எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - ராஜ்யசபையில் அரசு மானியங்களை பெற ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவையை மூன்று முறை ஒத்திவைக்க நேரிட்டது. எல்.பி.ஜி. சமையல் எரிவாயு, ஓய்வூதியம் பெறுவதில் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காலையில் அவையில் இப்பிரச்சனை எழுந்ததால் 12 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டது, பின்னர் 15 நிமிடமும், மீண்டும் அமளி நீடித்ததால் 2 மணிவரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி, இப்பிரச்சனையை எடுத்துக் கொள்ளக்கோரி திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகரால் இந்த நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளும் இக்கட்சிகளுடன் இணைந்துக் கொண்டது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கையில் தனிப்பட்ட அடையாள எண் அல்லது ஆதார் அடையாள அட்டை மக்களுக்கு வழங்கப்படுகிறது, அரசு சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் தேவையான அறிவுரைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டமையால் அவையை மூன்று முறை ஒத்திவைக்க நேரிட்டது.
சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. ராம் கோபால் யாதவ் பேசுகையில், ஆதார் அடையாள அட்டை பெறாதவர்களின் ரேஷன் கார்டு, ஓய்வூதியம் மற்றும் எல்.பி.ஜி. சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யுங்கள் என்று மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது என்றார். சுமார் 40 சதவித மக்கள் ஆதார் அடையாள அட்டை பெறவில்லை. இந்நடவடிக்கை ஏழை மக்களை பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒபிரையன் பேசுகையில் மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுடன் பேசுகிறது, ஆனால் மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்வது கிடையாது. ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் ஆக்குவது நாடு முழுவதும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
பிஜு ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் திர்கி பேசுகையில் ஒடிசாவில் 20 சதவித மக்கள் ஆதார் அடையாள அட்டை பெறவில்லை, மத்திய அரசு வழங்கிஉள்ள அறிவுரையானது ஏழை மக்களுக்கு பிரச்சனையை தான் உருவாக்கும் என்றார். மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பதில் அளிக்கையில், பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, அனைத்து சலுகைகளும் ஆதார் கார்டு வழியாகவே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. உறுப்பினர்கள் எழுப்பிய கவலையை கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம், “இது (ஆதார் அடையாள அட்டை) கட்டாயம் கிடையாது.
தேவைப்பட்டால், தேவையான அறிவுரைகள் வழங்கப்படும். நேரடி மானிய திட்டத்தின்படி அரசின் மானியம் நேரடியாக பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது. இப்போது ஊழல், தரகர்கள் மற்றும் முறைக்கேட்டை தவிர்க்க நேரடி மானிய திட்டம் அவசியமானது. ஒட்டுமொத்த மக்களும் அடையாள அட்டையை பெரும் வரையில் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்படாது. இவ்விவகாரத்தில் தேவையான விளக்கம் விரைவில் வெளியிடப்படும் என்று உறுதி அளிக்கிறேன்,” என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பண்ருட்டி சம்பவம் எதிரொலி: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி
30 Jan 2026சென்னை, “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க.
-
பா.ஜக. - அ.தி.மு.க. துரோக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது: சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Jan 2026சென்னை, இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –30-01-2026
30 Jan 2026 -
உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரம் நிறுத்த புதின் சம்மதம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
30 Jan 2026நியூயார்க், உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு வாரத்துக்கு நிறுத்த ரஷ்ய அதிபர் புதியன் சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Jan 2026சென்னை, பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி (வியாழக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின
-
போராட்டங்கள் இயல்பாக நடக்க வேண்டும்: தற்காலிக ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் கருத்து
30 Jan 2026சென்னை, தற்காலிக ஊழியர்களை போராட தூண்டி விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்
-
பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்பு
30 Jan 2026சென்னை, கொலை செய்து வீசப்பட்ட பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
-
பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ வாருங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யா அழைப்பு
30 Jan 2026மாஸ்கோ, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
ஜோ பைடன் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகளின் பட்டியலை வெளியிட்டது அமெரிக்கா அரசு
30 Jan 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் க
-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று அரசு சார்பில் விழா: 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 முடிவடைந்த திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
30 Jan 2026சென்னை, சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ.
-
தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு: காங்கிரசுடன் உறவு சுமுகமாகவே உள்ளது: கனிமொழி எம்.பி. பேட்டி
30 Jan 2026நெல்லை, தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி.
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
30 Jan 2026நியூயார்க், அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
-
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
30 Jan 2026டாக்கா, வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சரண்
30 Jan 2026ராஞ்சி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் நேற்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர்.
-
மகாத்மா காந்தியின் 79-வது நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
30 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டு பெண்கள் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
30 Jan 2026சென்னை, திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லக்கில் நாட் கதிரறுப்பு விழா.
- நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் வருசாபிசேகம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
30 Jan 2026


