் அல்லது அவற்றின் பழரசங்களை குடிக்கலாம். இது புகைப்பிடிக்கும் வேட்கையை அடக்கும்.
தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும். புளியுடன் பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரம் இருமுறை செய்தால், முகம் பளிச்சென்று இருக்கும். மேலும்,இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு பளிச் தோற்றம் தருவதிலும் இதன் பங்கு அதிகம்.
இன்று மனிதர்களை மிகவும் அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. தற்போது, தோல் புற்று நோயை மருத்துவர்கள் உதவி இன்றி நாமே சோதனை செய்து கண்டு பிடிக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் உறுதி செய்வதை விட துல்லியமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது நோயை கண்டறிந்து உறுதிசெய்கிறது. இதனை ஸ்மார்ட்போன்களிலே பொருத்தி அவரவர் தானாகவே பரிசோதிக்கலாம். புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய், மூளைப்புற்றுநோய் மிகவும் அபாயமானது. இந்த வகை நோய்களை கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜூலியஸ் சீசர் ஆண்டுக்கு 365 நாட்கள் என கணக்கிடப்பட்ட காலண்டரை பயன்படுத்த உத்தரவிட்டிருந்தான். இது லீப் வருடங்கள் உள்ளிட்ட பல்வேறு கால கணித மாறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில் Pope Gregory XIII கால கட்டத்தில் 1582 முதல் கிறித்துவ நாடுகள் கிரிகோரியன் காலண்டர் எனப்படும் நவீன காலமுறைக்கு மாறின. ஆனால் கிறித்துவம் அல்லாத பல நாடுகளும், ரஷ்யா போன்ற நாடுகளும் அவற்றை ஏற்கவில்லை. இதனால் 1802 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு ரஷ்யா 12 நாட்கள் தாமதமாக வரும்படி நேர்ந்தது. அதன் பின்னர் போல்ஷெவிக் ஆட்சியின் போது 1918 இல் ரஷ்யாவும் கிரிகோரியன் முறைக்கு மாறியது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன வென்றால், ஒலிம்பிக் பிறந்த தேசமான கிரீஸ் 1923 இல்தான் புதிய காலண்டர் முறைக்கு மாறியது என்பதுதான் சுவாரசியம்.
நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியுள்ளது. நவராத்திரி அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதும் அம்மனுக்கான விசேச பூஜைகள், விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தெலங்கானாவில் உள்ள மெகபூப்நகரில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வைபவங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அங்குள்ள ஆரிய வைசிய சங்கத்தினர் சார்பில் அம்மனுக்கு ரூ. 44444444.44 (4 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரத்து 444 ரூபாய் 44 காசுகள்) மதிப்பிலான பணமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக 500,100,20 ரூபாய் பணத்தாள்கள் மட்டுமே அதில் பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்போது அந்த படம் நெட்டில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


