முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சனிக்கிழமை, 18 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

ஈரோடு : ஜல்லிக்கட்டு போட்டியை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழர்களின் பாரம்பரியமான வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அனுமதிக்கப்பட்டு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து கல்வியாளர்கள் உள்ளிட்டவர்கள் ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும்.

ஏற்கெனவே கல்வியாளர்கள் பாடத்திட்டம் சுமையாக இருப்பதாக கூறி வருவதால் ஜல்லிக்கட்டு குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடையே குறித்து தெளிவுப்படுத்திடவும், விழிப்பு ணர்வை ஏற்படுத்திடவும் குறுந்தகடுகள் வழங்கப்படும்.

மேலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியதைப் போல் சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்குவதற்கு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து