முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பீன்யாவில் அமைய வாய்ப்பு

இந்தியாவில் ஆப்பிள் போன்களை தயாரித்து அசம்பிலிங் செய்யும் இடமாக பெங்களூரூ இறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த உற்பத்தி தொழிற்சாலை பெங்களூரூவின் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான பீன்யாவில் அமைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எந்த மிருகத்தை மனிதனால் பழக்க முடியாது தெரியுமா?

மனிதர்கள் பல்வேறு விலங்குகளையும் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்க்கின்றனர். ஒரு சிலர் சர்க்கஸ் போன்ற இடங்களில் சிங்கம், புலி, கரடி, யானைகளை கூட நம் சொல் கேட்கும்படி வளர்த்து விடுகின்றனர். ஆனால் ஒரே ஒரு விலங்கு மட்டும் விதிவிலக்கு. அது ஹைனா எனப்படும் கழுதைப்புலி தான் அது. கழுதைப்புலியை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்ப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். எளிதில் கழுதைப்புலிகளுடன் பழகி அவற்றை நம் பேச்சை கேட்க வைக்க முடியாது. இவற்றை பராமரிப்பதற்கு அதிக செலவாகும். அமெரிக்காவில் கழுதைப்புலியை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம். அதையும் மீறி நாம் நம்முடைய வீட்டில் வளர்த்தால் பக்கத்து வீட்டுக்காரங்களை பதம்பார்த்து விடும். மொத்தத்தில் கழுதைப்புலியை வீட்டில் வளர்ப்பது மிகவும் அபாயகரமானது.

நத்தையின் வாயில் பல்லாயிரம் கோடி நுண் பற்கள் இருக்காம்

ஆள் பார்க்க சாதுவாக இருக்கானே இவன் என்ன செய்ய ேபாகிறான் என எவரையும் குறைவாக எடை போட்டு விடக் கூடாது. அது மாதிரிதான் மெல்லிடலி வகையை சேர்ந்த நத்தையும் பார்க்க சாதுவாக இருந்தாலும் அவையும் தன்னுள் மிகப் பெரிய ஆச்சரியங்களை கொண்டுள்ளன. மெல்ல ஊர்ந்து சென்றாலும், ஒரு பிளேடின் விளிம்பில் கூட நத்தையால் ஊர்ந்து விட முடியும்... அது மட்டுமா... பார்க்க புழு போல இருந்தாலும் அதன் வாயில் பல்லாயிரம் கோடி மைக்ரோ பற்கள் இருக்காம்.. கவலைப்படாதீர்கள் நம்மை கடிக்காது. தனக்கு தேவையான உணவை கொறித்து உண்ணத்தான் இயற்கை இப்படி அற்புதத்தை அதற்கு வழங்கியுள்ளது என்றால் ஆச்சரியம் தானே...

நீருக்காக மனைவிகள்

இந்தியாவில், மஹாராஷ்டிராவில் உள்ள டென்கன்மால் போன்ற வறட்சி மிகுந்த பின்தங்கிய கிராமங்களில், தண்ணீர் சேகரித்து வருவதற்காகவே இரண்டு, மூன்று பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால்  தண்ணீர் மனைவிகள் (water wives) எனக் குறிப்பிடப்படும் அவர்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது.

மூட நம்பிக்கை

மும்பை, பைகுலாவில் உள்ள மிருக காட்சி சாலையில் மலைப்பாம்புகள் இருக்கின்றன. பாம்புகள் படுத்துக்கிடக்க செயற்கை பாறைகளால் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் காசுகளை பாம்பின் மீது காசுகளை வீசுவது தெரிந்தது. காசை மலைபாம்பு மீது எறிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். வாழ்க்கை சூப்பராக இருக்கும் என்பதால் அப்படி செய்கிறார்களாம்.

ஒரே செடியில் காய்த்து குலுங்கும் தக்காளி, கத்திரிக்காய்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தினர் தற்போது புதுமையான ஆய்வு ஒன்றை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். பிரிஞ்சால் எனப்படும் கத்திரிக்காய், டோமோட்டோ எனப்படும் தக்காளி என இரண்டையும் கலந்து புதிய கலப்பினமாக பிரிமோட்டோ என்ற புதிய செடியினத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் ஒரே செடியில் தக்காளியும் கத்திரிக்காயும் காய்த்து குலுங்குகின்றன. இதில் என்ன விசேசம் என்றால் ஒவ்வொரு செடியிலும் 2.3 கிலோ தக்காளி, 3.4 கிலோ கத்திரிக்காயை அறுவடை செய்ய இயலும். கலப்பின ஒட்டு முறையை பயன்படுத்தி இந்த புதிய செடியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இனி தக்காளிக்கும், கத்திரிக்கும் தனித்தனி தோட்டங்களை உருவாக்க வேண்டியதில்லை. எதிர்காலத்தில் என்னென்னவெல்லாம் நடக்குமோ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago