முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய உணவகம்

லண்டனை சேர்ந்த சார்லஸ் கில்மோர் என்பவர் காகங்களின் மீது அன்பால் காகங்கள் உணவருந்துவதற்காக உணவகம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். அதில், காகங்களின் உணவான புழுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த உணவகத்தினை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்களுக்கு காகம் வடிவிலான பிஸ்கெட்டினை செய்து கொடுத்து வருகிறார்.

எலிகளுக்கும் கோயில் கட்டி வணங்கும் மக்கள்

இந்தியாவில் மக்கள் விலங்குகளை கடவுளாக வணங்கும் பழக்கம் தொடர்கிறது. மக்கள் வணங்க நினைக்கும் முதல் இனங்கள் எலிகள் அல்ல என்றாலும், ராஜஸ்தானில் எலிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் உள்ளது. அதாவது ராஜஸ்தானில் உள்ள கர்ணி மாதா கோவில் எலி கோவில் என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் கிட்டத்தட்ட 20,000 எலிகள் இருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த கோயிலில் எலிகளை பராமரிக்க வசதியாக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஆங்காங்கே சுவர்கள், பல இடங்களில் பெரிய ஓட்டை போடப்பட்டுள்ளன. மேலும் எலிகள் உண்பதற்கான உணவு மற்றும் பால் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் எலி குடித்த பால் தான் இங்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள எலிகள் நம்மீது ஏறினால் அதிர்ஷ்டம் என நம்பப்படுகிறது. அதே போல் வெள்ளை எலியை பார்த்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள எலிகள் கடவுளின் அம்சமாக பார்க்கப்படுவதால் யாரேனும் எலியை கொன்றுவிட்டால் அதற்கு பதிலாக தங்கத்தினால் ஆன எலியை கோயிலுக்கு வழங்குகின்றனர். இந்த பழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

ரிக்சாகாரருக்கு ரூ.1 கோடி சொத்து

ஒடிசா மாநிலம் கட்டாக் என்ற இடத்தில் வசித்து வருபவர் Minati Patnaik. 63 வயதான இவர் கணவரை இழந்து விட்டார். கணவரை இழந்த 1 வருடத்துக்குள் தனது மகளையும் இழந்துள்ளார். இதனால் இவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ரிக்ஷா தொழிலாளி புத்தா சமல் என்பவரும் அவரது குடும்பத்தினரும் தான் எந்த பிரதிபலனும் எதிர்பார்ப்பும் இன்றி Minati Patnaik க்கு உதவி வந்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் தனது ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகள், தங்கம் ஆகியவற்றை புத்தா சமல் குடும்பத்தினருக்கு அளிப்பதாக உயில் தயார் செய்து வைத்துள்ளார். இது குறித்து Minati Patnaik கூறுகையில், சிறு வயது முதலே எனது குழந்தையை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அழைத்து சென்று வருபவர் புத்தா சமல். எனது கணவர் இறந்த பிறகு என்னை மிகவும் கவனத்துடன் எந்த பிரதிபலனும் பாராமல் அவரும், அவரது குடும்பத்தினரும் பராமரித்து வருகின்றனர். எனக்கு பிறகு எதிர்காலத்தில் சட்டரீதியாக அவர்களுக்கு எந்த பிரச்னையும் வரக் கூடாது என்பதற்காக எனது ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்து, நகைகள் ஆகியவற்றை புத்தா சமல் குடும்பத்தினருக்கு உயிலாக எழுதி வைத்துள்ளேன். காசு பணம் என்பதையும் தாண்டி மனித உறவுகள் தான் மதிப்புமிக்கவை என்பதற்கு உதாரணமாக புத்தா சமல் குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளாக எனது குடும்பத்திற்காக உழைத்துள்ளனர் என்றார் நெகிழ்ச்சியாக. அவரது இந்த கருணையுள்ளதை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஹிட்லரின் கோரிக்கையை ஏற்க மறுத்த இந்திய ஹாக்கி வீரர்

உலகையே ஆட்டி படைத்த சர்வாதிகாரியான ஹிட்லரின் கோரிக்கையையே ஏற்க மறுத்த இந்திய ஹாக்கி வீரர் ஒருவர் இருந்தார். அவர் யார் என்று தெரியுமா... அவர் பிரபல ஹாக்கி வீரர் தயான் சந்த்.  இந்தியா கடந்த 1936 பெர்லின் ஒலிம்பிக்ஸில் ஜெர்மனியை 8-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதும், பிரபல ஹாக்கி வீர்ர தயான் சந்திற்கு, ஹிட்லர் ஜெர்மனி குடியுரிமை தந்து ராணுவத்தில் மிகப்பெரிய பதவி அளிப்பதாகவும் கூறினார். அவற்றை ஏற்றுக்கொண்டு ஜெர்மனி ஹாக்கி அணியில் அவர் விளையாட வேண்டுமென ஹிட்லர் விரும்பினார். ஆனால் தயான் சந்த் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

நோய் அறியா நகரம்

வட பாகிஸ்தானில் ஹூஞ்குட்ஸ் எனுமிடத்தில் அலக்ஸாண்டர் தி கிரேட்-ன் வழிதோன்றல்கள் என கருதப்படும் ஹூஞ்சா எனும் மக்கள் வாழும் இடம்தான் ஹூன்சா பள்ளதாக்கு. இங்குள்ளவர்கள் 70 வயது வரையிலும் இளமை, ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கின்றனர். பெண்கள் 65 வயதிலும் கருத்தரிக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் இயற்கை உணவே.

அதிசய வானவில் கிராமம்

 ரெயின்போ வில்லேஜ் அல்லது வானவில் கிராமம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா.. தற்போது உலகம் முழுவதையும் கவர்ந்துள்ள அந்த கிராமம் ஒரு முதியவரால் உலகத்தின் கவனத்தை பெற்றது என்றால் ஆச்சரியம் தானே.. அவர் பெயர் Huang Yung-fu, அந்த கிராமம் Taichung அமைந்துள்ள இடம் தைவான். 2 ஆம் உலகப் போர் கால கட்டத்தில் சீனாவிலிருந்து பிரிந்து வந்த சிலருக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட ராணுவ குடியிருப்புகள் அமைந்த இடம் தான் Taichung. அண்மையில் இதை இடித்து விட்டு மால் கட்ட அரசு முடிவு செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்து 97 வயதான Huang Yung-fu மட்டும் வெளியேற மறுத்து விட்டார். அதிகாரிகள் என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்தனர். ஆனால் அதிகாரிகளுக்கு எதிராக போராடும் வலிமையை இழந்து விட்ட முதியவர் Huang Yung-fu தன் கையில் எடுத்தது தூரிகையை. அந்த கிராமத்தின் அனைத்து சுவர்களை மூலை முடுக்குகளையும்,இண்டு இடுக்குகளையும் தனது கலை திறமையால் அற்புதமான ஓவிய கூடமாக மாற்றினார். பார்ப்பவர்களை கவரும் வானவில் கிராமமாக மிளிர்ந்தது. இதை கேள்விபட்ட பொது மக்கள் அங்கு வந்து இவற்றை படம் எடுத்து உலகம் முழுவதும் பரப்பி விட்டனர். தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வரும் பிரபல சுற்றுலா தளம் என்ற பட்டியலில் அந்த கிராமம் இடம் பெற்றது. இதையடுத்து அதை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு அரசே இப்போது தனது பொறுப்பில் பாதுகாத்து வருகிறது. தூரிகையின் வலிமையை இந்த உலகுக்கு புரிய வைத்தவர் Huang Yung-fu.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago