முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 6 புதிய பாலங்கள்: காணொலி மூலம் திறந்து வைத்தார் ராஜ்நாத்சிங்

வியாழக்கிழமை, 9 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை சாலைகள் அமைப்பால் கட்டப்பட்ட 6 புதிய பாலங்களை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) செய்து வருகிறது. அவ்வகையில், ஜம்மு செக்டாரில் ரூ. 43 கோடி மதிப்பீட்டில் 6 புதிய பாலங்களை பி.ஆர்.ஓ. கட்டமைத்துள்ளது. இந்த பாலங்களை மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். டெல்லியில் இருந்தபடி காணொலி வாயிலாக பாலங்களை அவர் திறந்து வைத்தார்.

அதே சமயம் பாலங்கள் உள்ள பகுதிகளில் நடைபெற்ற விழாவில், அந்தந்த பகுதி ராணுவ அதிகாரிகள் பங்கேற்று, கொடியசைத்து வாகன போக்குவரத்தை தொடங்கி வைத்தனர்.  ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் மாநிலங்களில் கூடுதலாக ரூ.1691 கோடி மதிப்பீட்டில் பி.ஆர்.ஓ. நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து